அகதிகள் விடுவிக்கப்படுவார்களா?: காவல்துறை விளக்கம்
தமிகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் விடுவிக்கப்படுவார்களா என்பது பற்றி தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி:
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாய் வந்துள்ளவர்களில் தற்சமயம் சுமார் 73,210 பேர் இலங்கை தமிழர்களுக்கான 114 அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் தமிழக அரசால் செய்து தரப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொண்டு 31,398 பேர் வெளிப்பதிவு அகதிகளாக தங்கியுள்ளனர்.
இதுதவிர, தற்சமயம் 64 இலங்கை தமிழர்கள் மட்டும் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பலர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு வெடிமருந்து மற்றும் பல பொருட்களை கடத்திய வழக்குகளில் தொடர்புடையவர்களும் மற்றும் சிலர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி வந்து இயக்க நடவடிக்கைகளுக்காக தகவல் தொடர்பு மற்றும் பொருட்களை வாங்க உதவியவர்களும் ஆவார்கள்.
இவர்களில் வழக்குகள் முடிந்த 10 நபர்களுக்கு அவர்கள் விரும்பியபடி வெளிநாடுகளுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், இவர்கள் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதி கோருகின்றனர். இவர்களது கோரிக்கையை நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்க இயலாது.
கடந்த 3 மாத காலத்தில் சிறப்பு முகாமில் தங்கியிருந்து வழக்குகளை சந்தித்து கொண்டிருந்தவர்களில் உடல்நலம் குன்றியவர்கள், வயதானவர்கள் ஆகிய 45 நபர்களின் கோரிக்கையினை தமிழக அரசு பரிசீலனை செய்து அவர்கள் விரும்பியபடி தமிழகத்தில் உள்ள திறந்த முகாம்களிலோ அல்லது வெளிப்பதிவிலோ தங்கியிருக்க அனுமதி வழங்கி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம், செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் மீதுள்ள வழக்குகள் முடிந்த பின்னர் இவர்களது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
1 விமர்சனங்கள்:
Dear Mr.Tamilvanan
An "ATRACTIVE TOPIC" is very important to a blog. Don´t u know that? I feel really sorry for u.
Post a Comment