இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label TNA. Show all posts
Showing posts with label TNA. Show all posts

Thursday, February 4, 2010

அரசியல் விளையாட்டும் விளையாட்டு அரசியலும்

தமிழ் கூட்டமைப்பு வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் `சமஸ்டி` கோரிக்கையை அரசியல் தீர்வாக முன்வைத்து வடக்கு கிழக்கில் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஒரு `அரசியல் விளையாட்டை` மீண்டும் ஆரம்பித்துள்ளது. கூட்டமைப்பின் இந்த அரசியல் விளையாட்டு எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானது என்பதை இந்திய உபகண்ட அரசியலின் புதிய யதார்த்தை ஓரளவு உள்வாங்கியவர்கள்கூட அனுமானிக்க முடியும்.

அத்துடன், புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் முற்றாக அழிந்து போன நிலையில் நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை தீர்மானம் போன்றவற்றின் மிகச்செயற்கையான சமகால முக்கியத்துவம் `புதிய உலக ஒழுங்கு` குறித்த தெளிவின்மையில் புலம் பெயர் தமிழர்கள் இன்னும் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. புலம் பெயர் தமிழர்களின் `விளையாட்டு அரசியல்` தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்கள் வட்டியும் முதலுமாக பாரிய விலைசெலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய அரசியல் சூழலுக்குள் மீண்டும் விழுவதற்கான நிகழ்தகவை அச்சம் தரும் வகையில் இன்னும் அதிகரித்துள்ளது.

`இணக்கமா அல்லது பிணக்கமா` (Deal or Nodeal) எனும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை முக்கியமாக இன்றைய `தமிழ் தேசியத் தலைமைகள்` விளையாடிப் பார்ப்பதற்கு வசதியாக டொலரில் இருக்கும் பரிசுத் தொகைகள் அரசியல் இலக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.

1,000,000: (நாடு கடக்காத) தமிழீழம்
750,000: (வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கமைய) தனிநாடு
500,000: (கூட்டமைப்பின் பழைய கோசமான) சுயாட்சி
400,000: ( கூட்டமைப்பின் புதிய கோசமான ஐக்கிய இலங்கைக்குள்) சமஷ்டி
200,000: (வடக்கு கிழக்கு இணைந்த) மாகாணசபை
100,000: (காணி/பொலிஸ் அதிகாரங்களுடன்) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
75,000 (பொலிஸ் அதிகாரங்களுடன்) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
50,000 (காணி அதிகாரங்களுடன்) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
25,000 (தற்போதுள்ளதை விரிவுபடுத்தி) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
10,000: (தற்போதுள்ளதை செழுமைப்படுத்தி) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
5,000: (தற்போதுள்ளதை முழுமையாக) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
1,000: (தற்போது நடைமுறையிலுள்ள) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்


750: (ஜே.ஆர்-அமிர் காலத்து) மாவட்ட சபைகள்
500: மாநகர சபைகள்
400: நகர சபைகள்
300: கிராம சபைகள்
200: தமிழ் மொழியை உயர் நிலைப் பாடசாலைகளில் கைவிதல்
100: தமிழ் மொழியை இடை நிலைப் பாடசாலைகளில் கைவிடுதல்
75: தமிழ் மொழியை ஆரம்ப பாடசாலையில் கைவிடுதல்
50: தமிழ் மொழியை முற்றாக கைவிடுதல்
25: தமிழர் கிழக்கை விட்டு வெளியேறுதல்
10: தமிழர் வடக்கை விட்டு வெளியேறுதல்
5: தமிழர் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறுதல்
1: தமிழர் இலங்கையை விட்டு வெளியேறுதல்
0.01: தமிழர் உலகத்தை விட்டு வெளியேறுதல்

Read more...

சம்பந்தருக்கு எச்சரிக்கை: ஈழநாதம் ஆசிரியர் தலையங்கம்

கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடாத்திய ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் அங்கு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். அதில் முக்கியமானது பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படல்வேண்டுமென செய்தியாளர் கேட்டபோது சம்பந்தன் கீழ் வருமாறு பதிலளித்தார்.
ஐக்கியப்பட்டு இணைந்து வேலைசெய்யவேண்டும். பிரச்சினைக்கு இணைந்து தீர்வுகாண்பதற்கு முன்வரவேண்டும். பிரிவினைவாத பிரசாரத்தை மேற்கொள்வதன் மூலமாக அபிவிருத்தியை எதிர்பார்க்கமுடியாது. அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக அமையும். பிரிவினைவாதத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு நான் அன்றிலிருந்தே கோரிவருகின்றேன்.


என திட்டவட்டமாக குறிப்பிட்டார் சம்பந்தன் இவ்வாறுதான் விடுதலைப்புலிகளை புறம் தள்ளுவதற்காக அல்லது தமது சுய நலன்களிற்காக மக்களின் நலன் கருதி அரசாங்கத்துடன் சேருகின்றோம் அல்லது இணக்க அரசியல் என்று பலர் வரிந்து கட்டிக்கொண்டு சென்றனர். அவர்களின் அரசியல் வாழ்க்கை மக்களால் தோற்கடிகப்பட்டு வருகின்றன.சம்பந்தன் அவர்களையும் மக்கள் பல தடவை தோற்கடித்துள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகளின் உதவியுடன் மீண்டும் மக்கள் தலைவனாகலாம் என்ற உள் நோக்கோடு வந்த சம்பந்தன் அதனை இலாவகமாக பிடித்துக்கொண்டார்.

இப்போது மீண்டும் தனது சுய நலனை வைத்து தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து, நம்பிக்கை துரோகம் இழைக்க முயல்கின்றார். அதாவது இணக்க அரசியல் ஊடாகத்தான் அபிவிருத்தியினை செய்ய முடியும் என ஏமாற்றும் வித்தையினை காட்ட முயல்கின்றார். தான் ஓர் பிரிவினை வாதியாக அல்லாமல் அனைவரையும் அணைத்து போகும் பாங்கு உடையவராக காட்டுகின்றார்.

ஆனால் சிங்கள மக்களும், சிங்கள தலைவரும் பிரிவினை வாதத்தினையும், இனவாதத்தினையும் முற்று முழுதாக ஏற்றுக்கோண்டு செயற்படுகின்றனர். அதில் வெற்றியும் பெற்றுக்கொண்டனர். ஆகவே பிரிவினை வாதமும், இனவாதமும் மேலோங்கி போயிருக்கும் சிங்கள இனத்திற்குள் இணக்க அரசியல் என்பது டக்ளஸ், கருணா, பிள்ளையான் போலவே இருக்கும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாடம் கற்றுக்கொண்ட தமிழ் விரோத செயற்பாட்டாளர்கள் தாம் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டால் மக்களால் தோற்கடிக்கப்படுவர் என்ற அடிப்படையில் மெது மெதுவாக விலகி தாம் தனித்து போட்டியிட போவதாக முணு முணுத்துக்கொண்டு இருக்கையில் சம்பந்தனோ மீண்டும் அபிவிருத்தி கருதி பிரிவினை வாதத்தினை கைவிட போவதாக அறிவித்துள்ளார்.

தனது சொந்த கருத்தினை தமிழ் மக்களின் உரிமைகள் மீது பிரயோகிக்க கூடாது என்பதே எமது கருத்து. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட பெரும்பாலான கூட்டமைப்பு எம்.பி.க்களின் முடிவு ஒருவரையும் ஆதரிப்பதில்லை என்று இருந்த போதும் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு எம்.பி க்களை வற்புறுத்தியும், பல அழுத்தங்களை உபயோகித்துமே ஏகமனதான முடிவு என அறிவிக்கப்பட்டது.

இனி வரும் பொது தேர்தலிலும் சம்பந்தன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு, அதிகார பரவலாக்கல் என்றுதான் தனது கொள்கையினை முன்வைத்து ஏனைய உறுப்பினர்களையும் தம்பக்கம் சாய வைப்பார். இல்லாவிடில் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருக்காது என விரட்டப்படுவார்கள்.

இப்போதே சிவாஜிலிங்கம் உட்பட பலருக்கு சீட்டு கிழிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகம் தேர்தலி தனித்து போட்டியிட்டதற்காக என கூறினாலும் காரணம் அதுவல்ல. காரணம் ஏற்கனவே தாம் விரும்பிய பல புதிய உறுப்பினர்களுக்கு அடுத்த தேர்தலில் சீட்டு தருவதாக சம்பந்தன் வாக்குறுதி அளித்துள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் ஒருபக்கம் மக்கள் தமிழீழ தாயகத்திற்காக வாக்களிக்க, தாயகத்தில் சம்பந்தன் பிரிவினையே தேவை இல்லை என்று கூறிக்கொண்டு இருப்பது மக்களை இரண்டாக பிரிக்கும் செயலாகவே இருக்கும். சிலர் கூறலாம் தாயகத்தில் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் நிலமை விளங்காது கதைக்கின்றனர் என்று. நிலமை விளங்கி செயற்படுவதனால் எதனையும் மஹிந்த தரும் சாத்தியம் உண்டா? டக்ளஸ் அவர்களும் மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் சுயாட்சி என்றார் நடந்தது என்ன? இவ்வளவு காலமும் தான் புலிகள் விடவிலை என்று காரணம் கூறினாலும் இப்போது கூட மக்கள் ஏற்று கொள்ளவில்லையே.

ஏன் கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியல் ஊடாக எதனை சாதித்து கொண்டு இருக்கின்றனர். ஆக குறைந்தது மீன்பிடி தடைகளை கூட கிழக்கு மாகாண தலைவர்களால் நீக்க முடிந்ததா?

ஆகவே ஓவ்வொரு தடவையும் மக்களுக்கு அழுத்தங்களை கொடுத்து அவர்களை தேர்தலில் திக்கு முக்காட வைப்பதனை விட்டு விட்டு கொள்கையில் உறுதியாக இருந்து செயற்படுவதே நீண்டகாலத்தில் தமிழ் மக்களிற்கு பிரயோசனமானது. மக்களை அபிவிருத்தி செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. இணக்க அரசியல் இல்லாமல் சுயாதீனமாக மக்களிற்கு தேவையான உதவிகளை செய்து அவர்களுடனேயே இருந்து பணி புரிவதன் மூலம் மக்களிற்கு நம்பிக்கையினை ஏற்படுத்தவேண்டும்.

மாறாக சம்பந்தன் மக்களிற்கு பீதிகளை உருவாக்கி ஒவ்வொருவரது கருத்துக்களையும் முடக்கி தமது கருத்தினை ஏற்றுக்கொள்ளும் பொறி முறைகளையே செய்து வருகின்றார். இது சாதாரணமாக சிங்கள அரசாங்கம் தேர்தல் காலங்களில் செய்யும் ஒன்றே என்பதனை சம்பந்தனும் அவரை அரசியலில் முதிர்ந்து பழுத்த பழம் எனக்கூறும் புத்திஜீவிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.

இல்லையேல் மீண்டும் யாராவது இவர்களது விடயங்களில் தலையிடவேண்டிய அசெளகரியமான சூழல் ஏற்படலாம். ஏனெனில், தாயகத்தில் மக்கள் இன்னமும் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.

Read more...

Monday, January 18, 2010

தமிழ்தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்டு வரும் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம்


தமிழ் தேசியக்கூட்டமைப்பு கட்சியினால் வழங்கப்பட்டு வரும் போலி வாக்குறுதிகளைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் கோப்பாயில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துக் கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது போலி வாக்குறுதிகளை வழங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் நம்பவேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

அன்பரசு அவர்களின் அறிக்கை



Read more...

வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு வழங்க சரத் பொன்சேகா இணங்கியுள்ளார்: சிவாஜிலிங்கம்

வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு ஒப்படைக்க ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுயாதீன ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து அதில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்க வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து மூன்று இன சமூகங்களுக்கும் தனித் தனி அலகுகளை வழங்குவதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதனை பிரதான வேட்பாளர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாகவே தாம் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.



Read more...

அரசியல் தீர்வுக்கு கூட்டமைப்பும் தயாரில்லை

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு நிற்கின்றது. இதில் எந்த அணி சரியானது என்பதிலும் பார்க்க இவர்கள் தமிழ் மக்களின் சார்பில் பேசுவதற்குத் தார்மீக அடிப்படையில் தகுதி உள்ளவர்களா என்பது பிரதானமான கேள்வி.


பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று ஒருவேளை இவர்கள் உரிமை கோரலாம். அன்று நடந்ததைத் தேர்தல் என்று கூறுவது மிகப் பெரிய பகிடி. அணியொன்றின் பிரதான வேட்பாளர் தனது வாக்கை அளிப்பதற்கு இயலாதவாறு வன்முறையாளர்களால் தடுக்கப்பட்டார். வாக்களிப்பு நிலையங்களில் புலிகளின் காட்டாட்சியே நடந்தது. இப்படியான தேர்தலில் கிடைத்த வெற்றியை மக்களின் தீர்ப்பு எனக் கூறுவதைப் போன்ற வேடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது.


எனவே, அந்தத் தேர்தல் வெற்றியை ஒருபுறத்தில் தள்ளிவிட்டு இவர்களுடைய செயற்பாட்டின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.


பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற பின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த முயற்சியிலும் இவர்கள் ஈடுபடவில்லை. புலிகள் காட்டிய பாதையில் கண்ணை மூடிக்கொண்டு பயணித்தார்கள். இந்தப் பயணத்தின் விளைவாகத் தமிழ் மக்களுக்கு இவர்கள் விளைவித்த தீங்கு கொஞ்ச நஞ்சமல்ல. உடைமை அழிவுகளும் உயிரிழப்புகளும் இடம் பெயர்வுகளும் அகதி வாழ்க்கையும் இவர்களின் பிழையான கொள்கையினால் ஏற்பட்ட விளைவுகள்.


இத்தனைக்கும் தார்மீகப் பொறுப்பேற்று இவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்திருக்கின்றார்கள். வந்தவர்கள் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டமொன்றை முன்வைத்துச் செயற்படுவதற்குத் தயாராக முன்வந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் தீர்வுத்திட்டம் எதுவும் இல்லை. கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகக் கிட்டத்தட்ட ஒரு வருடமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போதும் வெறுங்கை தான். தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கைத் திட்டம் எதுவுமே இல்லாமல் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறுவதும் தேர்தலில் இம்மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டுமென வழிகாட்டுவதும் நகைப்புக்கிடமானவை.


சரத் பொன்சேகா கையொப்பமிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரிடம் கையளித்ததாகப் பத்திரிகைகளில் வெளியாகிய ஆவணத்தில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் பொன்சேகாவுக்குமிடையே இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகளே அவை. இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி அந்த ஆவணத்தில் எதுவும் இல்லை. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் பொன்சேகாவுக்கு இல்லை என்பதே இதன் அர்த்தம். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடன்பாடாக இருப்பது தான் புதுமை.

Read more...

திருக்கோவிலில் சந்திரநேரு யூனியர் வெடிவிபத்தில் காயமடைந்துள்ளார்


தவறுதலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு காயமடைந்துள்ளார்.


திருக்கோயில் பகுதியில் வைத்து இன்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.


சந்திரநேருவின், சொந்த பாவனைக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கியே இவ்வாறு தவறுதலாக வெடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Friday, January 15, 2010

`ஆட்சி` மாற்றமா `ஆள்` மாற்றமா : சம்பந்தரிடம் பதில்கோரும் ஸ்ரீகாந்தா

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு எடுத்த அரசியல் சார்பு நிலையை கேள்விக்கு உள்ளாக்கி அந்த முடிவை அடைய முழு மூச்சாக உழைத்த சம்பந்தரிடம் பதில் கோரும் `ஆட்சி` மாற்றமா? ‘ஆள்` மாற்றமா? எனும் தலைப்பில் துண்டுப் பிரசுரமொன்றை யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ளார்.

வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.கே. சிவாஜிலிங்கத்தை ஆதரித்து வெளியிடப்பட்ட அந்த தேர்தல் துண்டுப் பிரசுரத்தில் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாட்டை ஆதரிக்கும் யாழ் `உதயன்` போன்ற ஊடகங்களை `பச்சை` பொய்களை வெளியிடும் தமிழ் பத்திரிகை துறையின் பிரகிருதிகள் என காட்டமாக சாடியுள்ளார்.
என். ஸ்ரீகாந்தா வெளியிட்ட அந்த துண்டுபிரசுரத்தின் முழுமையாக வடிவம் வருமாறு;

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!

எதிர்வரும் 26ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது இத் தேர்தலில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவர்களில் இரண்டு வேட்பாளர்களுக்கிடையே தான் சனாதிபதிப் பதவிக்கு கடும் போட்டி நிலவுகின்றது. இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் – மகிந்த ராஜபக்ச. மற்றவர் – ஜெனறல் சரத் பொன்சேகா. மகிந்த ராஜபக்ச – ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர். சரத் பொன்சேகா – எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் வேட்பாளர். இந்த இருவரும், இப்பொழுது தமிழ் மக்களின் வாக்குகளையும் கோரி நிற்கின்றனர்.

இந்த இருவரைப் பற்றியும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்! நடந்து முடிந்த யுத்தத்ததை இவர்கள் இருவரும் மிகக் கொடூரமாக நடாத்தியவர்கள். விடுதலைப் புலிகளுடன் அரசாங்கத்தின் படைகள் நடாத்திய யுத்தத்துக்கு உத்தரவு இட்டவர் சனாதிபதி மகிந்த ராஜபக்ச! ‘விடுதலைப் புலிகளை அழித்து ஒழித்தே தீருவேன்’ என்ற வைராக்கியத்துடன், யுத்தத்திற்கு தலைமை தாங்கி படைகளை வழி நடாத்தியவர் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா! முடிந்து போன யுத்தத்தில் நிகழ்ந்த எமது மக்களின் கோர மரணங்களுக்கும் கொடிய அவலங்களுக்கும் இந்த இருவருமே கூட்டான பொறுப்பாளிகள்.

மூன்று லட்சம் தமிழ்ப் பொதுமக்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து, அனுபவித்த சகல துன்ப துயரங்களுக்கும் இவர்களே பொறுப்பாளிகள். குண்டு வீச்சுக்களாலும், செல் தாக்குதல்களாலும் எமது மக்களின் வீடுகளும் குடியிருப்புக்களும் தகர்த்தெறியப்பட்டு, பல்லாயிரம் உயிர்கள் துடிதுடிக்க பலியாகிப் போன கோரக் கொடுமைகளுக்கு இந்த இருவருமே பொறுப்பாளிகள்.

விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வீழ்த்தி துவம்சம் செய்வதே, இவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. அப்பாவி தமிழ் பொது மக்களின் உயிர்ளைப் பற்றி இந்த இருவரும் கொஞ்சங் கூட கவலைப்படவேயில்லை! எமது மக்களைக் கொன்றார்கள்! கொன்று குவித்தார்கள்! சொத்துக்களை நாசமாக்கினார்கள்! லட்சக்கணக்கில் எமது மக்களை அகதிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் முடக்கினார்கள்!

இன்று………. தயக்கம் எதுவுமின்றி உங்கள் வாக்குகளை, இந்த இருவரும் போட்டி போட்டுக் கொண்டு, கேட்டு நிற்கின்றார்கள். உங்களின் வாக்குகளை கோருவதற்கு எந்த அருகதையும் இந்த இருவருக்கும் கிடையவே கிடையாது. யுத்தத்தில் வெற்றி பெற்ற பிறகு, ‘சிறுபான்மை மக்கள் என எவருமே இந்த நாட்டில் இல்லை’ என்று நாசூக்காக சொன்னவர் மகிந்த ராஜபக்ச. ‘இந்த இலங்கைத்தீவு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது’ என, யுத்தத்தின் நடுவில், நாக்குக் கூசாது பேசியவர் சரத் பொன்சேகா. யுத்தத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்து வெற்றி வாகை சூடும் வரையில் ஒன்றாக இணைந்து நின்றவர்கள் – பிணைந்து செயற்பட்டவர்கள் இந்த இருவரும்! இப்பொழுது பிரிந்து போய், பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் இவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பயங்கரமாக முட்டி மோதுகின்றார்கள்.

விடுதலைப் புலிகளை முறியடித்த யுத்தத்தின் கதாநாயகன் யார்? என்ற கேள்வியை முன் வைத்தே இந்த இருவரும் மோதிக் கொண்டிருக்கின்றார்கள். அப்பாவித் தமிழ் மக்களின் ரத்தக் கறைகள் படிந்த கைகளுடன் அதிகாரத்திற்கான போராட்டத்தில் இந்த இரண்டு சிங்கள மாவீரர்களும் உக்கிரமாக மோதுகின்றன. இது பதவிப் போராட்டம்! அதிகாரச் சமர்! இந்த இருவரில் எவரையும், ஞாபக சக்தி கொண்ட எமது மக்கள் ஆதரிக்க முடியாது.

பல்லாயிரக்கணக்கில் எமது உடன் பிறப்புக்களை கொன்று முடித்தாகி விட்டது. குழந்தைகளை – சிறுவர்களை – பெண்களை – கர்ப்பிணிகளை – முதியோர்களை ஈவிரக்கமின்றி கொன்று போட்டாகி விட்டது. இப்போது எங்களிடமே வந்து வாக்குப் பிச்சை கேட்கிறார்கள்! இனியாவது, எஞ்சியுள்ள எமது மக்களுக்கு நீதி வழங்க இவர்களில் எவராவது தயாரா…….? ஆகக் குறைந்தது, எமது சொந்த மண்ணில், எமது இனத்திற்கு சுயாட்சி வழங்கிட இவர்களில் எவராவது தயாரா……?

இல்லை! – இல்லை! – இல்லவே இல்லை!!!

இந்த நிலையில் இவர்களில் எவருக்கும் எமது மக்களின் வாக்குகளை கோருவதற்கு என்ன துணிச்சல்….! எதிர்வரும் தேர்தல், ஒரு சிலர் கூறிக் கொண்டிருப்பதைப் போல, ‘ஆட்சி மாற்றம் எதையும் கொண்டு வரப் போவதில்லை. ஒருவேளை ‘ஆள் மாற்றம்’ ஏற்படலாம். இதனால் விமோசனம் எதுவும் கிட்டும் என்று நம்பினால், கடைசியில் மிஞ்சப்போவது ஏமாற்றமே!

ஏன் எனில், மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் ஒரு நாணயக் குற்றியின் இரு வேறு பக்கங்களே! வேறு விதமாகச் சொல்வதானால், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுதந்திர இலங்கைத் தீவில் அறுபது ஆண்டுகளாய் தொடரும் எமது அரசியல் போராட்டம் தோற்று விடவில்லை. எமது மக்களின் விடுதலை வேட்கை தணிந்து விடவில்லை. சுயமரியாதை கொண்ட ஒவ்வொரு தமிழ் மகனும், தமிழ் மகளும் சுதந்திர உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். நீதி கிடைக்கும் வரையில் எமது சுதந்திர தாகம் தணிய மாட்டாது. சுதந்திரம் - சமத்துவம் - சமநீதி என்ற உன்னத கோட்பாடுகளின் அடிப்படையில், எமது சொந்த மண்ணில், சுந்தர பூமியில் எம்மை நாமே ஆளும் வகையில், ஆகக் குறைந்தது “சுயாட்சி” ஆவது எமக்கு வழங்கப்படுமா?

இத்தனை காலமும், இப்பொழுதும், எமது மக்கள் அனுபவித்த – அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை அவலங்களையும், துன்ப துயரங்களையும் ஒரளவுக்காவது ஈடு செய்யும் வகையில், எமது மக்களின் தாயகமான வட – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மாநிலத்திற்கு சுயாட்சி வழங்கப்படுமா?

இந்த இலங்கைத் தீவில் நாம் வந்தேறு குடிகள் அல்ல வாழையடி வாழையாக – வரலாற்று ரீதியாக, எமது சொந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் எமது தாயகத்திற்கு சுயாட்சி கோர எமக்கு சகல உரிமைகளும் உண்டு. பல மொழிகள் பேசப்படும் பல்வேறு நாடுகளில் இனப்பிரச்சினை என்பது அரசியல் ரீதியாக – சமாதான வழியில் – சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றது.

அங்கு எல்லாம் இது முடியும் என்றால், இங்கு – இந்த இலங்கைத் தீவில் இது ஏன் முடியாது? இது தான் இலங்கைத் தீவு எதிர்நோக்கும் கேள்வி! இந்தத் தேர்தலில், இந்தக் கேள்வியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கி எழுப்ப வேண்டும்.

அடிபட்டோம், அல்லல் பல பட்டோம் அகதிகளானோம்…….., துயரங்கள் தொடர்ந்தாலும் – நாம் துவண்டு விடமாட்டோம்! இந்த மன உறுதியை – திடசங்கற்பத்தை உலகம் அறிய நாம் பிரகடனப்படுத்த வேண்டும்.

எதிர்வரும் சனாதிபதித் தேர்தல் இதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தத் தேர்தல் எமது மக்களின் இலட்சிய உறுதியை பரீட்சித்துப் பார்க்க சிங்கள அதிகார வர்க்கத்தால் எம்முன் வைக்கப்பட்டிருக்கும் ஒர் அரசியற் சவால்!

முடிந்து போன யுத்தத்தில், சனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரின் படைத்தளபதி சரத் பொன்சேகாவும் அயல் நாடுகளின் உதவியுடன் சாதித்த வெற்றி என்பது, தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசைகளின் புதைகுழி அல்ல! அது – எமது எதிர்கால எழுச்சிக்கும், இறுதி மகிழ்ச்சிக்குமான அரசியல் அத்திவாரக் கற்களின் நடுகுழி என்பதை நாம் அனைவரும் நிலை நாட்ட வேண்டும்.

இந்த நிலையில், சுதந்திரம், சமத்துவம், சமாதானம் என்ற கோட்பாடுகளை முன் நிறுத்தி தேர்தல் களத்தில் துணிந்து நிற்கும் ஒரே ஒரு தமிழ் வேட்பாளர் திரு.சிவாஜிலிங்கம். இலங்கைத்தீவின் சனாதிபதி ஆவதற்காக அல்ல எம்மினத்தின் அடிமை நிலை சாவதற்காக அவர் களத்தில் நிற்கின்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எந்த ஒரு கட்சியினதும் வேட்பாளர் அல்ல. சுயேச்சையாக போட்டியிடும் அவர் எம்மினத்தின் வேட்பாளர். சுயமரியாதை கொண்டு, சுதந்திரத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழ் உயிரினதும் வேட்பாளர். உங்கள் ஒவ்வொருவரினதும் வேட்பாளர். சிங்கள ஆதிபத்திய சக்திகளின் ஏவல் நாய்களாக ஓடித் திரியும் சில தமிழ்ப் பத்திரிகைப் பிரகிருதிகள் ‘உதய’ வேளைகளில் ஊளையிட்டு பச்சைப் பொய்களைக் கக்கலாம்….. இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏஜென்டுகள், சந்தர்ப்பவாத – சுயநல – சதிமதியாளர்கள் சலுகைச் சுகங்களுக்காக எமது மக்களின் முதுகில் துரோகத்தனமாகக் ஓங்கிக் குத்தலாம்……. நேர்மை இருந்தும் நெஞ்சுரம் இல்லாத கோழைகள் கடமையை மறந்து – கை கொடுக்க மறுத்து ஓடி ஒதுங்கலாம்…….

ஆனால், எமது மக்களின் சத்திய எழுச்சியை எந்த சதியும் அடக்கி விட முடியாது!! எந்த விதியும் ஒடுக்கி விட முடியாது. கொடியோரின் கொடுமை கண்டு குமுறிக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் ஒரணி திரண்டு நேர்வழி நின்றால்… எமது மண்ணில் அநீதி சாயும்! அடிவானம் வெளுக்கும்! நமக்கு நாமே! நாம் மட்டுமே!! நமது ஆதரவு நம்மவனுக்கே!!!

உலகம் அறிய உரத்துச் சொல்வோம். தென்னிலங்கை எங்கும் எதிரொலிக்கச் செய்வோம். இது ஓர் புதிய அரசியல் வரலாற்றின் முதல் வரி! எம்மினத்தின் எழுச்சி அலைகளின் முகவரி! நம்பிக்கையுடன் செயற்படுவோம் – துணிவுடன் வாக்களிப்போம்.

‘சுதந்திரம் எமது பிறப்புரிமை.’
நாளை நமதே!

Telo News

Read more...

முழங்கித்தள்ளும் சிவாஜிலிங்கம் (வீடியோ)


Read more...

சுட்ட பழங்கள் இந்தியாவுக்கு விஜயம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் இன்று இந்தியா புறப்பட்டனர். இந்தியா அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் அழைப்பின் பேரில் இவர்கள் டெல்லி செல்வதாக கூட்டமைப்பு தெரிவித்தது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்திய அரசாங்கத்தினை கூட்டமைப்பு சந்திக்க வேண்டும் என சம்பந்தன் கேட்டிருந்தார் ஆனால் இந்திய அரசாங்கம் திகதியினை வழங்கவில்லை இப்போது தான் வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆகவே இன்று கூட்டமைப்பு இந்தியா புறப்படுகின்றது.இந்தியா செல்லும் கூட்டமைப்பில் வழமையாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினை சம்பந்தன் அவர்கள் வெட்டி விட்டே செல்வதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா செல்லும் அணியினர் 16 ம் திகதி வரை இந்தியாவில் இருப்பர் எனவும் அங்கு மன்மோகன்சிங் அல்லது வெளிவிவகார அமைச்சரினை சந்திப்பர் எனவும் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதனை யோசித்து செய்யும்படி இந்திய தரப்பால் கூட்டமைப்பிற்கு கூறப்பட்டது. ஆனால் பின்னர் அது குறித்து இந்திய தரப்பினர் அமைதியாக இருந்து விட்டதாக கூறப்படுகின்றது. இப்போது இந்தியாவும் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக கூறப்படுகின்றது.

இதே வேளை தமிழரசு கட்சியின் மா நாடு முடிய சம்பந்தன், மாவை சேனாதிராசா மற்றும் பலர் அங்கிருந்த முக்கியஸ்தர்களிடம் கலந்துரையாடும் போது கூட்டமைப்பில் ஆங்கிலம் நன்கு பேசக்கூடியவர்கள் படித்தவர்கள் குறைவு என்றும் இதனால் பல சிக்கல்கள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளனர். அத்துடன் பேருக்கு முன் சில பட்டங்கள் இருக்கவேண்டும் அல்லது கல்வியறிவு உள்ளவர்களாக இருக்கவேண்டும் என விவாதித்துள்ளனர்.

அடுத்துவரும் தேர்தலில் ஆட்களை நியமிக்கும் போது அதற்கேற்பவே நியமிக்கவேண்டும் என கூறியுள்ளனர். இதன்படி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பலரை நீக்கிவிட்டு ( விடுதலைப்புலிகளால் நியமிக்கப்பட்ட எம்.பி க்கள் இதில் முக்கியமாக நீக்கப்படவுள்ளனர்) புத்திசாலிகள் ஆங்கிலம் கதைக்க கூடியவர்கள் என பலரை புதிதாக களமிறக்க தீர்மானித்துள்ளது தமிழரசு கட்சி.

இந்த புதிய பட்டியலில் உயர் நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன், தற்போது பிள்ளையானுடன் இருக்கும் விக்னேஸ்வரன், ஆனந்த சங்கரி, சட்டவாளர் உமேந்திரன்,சாந்தி சச்சிதானந்தம், சி.வி.கே சிவஞானம் ஆகியோர் இடம்பெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

எது எப்படி இருப்பினும் கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கும் அதே நேரம் விடுதலைப்புலிகளால் தேர்தலிற்காக நியமிக்கப்பட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கணிசமானவர்களுக்கு அடுத்த முறை சீட்டு கிடைக்காது என்பதுதான் நிலமை.

இதே வேளை இந்திய அரசாங்கம் தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை செய்யும்படியே கூட்டமைப்பினை வலியுறுத்தி வருகின்றது. அத்துடன் கூட்டமைப்பு மக்களிற்குள் புனர்வாழ்வு திட்டங்களை செய்யவேண்டும் என்றும் அதற்காக இந்திய அரசு கொழும்பு தூதரகம் ஊடாக உதவிகளை வழங்கும் என்று கூறியுள்ளது. இந்த உதவிகளில் சில திட்டங்களுக்காக நிதியும் வழங்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களிற்கு கோழி வளர்ப்பு திட்டம், துவிச்சக்கரவண்டி வழங்குதல் போன்ற திட்டங்களை செய்வதற்கு கூட்டமைப்பின் ஒரு சில முக்கிய எம்.பிக்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல விடுதலைப்புலிகளின் நாமம் கூட எள்ளளவும் இருக்க கூடாது என்பதில் இலங்கை அரசாங்கத்தைவிட இந்தியாதான் அதிக வேகத்துடன் செயற்படுகின்றது என்பது தெளிவு. ஆனால் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் சேர்ந்து போய்த்தான் எதனையும் செய்ய முடியும் என்ற அடிப்படையில் அனைத்து விடயங்களையும் நியாயப்படுத்தும் நிலையிலேயே உள்ளனர்.

இவ்வாறு மதில் மேல் பூனைகள் போல் இருந்து அப்பப்போ இருக்கும் பலத்தோடு சேர்ந்து தமது அரசியல் இருப்பிடத்தை எவ்வாறு புதுப்பித்தும், நிலை நிறுத்தியும் செல்லும் சில கூட்டமைப்பின் மூத்தோர்களை தான் அண்மையில் உதயன் ஆசிரியர் தலையங்கமும் சம்பந்தனின் ஆழுமை பற்றி புகழ்ந்தது. ஆகவே நாமும் அரசியலில் அவர்கள் சுட்ட பழங்களாக உள்ளனர் என தைத்திரு நாளில் புகழ்ந்திடுவோம்.

Eelanatham

Read more...

Tuesday, January 12, 2010

குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதுதொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள், குழப்பங்கள், தன்னிச்சையான முடிவுகள், இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தனித்த முடிவு, அதனூடான அழுத்தங்கள், பல்வகைப்பட்ட விமர்சனங்கள் என பல நிகழ்வுகள் நடைபெற்று விட்டன.


நீண்ட குழப்பத்தின் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் ஏகோபித்த ஆட்சிமாற்றத் திற்கான முடிவை எட்டியது மட்டுமல்லாமல், இந்த தாமதத்தினூடாக சில அரசியல் அடைவுகளையும் நிகழ்த்தக்கூடிய தீர்மானத்தை அடைந்தமையானது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியது போன்றே கருத வேண்டியுள்ளது. அத்துடன் திரு. இரா.சம்பந்தர் அவர்கள் தனது அரசியல் சாணக்கியத்தையும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்தியதனூடாக தனது தலைமைத்துவ ஆளுமையை வெளிக்காட்டியமையானது தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விடயமே.

எனினும் இத்தீர்மானத்தை எடுக்கும் செயற்பாட்டின்போது அரசியலில் அவருக்குப் பூட்டப்பிள்ளைகளாகவும் கொப்பாட்டப் பிள்ளைகளாகவும் இருக்கும் சிலரின் ஆக்ரோசமான கருத்துக்களையும் எதிர்கொள்ளாமல் தீர்மானம் எட்டப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் நகைச்சுவையான விடயம் என்னவெனில், இந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவை ஆட்சிக்கு வர இடமளிக்காமல் செய்வதாயின் தமிழ்மக்கள் தமது வாக்குகளை சரத்பொன்சேகாவிற்கு அளித்தேயாக வேண்டும் என்பதில் மறுகருத்தில்லை. ராஜபக்ஷ அவர்களை ஆட்சியில் அமர இடமளிக்கக்கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இரண்டாவது தீர்மானமாக, இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களையும் ஆதரிக்கக்கூடாது என்று சில உறுப்பினர்கள் முன்மொழியப்பட்டதானது, ராஜபக்ஷ அவர்களைப் பதவிக்கு கொண்டுவரும் முயற்சிக்கான ஒருவகை அணுகுமுறையாகும் என்பது வெளிப்படையானது. ராஜபக்ஷ அவர்களை பதவிக்கு கொண்டு வர நேரடியாகவும் பின்னாலிருந்தும் உசுப்பேற்றிவிட்டு ஒன்றும் தெரியாது போன்று பாசாங்கு செய்யும் சில தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமிழ்மக்கள் அடையாளம் காணவேண்டும். சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தில் சரத் பொன்சேகாவை நல்லவர் என்றோ, தமிழ்மக்களுக்கு உரிமைகளைத் தந்துவிடுவார் என்றோ, அப்படிப்பட்ட கோரிக்கைக்கு உடன்படுவார் என்றோ, எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை சரத் பொன்சேகா அவர்களிற்கு வாக்களிக்க கோருவதனூடாக அவர் தமிழினத்திற்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கள், செய்த அநீதிகளை ஏற்று, அவர் செய்ததை மன்னிப்பது போன்று விளக்கம் கொடுக்கவும் கூடாது. அவலத்தையும் அழிவையும் தந்த முதல் எதிரியான ராஜபக்ஷ அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கு மட்டுமான தெரிவே சரத் பொன்சேகா என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.எது எப்படியோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழம்பித் தெளிந்துள்ளதானது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தெளிவான, உறுதியான அரசியல் ஆளுமையுள்ளவர்களையும், அரசியல் ஆளுமை இல்லாதவர்களையும் அடையாளம் காட்டியுள்ளது. இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாகவே அமையும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்தகால சில அரசியல் முடிவுகளின் போதும் சரி, உலக அரசியல் வரலாறுகளிலேயேயும் சரி, தேவைக்கேற்ப சிறுபான்மைக் கட்சிகள் தங்களது கொள்கையில் மாறுபடாது தீர்மானங்களை எடுப்பதனூடாக ஆட்சி மாற்றங்கள் தங்களுக்குச் சாதகமாக வருமாயின் அதற்காக புரிந்துணர்வுடன் கூடிய உறவை வைத்துக்கொள்வது அரசியல் சாணக்கியமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக 1989 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸா அவர்களுடன் உறவை வைத்து ஆயுதங்களையும் பெற்று, இந்திய இராணுவத்தை வெளியேற்றிவிட்டு, பின் அதே ஆயுதங்களைக் கொண்டு பிரேமதாஸா அவர்களின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகள் விடு தலைப்போரில் ஈடுபடவில்லையா?1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா அவர்கள் ஆட்சிக்குவர ஆதரவளிக்க வில்லையா? பின்னர் 2001 இல் சந்திரிகா பண்டாரா நாயக்காவை ஆட்சியிலிருந்து அகற்றி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க வெல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவில்லையா? பின்னர் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் அவர்கள் சர்வதேச வலைப் பின்னலுக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு சென்று சிதைத்துவிடுவார் என்று கூறி, ரணிலை ஆட்சிக்கு வராமல் செய்ய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெறுவதற்கு சூழல் அமைத்துக்கொடுக்க வில்லையா? இந்த அனைத்து தீர்மானங்களும் தமிழீழ விடுலைப்புலிகள் ஆயுதபோராட்ட பலம் இருந்த போது ஒரு விடுதலை இயக்கம் நடைமுறை அரசை நிறுவி நிர்வகித்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அப்போதைய அரசியல் சூழல்களில் விடுதலைப்புலிகள் தமது ஆயுதப்போராட்ட வலுவை அடிப்படையாகக் கொண்டு தங்களுக்குப் பொருத்தமான எதிரியை தெரிவுசெய்வதற்காக வாக்குகளைப் பயன்படுத்தினார்கள்.

தற்போது உள்ள சூழலில் தமிழ்மக்களின் வாக்குகள் மட்டுமே அவர்களின் பலம் என்றிருக்கும் போது, தமிழ்மக்களுக்கான உரிமைகளை வழங்குவது தொடர்பில் அக்கறையில்லாமல் அவர்களை அழித்துக் கொடுமைப்படுத்திவிட்டு,தமிழ்த்தேசியத்தைத்
தகர்க்கவும் பதவிக்கதிரைகளைக் காட்டி விலைபேசவும் முயன்ற ராஜபக்ஷ அவர்களை வெளியேற்ற, குறிப்பாக தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்திற்கு வழிசமைப்பதற்காக சரத்பொன்சேகாவிற்கு சார்பாக என் வாக்குகளைப் பிரயோகிக்கக் கூடாது?தற்போதையஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நீடிப்பற்கான கோரிக்கையை நிராகரித்துத் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவை எட்டுவதற்காக, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பது என ஏகமனதான தீர்மானத்தை நோக்கி நகர்த்தியமையானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவரின் மதிநுட்பமான அனுபவ அரசியலின் வெளிப்பாடாகும். அத்துடன் சரத் பொன்சேகா அவர்களை ஆதரிக்கும் முடிவை தமிழ்த்தேசி யத்தை விட்டு விலகிப்போவதாக கருதுகோடல் கொள்ளக் கூடாது. எஞ்சியுள்ள கோவணம் பறிபோவதை தடுப்பதைப்பற்றி சிந்திக்காமல், கோட், சூட் போடுவதைப் பற்றிச் சிந்திப்பது காலத்திற்குப்பொருத்தமானதல்ல. எனவே தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி தீர்மானிக்க தற்போதைய யதார்த்த அக, புறநிலையை புரிந்து வெற்று வாய்சவடால்களைத் தவிர்க்க வேண்டும். மற்றும் சரியான மதிப்பீடும் ஆய்வும் தேவை.அதில் தமிழ்மக்களின் பலம், பலவீனம், இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள்,அதிலுள்ள நெருக்கடிகள் போன்றவற்றின் அடிப்படையில் சமகாலத்தில் செய்யப்படவேண்டிய அரசியல் நகர்வுகளைச் செய்யவேண்டும். இச்செயற்பாட்டினூடாக போடப்படும் அடித்தளங்களே எதிர்காலத்தல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை நிலைநாட்டுவதற்கான அடிப்படை. எனவே இதற்கு புரிதலும், தெளிதலும், வெளிப்படைத்தன்மையும், ஏற்றுக்கொள்ளும் மனநிலையுமேமுக்கியம்.

அத்துடன் நகர்வுப்பாதையைத் தீர்மானித்து அதற்கான சரியான அணுகுமுறையைக் கையாண்டு உறுதியாக நகர்தலே தமிழினத்தின் அரசியல் இறுதி அடைவிற்கு அவசியமானது. ***



-அபிஷேகா-

Uthayan

Read more...

சரத்பொன்சேகாவை ஆதரித்து த.தே.கூ பேச்சு [படங்கள் இணைப்பு]


ஜனாதிபதி தேர்தல் தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு அரிய சந்தர்ப்பம். எங்களுடைய எதிர்கால நிலைப்பாட்டை தீர்வை முழுமையாக மாற்றி அமைக்க கூடிய சந்தர்ப்பம். இதனை நாம் இழக்ககூடாது.


தமிழ்மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் நேற்று திங்கள் மாலை வவுனியா வெளிவட்ட வீதியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது குறிப்பிட்டார்.

நாம் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்த விடயம் அறிவிக்கப்பட்ட பின்னர் மலையகத்திலும் தென்னிலங்கையில் வாழுகின்ற தமிழர் மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையினையும் அவர்கள் ஏற்றுள்ளனர். தற்போதைய ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற நிலைப்பாடு எங்கும் காணப்படுகின்றது என குறிப்பிட்ட திரு சம்பந்தன், தமிழ்மக்களுடைய வாக்குதான் இந்த நாட்டில் ஜனாதிபதி யார் என்பதனை தீர்மாணிக்கப் போகின்றது என்றார்.


மாவை சேனாதிராசா பேசியபோது :



"தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தமிழர்கள் அங்கீகாரம் அளிக்ககூடாது இவர்களுடைய காலத்தில் தமிழர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தார்கள். யுத்தத்தினை நடத்தி வன்னி பிரதேசத்தை நாசமாக்கியவர்களுக்கு நாம் வாக்களிக்க முடியுமா?" என கேள்வி எழுப்பினார்.


மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் "வன்னியில் பெரும் இராணுவ மயமாக்கல் வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றது. எமது மண்ணில் பௌத்த சின்னங்கள் அமைக்கப்படுகின்றது. இதற்கு எல்லாம் நாம் அனுமதிக்கலாமா? அதனால்தான் நாம் ஏகோபித்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆட்சியாளர்களை மாற்றவேண்டும் என்பதாகும்.


ஆட்சிமாற்றத்திற்கு சக்தி படைத்தவர் ஜெனரல் சரத்பொன்சேகா. மாற்றம் வந்த பின்னர் புதியவர் என்ன செய்யப்போகின்றார் என்பதினையும் நாம் பார்க்கத்தான் போகின்றோம். எனது கோரிக்கைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் முன்வைத்துள்ளோம். புதிய அத்தியாயத்தில் காலடிவைத்துள்ளோம், இது ஒரு பரிசோதனை களம் என்றார்."


பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் பேசுகையில்:




இந்த நாட்டில் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்படுவதன் மூலம்தான் தமிழ்மக்கள் தமது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளலாம். இந்த அரசாங்கம் எமது பிரதேசத்தினை ஆக்கிரமிப்பு செய்து இராணுவ மயமாக்கிவருகின்றது. இந்த திட்டங்களை இல்லாது ஒழிக்க ஆட்சி மாற்றம்வேண்டும்.


புதிய அரசு வரும்போது புதிய சிந்தனைகள், திட்டங்கள் ஏற்படும். நாம் சில காரியங்களை செய்யலாம். ஒரு எதிரியை வைத்து இன்னொரு எதிரியை முறியடிக்கவேண்டிய தேவை எமக்கு உள்ளது. அந்த தேவையைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம். தமிழ்மக்களுடைய அடிப்படை நலன்கள் என்னும் போது அதுதான் அந்ததேவையாகும். அரசு மாறவேண்டுமானால், நாம் அதற்குரிய வழிகள் பற்றி பார்க்கவேண்டும். மாற்றத்தை கொண்டுவரக்கூடிய சக்தியுள்ளவருக்கு வாக்களிப்பதன் மூலம்தான் மாற்றம் ஏற்படும். அந்தவகையில்தான் நாம் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிப்பதென தீர்மாணித்தோம் என்றார்.





பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்றினார்கள்.



Read more...

Thursday, January 7, 2010

போரின் முடிவுக்குப் பின்னரும் ஜனாதிபதி தேர்தலில் முக்கியத்துவம் பெறும் தமிழர் வாக்குகள்

1983 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானதிலிருந்து நாட்டின் அரசியல் நிகழ்ச்சிநிரல் அரசியல்வாதிகளினதோ அல்லது சோதிடர்களினதோ கணிப்பீட்டின் பிரகாரம் முன்னெடுக்கப்படவில்லை. வன்னிக் காட்டுக்குள் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவாகவே அந்த நிகழ்ச்சி நிரல் அமையவேண்டியிருந்தது. இலங்கையின் அரசியல் மாத்திரமல்ல நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வது கூட பிரபாகரனாலேயே தீர்மானிக்கப்பட்டது. கடந்த மே மாத நடுப்பகுதியில் முல்லைத்தீவுக் கரையோரமாக நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப் பிறகு இலங்கையின் அரசியல் நிகழ்ச்சி நிரலை தங்களால் தீர்மானிக்கக் கூடியதாக இருக்குமென்று அரசியல்வாதிகள் நினைத்தார்கள். எதிர்காலத்தில் இலங்கையின் அரசியல் பாதை வன்னியினால் அல்ல கொழும்பினாலேயே வகுக்கப்படும் என்று அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஆனால், இவர்களின் இந்த எண்ணம் தவறானதாகப் போய்விட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களுக்குச் சார்பான அரசியல்வாதிகளும் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்து வரிசையில் நின்று நல்லூர் கந்தசாமி கோயிலில் வழிபட்டு தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான பிரசாரங்களை தீவிரப்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவேண்டுமானால் எந்தவொரு பிரதான வேட்பாளருக்குமே தமிழ் மக்ககளின் வாக்குகள் முக்கியமானவையாக இருக்கின்றன.

பிரதான வேட்பாளர்களும் அரசாங்கமும் எதிரணிக் கட்சிகளும் இதனை நன்குணர்ந்திருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகள் இரண்டாகப் பிளவுபடும் போது தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமைந்திருக்கின்றன. அதனால் இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி யார் என்பதனை தமிழ் சனத்தொகையே தீர்மானிக்கப்போகிறது.

மறுவார்த்தைகளில் சொல்வதானால் பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டு விட்ட போதிலும் கூட அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் வல்லமை இன்னமும் கூட தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது. தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடிய தீர்மானத்திலேயே அடுத்த ஜனாதிபதி தெரிவு தங்கியிருக்கிறது.

போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்தி இரண்டாவது பகுதிக் காலத்துக்கு வெகு இலகுவாக தெரிவாக முடியும் என்ற நம்பிக்கையில் தான் ஜனாதிபதி ராஜபக்ஷ போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவந்தார். சிங்கள மக்களின் வாக்குகளை மாத்திரம் வென்றெடுப்பதே அவரின் இலக்காக இருந்தது. ஜனாதிபதியின் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்னவென்பதை அறியாத நிலையிலேயே முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் தனது படைகளை வெற்றிக்கு வழிநடத்தினார். போரை நிறுத்துமாறு இலங்கைக்குள்ளும் வெளி உலகில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்தும் வெளிவந்த கோரிக்கைகளை இவ்விருவரும் கிஞ்சித்தேனும் பொருட்படுத்தவில்லை. தங்களது நடவடிக்கையை தீவிரப்படுத்தி பிரபாகரனையும் புலிகளையும் ஒருவாறாக இவர்கள் ஒழித்துக் கட்டிவிட்டனர். போரின் விளைவான அவலங்களினால் தமிழ் மக்கள் நிராதரவாகி நிற்கிறார்கள். அவர்களுடைய தற்போதைய அரசியல் நிலைமையை தமிழ் நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பின்வருமாறு வர்ணித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகு இலங்கை அரசாங்கத்துடன் சுமுகமான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷ தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கப்போகிறார். அவருடன் மோதுவதை விடுத்து தமிழ் மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தைகளை நடத்துவது அவசியமாகும். தங்களது கோரிக்கைகளுக்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும் சண்டையிடுவது பயன்தரப் போவதில்லை.

கருணாநிதியின் இந்தக் கருத்தை உலகம் பூராகவும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் கடுமையாக ஆட்சேபித்தார்கள். இலங்கையின் இரண்டாம் தரப்பிரஜைகளாக வாழுமாறு தமிழ் மக்களுக்கு கருணாநிதி அறிவுறுத்தல் செய்வதாக அந்தப் புலம்பெயர் தமிழர்கள் வருத்தப்பட்டனர்.

உண்மையில் சொல்வதானால் பிரபாகரன் போரின் மூலமாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு மதிப்பு வாய்ந்த இடத்தைப் பெற்றுக்கொடுத்திருந்தார். அந்தப் போரின் முடிவுடன் அந்த மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. போரில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதையடுத்து இந்தியாவும் கூட இலங்கைத் தமிழ் மக்களை கைவிட்டுவிட்டதன் மூலம் அவர்களின் இன்றைய மதிப்பற்ற நிலையை தெளிவாக உணரக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப் புலிகள் கடந்த காலத்தில் போரில் வெல்லுவதாகத் தோன்றிய காலகட்டங்களில் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்தியா உரத்துக் குரல் கொடுத்தது.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முøற்யிலான தீர்வொன்றைத் தவிர வேறெதுவுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று முன்னர் வலியுறுத்திவந்த இந்தியா, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மாகாண சபைகளே போதுமானது என்று கூற ஆரம்பித்தது.

இலங்கை விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க செனட் கமிட்டி இறுதியாக வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் சிங்கள மாவட்டங்களுக்கும் அரசாங்கத்தின் படைகளுக்கும் உதவிகளை வழங்குவது குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போரின் முடிவுக்குப் பின்னர் சர்வதேச சமூகம் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையின்றி இருப்பதைனையே காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிலைமை வித்தியாசமாக இருக்கப்போகிறது. போரின் முடிவுக்குப் பிறகு சிங்களவர்களின் வாக்குகளைப் பெற்று தன்னால் எளிதில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றும் வடக்கில் உள்ள தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கப் போவதில்லை என்றும் நினைத்த ஜனாதிபதி ராஜபக்ஷ இப்பொழுது பெரும் சஞ்சலத்துக்குள்ளாகியிருக்கின்றார். தமிழர்களின் வாக்குகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அவர் இப்பொழுது சிந்தித்துக்கொண்டிருக்கிறார். முதலாவது பதவிக் காலம் முடிவடைய இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற போதிலும் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்துகின்ற துணிச்சலை ஜனாதிபதி ராஜபக்ஷ பெறக்கூடியதாக போரை வென்றெடுத்த பொன்சேகா இப்பொழுது தமிழ் மக்களின் வாக்குகளுக்காக அவர்களைத் தேடிச் சென்றுகொண்டிருப்பதைக் காண்கிறோம்.

ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கவில்லையானால் தமிழ் வாக்குகளை நாடிச் செல்லவேண்டிய தேவை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு இருந்திருக்காது. ஏனென்றால் சிங்கள மக்களின் வாக்குகளின் மூலம் மாத்திரம் தேர்தலில் அவரால் வெற்றிபெறக்கூடிய சாத்தியப்பாடு இருந்தது.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளை முறையாக நடைமுறைப்படுத்தும்படி இந்தியாவினால் நெருக்குதல்கள் செய்யப்பட்ட போதிலும் கூட ஜனாதிபதித் தேர்தல் முடியும்வரை 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் காத்திருக்கவேண்டியிருக்கும் என்று சென்னை இந்துப் பத்திரிகைக்குக் கடந்த ஜூலையில் அளித்த பேட்டியில் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருந்தார். தமிழர்களின் வாக்குகளை நாடவேண்டிய தேவை தனக்கு ஏற்படப்போவதில்லை என்ற நம்பிக்கையில்தான் இவ்வாறு அவர் கூறினார். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதியும் ஒரு வேட்பாளராக வந்த பின்னர் போர் வெற்றிக்கான பெருமைக்கு உரிமை கோருகின்ற விடயத்திலும் சிங்கள மக்களின் வாக்குகளை மிகப் பெரும்பான்மையாகப் பெறக்கூடிய சாத்தியத்திலும் சிக்கல் ஏற்பட்டது. தமிழர்களின் வாக்குகளைத் தேடவேண்டிய நிர்ப்பந்தம் இப்பொழுது ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படுமென்று கடந்த வார இறுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் திடீரென்று ஒரு அறிவித்தல் விடுத்தார். தமிழ் வாக்குகளின் முக்கியத்துவத்தை ஜனாதிபதியும் அரசாங்கத்தரப்பினரும் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதன் தெளிவான வெளிப்பாடே இதுவாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜெனரல் சரத் பொன்சேகா அறிவிப்பதற்கு முன்னர் ராஜபக்ஷவின் கட்சியினர் 13 ஆவது திருத்தத்தைப் பற்றி பேசக்கூடாது என்ற உத்தரவு கூட பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தத் தடை இல்லை. சுதந்திரக் கட்சியின் கொள்கைகளின் ஒரு அங்கமாக அது வந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படக்கூடாது என்று வலியுறுத்திய ஜெனரல் பொன்சேகா இப்பொழுது அந்த வலயங்களை அகற்றுவதாக உறுதியளித்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமானால் தமிழ் வாக்குகள் எந்தளவு முக்கியமானது என்பதைக் கூட இவர் உணர்ந்திருக்கிறார்.

போர் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும் நாட்டுக்குத் தலைமை தாங்கிய ஜனாதிபதியும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது கலந்து கொள்கின்ற முறையின் மூலமாக தமிழ் மக்கள் இழந்துபோன கௌரவத்தை மீட்கின்ற ஒரு நிலை வந்துள்ளது. போருக்குப் பின்னர் அரசியல் ரீதியில் நிராதரவாக நின்ற தமிழர்கள் இப்பொழுது தென்னிலங்கை அரசியலுக்கு முக்கியத்துவமானவர்களாகி விட்டார்கள். இது விதியின் ஒரு விசித்திரமான விளையாட்டு.

நன்றி: டெயிலி மிரர்

2010 ஜனவரி 06

Read more...

பொன்சேகா ஒப்பமிட்டு சம்பந்தர் பெற்றுக்கொண்ட ஆவணம்


எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்துள்ளதுடன் வடக்குக் கிழக்கில் செயற்படும் ஆயுதக் குழுக்களை உடனடியாகக் கலைப்பார் என்றும் தெரிவித்திருக்கின்றாராம்.

சரத் பொன்சேகா தான் கைச்சாத்திட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்துள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆவணத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தகுந்த ஆதாரங்களின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாத காலத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:

•கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவ, பொலிஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.
• ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும். இக்குழுவில்
ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்
பிரதேச செயலாளர்கள்
ஏனைய அதிகாரிகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பிரதிநிதிகள்
உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள்
நீதித்துறை அதிகாரிகள்
பாதுகாப்புப் படையினர், அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரிகள்
பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள்
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.

இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.

• உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.
• தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர், பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.
•பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.
• தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.
11. துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.

•அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.
•பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.
•படையினர், பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.
111. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வளித்தல்.

•நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.
•இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும், வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.
•அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
IV. நிலமும் விவசாயமும்

•தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.
•மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.
•கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.
* பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியான, சட்டரீதியான தீர்வு காணப்படும்.
(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.
(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.
(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும். இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன நடவடிக்கை நிறுத்தப்படும்.
அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில்
வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத
சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாத
தேவையற்ற
ஊழல் இடம்பெற்ற
காணிக் கையளிப்பு விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.
V. மீன்பிடித்துறை

•மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.
•பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.
VI. வியாபார, வர்த்தகம்

•பயணிகள் செல்வதற்கும் பொருள்கள், விவசாயம், மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.
•கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
VII. போக்குவரத்து

•ரயில் சேவை, யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள ஏற்படுத்தப்படும்.
•கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும். இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.
•பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
VIII. விசேட நிவாரணத் திட்டங்கள்

•யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு
•யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
IX. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்

•குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.
•யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.


இணையத்தள செய்தி

Read more...

சிவாஜிலிங்கம் யாரின் துரும்புச்சீட்டு?

தென்னிலங்கை அரசியலின் மற்றொரு முக்கிய பேசுபொருளாய் மாறியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். தனக்குள் எழுந்த அதீத தமிழ் பற்று மேலீட்டால் தனது கட்சிகளின் ஒருமித்த கொள்கைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணமும் செலுத்தியுள்ளார். தற்போது பரப்புரை நடவடிக்கைகளிலும் தோளில் கறுப்புச் சால்வையுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம்.
இந்தியாவின் கொள்கை வகுப்பு சக்திகளும், சிறீலங்காவின் தற்போதைய அரச பீடமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பிரதிபலிப்பாய் சிவாஜிலிங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் கிட்டியுள்ளன.


சிறீலங்காவின் தேர்தல் களத்தில் எதிர் எதிர்த் தரப்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் சராசரியான சம பலத்துடன் கூடிய போட்டி நிலை காணப்படுகின்றது. இந்தநிலையில் இந்தத் தேர்தலின் வெற்றி தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களுக்கே உண்டென்பதை இந்தியாவும் சிறீலங்காவும் நன்கு விளங்கிக் கொண்டுள்ளன. ஆட்சிப் பீடத்தில் சரத் பொன்சேகா ஏறுவதை இந்தியா விரும்பவில்லை. காரணம்வேறு, ஆனால் இலக்கு ஒன்று என்ற ரீதியில் மஹிந்த தரப்பும் சரத்தின் வருகையை ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே, தமிழர் தரப்பின் வாக்குகள் மஹிந்தவிற்கு இல்லாதுவிடினும் பரவாயில்லை சரத் பொன்சேகாவிற்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை முற்றாகத் தடுக்கவேண்டும் என்று முடிவெடுத்த இந்திய மற்றும் சிங்கள ஆட்சிப் பீடங்கள் சிவாஜிலிங்கம் என்ற துரும்புச் சீட்டைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டன. தமிழ்த் தேசியத்திற்காகவே தொடர்ந்து போராடிவந்த சிவாஜிலிங்கம் சிறீலங்கா, இந்திய ஆட்சிப்பீடங்களின் சதியை அறியாதவராக அவர்களின் வலையில் விழுந்துவிட்டமைதான் இன்னும் ஆச்சரியமாகவிருக்கிறது.

பெறுமதிமிக்க வாகனம் ஒன்றை வன்னிப் பகுதிக்குக் கொண்டு சென்று விற்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு பல பத்து மணித்தியாலயங்களாக சிறீலங்காவின் பொலிஸாரினால் கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் இந்தியாவிற்குச் சென்று பின்னர் பல மாதங்களாக வெளிநாடுகளுக்கும் தமிழ் நாட்டிற்கும் மாறி மாறி பயணம் செய்த செய்திகள் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

இந்தக் காலப் பகுதியில் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவினதும் இலங்கையினதும் இறையாண்மை என்று இரு நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கூறப்படுகின்ற அந்த விடயத்தை கேள்விக்குறியாக்குகின்ற வகையிலான காரசாரமான மேடைப் பேச்சுகளை நிகழ்த்திவந்த சிவாஜிலிங்கத்தால் எவ்வாறு இரு நாட்டில் இருந்தும் இலகுவாகத் தப்பிக்க முடிந்தது என்ற கேள்வி உங்களுக்கு எழவில்லையா?

பொங்கு தமிழ் நிகழ்வுகளில் உரை நிகழ்த்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அதற்காக, சிறீலங்காவின் பொலிஸாரினால் இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்று மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் சிவாஜிலிங்கம் திடீரென்று இலங்கைக்கு வரவும் அவருக்கு எந்த ஒரு நெருக்கடி நிலையும் ஏற்படவில்லையே. இதன் மூலம் சிறீலங்காவில் திடீர் ஜனநாயகம் முளைத்திருக்கிறதா என்றெண்ணினால் அது நகைப்புக்குரியது.

இந்த விடயங்கள் அனைத்திற்கும் பின்னால் இரண்டு நாட்டு ஆட்சிப் பீடங்களும் இருக்கின்றமை தற்போது அம்பலமாகி வருகின்றது. சிவாஜிலிங்கத்தின் திடீர் நடவடிக்கை இதற்கு சான்று பகிர்கின்றது. சிவாஜிலிங்கத்தினை அணுகிய சிங்கள ஆட்சிப்பீடம் தமிழ்த் தேசியப் பற்றாளரைத் தந்திரமாகப் பயன்படுத்துவதன் மூலம் தனக்குக் கிடைக்காத வாக்குகளைத் தனது எதிரிக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் கவனமாகச் செயற்படுகின்றது.

அதேவேளை, இந்தியாவில் அவர் இருந்த வேளையில் அவரை இந்தியாவின் கொள்கை வகுப்பு சக்திகள் சந்தித்து அவரது தலையில் மிளகாய் அரைத்துள்ளன. இந்த அரசுகளின் சதிகளை அறியாத சிவாஜிலிங்கத்திற்கு உசுப்பேத்திவிட இன்னொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தாவும் இணைந்துகொண்டார். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டு அவர்களின் இடங்கள் நிரப்பப்பட்டபோது அந்தக் கதிரைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டவர்தான் சிறீகாந்தா. இவர் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தச் சென்றபோது கூடவே சென்றிருக்கின்றார். இவரே சிறீலங்காவின் அரச தலைப்பீடத்திற்கும் சிவாஜிலிங்கத்திற்கும் இடையிலான தரகர் பணி புரிந்தவர் என்ற உண்மையும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

மஹிந்தவோடு சமரச அரசியல் நடத்தினால்தான் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமென அண்மைக்காலமாக சொல்லியும் அதற்கு ஏற்றவாறு செயற்பட்டும் வந்தவர்களில் ஒருவர் சிறிகாந்தா. தற்போது மறைமுகமாக மஹிந்தவுக்கு உதவி செய்வதற்குதானோ இவர் சிவாஜிலிங்கத்தைக் கூட்டமைப்பிலிருந்து கூட்டிச்சென்றார் என்ற கேள்வி எழவே செய்கின்றது.

தமிழ்த் தேசியத்தினை எவரும் விலைக்கு விற்கவோ வாங்கவோ முடியாது. சிவாஜிலிங்கத்திற்கோ அல்லது அவருக்குத் துணை நிற்கும் சிறிகாந்தாவிற்கோ மக்களால் வழங்கப்பட்ட வாக்குகள் என்பது அவர்களைப் பெரிதுபடுத்தி மக்களால் வழங்கப்படவில்லை. மாறாக மண்ணிற்காய் விதையான உயிர்களுக்கான காணிக்கைகளாகவே மக்கள் தமது வாக்குகளை வழங்கினர் என்பதை இந்திய மற்றும் சிறிலங்காவின் அதிகார வர்க்கங்கள் புரிந்துகொண்டுள்ளன. அதனை சரியாகப் பயன்படுத்த மஹிந்தவின் தந்திரபுத்தி பெருமளவில் உதவிசெய்திருக்கிறது. தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்திய ஒரு பிரதிநிதியின் மூலமே மஹிந்த தனது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த முயற்சிப்பதை இங்கு வெளிப்படையாகவே கண்டுகொள்ளலாம். தமிழ்த் தேசியத்தை உண்மையாகவே பலப்படுத்தவேண்டும் என சிவாஜிலிங்கம் நினைப்பாரானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தனது பணியை முன்னெடுத்திருக்கவேண்டும். அதனைவிட்டு தமிழ்த் தேசிய சக்திகளைப் பல முனைகளில் உடைக்கும் எதிரிகளின் சதிகளுக்குத் துணைபோனவராகவே அவர் வரலாற்றில் இனங்காணப்படுவார்.

ஒருமித்த குரலில் ஓங்கி எழுப்பவேண்டிய உரிமைக்குரலை ஒவ்வொரு கூறாக உடைக்கும் இந்த முயற்சிகளை தமிழ்மக்கள் இனங்கண்டுள்ளார்கள். இதனை சிவாஜிலிங்கம் போன்றவர்கள் புரிந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த சக்தியாக பயணிக்க முன்வரவேண்டும். அதுவே காலத்தின் தேவை.

இராவணேசன் நன்றி: ஈழநேசன்

Read more...

Tuesday, January 5, 2010

தமிழ் தேசிய கூட்டணியினர் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு அளிக்க முடிவு எடுத்துள்ளனர்

S.Lanka's main Tamil party backs ex-general


COLOMBO (AFP) – Sri Lanka's main minority Tamil party on Monday backed the main opposition presidential candidate, Sarath Fonseka, who as army chief led the offensive that crushed Tamil rebels last year, officials said.


Fonseka, a former four-star general who quit in November following differences with his political boss President Mahinda Rajapakse, pledged in a letter to end a state of emergency if he was elected in the January 26 vote.


The moderate Tamil National Alliance (TNA) agreed to back Fonseka's campaign after he signed a three-page programme that he hopes to implement in the island's former war zone, a party official said.


"We have decided to support General Fonseka, but a formal announcement will be made on Tuesday," said the TNA official, who declined to be named. The TNA has 21 seats in Sri Lanka's 225-member parliament.


In his letter, a copy of which was seen by AFP on Monday, Fonseka promised to free Tamil detainees within a month if no charges had been brought against them.


The former military chief, who is credited with leading the military drive against the separatist Tamil Tigers, also promised to establish a completely civilian administration.


"Full restoration of all institutions of civil administration from the office of village headman upwards will be free from military, police and political interference," the letter to the TNA said.


The TNA was at one time seen as a proxy of the Tamil Tigers who were crushed in May with the elimination of the rebels' military leadership after 37 years of fighting.


Fonseka pledged to end the state of emergency which had been in force since March 1983, largely to deal with Tamil rebels as well as militants among the majority Sinhalese.


The emergency gives sweeping powers to security forces to arrest and detain suspects for long periods without trial. France has led international calls on Sri Lanka to end the emergency after the ethnic conflict ended in May.


Rajapakse called the January poll in a bid to capitalise on the victory over the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) who launched their campaign for a Tamil homeland in 1972.


Fonseka and Rajapakse have been at loggerheads since the end of the conflict. Fonseka quit after accusing the government of sidelining him and falsely suspecting him of trying to stage a coup.

Read more...

Monday, January 4, 2010

காட்டிக் கொடுக்கப் போகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ்மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும்- அதற்கு முரணாக இருக்காது. எனவேஇ இந்த விடயம் குறித்துத் தமிழ்மக்கள் வீணாகக் குழப்பமடையவோஇ சஞ்சலப்படவோ தேவையில்லை” என்று அறிக்கை வெளியிடும் அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தாழ்ந்து போயிருக்கிறது.

இப்படியொரு அறிக்கையை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் வெளியிட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தல் அவசியம். தமிழ்மக்கள் மத்தியில் கூட்டமைப்பின் மீதிருந்த நம்பிக்கைகள் தளர்ந்து வந்த நிலையிலேயே இப்படியொரு அறிக்கையை வெளியிட்டு சமாளிக்க வேண்டிய நிலைக்குள்ளாகியிருக்கிறார் சம்பந்தன். முன்னதாக சம்பந்தன் அலரி மாளிகைப் பக்கம் சாய்வதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு இருந்தது. ஆனால் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர் நகர்வுகளை மெற்கொள்வதாக செய்திகள் வெளியாகின. இப்போதுஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனனா பேச்சுகள் வெற்றிகரமாக நடந்திருப்பதாகவும் அவர்களின் ஆதரவைப் பெறமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

நத்தார் தினத்தன்று சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுடன் நடத்திய பேச்சுகளின் போது- பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கூட்டமைப்பு இதுவரை அந்தச் செய்திகள் உண்மை என்று ஏற்கவோ- பொய் என்று மறுக்கவோ இல்லை. இந்தப் பேச்சுக்களின் போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் அளவுக்கு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு முடிவெடுத்து விட்டதாகவும் கூடக் கதைகள் உள்ளன.

அதற்குப் பிறகும் இருதரப்பையும் இன்னொரு முறை சந்தித்துப் பேசப் போவதாகவும் கூறினர்- சந்திப்புகளும் நடந்தன. ஒரு கட்டத்தில்- “ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு பேரம் பேசும் முயற்சியில் இறங்கவில்லை- அதற்கான வாய்ப்புகளை வீணடித்து விட்டதாக எழுந்த குற்றசாட்டுகளுக்காகவே இந்தப் பேச்சுக்கள் நடப்பது போலவே தெரிகிறது.



ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதில் தனித்துப் போட்டியிட்டுத் தமிழரின் அபிலாஷைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு என ஒன்று இருந்தது. அதை கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகளுமே தவறவிட்டன. அப்படியொரு வாய்ப்புக்குள் கூட்டமைப்பு செல்லத் துணியாதது அல்லது முடிவு செய்யாதது ஏன் என்ற கேள்வி இருக்கவே செய்கிறது. இந்த வாய்ப்பை மறுப்பதற்காகவே கடைசி வரை இழுத்தடித்து ஒரு முடிவுக்கு வந்தது. தனியாக வேட்பாளரை நிறுத்துவதில்லை என்பதே அது. அத்துடன் தேர்தல் புறக்கணிப்பும் இல்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டது.



2005இல் எடுத்த முடிவு தவறென்று இப்போது கூறுவது போல- இதுவும் புத்திசாதுரியமற்ற முடிவு என்பதை கூட்டமைப்பினர் வருங்காலத்தில் உணரக் கூடும். வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாகவே பேரப் பேச்சுக்களை வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருப்பின் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் ஒரு அச்சஉணர்வு நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். பேரப் பேச்சுக்கள் வேட்புமனுக் காலத்துக்குள் முடிவு பெறவில்லையாயின் ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்து வைத்துக் கொண்டு பேசியிருக்கலாம். எந்த வேட்பாளராவது பொருத்தமான -இணக்கப்பாட்டுக்கு வந்தால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்போம் என்று பேரம் பேசியிருக்கலாம். இதைச் செய்யாமல் போனதால் தான் சுயேட்சையாக சிவாஜிங்கம் இறங்க நேரிட்டது. (சிவாஜிலிங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.)

கூட்டமைப்பில் ஏற்பட்ட முதல் பிளவு அது என்பதும்- அதற்கு சரியான சமயத்தில் சரியான முடிவை எடுக்கத் தவறியதே காரணம் என்பதையும் ஏற்றேயாக வேண்டும். கூட்டமைப்புக்குள் பிளவு இருப்பது வேட்புமனுத் தாக்கலின் போதே உறுதியானது. அந்தக் கட்டத்திலேயே பிரதான வேட்பாளர்கள் இருவருடனான பேரம் பேசுதலில்- கூட்டமைப்பின் தரம் தாழ்ந்து போனது உண்மை. இப்போது கூட்டமைப்பு சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கப் போவதில்லை பொது வேட்பாளரையும் நிறுத்த முடியாது- தேர்தல் புறக்கணிப்பையும் மேற்கொள்ளாது என்பது இரு பிரதான வேட்பாளர்களுக்கும் நன்றாகத் தெரிந்து விட்டது. ஏதாவது ஒரு அணிக்குத் தான் அவர்கள் எப்படியும் வரவேண்டும் என்ற அலட்சிய மனோபாவம் இரு வேட்பாளர்களுக்கும் ஏற்பட்டிருப்பதை ஏற்றேயாக வேண்டும். ஆனாலும் அவர்கள் இருவரும் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற அதிகபட்சமாக முனைவார்கள். ஆனால் அது அவர்களின் நலன் சார்ந்த வகையிலேயே அணுகப்படுமே தவிர தமிழரின் நலன்சார்ந்த அளவுக்குப் பலம் வாய்ந்தாக இருக்க முடியாது.

இதை இப்போது பேரம் பேசச் செல்லும் இரா.சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுக்கும் நன்றாக விளங்கியிருக்கும். சரத் பொன்சேகாவுடனான பேச்சுக்களின் போது உள்நாட்டில் தயாராகும் தீர்வுக்கு இணங்கியிருப்பது போல பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதுபற்றி வெளியான பத்திரிகைச் செய்திகளை கூட்டமைப்பு இன்னமும் மறுக்கவில்லை என்பதால் அது உறுதியாகவே இருக்கலாம்.

உள்நாட்டுக்குள் தயாராகும் தீர்வு என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை குழி தோண்டிப் புதைக்கும் சதி என்பதை கூட்டமைப்பு உணராது போனதேன் என்று தான் புரியவில்லை..ஈPhழவழ 2

சர்வதேசத் தலையீடுகள் இல்லாமல் உள்நாட்டுக்குள் அதாவது எமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்ற இந்த முடிவு தமிழ் மக்களின் தலைவிதியையே தலைகீழாகப் புரட்டி விடப் போகிறது. தமிழ் மக்களின் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி- சர்வதேச ஆதரவுடன் உரிமைகளை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள்- உயிர்க்கொடைகள் எல்லாதவற்றையும் ஒரே கணத்தில் கேவலப்படுத்தப் போகும் வரலாற்றுத் துரோகம் இது.

எமக்கு நியாயமான உரிமைகள் கிடைக்க சர்வதேசம் வழி செய்யவில்லை- ஆனால் எமது நியாயமான உரிமைகளை சர்வதேசம் புரிந்து கொண்டிருக்கிறது. அதற்காக தமிழினம் கொடுத்த விலை- செய்த தியாகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சர்வதேசத்தின் பார்வை எம் மீது திரும்பியிருப்பதால் தான் சிங்கள அரசு கொஞ்சமேனும் பயப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் சர்வதேசத்தைத் தூக்கியெறிந்து விட்டு- உள்நாட்டுக்குள் எமது பிரச்சினையைத் தீர்ப்போம் என்ற ஒரு முடிவை கூட்டமைப்பு எடுக்குமேயானால் அதற்குப் பிறகு எமக்காகக் குரல் கொடுக்க எந்த நாடும் வராது.
அப்படியொரு நிலையை ஏற்படுத்துவதே சிங்களப் பேரினவாதிகளின் நீண்டகாலக் கனவு. தம்பர அமிலதேரர் சரத் பொன்சேகாவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு பேட்டியில்- சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்ததும் சர்வதேச தலையீடுகள் முற்றாக தடுக்கப்பட்டு விடும் என்று கூறியிருந்தார்.

அவர் இந்த விவகாரத்தை மனதில் வைத்துக் கொண்டே அப்படிக் கூறியிருந்தார். வெளிநாடுகள் தமிழருக்காக குரல் கொடுப்பதை- அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோருவதை சரத் பொன்சேகா போன்ற சிங்களத் தேசியவாதிகளும் சரி- ஜேவிபி போன்ற சக்திகளும் சரி விரும்பவில்லை. அதற்காகவே தமக்கு வசதியான ஒருவரை ஆட்சியில் ஏற்ற முனைகின்றன.

இப்படியான சூழ்ச்சிக்குள் தமிழினத்தைக் கொண்டு போய் நிறுத்துவதற்கு கூட்டமைப்பு முடிவு செய்தால் அது மிகப் பெரிய பேரழிவுகளுக்குள்ளேயே கொண்டு செல்லும். சில வாரங்களுக்கும் முன்னர்இ சர்வதேசத்தின் உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொண்டு ஏதாவது ஒரு வேட்பாளரை ஆதரிக்கலாம் என்பது போல கூட்டமைப்பினர் கூறி வந்தனர். ஆனால் இப்போது அந்த முடிவைக் கைவிட்டு- எமக்குள்ளேயே பேசித் தீர்க்கலாம் என்று முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது.

இதற்காக அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரைக்கும் சிங்க அரசுகள் குப்பையில் போட்ட திட்டங்களையெல்லாம் கிளறி எடுத்து பத்திரப்படுத்த ஆரம்பித்துள்ளது கூட்டமைப்பு. கூட்டமைப்பு தனக்கென ஒரு தீர்வுத்திட்டத்தைத் தயாரித்திருப்பதாகக் கூறியதே அதை ஏன் முன்னிறுத்திப் பேரம் பேசமுனையவில்லை?

அந்தத் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்ட போது இருந்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கும் இப்போதைய நிலைப்பாடுக்கும் இடையில் மாற்றங்கள் வந்து விட்டது தான் அதற்குக் காரணமா?

உள்நாட்டுக்குள் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எத்தனை சமாதான முயற்சிகளைச் சிங்களப் பேரினவாதிகள் சிதைத்து விட்டார்கள்?

இதையும் அப்படிச் செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். சமாதானத்தின் பெயராலும்- உடன்பாடுகளின் பெயராலும் தமிழினம் பலவீனப்படுத்தப்பட்டது தானே வரலாறு. இது கூட்டமைப்புக்கு மறந்து விட்டதா?

சரத் பொன்சேகாவுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கலாம் என்ற கோதாவில் இப்படி முடிவெடுப்பதானால்- மகிந்தவுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று கெஞ்சும் டக்ளஸ{க்கும் கூட்டமைப்புக்கும் என்ன வேறுபாடு?

சரத் பொன்சேகா பதவிக்கு வந்த பிறகு எதையும செய்ய முடியாது என்று கைவிரித்த பிறகு இந்தியாவிடமும்இ அமெரிக்காவிடமும் ஓடியோடிப் புலம்பப் போகிறதா கூட்டமைப்பு?
எமது தலைவிதியை நாமே நிர்ணயிப்போம் என்று தொடங்கிய ஆயுதப்போராட்டம் சர்வதேச அரசியல் சூழலுக்கேற்ப அதன் மாற்றங்களைச் சந்தித்தது உண்மை. ஆனால் இப்போது நாம் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேசத் தலையீடு தான் எமது பலமாக மாறியுள்ளது.

காரணம் நாம் தங்கியிருந்த ஆயுதபலம் இப்போது எம்மிடத்தில் இல்லை. இந்தநிலையில் சர்வதேசத் தலையீட்டைப் புறக்கணித்து ஒரு தீர்வுத் திட்டத்;துக்குள் செல்ல முனைவது- பேச முனைவது போன்ற முட்டாள்தனம் வேறேதும் இருக்க முடியாது. சர்வதேசத் தலையீடுகளில்; உருவான போர்நிறுத்தங்கள்- சமாதான உடன்பாடுகளையே சிங்களப் பேரினவாதம் எப்படிக் கையாண்டது எப்படி என்பதை கூட்டமைப்புக்குத் தெரியாமல் போனதேன்?



சரத் பொன்சேகாவுக்கோ மகிந்தவுக்கோ ஆதரவு வழங்குவது பற்றிய எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னதாக- தனது பேரம் பேசும் திறனை கூட்டமைப்பு வெளிப்படுதியிருந்தால் அது புத்திசாலித்தனமானது. பேரம் பேசுவதற்கான பாதைகளை அடைத்து வைத்துக் கொண்டு இப்போது அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது வெறும் கேலிக்கூத்துத் தான்.

கூட்டமைப்பு தன்னிலை தாழ்ந்து எந்தவொரு சிங்களப் பேரினவாத சக்திக்காவது ஆதரவு வழங்குவதற்கு எடுக்கக் கூடிய முடிவும்- தமிழரின் அரசியல் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கவே உதவப் போகிறது. ஆட்சி மாற்றத்துக்காக சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்குத் தமிழருக்கு என்ன தேவை?

டக்ளஸ் தேவானந்தாவையும்இ பிள்ளையானையும்இ கருணாவையும் ஓரம் கட்டுவதற்கு இதுவே ஒரே வழியென்கிறது ஒரு நியாயம். அவர்கள் எப்போதும் ஆட்சி செய்யும் பக்கமே இருப்பார்கள். சரத் பொன்சேகா வந்து விட்டால்; அவருடன் ஒட்டிக் கொள்வார்கள். கருணாவைக் காப்பாற்றியதே ஐதேக தான். இப்போது அவர் மகிந்தவுடன்- நாளை அவர் சரத் பொன்சேகாவுடன் இருப்பார். டக்ளஸ் இரு பக்கத்திலும் அமைச்சராக இருந்தை யாரும் மறந்து விடக் கூடாது.



ஒட்டுண்ணி அரசியல் நடத்துபவர்களுக்குத் தன்மானம் இருக்காது காற்றடிக்கும் திசைக்கு அவர்கள் சாய்வார்கள். இவர்களைத் தோற்படிப்பது தான் தமிழ்த் தேசிய அரசியல் போராட்டமா? தமிழரின் அரசியல் போராட்டத்தில் நாம் எமது அபிலாசைகளைப் பெறுவதே எமது குறி. அதைக் கூட்டமைப்பு நினைவில் வைக்க வேண்டும்.

அவர்கள் அந்தப் பக்கம் இருப்பதால் நாம் இந்தப் பக்கம் எனறு முடிவு செய்தால் அதுபோல முட்டாள்தனம் வேறேதும் இருக்க முடியாது. முப்பதாயிரம் மாவீரர்களின் உயிர்களினாலும் இலட்சக்கணக்கான தமிழரின் குருதியினாலும் தான் எமது போராட்டம் இன்று சர்வதேச மயப்பட்டு நிற்கிறது.

ஒப்பற்ற விலைகளைக் கொடுத்த எமது உரிமைப் போராட்டத்தை ஒரு சிங்களப் பேரினவாதியை ஆட்சியில் ஏற்றுவதற்காக கூட்டமைப்பு காட்டிக் கொடுக்கப் போகிறதா?

தொல்காப்பியன்

Read more...

Saturday, December 26, 2009

இரா.சம்பந்தனுக்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு)

திருமலையின் சிங்கமே!


தந்தை செல்வாவின் பாசறை ஈன்றெடுத்த முதிசமே!


ஆறு தசாப்த அரசியலைக் கடந்த அறிவுஜீவிதமே!


புகலிட தேசத்தில் இருந்து உங்களுக்கு ஒருகோடி வந்தனம்.


ஐயனே! உங்கள் அரசியல் அனுபவக்கடல் ஆழமானது. அகன்று விரிந்தது.


அதனால்தான் என்னவோ... 2005ஆம் ஆண்டு நிகழ்ந்தேறிய சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணித்தது மாபெரும் வரலாற்றுத் தவறு என்றீர்களோ?


சரி. அப்பொழுது என்னதான் நடந்தது?


ரணிலும் மகிந்தவும் மோதிக்கொண்ட களம் அது.


அன்று நடந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவறானது என்கின்றீர்கள்.


புறக்கணிப்பு ஒருபக்கம் இருக்கட்டும். புறக்கணிக்குமாறு யார் கூறினார்கள்?


தமிழீழ விடுதலைப் புலிகளா? தமிழ் தேசியக் கூட்டமைப்பா? புலம்பெயர்ந்த நாங்களா? அல்லது செவ்வாய்க்கிரக மனிதர்களா?


நடப்பது சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல். அதில் நமக்கென்ன வேலை என்று புலிகள் ஒதுங்கிவிட்டார்கள். யாரையும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் கூறவில்லையே! ஏன் நீங்களும் உங்கள் பரிவாரங்களும்கூட அப்பொழுது வாய்திறக்கவில்லையே!


பிறகு புறக்கணிப்பிற்கான அழைப்பு எங்கிருந்துதான் வந்தது.


சரி. நீங்கள் இப்பொழுது கூறியது கூறியதாகவே இருக்கட்டும். இருந்துவிட்டே போகட்டும்!


ஆனால்... அன்றைய தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தது தவறு என்றால்... அதுதான் இன்றைய அவல நிலைக்குக் காரணம் என்றால்... அந்த நிலையை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்சவோடு உங்களுக்கு என்ன வேலை?


இந்தத் தேர்தலில் மகிந்தவைப் புறக்கணியுங்கள் என்றுதானே நீங்கள் அழைப்பு விடுக்கின்றீர்கள்? அதுதானே உங்கள் கருத்தின் அர்த்தம்?


மகிந்தவைப் புறக்கணியுங்கள் ஆனால் தேர்தலைப் புறக்கணியாதீர்கள் என்றால்... பொன்சேகாவை ஆதரியுங்கள் என்பதுதானே உங்களது வாய்மொழியின் பொருள்?


அல்லது சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கின்றீர்களா?


அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலக்கெடு முடிந்துவிட்டது.


தேர்தலில் நீங்களும் போட்டியிடுவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. சுயேட்சையாகப் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கமும் அறிவித்துவிட்டார்.


அப்படியென்றால் உங்களது வாக்கு இனி யாருக்கு?


ஆழ் கடலுக்கும் கொடும் பேய்க்கும் நடுவே பரிதவிக்கும் ஈழத்தமிழர்களை எப்பக்கம் சாயச்சொல்கின்றீர்கள்?


மகிந்த என்ற ஆழ்கடலில் மூழ்கச் சொல்கின்றீர்களா? அல்லது பொன்சேகா என்ற பேயிடம் மண்டியிடக்கூறுகின்றீர்களா?


அதுசரி... யுத்தம் முடிந்த பின்னர் உயர் பாதுகாப்பு வலயம் எதற்கு என்கின்றீர்கள்!


அப்படியென்றால் யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இருந்தது சரியென்கின்றீர்களா?


உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படுவதை அன்று எதிர்த்தவர் பொன்சேகா. நம்பியாரின் ஆலோசனைப்படி நடந்தவர் அவர்.


ஆனால் அவரை இனி ஆட்சியில் அமர்த்தினால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைத்துவிடும் என்று நீங்கள் குசுகுசுப்பதாக ஒரு கதை கசிகின்றது.


மெய்யோ பொய்யோ... மலிந்தால் நிச்சயம் சந்தைக்கு வந்துவிடும்.


ஆனாலும்... ஈழத்தமிழர்களை வந்தேறுகுடிகள் என்று அழைத்த பொன்சேகாவிற்கு நீங்கள் ஆலவட்டம் பிடிக்க முனைவதன் சூத்திரம்தான் புரியவில்லை.


ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று வட்டுக்கோட்டையில் தொடங்கி திம்பு வரை இணங்கி முள்ளிவாய்க்கால் வரை வீரவசனம் பேசியவர் நீங்கள்!


ஆனால் என்ன அதிசயம்! இன்று... சிங்களவர் என்ற சொல்லாடலைக் கைவிட்டு பெரும்பான்மையினர் என்கின்றீர்கள்!!!


அவர்கள் பெரும்பான்மையினர் என்றால் நாங்கள் என்ன சிறுபான்மையினரா?


எங்களை சிறுபான்மையினராக்கி எமது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதுதான் உங்களது இப்போதைய தேர்தல் விஞ்ஞாபனமா?


தேசிய இனத்திற்கு உரித்தான தன்னாட்சியுரிமை சிறுபான்மையினத்திற்கு உண்டென்று உங்களிடம் யார் உரைத்தார்கள்?


சிங்களவர்களை பெரும்பான்மையினர் என்று நீங்கள் அழைப்பதும் ஒன்றுதான்! எங்களது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதும் ஒன்றுதான்!


2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் ஈட்டிய வெற்றி மாபெரும் வெற்றி! மகத்தானதும்கூட.


திருமலையில் தமிழருக்கு இரண்டு ஆசனங்களை ஈட்டிக்கொடுத்த பெருமை உங்களுக்குரியது.


அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவருக்கு அருகிருந்து அடுத்த தேர்தலில் திருமலை முழுவதையும் வசப்படுத்துவேன் என்று நீங்கள் சூளுரைத்ததை நாங்கள் மறக்கவில்லை!


தேர்தல் களம் குதிப்பதற்கு முன்னர் மாவீரர்களின் கல்லறைகள் மீது நீங்கள் செய்த சத்தியமும் எங்கள் நினைவை விட்டு நீங்கவில்லை!


அது மட்டுமா? திருமலையில் நீங்கள் புலிக்கொடியேற்றியதையும் நாங்கள் மறந்துவிடவில்லை.


ஆனாலும் என்ன? இப்பொழுது சிங்கக்கொடியேந்துவதற்கு நீங்கள் தயாராகின்றீர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. தவறிருந்தால் மன்னித்தருளுங்கள்.


நாடாளுமன்றக் கதிரையை விட்டுத்தாவி அமைச்சுக் கதிரையை நீங்கள் குறிவைப்பது போல் எமக்குத் தெரிகின்றது.


நேற்று வந்த டக்ளசும், பிள்ளையானும், கருணாவும் அமைச்சுக் கதிரைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொழுது நான் என்ன சும்மாயிருப்பதா? என்று நீங்கள் எண்ணக்கூடும்! தப்பேயில்லை.


ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள்! உங்கள் நாடாளுமன்றக் கதிரைக்கு வலுச்சேர்ப்பது தமிழீழ ஆணை மட்டுமே!


அதுசரி. தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காது தமிழ் மக்களின் கருத்துக்களை அறிந்து வருவதாகக் கூறியிருக்கின்றார்கள்.


அப்படியென்றால் உங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரும் விரிசல் விழுந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்கின்றீர்களா?


மக்களின் எண்ணவோட்டம் அறியாதவர்களும், புரியாதவர்களும் எப்படி மக்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும்?


-சேரமான்


Pathivu web

Read more...

விடுதலைப்புலிகள் எடுத்த முடிவே இன்றைய தமிழரின் மோசமான நிலைக்கு காரணம்: இரா. சம்பந்தன்


இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பாக தான் விடுதலைப்புலிகளிடம் நீண்ட நேரம் வாதிட்டதாகக் கூறும் இரா. சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறியதாக பி.பி.சி தமிழோசை தெரிவித்துள்ளது.


இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விடயத்தை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விடயங்கள் குறித்து ஆராய்ந்துவருவதாக கூறிய இரா. சம்பந்தன் அவர்கள், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Read more...

Sunday, December 20, 2009

தமிழ் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். அவர்கள் தமது இருப்புக்காக உங்களை பயன்படுத்துகின்றார்கள். அவர்களுக்கு போரின் வலி தெரியாது. உயிரின் பெறுமதி தெரியாது.

நான்காம் கட்ட ஈழப் போல் தப்பிப்பிழைத்தவர்ளில் நானும் ஒருவன். 30 வருட தனி ஈழ போராட்ட வரலாற்றில் 25 வருடங்கள் வன்னியில் நான் இருந்தேன். கடைசியாக நான் அனுபவித்து வந்த

கொடுமையை சொல்ல முடியாது. முள்ளிவாய்க்காலில் என்ன கொடூரமான காட்சிகள் இறந்த எம் உறவுகளின் உடல்கள், உடற் பாகங்கள் எல்லாமே மனிதாபிமான இராணுவ நடவடிக்கை என்று அரசாங்கம் கூறியது. எது மனிதம் என்று இறுதிவரை எமக்கு விளங்கவில்லை.
சிங்கள ஆட்சியாளர்களை விடுங்கள். தமிழ் அரசியல்வாதிகள் எமக்கு என்ன செய்தார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு கிடைப்பது விருப்பம் இல்லை.

கடந்த காலங்களில் வன்னியில் எமது உறவுகள் பெரும் எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கையில் இவர்கள் என்ன செய்தார்கள்?

இவர்கள் தான் கடந்து வந்த அழிவுகளின் சூத்திரதாகள். இவர்களின் அரசியல் தவறுகள் தான் இந்த நிலைமைக்கு காரணம். இவர்களில் பலர் தமது மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளை என எல்லோரும் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் எல்லா வசதி வாய்ப்புகளையும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழ் அரசியல்வாதிகளில் சிலர் பல்வேறு குற்றச் செயல்களைச் செய்து கொண்டு தனித் தனி குழுக்களாக இயங்கிக் கொண்டு பின்னர் நாங்கள் தான் தமிழ் மக்களின் பிரதிநிதி எனக் கூறிக் கொண்டு அரசியலுக்கு வந்தவர்கள். இவர்களை நம்பி எம் மக்கள் ஏமாந்து விட்டார்கள். இனியும் ஏமாறப் போறார்கள்.

ஆரம்ப காலங்களில் அரசியல் தலைவர்கள் விட்ட தவறுகள் காரணமாகத் தான் ஆயுதப் போராளிகள் உருவாகினார்கள். அவர்களின் போராட்டத்தின் நிலைப்பாடு ஒரு பக்கம் இருக்கட்டும் , அது தனியே ஆராயப்பட வேண்டியவை.

தமிழ் அரசியல்வாதிகள் என்றவுடன் தமிழக முதல்வரும் நினைவுக்கு வருகின்றார். அவர் தனது அரசியல் நலன்களுக்காக எமது உறவுகளின் உயிர்களை பயன்படுத்தினார்.

ஏன் தான் இந்த வயதான கலைஞன் வக்கிர உணர்வோ தெரியவில்லை. தமிழகத்தில் உணர்வாளர்கள் உள்ளார்கள். அவர்களை மதிக்கின்றோம். ஆனால் எமது உயிரினை வைத்து அரசியல் பேரம் பேசியவர்களை மன்னிக்க முடியாது. தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும் எதையும் எளிதில் மறந்து விட மாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் போரின்ன் வடுக்கள் உள்ளன.

நாங்கள் எதை கேட்டோம்? எங்களை வாழ விடுங்கள் என்று தானே.
அதற்காக ஏன் இவ்வளவு உயிர் இழப்பு? அடிப்படையில் தமிழ் கல்விமான்கள், தமிழ் மாணவர்கள்,

தமிழ் உயர் நிலை கல்விக்கூடங்களில் உள்ளவர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் மிகவும் நிதானமாக செயற்படுங்கள். இல்லையேல் மீண்டும் இதை விட பெரும் அழிவு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும். எமது உரிமையை உரிய முறையில் சொல்லுங்கள்.

தமிழ் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். அவர்கள் தமது இருப்புக்காக உங்களை
பயன்படுத்துகின்றார்கள். அவர்களுக்கு போரின் வலி தெரியாது. உயிரின் பெறுமதி தெரியாது. அளவிட முடியாத அறிவு பொக்கிசங்களை கடந்த போரில் இழந்துவிட்டோம். இனியும் இழக்காமல் தடுப்போம்.

இனிவரும் தேர்தலில் தமிழ் மக்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். குறிப்பாக, வட மாகாணத்தில் உள்ளவர்கள் அரசாங்கம் சாந்தப்படுத்துகின்றது. அதற்கான வேலைத் திட்டங்களை செய்து வருகின்றது. அதுவும் தமிழ் அரசியல்வாதிகள் ஊடாக. ஆனால் எமதுஉறவுகளின் உயிரினை திரும்ப தர முடியுமா? எல்லாமே போலியை ஏற்படுத்துகின்ற உறுதி மொழிகள்.

தமிழ் அரசியல்வாதிகள் அரசியலுக்கு சரி வர மாட்டார்கள். அவர்கள் சிறு சிறு குழுக்களாக இயங்கிக் கொண்டு அதனை வழி நடத்தத்தான் முடியும். தமிழ் மக்களை வழி நடத்த முடியாது என்பதே உண்மை. மக்களின் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாதவர்கள் எப்படி உரிமையை தருவார்கள் அல்லது கேட்பார்கள்? தமிழ் மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்று அதன் முலம் கிடைக்கும் சுக போகங்களை அனுபவிக்க மட்டும் தான் முடியும் இவர்களால்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தான் இனிவரும் காலங்களில் நடைறைக்கு சாத்தியமான அரசியலை நகர்த்தி செல்ல வேண்டும். இப்பொழுது அவர்களிடம் தான் இந்த பொறுப்பு உள்ளது. அவர்கள் தான் சர்வதேசத்துடன் எமது உரிமைக்கு வலுவான குரல் கொடுக்க உரியவர்கள்.

உள்நாட்டில் குரல் கொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே இதனை சரிவர எடுத்துச் செல்ல வேண்டி பொறுப்பு புலம் பெயர்ந்த தமிழர்களிடமே உள்ளது.
இங்கு உள்ள தமிழ் மக்கள் ஒன்றையும் மறக்க மாட்டார்கள் என்பதனை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் உரிய முறையில் எமது உரிமையை கேளுங்கள். தொடர்ந்து கேளுங்கள் கட்டாயம் மாற்றம் வரும், எல்லாமே மாறும்.

ம.சரவணன்

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top