இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Monday, June 7, 2010

ஜிரிவி க்கு ஆப்பு : நெடியவன் குழுவினரால் புதிய ரிவி சனல் சுவிஸில் ஆரம்பம்.

புலிகளின் புலம் பெயர் கட்டமைப்பில் உருவாகியுள்ள பிளவுகளின் விளைவாக ஜிரிவி தொலைக்காட்சிக்கு போட்டியாக நெடியவன் தரப்பினரால் தொலைக்காட்சி ஒன்று ஆரம்பமாகின்றது.
இத்தொலைக்காட்சி ரிவி 24 எனும் பெயரில் சுவிற்சர்லாந்து நாட்டிலிருந்து ஆரம்பமாவதாக தெரியவருகின்றது. இத்தொலைக்காட்சி உருவாவது ஜிரிவி க்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்வின் என்பவருக்கு சொந்தமான ஜிரிவி தமது வியாபாரத்தினை விஸ்தரித்துக் கொள்வதற்காக புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக தம்மைக் காட்டிக் கொண்டதுடன் புலிகளின் சகல அராஜகங்களையும் நியாயப்படுத்தி வந்திருந்ததுடன் தொலைக்காட்சியின் வருமானத்தின் பகுதி புலிகளியக்கத்திற்கு வழங்கப்படுவதாகவும் ஒர் தோற்றத்தை காட்டி வந்தனர்.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின்னர் அவ்வியக்கத்தின் புதிய தலைவராக தன்னை அறிமுகம் செய்துகொண்ட கே.பி சார்பானதோர் நிலைப்பாட்டை எடுத்திருந்த ஜிரிவி யுடன் கே.பி யுடன் பதவிப்போட்டியில் நிற்கும் நெடியவன் முரண்பட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜிரிவி யை கைப்பற்றுவதற்கு பல குறுக்குவழிகளைத் தேடிய நெடியவன் அவை கைகூடாத நிவையில் தற்போது புதியதோர் ரிவி யை தொடங்குகின்றார்.

இத்தொலைக்காட்சியின் உருவாக்கத்தை சகிக்கமுடியாத ஜிரிவி யினர் மிரட்டல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தின் இறுதி யுத்தத்தில் நடந்தவை, ராம் எங்கே? கே.பி சரணடைந்தாரா? கைது செய்யப்பட்டாரா? புலிகளின் பணம் எங்கே சென்றது என்ற விடயங்கை தொடர்சியாக அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

http://www.ilankainet.com/

Read more...

Sunday, June 6, 2010

ஐரோப்பிய நாடுகளில் புலிகளிடையே மோதல்

பிரான்ஸில் ஒருவர் கொலை; இருவர் கைது; உருத்திரகுமாரனின் ‘தாய்நிலம்’ பத்திரிகை எரிப்பு

(அனந்த் பாலகிட்ணர்)


ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

புலிகளின் உருத்ரகுமாரன் பிரிவினருக்கும் நெடியவன் பிரிவினருக்குமிடையில் இந்த மோதல் உக்கிரமடைந்து ஒருவரை யொருவர் நேரடியாகத் தாக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதன் விளைவாக உருத்ரகுமாரன் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் சிவரூபன் என்பவர் பாரிஸில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் நெடியவன் குழுவைச் சேர்ந்த இருவர் பாரிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரமேஷ் சிவரூபனை பாரிஸில் உள்ள இல்லத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் சிலர் வானொன்றில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரது வீட்டுக் கருகில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னர் அவர் பாரிஸ் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில், தம்மை நெடியவன் குழுவைச் சேர்ந்தவர்களே கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனடிப்படையில், தம்பையா கணேஷ், குப்பிளான் ரவி ஆகிய இருவரையும் பாரிஸ் பொலிஸார் கைது செய்ததாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.

உருத்ரகுமாரன் பிரிவினரால் வெளியிடப் படும் ‘தாய்நிலம்’ பத்திரிகையின் ஆயிரக் கணக்கான பிரதிகளை நெடியவன் குழுவினர் கடந்த வாரம் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இரு குழுவினருக் குமிடையிலான மோதல் ஐரோப்பிய நாடெங்கும் பரவி, ஒருவரையொருவர் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் கடந்த வருடம் புலிகள் இல்லாதொழிக்கப்பட் டதையடுத்து இரு பிரிவினருக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் புலிகளுக்குள்ள சொத்துக்கள் கருத்து முரண்பாடுகளைக் கொள்ளாது சமமாக பகிரப்பட வேண்டுமென இரு சாராரும் கோரி வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள சட்டத்தரணி வீ. ருத்திரகுமார் நாடு கடந்த தமிbழ அரசொன்றை நிறுவும் முயற்சியில் பின்புலமாகச் செயற்படுபவரென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மலேசியாவின் அரசியல் வாதியான பினாங்கு மாநில துணை முதல்வர் பீ. இராமசாமியைத் தமிழகத்திற்குள் வர அனுமதிக்க வேண்டாமென்று தமிழ்நாடு பொலிஸார் இந்திய மத்திய அரசைக் கேட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநில அரசாங்கம் இம்மாத பிற்பகுதியில் செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்துகிறது. இதில் உல கெங்குமிருந்து பல்வேறு தமிழ் அறிஞர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான மலேசிய அரசியல்வாதி ராமசாமியை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமென்று மாநில அரசு, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Thinakaran

Read more...

Wednesday, June 2, 2010

அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே!

உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்

கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம்.

இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இப்போது இடம்பெறும் இந்த நிகழ்வு நூற்றுக்கு மேற்பட்ட எங்களது வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ள படியால் உங்கள் முன் உண்மைகளை வைக்கிறோம்.

தாயகத்தில் எமக்காகப் போராடிய உறவுகள் மௌனித்துப் போனதும் இங்கே நிலைமை தலைகீழாக மாறியது. இந்த மூன்று ஊடகங்களையும் நிர்வகிக்க என தாயகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தனிமனிதனால் அடக்கு முறையாகவே நடத்தப்பட்டு வந்தோம்.

இந் நிலையிலேயே இந்த ஊடககங்களை தனது சொந்தச் சொத்து எனக் கூறி “அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி சுவீகரிக்க முற்பட்டார். எங்களிடமே பலமுறை இது பொதுப் பணமல்ல, எனது சொந்தப் பணம் என்று உண்மைக்கு மாறாக கதைக்க முற்பட்டார். ஆனால் அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த நிலையிலேயே இந்த மூன்று நிறுவனங்களையும் ஒரு பொது நிறுவனம் கையேற்க வேண்டுகோள் எங்கள் மத்தியில் வலுப்பெற்றது. எங்களது உணர்வுகளைப் பிரதிபலித்து இதையே தான் ரி.வி.ஐ. நிர்வாகமும் தற்போது செய்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.

மக்களாகிய நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரி.வி.ஐ. நிர்வாகத்தினர் ஏதோ தனியாகப் பிரிந்து போவதாகக் கூறப்படும் கதையில் உண்மையில்லை. ரி.வி.ஐ நிர்வாகத்தினர் தனியார் கபடமாக அபகரிக்க முற்பட்ட தமிழர்களின் சொத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே முழுப்பிழையும் சி.எம்.ஆர் – சி.ரீ.ஆர் நிறுவனங்களை இப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நபரையே சாரும்.

ரி.வி.ஐ நிர்வாகம் கேட்பது தான் எமது கோரிக்கையும் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறோம். இந்த மூன்று நிர்வாகங்களையும் ஒரு பொது அமைப்பின் (trustee company) கீழ் கொண்டு வாருங்கள். ஊழியர்களிற்கு தகுந்த சம்பளம் வழங்குங்கள். தனியான ஒரு ஆள் அமைப்பின் பேரால் சுருட்டிச் செல்லும் அநியாயத்தை தடுக்க விரும்புகிறோம்.

ஒரு கிழமையில் ஒரிரு நாட்கள் அலுவலகத்திற்கு வரும் “தாயக அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி 150,000 டொலர்களை வருடச் சம்பளமாகவும் கார், விமானச்சீட்டு என ஏனைய வசதிகளையும் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு பெற நாங்களோ மணிக்கு 15 டொலர்களையே பெறுகிறோம். இந்த நபர் இரண்டு வருடங்களிற்கு முன்பே திடீரெனக் கொண்டு வந்து புகுத்தப்பட்டவர். ஆனால் நாங்கள் 7 வருடங்களிற்கு மேலாக இந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறோம். இதைவிடக் கொடுமைபல ஊதிய விவகாரத்திலும் ஏனையவற்றிலும் இடம்பெறுகின்றன.

குறிப்பாக 3,500 டொலர்கள் பெறப்படும் ஒரு மணி நேர நேரடி விளம்பர ஒளிபரப்பிற்கு நாங்கள் குறைந்தது 6 மணித்தியாலங்களை அந்த நேரடி ஒளிபரப்பு நடைபெறும் கடையில் செலவளிப்போம். ஆனால் எங்களிற்கு தரப்படுவது வெறும் 100 டொலர்கள் மட்டுமே. இது ஒரு ஜனநாயக விரோத செயலாக இருந்தும் நாங்கள் தொடர்ந்து பணி புரிகிறோம்.

எனவே ரி.வி.ஐ. நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மூன்று நிறுவனங்களiயும் கனடாத் தமிழ் மக்கள் ஒரு பொது நிறுவனத்தின் மேற்பார்வையில் கொண்டு வந்து தனிநபர்கள் பொது மக்களின் சொத்துக்களை அபகரிப்பதைத் தடுக்க பணிவாக வேண்டிக் கொள்கிறோம்.
இந்தப் பிரச்சினையை மக்கள் முன் கொண்டு வந்து எமது பிரச்சினையை முன்னெடுத்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்.

- பாதிக்ப்பட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் விசன் தொலைக்காட்சி, கனடியப் பல்கலாச்சார வானொலி, கனடியத் தமிழ் வானொலி.
www.cmr.fm www.tamilvision.tv www.ctr24.com
0

Read more...

புதிய நிர்வாகத்தின் கீழ் கனடியத் தமிழர் தொலைக்காட்சி

கனடாவில் கடந்த 10 வருடங்களாக இயங்கிவரும் தமிழர் தேசிய தொலைக்காட்சி புதிய நிர்வாகத்தின் கீழ் தனது பணியைத் தொடர்வதாக கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாயகம், தேசியம் என்பனவற்றைப் உயிர் மூச்சாகக் கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மேற்படி தொலைக்காட்சியின் பங்குத்தாரர்களின் முடிவின் பிரகாரம் மேற்படி தொலைக்காட்சி அதன் இணை அமைப்புக்களாக இதுவரை இயங்கி வந்த சி.எம்.ஆர், சி.ரி.ஆர் வானொலிகளில் இருந்து விடுபட்டுள்ளதாகவும்,

தமிழர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி தமிழர்களின் அவலத்தை வெளியுலகிற்குக் கொண்டு வரும் பணியை எந்தவித தடங்கலுமின்றி முன்னெடுக்கும் அதேவேளை, மக்களின் இடர்களைய தான் மேற்கொண்டுள்ள பணியையும் தொடர்ந்து செய்யும் எனவும் தெரியவருகிறது.

தமிழர் தேசிய தொலைக்காட்சியின் புதிய நிர்வாக இயக்குனராக மூத்த ஊடகவியலாளரான திரு.பி. விக்னேஸ்வரன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். தமிழர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அந்தத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு மற்றும் நிகழ்ச்சிப் பிரிவுகளிற்கு பொறுப்பாக இருந்த திரு.பி. விக்னேஸ்வரன் அவர்கள்,

தமிழ்மக்கள் போரின் பேரவலத்தைச் சந்தித்தப்போது அது தொடர்பான செய்திகளை முதன்மைப்படுத்தி அதனை மக்கள் பால் சென்றடையப் பெரிதும் பங்களித்த ஒரு விடுதலை விரும்பியாவார். இவரைப் பற்றிய காழ்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மூன்று ஊடகங்களும் ஒரு நன்னம்பிக்கை நிறுவனத்தின் கீழ் வரும் பட்சத்தில் இணைந்து செயற்பட மேற்படி தொலைக்காட்சி விரும்புவதாகவும் தமிழ்த் தேசியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஊடகம் தனியார் மயமாகும் அபாயத்தைத் தடுப்பதற்காகவே புதிய நிர்வாகம் பிரிந்து செல்லும் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது.

Read more...

யாழ் உதயன் பத்திரிகை இரண்டாக பிளவு?

உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகள் இரண்டாக பிளவு பட்டுள்ளதாக தெரியவருகின்றது. உதயன் பத்திரிகையின் வித்தியாதரன் மற்றும் சரவணபவன் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள விரிசலே இதற்கு வித்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தனக்கு ஆசனம் வழங்காமல் சரவணபவனுக்கு ஆசனம் வழங்கப்பட்டமை குறித்தே சரவணபவனுக்கும், வித்தியாதரனுக்குமிடையே விரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தன்னை ஒரம்கட்டி தனது சுயநலங்களுக்காக பாராளுமன்ற தேர்தலில் சரவணபவன் போட்டியிட்டதால் வித்தியாதரன் மனக் கவலையடைந்துள்ளதுடன் இருவருக்குமிடையிலான விரிசல் பாரியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளதாகவும், வித்தியாதரன் விரைவில் யாழ்ப்பாணத்தில் சரவணபவன் உதயன் பத்திரிகைக்கு போட்டியாக புதிய பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் யாழில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உதயன் பத்திரிகையின் முக்கியஸ்தர் சரவணபவன் எதிர்வரும் வடக்கு மாகாணசபைக்கு இடம்பெறவுள்ள முதலமைச்சர் தேர்தலில் போட்டியிடுவதற்கும் எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் சரவணபவனுக்கும் போட்டி நிலவுவதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

Read more...

Friday, May 28, 2010

எங்கே பிழைத்தது எங்கள் ஆயுதப் போராட்டம்?

5,000 தொன்களிற்கு மேலான கந்தகத்தை விழுங்கி, செல்கள், விமானக் குண்டுகள், சன்னங்களென இரும்புத் துண்டங்களையே விளைநிலத்தின் பயிர்களாகக் கொண்டு விடுதலை மேனிகளின் உதிரத்தையும், உடலங்களையும் உரமாக்கி ஒரு அவலக்காடாக மாறிப்போயுள்ள எங்கள் வன்னி நிலம் அழிந்து கொண்டிருக்கிற ஒரு பூமியாக.......

இந்த மாத ஆரம்பத்தில் நியூஸ்வீக் சஞ்சிகை உலகில் இருந்து காணமல் போகக்கூடிய இடங்கள் 100 என ஒரு விசேட பதிப்பொன்றை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கையில் மாறிவரும் தட்டவெட்ப நிலையால் நுவரெலியா தேயிலை உற்பத்தியின் மையம் என்ற பெருமையை இழக்கலாம் எனக்கூறி இலங்கையிலிருந்து நுவரெலியா தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்தபோது எனக்குள் எழுந்த கேள்வி யாதெனில்,

5,000 தொன்களிற்கு மேலான கந்தகத்தை விழுங்கி, செல்கள், விமானக் குண்டுகள், சன்னங்களென இரும்புத் துண்டங்களையே விளைநிலத்தின் பயிர்களாகக் கொண்டு விடுதலை மேனிகளின் உதிரத்தையும், உடலங்களையும் உரமாக்கி ஒரு அவலக்காடாக மாறிப்போயுள்ள எங்கள் வன்னி நிலம் இந்த மேற்குலக ஊடகங்களிற்கு அழிந்து கொண்டிருக்கிற ஒரு பூமியாகத் தெரியவில்லையே என்பதேயாகும்.

30,000 மேற்பட்ட போராளிகள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காவு கொடுக்கப்பட்டு விருட்சமாக வியாபித்திருந்த ஒரு போராட்டம், நிழலரசைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு இனம் இவ்வாறு முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது எதோ ஒரு எதிர்பாராத விபத்தல்ல. மற்றவர்களின் மீது பழிபோட்டுத் தப்பிவிடும் காரியத்தில் கெட்டிக்காரரான நாங்கள் சர்வதேசத்தை மாத்திரம் பழிகூறித் தப்பிக்க இது ஏதோ சிறு தவறுமல்ல. எனவே அலசி ஆராய்வோம் வாருங்கள்.

சர்வதேசத்தின் வேண்டுகோளிற்கமைய ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று மே 17ம் திகதி நாங்கள் எங்களையே தேற்றிக் கொண்டது 2009 பெப்ரவரி மாதம் 23ம் தேதி சர்வதேச சமூகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கான பதிலாக. ஆனால் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது 27 சதுரகிலோ மீற்றர் பரப்பளவு நிலத்திற்குள் விடுதலைப்புலிகளும் வன்னி வாழ் மக்களும் முடக்கப்பட்டிருந்தனர். ஆனால் மே 17ல் நாங்கள் ஆயுதங்களைக் கையளிக்க முன்வந்த போது எங்களிடம் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை.

இந்த மூன்றைரை மாதக் காலங்கடத்தல் என்பது எங்களின் மகா தவறு என்பதை மறுத்து எல்லாமே முடிந்த பிறகு உங்களின் வேண்டுகோளிற்காகவே நாங்கள் ஆயுதங்களை மே 17ல் கையளிக்க முன்வந்தோம் என சர்வதேசத்தின் மீது பழிபோட்டுத் தப்பிக்க முயல்வது மடமை. அத்தோடு இந்த இழப்பு பத்தோடு பதினொன்றான விடயமல்ல. தமிழர்களின் வரலாறே அழிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. இதற்கான காரணத்தை நாங்கள் ஆராய்ந்து உசாரடையாவிட்டால் மீண்டும் எங்கள் இனம் எங்கள் சொந்தங்களாளேயே ஏமாற்றப்பட்டுவிடும்.

இந்தப் போராட்டத்தின் பின்னடைவிற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு.

முதலாவது பேச்சுவார்த்தைக்கான ஒரு தரப்பாக விடுதலைப்புலிகள் சமபலத்துடன் பேசமுன் வந்த சமயம் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. வெளிநாடுகளிலுள்ள பிரதான விடுதலைச் செயற்பாட்டாளர்களை தமிழீழத்திற்கு அழைக்கிறார் தமிழீழ நிழலரசின் வெளியுறவு அமைச்சர் கஸ்ரோ. ஆனால் அவருக்கு கிடைத்த பதில் அண்ணையூடாக (கே.பி.) அழையுங்கள் என்பதாகும். வெளிநாட்டிலுள்ளவர்கள் அதுவரையும் கே.பி.யூடான தொடர்பையே பேணியதால் அவர்களுடைய பதிலிற் பிழையில்லை. ஆனால் கஸ்ரோவின் புரிதலில் தவறு ஏற்படுகிறது.

இந்தச் செயலைத் தனது ஆளுமைக்கான அவமானமாகக் கருதிய கஸ்ரோ தலைவரிடம் முறையிடுகிறார். கே.பி. தனி ஆவர்த்தனம் வாசிப்பதாகவும் அவரிற்கென்ற தனிப்பட்ட செல்வாக்கு வளையமே வெளிநாடுகளில் கோலோச்சுவதாகவும் செய்த முறைப்பாடு காரியமாக்கப்பட்டது. கே.பி. தொடக்கம் ஒவ்வொரு நாடுகளிலும் தலைமைத் தொடர்பாளர்களாக இருந்த அனைவருமே மாற்றப்படுகின்றனர். கஸ்ரோவின் சிபாரிசிலானவர்கள் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் புலம்பெயர்ந்த ஊடங்களிலும் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் மாற்றப்படடு கஸ்ரோ சார்பானவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அத்தோடு தனது நேரடியணியிலிருந்து மூவரை மேற்குலக ஊடக செயற்பாட்டை வழிநடத்தவென அனுப்பி வைக்கிறார். இவ்வாறு விரைவாகச் செயற்பட்ட கஸ்ரோ தனக்கான அதிகார அணியாக அரசியற்துணைக்குழு என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒருவரை நியமித்து ஒரு குழுவை அமைத்து அவர்களை வழிநடத்துநர்களாக அதிகார மையமாக வலம்வர விடுகிறார்.

எந்தவித அனுபவமுமில்லாத இந்த இளைஞர்கள் மற்றையவர்களைப் புறந்தள்ளி தங்களின் திட்டங்களை முதன்மைப்படுத்தி சிறுபிள்ளை வேளாண்மையாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முயன்றது.

அனுபவதாரிகளின் நுட்ப வலைப்பின்னலில் இருந்து ஆயுத விநியோகமும் இவ்வாறு கை மாற்றப்பட புதியவர்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவிலான பின்வாங்கல்களை பரிசாகப் பெற்றுக் கொள்கின்றனர். இவர்களில் மட்டும் பிழையில்லை இந்தக் கணப்பொழுதில் இலங்கையும் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றிருந்ததால் கப்பல்களைக் கண்காணித்ததும் ஒரு காரணம். இருந்த போதும் அனுபவமின்மை பல சறுக்கல்களை பரிசாகக் கொடுத்தது.

கஸ்ரோவின் பொறுப்பெடுப்பின் பின்னான காலத்தில் சென்ற 13 கப்பல்களும் இந்துமா கடலிற்கு இரையாகின. விமானங்கள், உலங்குவானூர்திகள், ஆட்டிலறிகள் என இன்னோரன்ன ஆயுதங்களும் அவற்றோடு மௌனித்து அடிக்கடலில் சங்கமித்தன.

இங்கே தான் விடுதலைப் போராட்டத்தின் ஆணி வேரே புடுங்கப்பட்டது. தீவொன்றில் இருந்தவாறே போராடும் இனமொன்றிற்கு கடற்போக்குவரத்தே உயிர்மூச்சு என்பதையறிந்து கடற்புலிகளை இந்துமா சமுத்திரத்தின் மூன்றாவது படையணியாக உருவாக்கிய விடுதலைப்புலிகளின் கடல் வலைப்பின்னலைக் கையாள்வதில் கஸ்ரோவின் அணி தோல்வி கண்டது.

இரண்டவாது காரணம் வெளிநாட்டு உறவுப் பேணல். புலம்பெயர்ந்த நாடுகளிற்கான சிறப்புப் பிரதிநிதிகளாக கஸ்ரோவால் நியமிக்கப்பட்ட நபர்கள் இராஜதந்திர உறவுப் பேணலை மேற்கொள்ளக்கூடிய தகமையற்றவர்களாக இருந்த காரணத்தால் அவர்கள் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் விடுதலைக்கான ஊடகங்களிற்கூடாக செயலாற்ற விடப்படுகின்றனர்.

இதற்கு எந்தவிதத் தங்குதடையில்லாமல் முக்கிய ஊடகப் பொறுப்பாளர்கள் லண்டன், பாரிஸ், ரொறன்ரோ (ஐ.பி.சி, ரி.என்.ரி, சி.எம்.ஆர்) ஆகிய முக்கிய தளங்களில் கஸ்ரோவின் ஆதரவாளர்களாக மாற்றப்பட்டதால் இதன்வழியான கருத்துப் பரிமாறல்கள் மூலமாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை உண்மையானதாகத் திரிபுபடுத்தி வலம்வர விடுகிறார்கள். இது விடுதலைப்புலிகளின் பலம் தொடர்பான ஒரு மாய நிலையை புலம்பெயர்ந்த மக்களிடையே எற்படுத்தியது.

இதனோடு இவர்களால் முனைப்புப்படுத்தப்பட்ட போராட்டங்களும் விடுதலையின் தேவையைப் பறை சாற்றுவதாகவோ அல்லது மக்களின் வலியினைப் பறைசாற்றுவதாகவோ அல்லாமல் ஏனைய இனத்தவர்களை கோபமுறச் செய்வதாகவும், இந்தக்குழு தங்களது சொந்தப் பலத்தை தலைமைக்கு நிரூபிப்பதற்கான ஒரு தளமாகவும் பாவிக்கப்பட்டது.

எந்த ஒரு மேற்குலக நாட்டிலுமே எந்த ஒரு இராஜதந்திர வலைப்பின்னலையும் வெற்றிகரமாக ஏற்படுத்த முடியாதவர்களாக கஸ்ரோவினால் நியமிக்கப்பட்டவர்கள் இருந்தபோதும் அவர்களால் மற்றையவர்களை அரவணைத்துச் செல்வதற்கான புரிந்துணர்வும் இல்லாமல் இருந்ததே மிகப்பெரும் வீழ்ச்சியாக அமைந்தது.

இத்தோடு இவர்களை வழிநடத்தவென கஸ்ரோவால் அனுப்பப்பட்டவர்கள் விடுதலைப்போராட்டம் தொடங்கியதன் பின்னான காலத்தில் பிறந்த இளம்வயதினர் என்பதோ புலம்பெயர் நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பான அனுபவம் அறவேயில்லாதவர்கள் என்ற காரணத்தால் அவர்களிற்கு இவர்களின் சொல்லைக் கேட்பதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. இவர்களே சக்கர நாற்காலியின் துணையடன் இயங்கும் கஸ்ரோவின் கதாநாயகர்கள் ஆகின்றார்கள்.

இவர்களிலொருவர் நோர்வேயிலிருந்து சென்ற மாணவியொருவரைக் காதலித்து நோர்வேக்கு குடிபுகுந்த ஒரு சாதாரண போராளி. வெளிநாடுகளிலிருந்து போவோருக்கு பயண வழிகாட்டியாக இருப்பதே தமிழீழத்தில் அவரது முழு நேர வேலை. அவரே இப்போதைய தலைவராக போற்றிப்பாடப்படுகிற நெடியவன் என்கிற போராட்ட காலத்திற்குப் பிறகு பிறந்த ஒரு பாலகன். இது புலம்பெயர்ந்த மக்களிற்கான ஒரு துன்பியல் வரலாறு.

இவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் வழிநடத்துனர்கள் என்பதை விட தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்பவர்களாகவே இருந்தனர். மத போதகர்கள் போல அதீதமான நம்பிக்கையை இரு தரப்பிற்கும் கொடுத்துக் கொண்டிருந்த இவர்களிற்கு களத்துடனோ அல்லது புலத்துடனோ பரிச்சயமான தொடர்பு இறுதிக்காலத்தில் இல்லாததே இப் பெரிய அழிவின் காரணம்.

இந்த தன்மையை இறுதியாகப் புரிந்து கொண்ட விடுதலைத்தலைமை கே.பி.யே வெளியுறவுப் தொடர்புகளிற்கான பொறுப்பாளர் என்று ஜனவரி 30, 2009ல் அறிவித்து சமாதான நகர்வுகளிற்கும், சர்வதேச உறவிற்கும் கே.பி.யே முதன்மைத் தொடர்பாளராக இருப்பார் என்பதையும் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கிறது. இதனால் மீண்டும் தாங்கள் பழைய நிலையை அடையலாம் என விடுதலைப்புலிகள் நினைத்திருந்தாலும் நிலைமை தலைகீழாகவே இருந்தது.

ஏனெனில் சகல நாடுகளிலும் அப்போது பொறுப்பாளராக இருந்தவர்கள் கஸ்ரோவால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள். எனவே இவர்கள் கஸ்ரோவிடம் இருந்து தகவல் வந்தாலே தாங்கள் செயற்பட முடியும் என்ற அடாவடித்தன முடிவுகளையெடுத்து அதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார்கள். இது கே.பி.யை செயநிலையற்ற ஒருவராக பெயருக்கு மாத்திரம் இருக்க மாத்திரமே வழி செய்தது.

அத்தோடு கே.பி.யின் தகவற் பரிமாற்றத்திலும் தடைக்கல்லாக கஸ்ரோவின் அணி விளங்கியது. கே.பி.யால் சொல்லப்பட்ட தகவல்கள் கூடத் தலைவருக்கு செல்லாமல் இடைநடுவிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டு அதன்படியே நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவையனைத்தையும் தலைவர் தெளிவாக அறிந்த போது போராட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தது. இந்தத் தவறுக்கான முழுமுதற் காரணமாக கஸ்ரோவும் அவரது வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களுமே என்பதையுணர்ந்த தலைவர் கஸ்ரோவைச் சந்திப்பதையோ உரையாடுவதையோ தவிர்க்கிறார். கடைசியாக கஸ்ரோவிற்கான நஞ்சருந்திச் சாகும்படி உத்தரவும் போகிறது. போராட்டம் முடிவடைவதற்கு 10 நாட்களிற்கு முன்பே கஸ்ரோ இவ்வுலகை விட்டு மேலுலகு செல்கிறார்.

எல்லாமே முடிந்தாயிற்று. தேசியத்தலைவர் கடைசியாக யாரைத் துரோகிகள் என்று அடையாளம் காட்டினாரோ அவர்களே இப்போதும் துரோகத்தின் உச்சியில் இருக்கிறார்கள். ஆனால் தாங்களே தேசியத்தின் வாரிசுகள் எனக் கூறிக் கொண்டு தேசியத் தலைவனிற்கு அவமரியாதை செய்து கொண்டு அவரைத் தங்களின் தேவைகளிற்குப் பலிக்கடாவாக்கிறார்கள். அத்தோடு உருத்திகுமாரனைத் துரோகி என்பதில் இருந்து நாடுகடந்த அரசைச் செயலிழக்க வைப்பதிலிருந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தது வரை எல்லாக்காரியங்களையும் இந்தக் கூட்டமே செய்து கொண்டிருக்கிறது.

தேசத்தின் தலைவன் இறுதியாக யாரைத் துரோகியாக அடையாளம் கண்டு கொண்டாரோ அவர்களை நாங்களும் அடையாளம் கண்டுகொள்வோம். ஏனென்றால் மே 17ம் திகதி வன்னி அழிந்து முடிகிற தறுவாயில் இவர்கள் தேசியக் கொடி பற்றி அலசி ஆராய்ந்து அது புலிக் கொடியல்ல பல நூற்றாண்டுகளிற்கு மேலாக கொடி என்பது பற்றியே பேசிக் கொண்டிருந்தனரே தவிர, மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கிறார்கள் அவர்களைக் காப்பாற்றுங்கள் என்பது பற்றியல்ல.

மேரி மைந்தன் mainthanm173@gmail.com

Tamilwin

Read more...

Germany-based LTTE fund raiser arrested

Police on Wednesday arrested a key supporter of the now defunct LTTE, on her arrival in Colombo.

Well informed sources said that she had been instrumental in collecting funds in Frankfurt for the terrorist organisation and played a key role in the anti-Sri Lanka demonstrations held in the German Commercial Capital during the final stages of the 'humanitarian operation' launched by the security forces. "She was a key member of the pro -LTTE group who sat across railway lines and blocked the movement of trains in Frankfurt demanding the Sri Lanka government to halt the operation against the LTTE," sources said.

The woman, who had lived in Germany for a considerable period, was also one of the main organisers of the anti-Sri Lanka demonstration held opposite the Indian Consul General's office in Frankfurt, sources said.

The suspect is a native of Chilaw and is around 50 years of age.

Some of her close relatives too had been involved in the demonstrations against Sri Lanka and had raised funds for the LTTE inse relatives too had been involved in the demonstrations against Sri Lanka and had raised funds for the LTTE in Frankfurt, the sources said.

Her family owns the GS Traders in Frankfurt and her son-in-law who is also an LTTE supporter is looking after the business, the source said.

She is being interrogated by the CID, sources said.

Courtesy : The Island

Read more...

நெருப்புக்கு வந்த மடல்: நாடு கடந்த தமிழீழம் கேட்டவை இன்று இலங்கை அரசிடம் எவ்.எம் வானொலி கேட்கினம்!

புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத போராட்டத்திற்கு துணைநின்று ஏக தலைமை கொண்டாடியவர்கள் கடந்த ஆண்டு விடுதலை புலிகள் அழிக்கப்பட்டதும் குத்துக்கரணம் அடித்து நாடு கடந்த தமிழீழம் என்று கூச்சலிட்டவர்களின் சுயரூபம் இப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்துள்ளது.
நாடு கடந்த தேர்தல் என்று கோஷமிட்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து மண்கவ்வியதும் தற்போது இலங்கை அரசிற்கு துதிபாடி அன்று துரோகியாக சித்தரித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போற்றிப்பாடி தற்போது எவ்.எம். வானொலிக்கான அனுமதியை இலங்கையில் பெற்றிட துடிக்கின்றனர் கனேடிய வானொலி இயக்குணர்கள்.

சில வாரங்களிற்கு முன்னர் நாடு கடந்த தமிழீழ தேர்தலில் போட்டியிட்ட இந்த வானொலி கோமாளிகள் தம்மைப்பற்றி இவ்வாறெல்லாம் கூறி கனேடிய தமிழ் மக்களை ஏமாற்ற முயன்ற பிழைப்புவாதிகள் ஆவர்.

*தமிழ் ஆங்கிலம் இரு மொழியில் சிறந்த அறிவு
*அரசியல் தீர்க்கதரிசி
*கனேடிய அரசியலில் நீண்டகால அறிவு

தாயக தமிழர்களில் மிகுந்த அக்கறை, தாயக தமிழ்மக்களிற்கு மிகுந்த பங்களிப்பு என்றெல்லாம் பிதற்றியவர்கள். தாயகம், சுயநிர்ண உரிமையுடன் கூடிய தமிழழனே தன்னை ஆழக்கூடிய உரிமையை பெற்றிட தன்னால் முடிந்த முயற்சியை எடுப்பேன் என்று தமிழர்களிற்கு மாயை வித்தை காட்டிய துரோகிகள் அந்த தேர்தல் முடிந்து ஒருசில வாரங்கள் கூட ஆகாத நிலையில், தமது சுயவடிவத்தை வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர். கடந்த 15 ஆண்டுகளிற்கு மேலாக சிங்கள அரசுகளுடன் கைகோர்த்து தமிழனின் உரிமையை விற்று பிழைக்கும் தமிழ் அமைச்சரை பற்றி இவ்வாறு கூறுகின்றார் வானொலி நிலையமொன்றின் இயக்குணர்.

மாண்புமிகு வடகிழக்கு அபிவிருத்தி அமைச்சர் அவர்களே, எனது வேண்டுகோளுக்கு இணங்கி புலம்பெயர் தமிழ்மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக்கூற உடன்பட்டமைக்கு எனது தலைசார்ந்த வணக்கம், உங்களுக்கு எவ்வளவோ அபிவிருத்தி வேலைகள் இருந்தும் அதற்குள் சிறிய நேரம் ஒதுக்கி எனது வேண்டுகோளை நிறைவேற்ற வந்தமைக்கு முதற்கண் நண்றி கூறுகின்றேன்.

நடைமுறைக்கு வராதவற்றையோ, நியாயமாக கிடைக்காது என்று தெரிந்து, அதற்காக காலத்தை வீணடித்து அரசுடன் முரண்படுவதையோ நீங்கள் விரும்பாததுபோல நானும் அதே கருத்தை கொண்டவன் என்பதில் ஜயமில்லை. அரசு தர நினைப்பதை நாம் பெற்றுக்கொண்டு. அதை வைத்து தமிழ் மக்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்று நினைப்பதுதூன் எனது நிலைப்பாடு. உங்களது கொள்கையின் பின்னால் நான் நிற்பேன் என நம்பிக்கையாக கூறிக்கொள்கிறேன். எனது சொந்த நிதியில் இருந்து 500 டொலர் பணத்தை உடனடியாக உங்கள் பெயரில் அனுப்பி வைக்கிறேன்.

இப்படி புலம்பெயர்ந்த மக்கள் என்னைப்போல் உங்கள் கொள்கையின் பின்னால் அணிதிரளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த வழியை பின்பற்றினால் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என்று நம்புகிறேன் என்று பல்டி அடித்தவர்கள்தான் இந்த வானொலி நிலையத்தினர். இந்த கருத்துக்களானது கடந்த நடுகடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்விகண்டவரும் கனடாவில் உள்ள தமிழ் வானொலி ஒன்றின் இயக்குணர் ஒருவரால் முன்னைநாள் துரோகியும் தற்போதைய கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வானொலி நிலையத்தினரால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளாகும்.

பிழைப்புவாத வானொலி இயக்குணரின் இவ்வாறான செயல்பாடுகள் மணித்த மாவீரர், போராளிகள், பொதுமக்களை இழிவுபடுத்தி பிழைப்பு நடாத்துவது வேதனைக்குரியது. இந்த ஈனப்பிறவியை கனேடிய மக்கள் இனம்கண்டு தூக்கி வீசவேண்டும். இந்த கோழைகள் கடந்த காலங்களில் கனேடிய தமிழ்மக்களை ஏமாற்றி பிழைப்பு மேற்கொண்டதுபோல் அல்லல்படும் எமது மக்களையும் ஏமாற்றி பிழைப்பு நடாத்த நாம் இனிமேல் அனுமதிக்ககூடாது.

ஆகவே நேரத்திற்கு ஒரு வார்த்தையும், நாளுக்கு ஒரு கொள்கையும் கொண்ட இந்த வானொலி இயக்குணர்களும், ஒலிபரப்பாளர்களும் கடந்த பல ஆண்டுகளாக கனேடிய தமிழர்களை புதைகுழியில் விழுத்தியதுபோன்று யுத்த கோரத்தில் அனைத்தையும் இழந்து நொந்துபோயுள்ள எமது தாயக உறவுகளின் இரத்தத்தையும் உறிஞ்சி தமது வயிற்று பிழைப்பை மேற்கொள்ளவே அமைச்சருடன் உறவு கொண்டு இலங்கையில் ஒர் எவ்.எம் வானொலி நிலையத்தை நிறுவும் கனவுடன் உலா வருகின்றனர்.

1995ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு மே மாதம் வரை புலிகளின் கருத்துக்கு எதிரானவர்களை துரோகியாக தெரிவித்த இவர்களுக்கு இன்றுதான் அமைச்சர் டக்ளஸ் மக்கள் தலைவர்களாக இந்த வானொலி நிலையத்தினருக்கு தெரிந்துள்ளது. தமது பிழைப்புக்காக எந்த நிமிடமும் குத்துக்காரணம் போடும் கோமாளிகள்தான் நாடுகடந்த தமிழீழ பிரதிநிதிகளாக முயன்றவர்கள். இந்த கோமாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பதை இவர்களது செயற்பாடுகள் வெளிப்படுத்தி வருகின்றன. தமது வயிற்று பிழைப்புக்காக எவனையும், பொட்டு கொடுத்தும் காட்டி கொடுத்தும் உயிர்வாழும் இந்த கூட்டத்தினர். இன்று புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் துரோகிகளாக சித்தரித்தவர்களுடன் கைகோர்த்து கும்மாளமிட்டு தமது வயிற்றுப்பிழைப்பை நடாத்த முயல்கின்றனர்.

தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு காரணமான இவர்கள் கடந்த காலங்களில் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதிசேகரித்து கொடுத்து அவர்களது வானொலியில் சென்று கருத்து கூறுபவர்களை கூட துரோகிகள், எட்டப்பர்கள் என்று கூறிய காலம் போய், அன்று எந்த அமைச்சரை துரோகிகள் என்று கூறினரோ இன்று அந்த அரச அமைச்சரை செவ்வி கண்டு நீங்கள்தான் உண்மையான மக்கள் தலைவர் என்று புகழ்பாடும் நிலைக்கு வந்துள்ளனர். இந்த கோடரி காம்புகள் குறித்து கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்கள் ஏமாந்தது போன்று எதிர்காலலத்தில் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும் ஏமாந்து விட வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டு கொள்கின்றேன்.

ஏம்.ரவி

நெருப்பு இணையம்

Read more...

A new Sri Lanka

Read more...

இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்!

2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரம். இந்தியாவின் இன்றைய பாதுகாப்புச் செயலரும் அப்போது வெளியுறவுச் செயலருமாயிருந்த சிவசங்கர் மேனன் முக்கிய பயணமாக அமெரிக்கா சென்றார். வழமையான ராஜாங்கப் பயணம்போல் இது வெளிக் காட்டிக் கொள்ளப்பட்டாலும் மிக முக்கியமானதும், உண்மையில் மிக அவசரமானதுமாயிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் கொணர்வது, முற்றுகையிடப்பட்டு நின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களை புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக முகாம்களுக்கு நகர்த்துவது, தனது நேரடி மேற்பார்வையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே அரசியற் பேச்சுவார்த்தைகள் நடத்தி கூட்டாட்சி அடிப் படையிலான ஓர் தீர்வினை அடைவது ஆகிய மூன்று நோக்குகளுடன் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன் றிற்கு அமெரிக்கா கொள்கை ரீதியான முடிவெடுத்து, செயற் திட்டம் நோக்கி நகரத் தொடங்கியிருந்த சூழலில்தான் சிவசங்கர் மேனன் அவசரமாக அமெரிக்கா சென்றார்.இங்கு நக்கீரனில் எழுதப்படுபவை தமிழுலகம் இது வரை அறியாத தகவல்கள்.

மார்ச் 05-ம் தேதியன்று வாஷிங்டன் டி.சி.யில் வைத்து பூர்வாங்கமாக சிவசங்கர் மேனனிடம் அமெரிக்கா தனது திட்டத்தைத் தெரிவித்ததாக, சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்ன ரேயே அமெரிக்காவின் நகர்வுகள் இந்தியா வுக்கு தெரிந்தே இருந்தன. தென் ஆசியாவில் முதன்முறையாக மிகப்பெரும் ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற் கொள்ளும் அமெரிக்காவின் இத்திட்டத்தில் மைய மாக இருந்தது. PACOM என்று ஆங்கிலத்தில் பொதுவாக அறியப்படும் அமெரிக்காவின் "ஆசிய பசிபிக், ராணுவப் பிரிவாகும். 2009 பெப்ருவரி மூன்றாம் வாரத்தில் அமெரிக்க ஆசிய பசிபிக் ராணுவப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் கொழும்பு நகரில் கோத்தபய்யா உள்ளிட்ட முக்கிய ராணுவத் தளபதியர்களை சந்தித்து இது தொடர்பாக விரிவாக விவாதித்திருந்தமையால் அமெரிக்கத் திட்டத்தினது பரிமாணங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தெரிந்தே இருந்தது.

வெளிப்படையாக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள ராஜபக்சே சகோ தரர்கள் தயங்கியபோதும் அமெரிக்காவின் ராணுவத் திட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. அமெரிக்கா இலங்கைக்குள் ராணுவரீதியாய் நேரடியாகக் காலூன்றிவிட்டார்கள் என்றால் அவர்களது நீண்டகால கட்டுப்பாட்டிலிருந்து மீள முடியாதென்பதும், தனித்தமிழ் ஈழத்தை வலியுறுத்தாவிட்டாலும் 2003 நார்வே நாட்டு இடைப்பாட்டிலான ஓஸ்லோ (Oglo) பிரகடனத்தின் அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னாட்சி அமைப்பொன்றினை அமெரிக்க-மேற்குலக நாடுகள் தமிழருக்காக வலியுறுத்துவார்களென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அமெரிக்காவின் இத்திட்டம் செயல்வடிவ நிலைக்கு நகருமுன் அதிரடி யாக -பெரும் மனித அழிவு நேர்ந்தாலும்கூட -யுத்தத்தை முடுக்கி முடித்து விட ராஜபக்சே சகோதரர்கள் விரும்பியதில் வியப்பில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நிறைவுற்ற அந்த இன அழித்தல் கடைசிப் போருக்குத் தானாகவே முன்வந்து ஊக்கமும் உறுதுணையும் தந்தது சீனா. போரினை இத்துணை கொடூர மாக முடிவுக்குக் கொண்டுவருவதனால், எதிர்காலத்தில் அனைத்துலக அளவில் ஏற்படும் அத்தனை நெருக்கடிகள்... சங்கடங்களிலிருந்தும் ராஜபக்சே சகோதரர்களைக் காப்பாற்றும் வாக்குறுதியினை சீனா கொடுத்தது. போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திட பச்சைக் கொடி காட்டியதும் சீனாதான்.

அமெரிக்காவின் வல்லாதிக்க அபிலாஷைகளைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். அதுபற்றி இடது சாரி சிந்தனையாளர்கள் தமிழில் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அது உண்மையும்தான். இப்பூவுலகின் கோடானுகோடி மக்களது வாழ்வு வறுமையுற்று நலிந்திட அமெரிக்காவின் வல்லாதிக்க பொருளியல் -ராணுவ கொள்கைகள் காரணமாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவுக்காய் வக்காலத்து வாங்குவது நம் வேலையல்ல. அதேவேளை சீனாவின் வல்லா திக்க, மேலாதிக்கக் கனவுகள் (Imperial Dreams) அமெரிக்காவை விட பன் மடங்கு வக்கிரத்தன்மையும் இன வெறித் தன்மையும் கொண்டவை. அதுபற்றி தமிழில் அதிகம் விவாதிக்கப் படவில்லை. காரணம் தமிழ் சிறு பத்திரிகை வட்டத்தில் இயங்குகிற பெரும்பான்மையோரின் இடதுசாரிச் சார்பு நிலை.

உண்மையில் அமெரிக்கா, போரின் இறுதிக் கட்டத்தில் நேரடியாக ராணுவத் தலையீடு செய்வதென்ற நிலைப்பாடு நோக்கி நகர்ந் தமைக்கு காரணமும்கூட தமிழ் மக்கள் மீதான அன்பு, பாசம் அல்ல. சீனா -தனது எதிர்கால வல்லாதிக்க விரிவாக்கத்திற்கு (Imperial Expansion) இந்தியப் பெருங்கடல் மேலாண்மை மிக முக்கியமானதென்ற கருதுகோளுடன் இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறதென அமெரிக்கா கருதியதும் அதனைத் தடுத்து நிறுத்தவும் -தொடர்ந்தும் எதிர்காலத்தில் சீனாவை சற்று கிடுக்கிப்பிடி நிலையில் வைத்திருக்க வும் இலங்கையில் நேரடி ராணுவ நிலைகொள்ளல் உதவுமென கருதி யதும்தான் முக்கிய காரணங்கள்.

2009 மார்ச் 6-ந் தேதி வாஷிங்டனில் செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்க துணை வெளியுறவுச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்: ""இலங்கை போர்க்களத்தில் என்ன நடக்கிறதென்பதை கவனிக்கவும், அமெரிக்காவால் என்ன செய்ய முடியுமென்ற வாய்ப்புகளை அடையாளப்படுத்தவும் எங்களது அதிகாரிகள் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். துன்பப்படும் அந்த மக்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதனை நாங்கள் செய்வோம்.

மிகவும் நுட்பமான ராஜதந்திர சொல்லாடல்களால் போர்த்தப்பட்ட ரிச்சர்ட் பவுச்சர் அவர்களின் இந்தக் கூற்றினை அமெரிக்கா தன் திட்டத்திற்கு கட்டியம் கூறுவதாகவே இலங்கை -சீனா -இந்தியா உள்ளிட்ட நாடுகள் பார்த்தன.

முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் கொழும்பு வந்து ராஜபக்சே சகோதரர்களுடன் தமது ராணுவத் திட்டம் குறித்து விவாதித்த அதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடும் -அவர்களின் அனைத்துலக பிரதிநிதி களூடாய் விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகள் முதலில் அறிவிக்க வேண்டும் -அதனைத் தொடர்ந்து அமெரிக்க இடைப்பாட்டில் இலங்கை அரசும் போரினை நிறுத்தும். அமெரிக்கப் படையினர், மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்க ஈடுபாட்டுடன் பாது காப்பான முகாம்களுக்கு அப்புறப்படுத்துவர். புலிகளின் ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்க ஏற்பாட் டின் கீழ் பூட்டி வைக்கப்படும் (Locking of Weapons). தொடர்ந்து அமெரிக்க ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே முறிந்துபோன அரசியற் பேச்சுவார்த்தை கள் மீண்டும் தொடங்கும். பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் பூட்டி வைத்த ஆயுதங்களை அமெரிக்கா விடுதலைப்புலிகளிடமே திருப்பித் தந்துவிடும். இவையே விடுதலைப்புலிகளுடன் விவாதிக்கப்பட்டவை.

மேற்சொன்னவற்றில் ஆயுதங்களை பூட்டி வைக்க ஒப்படைப்பதில் மட்டும் விடுதலைப்புலிகளின் தலை மைக்கு உடன்பாடு இருக்க வில்லையெனவும், அதே வேளை அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னொருபுறம் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்காக அமெரிக்கா ஆயத்தப் பணிகள் செய்யத் தொடங்கியிருந்தது. அதன்படி PACOM-அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் கடற்பிரிவினது Marine Expeditionary Brigade முல்லைத்தீவு கடற்பரப்பில் தரையிறங்கும். PACOM-ன் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளும் இந்நடவடிக்கையில் இணைந்திருக்கும்.

மிக முக்கியமான செய்தி என்ன வென்றால் தென் ஆசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் ராணுவ அரசியல் வரலாற்றின் தீர்க்கமானதொரு திருப்பு முனையாக அமையவிருந்த இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா (Coalition Humanitarian Task Force)- "நேச நாடுகளின் மனிதாபிமான செயற் படை' எனப் பெயரிட்டிருந்த போதும் அமெரிக்க ராணுவக் குறிப்புகள் அனைத்தும் இந் நடவடிக்கையை (Invasion) "படையெடுப்பு' என்றே குறித் திருந்ததாய் சொல்லப்படுகிறது.

NATO (North Atlantic Treaty Organization) அமெரிக்கா தலை மையிலான ராணுவக் கூட்டமைப்பு நாடுகளோடும் இத்திட்டம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வழமையாக அமெரிக்காவின் உலக ராணுவ விரிவாக்கத்தை எதிர்க்கும் பிரான்சு நாடு முல்லைத்தீவு நோக் கிய அமெரிக்காவின் திட்டத்திற்கு தீவிர ஆதரவு தெரிவித்திருக்கிறது.

இந்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் அடிநிலைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவசர மாக கொழும்பு வந்தார். ""போரினை முறைப்படியாகவும், மனித நேயத்தோடும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒழுங்குகளை செய்ய வேண்டியே அவசர பயணம் வந்தி ருக்கிறேன்'' என தனது பயண நோக்கு பற்றி குறிப்பிட்டார் ஜான் ஹோல்ம்ஸ். அமெரிக்காவினது ராணுவத் திட்டத் தினது ஓர் அங்கமாகவே இவரது பயணம் இருந்ததென பின்னர் கூறப்பட்டது.

இதற்கிடையில் தென்ஆசியாவில் அமெரிக்காவின் புதிய இந்த ராணுவ ஈடுபாடு தொடர்பாக அதிபர் ஒபாமா நிர்வாகத்திலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கின்றன. அவற்றை சரிசெய்யும் பொறுப்பு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடையதாயிருந்திருக்கிறது. அவரே கூட ராணுவ நடவடிக்கை தொடர்பான பூரண விசுவாசம் கொண் டிருக்கவில்லையென்றே சொல்லப்படு கிறது. ராணுவ நடவடிக்கையின் களநிலை அவசியத்தை மேலும் உறுதி செய்ய வேண்டி ""உண்மை நிலை'' அறிக்கை யொன்றினை வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கும்படி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பணிக்கப்பட்டதாகவும், அதன் படி கொழும்பு, அமெரிக்க தூதரகத்தின் தலைமை துணை பொறுப்பாளர் ஜேம்ஸ் மூர் யாழ்குடாவுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டு ராணுவத் தளபதிகள், மதத் தலைவர்கள், மக்கள் என பலரையும் சந்தித்து விரிவான அறிக்கை ஒன்றினை அனுப்பியதாகவும், ஜேம்ஸ் மூர் அவர்களின் இந்த அறிக்கை தான் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ஊசலாடும் மனநிலையிலிருந்த ஹிலாரி கிளிண்டன் அவர்களை ராணுவ நடவடிக்கை அவசியம் என்ற உறுதி நிலைக்கு இட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா செயலில் இறங்குமுன் சீனாவின் தீர்க்கமான சமிக்ஞையோடு முழு மூர்க்கமான கடைசி யுத்தத்தை ராஜபக்சே சகோதரர்கள் தொடங்கினர். அமெரிக்கா ராணுவ நட வடிக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் இந்தியாவும் சண்டை நிறுத்த முயற்சியொன்றினை அவசரத் தன்மையோடு முன்னெடுத்தது.

அம்முயற்சியில் சிறியதோர் தபால் காரனாக நானும் இருந்தேன். அந்த முயற்சி தோற்றது ஏன்? அமெரிக்காவின் ராணுவ திட்டத்தை இந்தியா ஆதரித்ததா?

அருட் தந்தை கஸ்பர் ராஜ்

Courtesy: நக்கீரன் - வைகாசி 26, 2010


Read more...

Thursday, May 27, 2010

மே18 முள்ளிவாய்க்கால் முடிவு? யாரால்? ஏதற்காக?

முள்ளிவாய்கால் முடிவு யாரால் எதற்காக இடம்பெற்றது என்று தலைப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 6ம் திகதி கனடா ஸ்காபுரோவில் கலந்துரையாடல் ஒன்று கனேடிய தமிழர் ஒழுங்கமைப்பு என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.இடம்: Mid Scarborough Community Centre
2467 Eglinton Ave East, Scarborough,Ontario,Canada

Read more...

சரணடையச் சென்ற புலிகளுடன் நம்பியார் நேரடித்தொடர்பினை வைத்திருக்கவில்லை. ஐநா.

இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளுடன் ஐ.நா. செயலரின் பிரதம அதி காரி விஜய் நம்பியார் நேரடித் தொடர்பு வைத் திருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இன்னர் சிற்றிப் பிரஸ் இச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இன்னர் சிற்றிப் பிரஸுக்கு ஐ.நா. செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மாட்டின் நெஸிர்கி தெரிவித்ததாவது, சரணடையுமாறு கோரப்பட்ட புலிகளுடன் தனக்கு நேரடித் தொடர்பு இருக்கவில்லை என விஜய் நம்பியார் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் இலங்கை அரசின் உயர் மட்டத்தினருடன் பேசி தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக ளைப் பகிர்ந்து கொண்டார்.வேறு எதனையும் அவர் மேற்கொண்டிருக்கவில்லை என ஐ.நா. செயலரின் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாக இன்னர் சிற்றிப் பிரஸ் தெரிவித்துள்ளது.

Read more...

முப்பது வருடங்களின் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலை திறப்பு

யுத்த சூழ்நிலைகளுக்கு பின்னர் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலை யுனிசெப் நிறுவனத்தின் 25 மில்லியன் நிதியுதவியுடன் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன் , டக்லஸ் தேவானந்தா, சம்பிக்க ரணவக்க, பஷில் ராஜபக்ஷ , உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

இதேவேளை 15 மில்லியன் செலவில் கட்டிட புனர்நிர்மான வேலைகளும் 10 மில்லியன் செலவில் வைத்தியசாலைக்கான உபகரணங்களும் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வைத்தியசாலைக்கென 5விசேட வாகனங்களும் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

Read more...

நாடுகடந்தஅரசின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு!

அன்பான பிரதிநிதிகளுக்கு,

அங்குரார்ப்பணவிழாவும் உரைகளும் ஒருபடியாக முடிவடைந்து களைப்பாக இருப்பீர்கள். உங்களுக்கு கிடைக்கும் ஓய்வுப்பொழுதில் இந்த அகதித்தமிழனின் மடலைப்படிப்பீர்கள் என்றநம்பிக்கையுடன் எழுதுகிறேன். நாடு கடந்த அரசு என்ற கோட்பாடு யாரால் உருவாக்கப்பட்டது என்றும் அது யாருடைய நலனுக்காக இயங்குகிறது என்றும் இனிவரப்போகும் காலத்திலும் அது எந்த வல்லாதிக்கநலனுக்காக வேலைசெய்யும் என்றும் மிகத்தெளிவாக அடையாளம்தெரிந்தாலும் இந்தக்கடிதத்தின்நோக்கம் அவற்றைப்பற்றி
உங்களுடன் பேசுவதுஅல்ல.
இந்தக்கடிதத்தின் நோக்கம் மிகப்பிழையான நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டஒரு சபையை எப்படி எமது விடுதலைக்காக நாம் மாற்றமுடியும் என்பதைப்பற்றியதாகவே இருக்கும்.
அன்பான பிரதிநிதிகளே, உங்களில் அநேகமானோர் ஏதோஒருவகையில் எமது தாயகத்தின்விடுதலைக்காக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காகவே நாடுகடந்தஅரசின் சபைக்கு போட்டி இட்டு தெரிவாகிஉள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம். நன்றிகள் உங்களுக்கு. உங்களிலும் பார்க்க உங்களை தெரிவுசெய்த மக்களுக்குத்தான் பாராட்டுகளும் நன்றிகளும் அதிகம் சொல்லவேண்டும்.

புலம்பெயர்தமிழர்கள் வாழும் நாடுகளின் தமிழ்வாக்காளர்தொகையில் இருபது முதல் முப்பதுவீதமானோரே வாக்களித்து இருந்தபோதிலும் வாக்களித்தோர் தமக்கான பிரதிநிதிகளாக தேசியத்தலைவர் மீதும் மாவீரரின் தியாகத்தின்மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கையும்,நேர்மையான உறுதியும் கொண்டோரையே தெரிவுசெய்ததற்காக தலைவணங்குகின்றோம்.

வெறும்அறிக்கைவீரர்களையும்,அரசியல்தரகுசெய்பவர்களையும் நிராகரித்து மக்கள், தேசியத்தின் உண்மையான பணியாளர்களை ;தெரிவுசெய்ததன் பலாபலன் நாடுகடந்தஅரசின் அங்குரார்ப்பணக்கூட்டத்திலேயே தெரிந்தது.

தேசியக்கொடியைபிடிப்பது அவமானம் என்றும்,அவதூறு என்றும் பரப்புரைசெய்த மதி உரைஞர்கள் தேசியகொடியை நிராகரித்தே முதலாவதுகூட்டத்தை தொடங்க எண்ணியிருந்தார்கள். மக்கள் அளித்த தீர்ப்பால் கலங்கிப்போன ம. உரைஞர்கள்
ஏதுமே செய்யமுடியாது போய் இறுதியில் தேசியக்கொடியை ஏற்றினார்கள். இதன் வெற்றிமுழுவதும் மக்களுடையதே! இப்போதுபுரிந்திருப்பீர்கள் எமது பிரதிநிதிகளே, மக்களின் உணர்வுகளை நன்றாக.

(1)எனவே இனிவரும்காலங்களில் சும்மா பேசிப்பேசி கலைந்துபோகாமல் தமிழீழ
மக்களுக்கான நிரந்தர சுதந்திரவாழ்வுக்கான செயற்திட்டங்களை வகுத்துசெயலாற்றமுன்வர வேண்டும்.

(2)நாடுகடந்தஅரசு என்ற சபையின் அங்குரார்ப்பணம்முடிந்து 24மணித்தியாலங்களுக்குள் நாடுகடந்த அரசு என்பது தமிழீழமக்களின் அதிஉச்சஅரசியல் தீர்மானமையம் என்றும் நாடுகடந்தஅரசின் தலைவரே தமிழீழதேசியத்தின்தலைவர் என்றும் பிரச்சாரங்கள் எகிறிவிடப்பட்டதை நீங்களும் பார்த்துஇருப்பீர்கள். அந்தபிரச்சாரம் எவ்வளவுதூரம் எமது மக்களை கொதிக்கவைத்தது என்றும் நீங்கள் அறிவீர்கள். வருங்காலத்தில் இத்தகைய சுயதம்பட்டமான பிரச்சாரங்கள் நாடுகடந்தஅரசின் சார்பாக வெளிவருவதை பிரதிநிதிகளாகிய நீங்கள்தான் தடுக்கவேண்டும்.

(3)மக்களின்வாக்களிப்புக்கு முன்னர் இந்த நாடுகடந்தஅரசின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்ட குமரன்பத்மநாதனுடனும்,அவரின் புலத்துகூட்டாளிகளும் தேசிய தலைமையால் முன்னர் விரட்டப்படவர்களுமான ‘நிழல்’ மனிதர்களுடன் இனி மேல் நாடுகடந்தஅரசு எந்தவிதமான நேரடி மறைமுக தொடர்புகளை பேணுவதை மக்களால் தெரியப்பட்ட பிரதிநிதிகள் தடுக்க வேண்டும்.

(4)மக்கள் முன்னிலையில்வந்து தேர்தலில்போட்டியிடாமல் தங்களை ஒரு வழிப்போக்கராக உருவகித்துக்கொண்டு, மக்களால் தெரியப்பட்ட பிரதிநிதிகளைமேய்க்கும் மேய்ப்பராக சிலர் இன்னும்தொடர்கிறார்கள்.அவர்கள் தாமாக வெளியேறாதுவிட்டால் பிரதிநிதிகள் அவர்களை வெளியேற்றவேண்டும்.

(5)நாடுகடந்தஅரசு என்பது மண்டபங்களுக்குள்ளும் குளிர்ஊட்டப்பட்ட அறைகளுக்குள்ளும் நடைபெறும் வெறும் வாய்ப்பேச்சு அல்ல. அதன் உண்மையான நோக்கம் சுதந்திரதமிழீழஅரசு என்பதாக இருந்தால் தமிழீழமக்கள் அவை, தமிழீழபேரவை என்பனவற்றுடன் இணைந்து செயலாற்றமுன்வர வேண்டும்.

(6)தமிழீழவிடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனமானதற்கும், பல்லாயிரம்மக்கள் கொல்லப்பட்டதற்கும்,பலஆயிரம் போராளிகள் கொடுஞ்சிறையில் வாடுவதற்கும்,தமிழீழவிடுதலைத்தளங்கள் ஆக்கிரமிப்பாளனின் கைகளில் வீழ்ந்ததற்கும் பெருந்துரோகமே காரணம்.

அந்த துரோகத்தை நன்குஅறிந்தவர்கள், அந்த துரோகத்தில் பங்குகொண்டவர்கள் இறுதிக்காலத்தில் தேசியத்தலைமை உடன் தொடர்பில் இருந்த சிலராகும். நாடுகடந்த அரசு இந்த துரோகம் சம்பந் தமான விசாரணைக்குழு ஒன்றை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்கு மூலங்களையும்,விளக்கங்களையும் பெற்று தமிழ்மக்களுக்கு இறுதிக்காலத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிக்கவேண்டியது நாடுகடந்தஅரசின் பிரதிநிதிகளின் பிரதான கடமையாகும்.எனவே அடுத்த அமர்வில் இது சம்பந்தமாக ஒரு விசாரணைக்குழுவை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றவேண்டும். நாடுகடந்தஅரசின் பிரதிநிதிகளே, தொடக்கநாள் அன்று நீங்கள் பேச்சில் இருந்து நீங்கள் எல்லோரும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விட்டுக்கொடுப்பு இல்லாத ஈடுபாடு உள்ளவர்கள் என்று நம்பிக்கைகொண்டு அதன்காரணமாகவே இந்த மடலை எழுதுகிறேன்.

பேசி பேசி கலைந்துபோய்விடாமல் செயலில் உறுதிகாட்ட வேண்டும். கடந்தமுப்பது வருடங்களுக்கு மேலாக பேச்சைக்குறைத்து வேலைத்திட்டத்தில் மட்டும் வேகமும் உண்மையும்காட்டிய தலைவரின் உதாரணத்தை தொடருங்கள்.
மீண்டும் சந்திப்போம்’

அகதித்தமிழன்

காவியன்.

Tamilspy

Read more...

மகத்தான மனிதாபிமானப் பணி

சரணடைந்த புலி இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது பற்றியும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெண் புலி உறு ப்பினர்களுக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்பட்டது பற்றியும் நேற்றுக் குறிப் பிட்டிருந்தோம். இந்தக் கையளிப்பைத் தொடர்ந்து 198 முன்னாள் போராளிகள் நேற்று முன்தினம் பெற்றோரி டம் கையளிக்கப்பட்டனர்.இவர்கள் எல்லோரும் பதினெ ட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் சிறுமியரும் என் பது குறிப்பிடத்தக்கது.

புலித் தலைமையினால் தமது படையணியில் சேர்த்துக்கொ ள்ளப்பட்ட சிறுவர், சிறுமியரில் 294 பேர் அரசாங்கத் திடம் சரணடைந்தனர். இவர்களுள் 96 பேர் வெவ்வேறு கட்டங்களில் பெற்றோரிடம் ஏற்கனவே கையளிக்கப்பட் டனர். மற்றைய 198 பேரும் அகில இலங்கை இந்து மா மன்றத்தின் அனுசரணையுடன் இரத்மலானை இந்துக் கல் லூரியில் கல்வி கற்று வந்தனர். தங்கள் பிள்ளைகளைத் தங்கள் சொந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் சேர் த்துப் படிப்பிப்பதற்குப் பெற்றோர் விரும்பியதால் இவ ர்கள் இப்போது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ள னர். எதிர்காலத்திலும் இவர்களின் கல்விச் செயற்பாட்டு க்கான சகல வசதிகளையும் செய்து தருவதாக அரசாங் கம் உறுதியளித்திருக்கின்றது. அரசாங்கத்திடம் சரணடை ந்த சிறு வயதினர் அனைவரும் இப்போது பெற்றோரி டம் கையளிக்கப்பட்டுவிட்டனர்.

முன்னாள் புலிப் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து அவர்களைப் பெற்றோரிடம் கையளிப்பது அந்நியப்ப ட்ட நிலையில் நின்று பார்ப்பவர்களுக்குப் பெரிய விட யமாகத் தோன்றாமலிருக்கலாம். பெற்றோரைப் பொறுத்த வரையில் இது சாதாரண விடயமல்ல. இந்தப் பிள்ளை கள் பிழையாக வழிநடத்தப்பட்டுப் புலிகளுடன் சேர்ந்தி ருக்கலாம். அல்லது பலவந்தமாகவும் சேர்க்கப்பட்டிருக்க லாம். எவ்வாறாயினும், தங்கள் பிள்ளை ‘இயக்கத்தில்’ சேர்ந்துவிட்டது என்பதை அறிந்ததும் ஒவ்வொரு தாயும் தந்தையும் எவ்வளவு துடித்திருப்பார்கள் என் பதை விபரிக்க வார்த்தை கிடையாது. இந்த மனத்துடிப்பு தங்கள் பிள்ளையைக் கையேற்ற நேரம்வரை நிச்சயம் அவர்களிடம் இருந்திருக்கும். தாங்கள் தொலைத்துவி ட்ட பிள்ளை மீண்டும் கிடைத்தபோது அவர்கள் அடை ந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

மறுபுறத்தில் அரசாங்கத்தின் மனிதாபிமான அணுகுமுறை. அரசாங்கத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட அனைவ ரும் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்கள். அவர் கள் தவறாக வழிநடத்தப்பட்டவர்களாகவோ பலவந்தமா கச் சேர்க்கப்பட்டவர்களாகவோ இருந்தாலும் அரசுக்கு எதிரான யுத்தத்தில் பங்காளிகள். ஆனால் அரசாங்கம் இவர்களை எதிரிகளாகக் கருதவில்லை. தவறான பாதை யில் வழிநடத்தப்பட்டவர்கள் எனக் கருதிப் புனர்வாழ்வு அளித்தது. இளம் பராயத்தினர் கல்வியைத் தொடர்வதற் குத் தேவையான எல்லா வசதிகளையும் வழங்கியது. மற்றவர்களுக்கு அவர்களின் திறமைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ஏதோவொரு விதத்தில் மறைந்து போயிருக்கக் கூடியவர் களுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்திருக்கின்றது. சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழக்கூடிய வகையில் அவர் களை அரசாங்கம் தயார்படுத்தியிருக்கின்றது. அரசாங் கம் மேற்கொண்ட இந்த மனிதாபிமானப் பணி மகத்தா னது என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடி யாது.

தமிழ் மக்களின் தனிப் பிரதிநிதிகளென அடிக்கடி உரிமை கோருபவர்களுக்கு இப்பணியின் முக்கியத்துவம் புரியா மலிருப்பது அதிசயமாக உள்ளது. அரசாங்கத்தை விமர் சிப்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அதே நேர த்தில் நல்லதைப் பாராட்டும் பண்பும் வேண்டும்.

Thinakaran

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top