இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label Eelam. Show all posts
Showing posts with label Eelam. Show all posts

Friday, July 3, 2009

அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும்

எத்தனையோ மக்களை அனாதையாகக் கொன்றவர்கள் புலிகள். ஆனால் தன் தலைவரை அதே மாதிரி கொன்று போட்டுள்ள போது எதுவும் நடவாத மாதிரி நடிக்கின்றனர். பிரபாகரனின் உடலை தங்கள் தலைவரின் உடலல்ல என்று கூறி, மீண்டும் அவரை அனாதையாகவே தூக்கியெறிந்தனர். இப்படி அனாதையாக மடிந்த பிரபாகரனுக்கு, இன்று யாரும் அஞ்சலி கூட செலுத்த முன்வரவில்லை.

ஆனால் இதைக் கச்சிதமாக செய்து முடித்தவர்கள், தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர். மறுபக்கத்தில் பினாமிச் சொத்தைக் கைப்பற்ற, இந்த நாடு கடந்த தமிழீழம் உதவும் என்றும் நம்புகின்றனர். இதற்கமைய ஒரு துரோகத் தலைமை ஒன்றை, புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பும் அறிக்கைகள், விளக்கங்கள்.



மக்கள் புழுதியை வாரித் திட்டுகின்றனர். வழுதியோ தங்கள் துரோகத்தை, நாடு கடந்த தமிழீழம் மூலம் மூடிமறைக்க முனைகின்றார். பத்மநாதன், உருத்திரகுமார், வழுதி என்று அனைவரும் சேர்ந்து நடத்திய இந்த துரோகத்தை, தியாகமாக காட்;ட முனைகின்றனர். இதையே சமூகத்தின் விளைநிலமாக்க முனைகின்றனர்.



வேடிக்கை என்னவென்றால் யாருடன் சேர்ந்து தங்கள் தலைமையைக் காட்டிக் கொடுத்தனரோ, அவர்களுடன் சேர்ந்து நாடு கடந்த தமிழீழம் அமைப்பது பற்றி கூறுகின்றது, இந்த சதிகாரக் மாபியாக் கும்பல்.



பச்சைப் பொய்காரர்கள். புலுடாப் பேர்வழிகள். அறிவும் நாணயமுமற்ற, முடிச்சு மாற்றிகள். மக்கள் மேல் தொடந்து சவாரி விடமுனைகின்றனர்.



வழுதி கும்பல் தம்மை மூடிமறைக்க கூறுவது போல் "ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. ஆனால், அது வெளியிலிருந்து யாராலும் கொடுக்கப்பட்டதல்ல" என்பது அப்பட்டமான பொய்.



மாறாக புலித்தலைமையை சரணடைய வைத்தவர்கள் இவர்கள். சர்வதேச சூழ்ச்சி மூலம் கொன்றவர்கள் இவர்கள். அதில் சம்பந்தப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் இதுவரை எதையும் மக்களுக்கு சொன்னது கிடையாது. கடைசி மணி நேரத்தில், பல மணி நேர உரையாடலை நடத்தியவர்கள் இந்த சதிகாரர்கள். எதைப்பற்றி என்று சொல்லவேயில்லை. துரோகத்தை எப்படி மக்களுக்கு சொல்ல முடியும். எதையும் மக்களுக்கு சொல்ல துணிவில்லை. தங்கள் சதியையும், சூழ்ச்சியையும், எப்படித்தான் மக்களுக்கு சொல்லமுடியும்.



வழுதி இதை மறுத்து தம்மை பாதுகாக்க விடையத்தை புரளியாக்கி கூறுவதைப் பாருங்கள். "தலைவர் அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்றும், "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்று சொல்லி "யாரோ" அவரை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு கதை உலாவுகின்றது" இது பொய் என்கின்றார். சரி இது பொய் என்றால், இதைவிட என்னதான் நடந்தது. நீங்கள் என்னதான் நாட்கணக்காக கதைத்தீர்கள். அப்படி என்னதான் இருந்தது கதைக்க. யாரை ஏமாற்றுகின்றீர்கள்?



வழுதியின் அதே கட்டுரையில் இந்த சதிக்கு பதில் உண்டு. "போரை இடைநிறுத்தி, ஆயுதங்களை "மௌனிக்கச் செய்வதற்கு" மே 15, வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பிற்பகல் அளவிலேயே விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது." என்கின்றார். அப்படியாயின் எதன் அடிப்படையில்? எந்த நம்பிக்கையின் அடிப்படையில்? அதை உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்? இதில் உங்கள் பங்கு என்ன?



இப்படி ”வழுதி கூட்டம்” நடத்திய அந்தச் சதியை "அப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்த நடேசன் அண்ணை - ஆயுதங்களைக் கைவிடத் தாம் தயாராக இருப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சொல்லும்படியும், தலைவர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் என்னிடம் சொன்னார்; எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்" என்கின்றார். சரி அந்த "சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி" என்றால், அவர்கள் யார்? முதல் அதைச் சொல். "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்றது பொய்யல்ல, அது "சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி" என்றதைத்தான் குறிக்கின்றது. "எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்" என்றால், யாருடன் சேர்ந்து இந்த சதியைச் செய்தாய்? அதைச் சொல்.



"இதே தகவல் - பத்மநாதன் அண்ணனுக்கு சூசை அண்ணனால் சொல்லப்பட, அவரும் உருத்திரா அண்ணனும் தமது பங்கு நடவடிக்கைகளை எடுத்தனர்." சரி என்ன நடவடிக்கை? யாருடன் சேர்ந்து? இப்படித்தான் "தமது பங்கு", "எனது பங்கு" என்பதன் மூலம் தான், அவர்கள் இறுதியில் அழிக்கப்பட்டார்கள். அதுதான் உண்மை.



"வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர்." சரி அவர்கள் யார்? எப்படி? என்ன முயற்சி, யாருடன்? இங்குதான் சதி, சூழ்ச்சி என எல்லாம் அடங்கிக்கிடக்கின்றது.



"ஆனால் - விடுதலைப் புலிகளின் தலைமை அவ்வாறு முன்வந்த போது, எல்லாம் காலம் கடந்தவையாக ஆகிவிட்டிருந்தன." என்றால், காலம் கடக்காவிட்டால் அது என்ன? யாருடன் சேர்ந்த சதி.



இங்கு ஆயுதம் கைவிடப்பட்டு சரணடைவு உங்கள் ஓத்துழைப்புடன் மே 15 நடந்தது. அதுதான் உண்மை. என்ன நடந்தது, எப்படி நடந்தது, யாருடன் சோந்து நடந்தது என்று அனைத்தும், இந்த சதியில் பங்கு கொண்ட உங்களுக்கு நன்கு தெரியும். அதை மக்களுக்கு சொல்ல மறுப்பது சதி, சூழ்ச்சி.



இதையெல்லாம் மூடிமறைக்க, புலித் தலைவர் சரணடையவில்லை என்கின்றீர்கள்; சண்டையில் வீரமரணம் அடைந்தார் என்கின்றீர்கள். இப்படி சொல்லும் இவர்கள், நடந்த உண்மையை மறைத்து முழுப்பூசனிக்காயை சோற்றில் புதைக்க முனைகின்றனர். எப்படிப்பட்ட பொய்யர்கள், மோசடிக்காரர்கள் இவர்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.



1. நடேசன், புலித்தேவன் சரணடைந்தபோது தான் கொல்லப்பட்டனர் என்று கூறியவர்கள் இவர்கள். இதை பல்வேறு தகவல் உறுதிசெய்கின்றது.



கேள்வி: இந்த சரணடைவு எப்படி, ஏன் நடந்தது. இது எந்த அடிப்படையில் நடந்தது. புலிகள் இங்கு புலிகளாகவே சரணடைந்தது உண்மையாகின்றது. இந்த வகையில் புலித்தலைவர் பிரபாகரனின் சம்மதத்துடன் சரணடைவு நடந்தது தெளிவாகின்றது. அவர்கள் சரணடைந்து உண்மையென்றால், மற்றவர்களும் தான்.



நடேசனும், புலித்தேவனும் துரோகம் செய்வதற்காக சரணடையவில்லை என்றால், இதை தலைமை வழிநடத்தியது என்றால், மற்றவர்களும் அதே வகையில் தான் சரணடைந்தனர்.



2. புலிகள் அறிவித்த அடுத்த முக்கியமான தகவல், ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தியது. இதை பத்மநாதன் அறிவித்திருந்தார். ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தியது என்றால், அது ஒட்டுமொத்தமான சரணடைவுதான். ஆயுதப் பயன்பாட்டை நிறுத்திய பின், எப்படி வீரமரணம் அடைய முடியும். தலைவர் சண்டையில் வீரமரணம் அடையவில்லை. சரணடைந்த பின், மரணம் நிகழ்ந்தது.



இப்படி புலிகள் சரணடைந்தனர் என்பதை இந்த தகவல் தெளிவாக உறுதி செய்கின்றது. இதன் பின் தான் சித்திரவதை செய்யப்பட்டதும், அவர்கள் கோரமாக கொல்லப்பட்டதும் தெளிவாகின்றது. இந்த மரணத்தை ஓட்டி புலியல்லாத பல்வேறு தரவுகளும் இதை உறுதிசெய்கின்றது.



இப்படியிருக்க இதை மூடிமறைத்து, பிரபாகரனை அனாதையாக்கியே கொன்று போட்டவர்கள் இவர்கள். இன்று பொய்யும் புரட்டுகளுடன், நாடு கடந்த தமிழீழம் என்ற கூழ்முட்டையுடன் பவனி வருகின்றனர்.



இவர்கள் யார்? இந்த யுத்தத்தின் போக்கில் புலித்தலைமையை சுற்றிவளைத்து அழிப்பதற்கு ஏற்ற, சர்வதேச வலைப்பின்னலில் நின்று புலித் தலைமையை வழி நடத்தியவர்கள். இதற்காக நீண்ட பல காலமாக முயன்றவர்கள். அதை வழுதி "ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது" என்கின்றார். யாரால்? ஏன்? அதில் உங்கள் பங்கு என்ன? இதற்கமைய நீங்கள், வேண்டுதல்காரருடன் எப்படி ஒத்துழைத்தீர்கள். நீங்கள் நடத்திய சதி, சூழ்ச்சிகள் தான் என்ன?



ஒரு விடுதலை இயக்கத்தை வழிநடத்த எந்த அறிவுமற்ற ஒரு மாபியாக் கும்பலின் தலைவரை, மாபியாப் பாணியில் அழித்தவர்கள் தான், இன்று நாடு கடந்த தமிழீழத்தை முன்வைக்கின்றனர்.



இந்த அழித்தொழிப்பில் இவர்களுடன் இலங்கை அரசு அல்லாத, சர்வதேச புலனாய்வு தரப்பு ஈடுபட்டது. தங்கள் நிலைமை பற்றி மக்களுடன் பேசாத புலித்தலைமை, இந்த சர்வதேச மாபியாக் கும்பலுடன் நாள் கணக்காக கதைத்துள்ளது. அவர்கள் என்ன கதைத்தனர், யாருடன் எதற்காக, ஏன் கதைத்தனர், என்று எதுவும் மக்களுக்கு தெரியாது.



புலத்து மண்ணில் பல பத்தாயிரம் மக்கள் வீதியில் நிற்கும் ஒரு பின்னணியில், இந்தச் சதி அரங்கேறியது. மக்களுக்கு எதுவும் தெரியாது, தெரியக் கூடாது என்பது, இந்த சதிகாரக் கும்பலின் நோக்கமாக இருந்தது. இந்த சதியில் ஈடுபட்டவர்கள், அதை மூடிமறைத்தபடி நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர் இந்த மர்மமான மாபியாக் கும்பல்.



"ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது" இந்த அடிப்படையில் வழிநடத்தப்பட்ட போராட்டம், "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்ற புலத்து புலித்தலைமையின் துரோகத்துடன் தான் முடிவுக்கு வந்தது.



பி.இரயாகரன்
03.07.2009

Read more...

"புழுதி வாரும் வழுதிக்கு ஒரு கடிதம்"

திரு. வழுதி,நாலு சுவர்களுக்க உள்ளே பேசப்பட வேண்டிய விமர்சனங்களை இப்படி புதினத்தில் எழுதி எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. உமது புலம்பலுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் புதினத்தின் நோக்கம் என்னவென்பதும் எனக்கு விளங்கவில்லை.

இதே புதினம்தான் லெனின்கிராட் போர் பற்றியும், சிங்கள இராணுவம் அகலக் கால் வைக்கிறது, வன்னி சிங்கள இராணுவத்தின் புதைகுழியாக மாறப் போகிறது என மனம் போன போக்கில் எழுதிய பரபரப்புக்கட்டுரைகள், அரசியல் களங்கள் முதலியவற்றையும் வெளியிட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.

உம்மை ஒரு அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு அந்த மிதப்பில் இப்படியான கட்டுரைகளை எழுதுகிறீர்கள் என நான் எண்ணுகிறேன். நிகழ்வுகள் நடந்த பின்னர் அதன் பிழை சரி பற்றி எந்தப் பேயனும் விமர்சனம் செய்யலாம். அதைத்தான் நீர் செய்கிறீர். மறைந்த தேசத்தின் குரல் பாலசிங்கம் பற்றி எனக்கும் அவ்வப்போது சில கருத்து வேற்றுமைகள் எழுந்ததுண்டு.



அதற்காக அவரை விழுந்தடித்துக் கொண்டு விமர்சனம் செய்ய நான் நினைக்கவில்லை. அவர் தமிழீழ விடுதலைக்கு ஆற்றிய தொண்டு, அதற்காக அவர் கொடுத்த விலைதான் எனக்கு மேலாகப்பட்டது. இப்போது அவர் மறைந்துவிட்டார். மறைந்தவர் திரும்பி வரமாட்டார் என்ற துணிச்சலில் யாரும் அவர் சொன்னதாக எழுத முடியும். அதில் நீரும் ஒருவர்.

(1) "உண்மை சொல்லும் நம்பக ஊடகங்களாக ஒரு காலத்தில் போற்றிய தளங்களையெல்லாம், வதந்தி பரப்பும் துரோகத் தளங்களாகப் பார்க்க வேண்டிய கதிக்குள் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்" என எழுதியுள்ளீர்கள்.

நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர் எனத் தெரியவில்லை. மக்கள் "நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்" என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? யாரால் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனச் சொல்லமுடியுமா? மக்கள் மடையர்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்? உண்மை என்னவென்றால் மக்கள் அந்தச் செய்தியை நம்ப மறுத்தார்கள். அதனை அவசர அவசரமாக வெளியிட்டுத் தலைவருக்கு "வீரமரணக்கம்" செலுத்த பத்மநாதன் எத்தனித்த போது மக்ககள்தான் அதனை நிராகரித்தார்கள்.

மக்களின் உணர்வுகளை வீரமரணச் செய்தியைக் காவிச் சென்றவர்கள், வானொலி, தொலைக்காட்சி மக்களால் துரத்தப்பட்டார்கள். கனடாவில் இதுதான் நடந்தது. பத்மநாதனை உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். ஆனால் அவருக்கு மக்களது உணர்வுகள் தெரிந்திருக்கவில்லை. அதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்க மாட்டேன். இப்போது கூட யார் யார் இறந்துபட்டார்கள் என்பதை அவர் பட்டியல் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

சிறிலங்கா அரசு செய்யாத அல்லது செய்யநினைக்காத திருப்பணியை பத்மநாதன் செய்கிறார் என்பதுதான் எனது கவலை. கோபம். மற்றப்படி அவர் தலைவரின் வலது கையாக இருந்தார் என்பதில் எந்த கருத்து முரண்பாடும் இல்லை. இந்திய இராணுவத்துக்கு எதிராக போராட முடியாது என்று கூறி பலர் இயக்கத்தில் இருந்து விலக முன்வந்த போது "போகிறவர்கள் போகலாம் . எனக்கு கே.பி. இருந்தால் போதும்" என்று தலைவர் சொன்னார்.

"ஆக, இப்போதிருக்கும் சூழலில் அந்த மனிதர் மீது சேறு பூசுவதை நிறுத்திவிட்டு - கட்டுக்கோப்புடனும், ஒருங்கிணைவுடனும், கூட்டுச்சிந்தனையுடனும் உருப்படியாக ஏதாவது செய்ய முற்படுவதே தமிழர் எல்லோருக்கும் நல்லது" என எழுதியுள்ளீர். மெத்த நல்லது.

ஆனால் இந்த சேறு பூசும் திருப்பணியை நீர்தான் முதலில் தொடக்கி வைத்தீர் என்பது நினைவிருக்கட்டும்.



"மக்கள் தமது ஊர்களில் வசிக்க வேண்டும்; வசித்தாலும், போராட்டத்திற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தயாராக இருந்தாலும், ஒரு கெரில்லாப் போராளிக்கு உதவ அவர்கள் முன்வர வேண்டும். தமிழீழத்தின் தற்போதைய களப் புறநிலையில் இவை எதுவுமே இல்லை" என அடித்துச் சொல்கிறீர்.

எந்த அடிப்படையில்? நீர்தான் களத்தில் இல்லையே? அந்த நிலைமை இப்போது இல்லாமல் இருக்கலாம் அது எப்போதும் அப்படி இருக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது.

(2) "மன்னிப்புக் கேட்டல்" என்ற நிலைக்குப் போகாமலும், அதற்கு ஒரு நூலிழை அளவு கீழே வரை சென்றும் - மிகவும் சாதுரியத்துடன் அவர் அன்று அந்தக் கேள்வியைக் கையாண்டார்" என்பது சரியாக இருக்கலாம். ஆனால் பாலசிங்கம் அதனை தன்னிச்சையாகவே செய்தார். அதுதான் அவர்விட்ட பிழை. அதுதான் தமிழ்ச்செல்வனை அப்படிச் சொல்லவைத்தது.



(3) "கர்வத்துடனும், கெளரவத்தடனும் வாழ்ந்த எமது மக்கள் கம்பி வேலிகளுக்குப் பின்னால் கண்ணீரோடு நிற்கின்றார்கள்; அவர்களைப் பக்குவமாக மீட்டெடுத்து அவர்களது பழைய கம்பீர வாழ்வை அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும். இத்தனை ஆண்டு காலம் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள் பலர் சிங்களத்தின் சிறை முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்; அவர்களையும் மெதுவாக மீட்டெடுத்து அவர்களது சகவாழ்வுக்கு நாம் வழிசெய்ய வேண்டும்.

இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் பணிகள் நிமித்தம் அனுப்பப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த எமது போராளிகள் பலர் உயிர் ஆபத்தான சூழல்களில் சிக்குண்டுள்ளார்கள்; அவர்களையும் நுட்பமாக மீட்டெடுத்து நாம் காக்க வேண்டும்." என எழுதுகிறீர்கள். என்னைக் கேட்டால் மக்கள் இன்னும் 6 மாதங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள். அதற்கான அழுத்தத்தை எம்மால் அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்த முடியும். ஏற்பட்டு வருகிறது.

அது சரி "போராளிகள் பலர் உயிர் ஆபத்தான சூழல்களில் சிக்குண்டுள்ளார்கள்; அவர்களையும் நுட்பமாக மீட்டெடுத்து நாம் காக்க வேண்டும்" என்பது சரிதான். அந்த "நுட்பம்" என்ன என்பதை சொல்லவில்லையே? போரில் தோற்றவர்களை போர்க் கைதிகளாக கருதி அவர்கள் பன்னாட்டு சட்டங்கள் மரபுகளுக்கு இசைவாக நடத்தப் படவேண்டும். ஆனால் சிங்களக் காட்டுமிராண்டிகளிடம் அதனை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். வெள்ளைக் கொடியோடு போனவர்களுக்கு என்ன நடந்தது?





(4) "ஆயுதப் போராட்டத்தைப் பின்புலமாக வைத்து அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் காலம் - உண்மையில் செப்ரெம்பர் 11, 2001 அன்றுடன் இந்த உலகத்தை விட்டும், கடந்த மே 18, 2009 அன்றுடன் தமிழர்களை விட்டும் போய்விட்டது" என்பது முழுதும் சரியில்லை. செப்தெம்பர் 11, 2001 க்குப் பின்னர்தான் சொசோவோ சுதந்திரநாடாக முகிழ்ந்துள்ளது. அதனை உருவாக்கியவர்கள் இதே மேற்குல நாட்டுத் தலைவர்கள்தான்.

கொசோவோ விடுதலை இராணுவத்துக்கும் வி.புலிகளின் ஆயுதப் போராட்டத்துக்கும் கொசோவோ நாட்டுக்கும் தமிழீழத்துக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. 1984 இல் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதிகளால் சுடப்படாது இருந்திருந்தால் எமது போராட்டம் வெற்றி பெற்றிருக்கும். வட - கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஒரு தன்னாட்சியை உருவாக்குவதில் இந்திரா காந்தி உறுதியாக இருந்தார். இராசீவ் காந்தியின் முட்டாள்த்தனத்தால்தான் எல்லாம் கெட்டது.

இந்தியாவைப் பகைக்கக் கூடாது என்ற கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். ஆனால் அதனை சேரடியாகச் செய்ய முடியாது. தமிழகத்தின் ஊடாகத்தான் செய்ய முடியும். சென்ற தேர்தலில் அந்த முயற்சி தோற்றாலும் அது முழுத் தோல்வி அல்ல. சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தமிழ் உணர்வாணர்களின் கடுமையான உழைப்பால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழீழ போராட்டத்தின் நான்காவது கட்டம் பற்றி அதன் நன்மை தின்மை சாதக பாதகம் வெற்றி தோல்வி பற்றிய விமர்சனத்தை வரலாற்று ஆசிரியர்களிடம் விட்டுவிடுவோம். நாம் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை எந்த வடிவத்தில் எந்தப் பாதையில் நகர்த்துவது என்பதுபற்றி மட்டும் எல்லோரும் சிந்தித்துச் செயல்படுவோம்.

ஊத்தைத் துணிகளை தெருவில் வைத்துத் துவைப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் யாழ்ப்பாண மாநகரசபை வவுனியா நகரசபைக்குத் தேர்தல் வருகிறது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைப்பதற்கு நாம் பாடுபட வேண்டும்.

இது நாம் எல்லோரும் செய்யக் கூடிய உடனடிப் பணி. தமிழீழ மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுதலை செய்து விட்டோம் என ஆளுவோர் கொக்கரிக்கிறார்கள். ஆளும் கட்சி வெற்றி பெற்றால் அது உண்மையாகி விடும்.

- நக்கீரன்


Read more...

சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2

இந்தக் கருத்துக்களம் 'புதினம்' தளத்திற்காக தி.வழுதி அவர்களால் எழுதப்பட்டதாகும். அண்மையில் அவர் எழுதியிருந்த "முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!" என்ற கருத்துக் களத்தின் இரண்டாவது பாகமாக அவர் இதனை எழுதியுள்ளார்.

முற்குறிப்பு:

ஏராளமான கதைகள் உலவுகின்றன.

என்னைப் பற்றியும் ஒரு கதை உலாவியது: 'மெளனம் சம்மதம்' என்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக இரண்டு தகவல்களையும் ஒரு வேண்டுகோளையும் விடுத்து விட்டு முடிக்கின்றேன்.

தகவல் ஒன்று: சிவபெருமானே இறங்கி வந்தாலும் அவருடன் கருத்து வேறுபடுவதற்கும், எனது கருத்தை வெளியில் சொல்வதற்கும் எனக்கிருக்கும் உரிமையை அவர் நிராகரிக்க மாட்டார்.

தகவல் இரண்டு: தமிழ்ச்செல்வன் அண்ணனே எழுந்து வந்தாலும் அவர் மீது எனக்கிருந்த மரியாதையையோ அல்லது எனது ஒழுக்கத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையையோ மறுக்க மாட்டார்; அதனை என்னையும் அவரையும் நன்கறிந்தவர்களும் மறுக்க மாட்டார்கள்.

வேண்டுகோள்: தமிழர்களாகிய நாம் உன்னதமான பண்பையும், மேன்மையான பண்பாட்டு விழுமியங்களையும் கொண்டு 2,500 ஆண்டு காலமாகக் கூர்ப்படைந்து முதிர்ச்சி பெற்ற ஒரு மக்கள் இனம். ஒரு மனிதனின் கருத்தோடு உடன்படவில்லை என்பதற்காக - அவனின் ஒழுக்கத்தைக் களங்கப்படுத்தி Character Assassination செய்யும் விதமாக - கடுகளவேனும் உண்மையற்ற விடயங்களைத் தயவு செய்து எழுதாதீர்கள், தயவுசெய்து மின்னஞ்சல் செய்யாதீர்கள், தயவு செய்து எங்கும் வெளியிடாதீர்கள்.

நன்றி.

* * * * *

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2

ஏராளமான கதைகள் இப்போது உலவுகின்றன.

உண்மைகளை வதந்திகள் என்றும் வதந்திகளை உண்மைகள் என்றும் நம்ப வேண்டிய துயரச் சூழலுக்குள் தமிழ்த் தேசிய இனம் சிக்குண்டுள்ளது.

தேசியத் தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்ற உண்மையை வதந்தி எனவும், செல்வராஜா பத்மநாதன் அவர்கள் யாரிடமோ விலை போய் விட்டார் என்ற வதந்தியை உண்மை எனவும் நம்ப வேண்டிய சூழலுக்குள் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

உண்மை சொல்லும் நம்பக ஊடகங்களாக ஒரு காலத்தில் போற்றிய தளங்களையெல்லாம், வதந்தி பரப்பும் துரோகத் தளங்களாகப் பார்க்க வேண்டிய கதிக்குள் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

முன்பு அறிக்கை விட்டபோது அறிவழகன் உண்மையானவர் என்றும் பின்பு அறிக்கை விட்டபோது அறிவழகன் பொய்யானவர் என்றும் நம்ப வேண்டிய நிலைக்கு மக்கள் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

பல கதைகளின் உண்மைத் தன்மையைத் தெளிவுபடுத்தும் பொறுப்பைக் காலத்தின் கைகளில் விட்டுவிடுகின்றேன்; நிகழ்காலத் தேவை கருதி - அதில் ஏதோ ஒரு வகையில் பங்கேற்றவன் என்ற வகையில் - ஒரு கதைக்கு மட்டும் விளக்கம் சொல்லி விட்டு முடிக்கின்றேன்.

தலைவர் அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்றும், "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்று சொல்லி "யாரோ" அவரை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு கதை உலாவுகின்றது.

வன்னிப் போரை நிறுத்தி, மக்களைக் காத்து, தலைவரையும் தலைமைப்பீடத்தையும் பாதுகாப்பான ஒர் இடத்திற்கு நகர்த்துவதற்காக -

கடந்த வருடம் (2008) செப்ரெம்பர் முதல் எடுக்கப்பட்டு வந்த கடுமையான - இடையறாத - முயற்சிகளிலும் -

விடுதலைப் புலிகளின் வன்னித் தலைமை, சில மேற்குலக நாடுகள், சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு இடையில் கடந்த 9 மாத காலமாக இது தொடர்பாக இடம்பெற்று வந்த தொடர்பாடல்களிலும் -

நடேசன் அண்ணனின் அங்கீகாரத்துடன் ஏதோ ஒரு வகையில் பங்கேற்றவன் என்ற முறையில் ஒரு விடயத்தைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்:

பரப்பப்படுகின்ற எந்தக் கதையிலும் எந்தவிதமான உண்மையும் இல்லை.



தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்

ஆயுதங்களை மெளனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது.

நோர்வே அரசு, குறிப்பாக திரு. எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் தனிப்பட்ட அக்கறையுடன் இதில் நேரடியாகச் சம்மந்தப்பட்டிருந்தார். அவரும் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் தலைமைக்கு யாருடைய உதவியும் தேவைப்பட்டிருக்கவில்லை.

எவரையும் நம்பியோ, அல்லது "கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றுவோம்" என்ற எவருடைய வாக்குறுதியையும் நம்பியோ தலைவர் அவர்கள் அங்கிருந்து போராடவில்லை.

2009, மே 14, வியாழக்கிழமை வரை - தொடர்ந்து போராடுவதில் தமக்கு இருந்த உறுதிப்பாட்டையே விடுதலைப் புலிகளின் தலைமை வெளிப்படுத்தியபடி இருந்தது.

ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது; ஆனால், அது வெளியிலிருந்து யாராலும் கொடுக்கப்பட்டதல்ல.

மே 14, வியாழன் அன்று, தம்மால் இன்னும் தொடர்ந்து சில காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்று புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் சொன்னார்; அதே விடயத்தை, அதே நாள், அவர் பத்மநாதன் அண்ணனுக்கும் சொல்லியுள்ளார்.

போரை இடைநிறுத்தி, அயுதங்களை "மெளனிக்கச் செய்வதற்கு" மே 15, வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பிற்பகல் அளவிலேயே விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது.

அப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்த நடேசன் அண்ணை - ஆயுதங்களைக் கைவிடத் தாம் தயாராக இருப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சொல்லும்படியும், தலைவர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் என்னிடம் சொன்னார்; எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்.

இதே தகவல் - பத்மநாதன் அண்ணனுக்கு சூசை அண்ணனால் சொல்லப்பட, அவரும் உருத்திரா அண்ணனும் தமது பங்கு நடவடிக்கைகளை எடுத்தனர்.

வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர்.

ஆனால் - விடுதலைப் புலிகளின் தலைமை அவ்வாறு முன்வந்த போது, எல்லாம் காலம் கடந்தவையாக ஆகிவிட்டிருந்தன.

இவை தொடர்பாக, கடந்த ஆறு மாத காலமாக நடந்த தொடர்பாடல்கள், உரையாடல்கள், பரிமாற்றங்கள், ஆதாரங்கள் என்பனவற்றை - தேவையேற்படும் போது - வரலாற்றைச் சீர்படுத்துவதற்காக - சம்மந்தப்பட்டவர்கள் வெளியிடுவார்கள் என்று நம்புகின்றேன்.

கே.பி.-யருக்குத் துதிபாடுவது எனது நோக்கமல்ல: அவரை நான் பார்த்ததும் கிடையாது; அவருடன் தொடர்பு கொள்ளும் படி நடேசன் அண்ணை சொல்லும் வரை அவருடன் நான் பேசியதும் கிடையாது.

கே.பி. அண்ணரைப் பற்றி பல கதைகள் உலாவவிடப்பட்டுள்ளன. "துரோகி", "விலை போனவர்", "ஏமாற்றியவர்" என்று ஒரு மாத காலத்திற்குள் அவருக்குச் சூட்டப்பட்டுவிட்ட பட்டங்கள் பல.

கடந்த 30 வருடங்களாக அவர் என்ன செய்தார் என்பது - அவருக்கும், தலைவருக்கும், இடையிலிருந்த தொலைத் தொடர்பு கருவிக்கும், அதனை இயக்கிய போராளிகளுக்கும் மட்டுமே தெரிந்த விடயங்கள். மற்றவர்களாகிய நாங்கள் கற்பனைகளை வளர்க்காமல் சும்மா இருப்பதே நல்லது.

அவருடைய பாதுகாப்பும் அந்தப் பணிகளின் பாதுகாப்பும் கருதி - ஆயுதக் கொள்வனவு மற்றும் நிதிக் கையாளுகை விடயங்களிலிருந்து கடந்த நான்கு வருடங்களாக ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த கே.பி. அண்ணர் அவர்கள் - அவர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக - பாலா அண்ணை விட்டுச் சென்ற இடத்தை ஓரளவுக்காவது நிரப்புவதற்காக தலைவர் அவர்களால் இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இப்போது இலங்கைத் தீவில் - விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தில் அநேகமாக எல்லோருமே வீரச்சாவு அடைந்து விட்டார்கள்; மிகுதிச் சில பேர் சிறிலங்காவின் தடுப்பு முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்.

இத்தகைய சூழலில் - என்னைப் பொறுத்தவரையில் - கே.பி. அண்ணர் அவர்களை நம்புவதற்கும், அவரை நம்பும்படி சக தமிழர்களுக்குச் சொல்வதற்கும், தன் கீழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடையாக அவரை ஏற்றுக்கொள்ளுவதற்கும் நான்கு காரணிகள் அடிப்படையாக உள்ளன:

1. தனது தொடர்பு அறுந்து போனால் கே.பி. அண்ணருடன் தொடர்பு கொள்ளும்படி தான் நடேசன் அண்ணை என்னிடம் சொல்லியிருந்தார்.

2. வன்னியிலிருந்து வந்த ஆகக் கடைசி ஒலிப்பதிவில் - கே.பி. அண்ணர் ஊடாகவே எல்லாம் செய்யப்படுகின்றது என்பதை சூசை அண்ணன் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

3. கடந்த 30 வருடங்களாக - விட்டுப் பிரியாமல் தலைவரோடு இருந்து பேராட்டத்தை வளர்த்த - தற்போது மிஞ்சியிருக்கும் இருவரில் ஒருவர் அவர்; அடுத்தது, அடேல் அன்ரி.

4. வன்னியிலிருந்த எவராலும், வெளியிலிருக்கும் எவருக்கும் வழங்கப்பட்ட முதலும் கடைசியுமான அறிவுறுத்தலில் கே.பி. அண்ணரின் வழிநடத்தலில் இயங்குமாறே சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆக, இப்போதிருக்கும் சூழலில் அந்த மனிதர் மீது சேறு பூசுவதை நிறுத்திவிட்டு - கட்டுக்கோப்புடனும், ஒருங்கிணைவுடனும், கூட்டுச்சிந்தனையுடனும் உருப்படியாக ஏதாவது செய்ய முற்படுவதே தமிழர் எல்லோருக்கும் நல்லது.




தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன்

* * * * *

தயை கூர்ந்து நான் சொல்கின்ற கருத்துக்களைத் திறந்த மனதோடு - ஒரு விஞ்ஞான சிந்தனையோடு கிரகியுங்கள்.

ஒரு கடமை உணர்வோடு உண்மையைச் சொல்ல முனையும் ஒருவனோடு கோவிக்காதீர்கள்; அவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதாதீர்கள்; விலகி இருப்போரைச் சேர்த்துச் செல்ல வேண்டிய காலத்தில் இருக்கும் போது, சேர்ந்து இருப்போரை விலக்கி விடாதீர்கள்.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போர் இப்போது ஒரு நிறுத்தத்திற்கு வந்து விட்டது.

ஒர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அகச் சூழல் தாயகத்தில் இப்போது இல்லை.

அம்பாறைக் காட்டில் ராம் அண்ணை அடுக்கெடுக்கிறார் என்பதெல்லாம் வெறும் கதை; வன்னிக் காட்டில் ஆயிரக்கணக்கில் புலிகள் பதுங்கியிருக்கின்றார்கள் என்று சொல்லப்படுவது சுத்த வதந்தி; நாளை அவர்கள் வெளியில் வந்து, கெரில்லாப் போர் நடாத்தி, சாதனைகள் புரிவார்கள் என்று காத்திருப்பது வெறும் கற்பனை.

தயவு செய்து கெரில்லாப் போர் முறையை (Guerrilla Warfare) விளங்கிக்கொள்ளுங்கள்:

பொதுமக்கள் வாழாத இடத்தில் - அது காட்டுப் புறமோ அல்லது நாட்டுப் புறமோ - ஒரு கெரில்லாப் போராளி வாழ்வதென்பது சாத்தியமே இல்லாத விடயம்.

கெரில்லாப் போர் முறைக்கு அடிப்படையானது மக்கள்:

மக்கள் தமது ஊர்களில் வசிக்க வேண்டும்; வசித்தாலும், போராட்டத்திற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தயாராக இருந்தாலும், ஒரு கெரில்லாப் போராளிக்கு உதவ அவர்கள் முன்வர வேண்டும்.

தமிழீழத்தின் தற்போதைய களப் புறநிலையில் இவை எதுவுமே இல்லை:

ஒரு கெரில்லாப் போராட்டத்தை நடத்தும் ஏது நிலையோ அல்லது அதன் விளைவுகளைத் தாங்கும் சக்தியோ மக்களுக்கு இப்போது இல்லவே இல்லை.

அதே நேரம் - ஒர் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு பெறக்கூடிய புறச்சூழல் இந்தப் பூலோகத்திலும் இப்போது இல்லை.

ஆயுதப் போராட்டத்தைப் பின்புலமாக வைத்து அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் காலம் - உண்மையில் செப்ரெம்பர் 11, 2001 அன்றுடன் இந்த உலகத்தை விட்டும், கடந்த மே 18, 2009 அன்றுடன் தமிழர்களை விட்டும் போய்விட்டது.

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதென்பது வரலாற்றுப் புதைகுழியை அகழ்வாராய்ந்து உக்கிப் போன எலும்புகளை எடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல; பழைய பட்டறிவின் பாடங்களிலிருந்து எதிர்கால வாழ்வை ஒழுங்கமைப்பதற்கே.

வடிவத்தை மாற்றாது ஆயுதப் போராட்டத்தையே நாம் நடாத்திக்கொண்டிருந்த கடந்த 25 வருட காலத்தில் - இந்தப் பூலோகம் நான்கு உலக ஒழுங்குகள் ஊடாக மாறி, மாறி வந்துவிட்டது:

சில ஒழுங்குகள் எமக்குச் சாதகமானவையாக அமைந்தன; சில ஒழுங்குகள் எமக்குப் பாதகத்தையே செய்தன.

1. பனிப் போர் காலம் (..... - 1990): உலகம் இரண்டாகி அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைமையில் பிரிந்து நின்றது: ஏதோ ஒரு பக்கத்தோடு சார்ந்திருந்து - அரசியல் விடுதலைக்கான ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய ஏது நிலைகள் அப்போது இருந்தன; இது எமக்குச் சாதகமாய் அமைந்தது. தென்னாசியாவின் புவிசார் அரசியல் (Geo-Politics) காரணிகளால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டமும் முனைப்புப் பெற்றது.

2. பனிப் போருக்குப் பின்னான காலம் (1990 - 2001): கொம்யூனிசம் கரைந்து போக, ஒற்றை வல்லரசாகிய அமெரிக்காவின் கீழ் உலகம் திரண்டது: மேற்கின் நலன்சார்ந்த ஆயுதப் போராட்டங்கள் வெல்ல வைக்கப்பட்டன. தென்னாசியப் பிராந்தியம் முக்கியமற்றதாக இருந்ததாலும், ராஜீவ் காந்தியின் இறப்போடு விலகி நிற்கும் கொள்கையை இந்தியா கடைப்பிடித்ததாலும் - இந்தக் காலமும் எமக்குச் சாதகமாய் அமைந்தது; தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இன்னும் சற்று வளர்ச்சி கண்டது.

3. செப்ரெம்பர் 11-க்குப் பின்னான காலம் (2001 - ....): பனிப்போர் காலத்தைப் போலவே இந்தத் தடவையும் உலகம் இரண்டாகி நின்றது: ஆனால், இந்தத் தடவை அரசுகள் (States) எல்லாம் ஒரு பக்கத்தில் இருந்துகொண்டு அரசு-அல்லாத-ஆயுத-இயக்கங்களை (Non-State-Armed-Actors) அடுத்த பக்கத்தில் வைத்தன; "பயங்கரவாதிகள்" என்று அவர்களுக்குப் பெயர் சூட்டின. நியாயபூர்வமான வேட்கைகளுக்காகக் கூட (Legitimate Aspirations) ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உலக அரங்கிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது.

4. புதிய பனிப் போர் காலம் ( 2005 - ....): பூகோள வல்லரசாக எழுச்சி கொள்ளும் சீனாவுக்கு இந்து சமுத்திரம் தேவைப்பட்டது; அது சிறிலங்காவுக்கு உதவியது. புலிகளை அழிக்க விரும்பிய இந்தியாவுக்கு ஒரு போர் தேவைப்பட்டது; அதுவும் சிறிலங்காவிற்கு உதவியது.

பொருளாதார ரீதியில் சீனாவோடு சார்ந்திருந்ததால் இந்து சமுத்திரத்தில் அதன் ஆதிக்கத்தை நேரடியாக எதிர்கொள்ள வழியற்றிருந்த அமெரிக்காவுக்கு அதைச் செய்வதற்கு இந்தியா தேவைப்பட்டது; முடிவாக, இந்தியாவை மீறி தென்னாசியாவில் மேற்குலகம் ஒரு துரும்பைக் கூட அசைக்க விரும்பாத சூழல் பிறந்தது.

அவரவர் புவிசார் நலன்களுக்காக (Geo-Political Interests) ஒவ்வொரு நாடும் ஒவ்வொன்றைச் செய்ய, மே 21, 1991-க்குப் பழி தீர்க்க இந்தியா தன் பங்கைச் செய்ய - மே 18, 2009 அன்று தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நிரந்தரமான முடிவுக்கு வந்துவிட்டது.

இப்போது நாம் - உலகச் சூழலுக்கு ஏற்ற வேறு வழிகளைப் பார்க்க வேண்டும்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் முதுபெரும் தளபதிகளான பிரிகேடியர் சூசை, பிரிகேடியர் பானு ஆகியோர் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன்

* * * *
கடந்த 60 ஆண்டு காலத்தில் முதற் தடவையாக - தமிழ்த் தேசிய இனம் இப்போது தான் என்றுமில்லாத அளவுக்குப் பலவீனமாகி நிற்கின்றது.

தமிழ்த் தேசிய இனம் என நான் இங்கு குறிப்பிடுவது தமிழைத் தாய் மொழியாகப் பேசும் எல்லோரையும் சேர்த்த ஒரே மக்கள் இனம்.

எமது இனம் இப்போது எல்லா வழிகளிலும் பூதாகரமான பேராபத்தை எதிர்கொண்டு நிற்கின்றது.

எம்மைக் கொன்றொழித்துவிட்டு, எஞ்சியோரைத் துரத்தியடித்துவிட்டு, மிஞ்சியோரைத் தடுப்பு முகாம்களுக்குள் போட்டு அடைத்துவிட்டு பெளத்த சிங்களப் பேரினவாதப் பூதம் இப்போது திமிரோடு நிற்கின்றது.

எமது சமூகக் கட்டமைப்பினதும் பொருளாதார வாழ்வினதும் ஆதாரமான எம் நிலங்களை விழுங்கிவிட்டு அந்தப் பேரினவாதப் பூதம் இப்போது ஏப்பம் விட்டு நிற்கின்றது.

தமிழரது தாயகக் கோட்பாடும், தேசியத் தன்மையும், இனத் தனித்துவமும், அவற்றின் விளைவாகத் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளும் அந்தப் பேரினவாதப் பூதத்தின் கைகளில் முழுமையாகச் சிக்கி அழிவை எதிர்கொண்டு நிற்கின்றன.

எமக்கு முன்னால் இப்போது மிகப் பெரிய ஒரு களம் விரிந்து கிடக்கின்றது.

இது புதிய களம்; புதிரான களம்; இரும்பினால் ஆன ஆயுதங்கள் கொண்டு வெல்ல முடியாத களம்; அறிவின் உச்சப் பயன்பாட்டுக்கான களம்.

அன்புடையோர்களே!

எம் மத்தியில் கருத்து வேற்றுமைகள் இருந்தன; இப்போதும் இருக்கின்றன. ஆனால், அது செல்ல வேண்டிய பாதை பற்றியதே அல்லாமல், செல்ல வேண்டிய இலக்கு பற்றியதல்ல.

எம் மத்தியில் குழப்ப நிலை இருந்தது; இப்போதும் இருக்கின்றது. ஆனால், அது தமிழீழத் தனியரசு சாத்தியமானதா இல்லையா என்பதே அல்லாமல், தமிழீழத் தனியரசு தேவையானதா இல்லையா என்பது பற்றியதல்ல.

சிங்களப் பேரினவாதம் தானாகவே முன்வந்து தமிழர்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை என்ற தெளிவிலும், ஏதோ ஒரு வகையில் நாமாகவே போராடித்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற முடிவிலும் - எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளோ அல்லது குழப்ப நிலைகளோ இருந்ததில்லை; இப்போதும் இல்லை.

அந்த முடிவோடும் தெளிவோடும் தான் - நாம் வரித்துக்கொண்ட அதே இலட்சியத்தைத் தாங்களும் வரித்துக்கொண்டு தான் - எம் தேசத்தின் 30 ஆயிரம் புதல்வர்களும் எம் தேசியத் தலைவனும் தமிழீழத் தேசியக் கொடியின் கீழ் அணிவகுத்தார்கள்; தங்கள் வாழ்வை அர்ப்பணித்துப் போராடினார்கள்; தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.

அண்ணனை நேசிப்போர் அவருக்காகவும், அவரை விமர்சிப்போர்கள் - அவருக்காக அல்லாவிட்டாலும், எமக்காகத் தமது உயிர்களை தந்த அந்த 30 ஆயிரம் போராளிகளின் உயிர்களுக்காகவேனும் அவர்கள் அணிவகுத்த அதே கொடியின் கீழே அணிவகுப்போம்.

பிரிந்து சிதறி நாங்கள் தூள்களாகப் போய்விடும் நாளுக்காகத் தமிழர்களின் எதிரிகள் காத்திருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் போர் வலுவை வீழ்த்திவிட்டபின், தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்து - எங்களின் அரசியல் திறனையும் நொருக்கி - எங்களை நிரந்தர அடிமைகளாக்கும் காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மதங்களாக, குழுக்களாக, கட்சிகளாக, பிரிவுகளாகத் திசைக்கு ஒன்றாய் சிதறாமல் - சகிப்புத் தன்மையுடன், உள்வாங்கும் மனதுடன், விட்டுக்கொடுப்புடன், தவறுகளை ஏற்கும் திறந்த இதயத்துடன் - நாம் எல்லோருமே 'தமிழர்கள்' என ஒன்றிணைய வேண்டும்.

அந்த ஒன்றிணைவு இல்லையென்றால் எம்மில் யாருக்குமே எதுவுமே இலங்கைத் தீவில் கிடைக்கப்போவதில்லை.

எமக்கிடையில் இறுகிய ஒற்றுமையும், மனம் திறந்த கூரிய சிந்தனையும், எதிர்காலம் பற்றிய தெளிந்த பார்வையுமே - எம் எல்லோருக்குமான எல்லாவற்றையும் வென்றெடுப்பதற்கு நாம் கையிலெடுக்க வேண்டிய ஆயுதங்கள்.

புதிய வடிவத்தில், புதிய பரிமாணத்தில், புதிய சூழலிற்குள் நுழைகின்ற தமிழீழப் போரில் இந்த ஆயுதங்கள் இருந்தால் எந்தப் பலத்தாலும் எங்களை வீழ்த்த முடியாது.

தமிழீழப் போர் - 1 மற்றும் தமிழீழப் போர் -2 ஆகியன கற்றுத் தந்திருக்கும் பாடங்களை அடிப்படையாக வைத்து தமிழீழப் போர் - 3 இனை நாம் வடிவமைக்க வேண்டும்.

அனைத்துலக உறவு விடயங்களில் Smart Power என்ற ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது.

Hard Power என்பது போர்-சார் பலத்தைக் குறிப்பதும், Soft Power என்பது போர்-சார்பற்ற ஏனைய பலங்களைக் குறிப்பதுமாகும்.

Smart Power என்பது - ஏனைய நாடுகளுக்கு இடையில் இருக்கும் உறவு, உறவற்ற மற்றும் முரண்பட்ட நிலைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி - Hard Power மற்றும் Soft Power மூலம் சாதிக்க முடியாத விடயங்களைச் சாதிப்பதற்கு ஒரு நாடு அல்லது இனம் கொண்டிருக்கும் நுண்ணறிவுப் பலத்தைக் குறிப்பதாகும்.

இன்று பெரும் உலக வல்லரசுகளே ஒன்றை ஒன்று மேவி எழுவதற்காக இந்த நுண்ணறிவுப் பலத்தைத் தான் பயன்படுத்தகின்றன; சிறிலங்கா கூட இதே நுண்ணறிவுப் பலத்தைப் பயன்படுத்தித் தான் விடுதலைப் புலிகளின் இராணுவ இயந்திரத்தைத் தகர்த்தது.

போர்-சார் பலம் ஒத்துவராத ஒர் உலக ஒழுங்கு கால கட்டத்தில் நாம் எமது Hard Power மூலம் பேராட்டத்தை நகர்த்த முனைந்ததால் - இன்று அந்தப் பலம் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டது. Soft Power என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இப்போது எதுவுமே எம்மிடம் இல்லை.

இப்போது - எம்மிடம் உள்ளதும் நாம் பயன்படுத்தக்கூடியதும் எமது Smart Power-ஐத் தான்.

எந்த 'புவிசார் நலன் அரசியல்' எமது ஆயுதப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்ததோ, அதே 'புவிசார் நலன் அரசியல்' எமது போராட்டத்தை வெல்ல வைக்கும்.

அதற்கான ஏது நிலைகளை நாமும் சேர்ந்தே உருவாக்க வேண்டும்; உருவாகி வருகின்ற ஏது நிலைகளைச் செவ்வனே பயன்படுத்த வேண்டும்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன்

உணர்ச்சிவசப்படுவதால், அல்லது உணர்ச்சியை அடிப்படையாக வைத்து அரசியல் காய்களை நகர்த்த முனைவதால் எமக்கு ஆகப்போவது எதுவுமேயில்லை என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

எமது பயணத்தின் இறுதி இலக்கு தமிழீழத் தனியரசை அமைப்பது தான். ஆனால், அந்தப் பயணம் மிக நீண்டது; மிக நெருக்கடியானது; நுட்பமான சவால்கள் பல நிறைந்தது.

இந்தப் பயணத்தில் - பழைய வண்டிகளைக் கைவிட்டுவிட்டு சில புதிய வண்டிகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்; இந்தப் பயணத்தின் பாதை சில இடங்களில் நெடுஞ்சாலைகளாகவும் சில இடங்களில் குறுந்தெருக்களாகவும் இருக்கும்; இந்தப் பயணத்தின் வழியே சில இடைநிறுத்தங்கள் வரும்; அவற்றில் நாம் சில காலம் தரித்துச் செல்ல வேண்டியிருக்கும். எமது எதிரிகளை முறியடிப்பதற்காக பழைய மற்றும் புதிய நண்பர்கள் சிலரை எம் கூடவே அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

புதிய வண்டிகளுக்கு மாறுவதோ, குறுந்தெருக்களால் மெல்ல வளைவதோ, இடைநிறுத்தங்களில் சில காலம் தரிப்பதோ, பழைய நண்பர்கள் சிலரை மீண்டும் அணைப்பதோ, புதிய நண்பர்கள் சிலரை எம்மோடு சேர்ப்பதோ - இலக்கை நாம் மாற்றிவிட்டதாகவோ, அல்லது கூடப் பயணிப்போர்களை ஏமாற்ற முனைவதாகவோ அர்த்தமாகாது; அவ்வாறாக தயவு செய்து அர்த்தப்படுத்தியும் விடாதீர்கள்.

எமக்கு அருகிலே கோலோச்சுகின்ற ஒரு பெரும் வல்லாதிக்கச் சக்தி இந்தியா; நவீன உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத கேந்திர அதி முக்கியத்துவத்தை அது இப்போது பெற்றுவிட்டது; இந்தியாவை மீறி தென்னாசியக் கடலில் ஒரு அலை கூட அசையப் போவதில்லை என்பது நாமே பட்டறிந்துவிட்ட பாடம்; பழைய வீராப்புப் பேச்சுக்களோடு மல்லுக்கு நிற்பது வெறும் அட்டைக் கத்தி வீரம்; இந்தியாவோடு அனுசரித்து, அதனை அரவணைத்து, இரு தரப்பு நலன்களையும் அகத்திலெடுத்து, அதன் துணையோடு நமது போராட்டத் தேரை நாம் முன்நகர்த்த வேண்டும்.

உலகப் பெரும் சக்திகள் பலவும் தமிழர் பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்துள்ளார்கள்; ஆனால், அவர்களின் நலன்களும் எமது போராட்ட வடிவமும் இதுவரை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு இருந்துவிட்டன. இனிமேல் - நமது புதிய போராட்ட வடிவத்தின் கீழ் - நாம் அவர்களது ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெறவேண்டும்.

கர்வத்துடனும், கெளரவத்தடனும் வாழ்ந்த எமது மக்கள் கம்பி வேலிகளுக்குப் பின்னால் கண்ணீரோடு நிற்கின்றார்கள்; அவர்களைப் பக்குவமாக மீட்டெடுத்து அவர்களது பழைய கம்பீர வாழ்வை அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.

இத்தனை ஆண்டு காலம் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள் பலர் சிங்களத்தின் சிறை முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்; அவர்களையும் மெதுவாக மீட்டெடுத்து அவர்களது சகவாழ்வுக்கு நாம் வழிசெய்ய வேண்டும்.

இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் பணிகள் நிமித்தம் அனுப்பப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த எமது போராளிகள் பலர் உயிர் ஆபத்தான சூழல்களில் சிக்குண்டுள்ளார்கள்; அவர்களையும் நுட்பமாக மீட்டெடுத்து நாம் காக்க வேண்டும்.

உணர்ச்சிப் பெருக்கோடு நாம் வெளி உலகிலிருந்து செய்ய முனையும் எதுவும், சிங்களப் பேரினவாதத்தை உசுப்பேற்றி அங்கே ஆபத்தில் இருப்போரை இன்னும் பேராபத்திற்குள் தள்ளுவதாக அமைந்துவிடக் கூடாது.

தமிழர்களைப் பிரதிநிதித்தவப்படுத்துவதற்கு இலங்கைத் தீவில் மிஞ்சியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - சிறிலங்காவின் அரசியலமைப்பக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டியுள்ளது; வெளியிலிருந்து நாம் எடுக்கும் அரசியல் முயற்சிகள் அவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துவிடவும் கூடாது.

இவ்வாறாக - எமது நீண்ட சுதந்திரப் பயணத்தில் - எம் ஒவ்வொருவரது தோள்களிலும் வரலாறு சுமத்தியிருக்கும் இந்த உடனடிக் கடமைகளை நிறைவு செய்யும் அதே வேளையில் - எமது நிரந்தர அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

இரண்டு பூர்வாங்க வேலைத் திட்டங்கள் இப்போது தொடக்க கட்டத்தில் உள்ளன:

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் [Transnational Government of Tamil Eelam]

2. பூகோளத் தமிழர் பேரவை [Global Tamil Forum]

முதலாவது - ஒர் அனைத்துலக அங்கீகாரத்துக்கானது [International Recognition]; அதிகாரபூர்வமானது: அடுத்தது - எமது இன ஒருங்கிணைவுக்கானது.

ஒன்று - அரசு; Government: அடுத்தது - மக்கள் சமூகம்; Civil Soceity

அரசு என்பது மக்கள் சமூகத்தை வழிநடாத்தும் ஒரு தலைமைச் சக்தியாகவும், மக்கள் சமூகம் அந்த அரசைத் தாங்கி நிங்கும் ஒரு தூணாகவும் - ஒன்றுக்கொன்று துணையாக, ஒன்றோடொன்று இணையாக - ஒரே நேரத்தில் ஒரே திசையில் பயணிக்க வேண்டியவை.

இந்த இரண்டு வேலைத் திட்டங்களிலும் முடிந்த முடிவென்று எதுவும் இல்லை; இரண்டு திட்டங்களுமே கருத்தாடலுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளவை.

சூட்டப்பட்டுள்ள பெயர்கள் முதல் கூட்டப்பட்டுள்ள குழுக்கள், தீட்டப்பட்டுள்ள செயற்திட்டங்கள் வரை எல்லாமே - பொருத்தமான இறுதி வடிவத்தைப் பெறும் வரை தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாகுபவை.

சாத்தியம் மற்றும் சாத்தியமின்மையைக் கலந்தாலோசித்து, நல்ல மற்றும் தீய விளைவுகளைக் கண்டறிந்து, ஆதரவு மற்றும் ஆதரவற்ற நிலைகளில் கருத்தொருமித்து - விடுவதை விட்டு, எடுப்பதை எடுத்து - ஒரு தேர்ந்த செயலிணக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

பாலா அண்ணை ஒருமுறை சொன்னார் - "ஒரு தலைமைத்துவத்தின் அழகு என்பது, செல்ல வேண்டிய இலக்குப் பற்றிய தெளிவில் சலனமின்றி, காலச்சூழலுக்கு எற்ப அது மேற்கொள்ளும் அசைவுகளிலேயே தங்கியுள்ளது."

தமிழ்த் தேசிய இனத்திற்கு ஓர் அழகான தலைமைத்துவத்தை வழங்கவேண்டிய பொறுப்பு அனைத்தலக தமிழ் சமூகத்தின் கைகளிலேயே இப்போது உள்ளது.

தி.வழுதி

உங்கள் கருத்துக்களை அனுப்ப: t.r.vazhuthi@gmail.com

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!

Puthinam

Read more...

வலி சுமந்த தமிழ் இனத்துக்கு இந்தியா வழி அமைக்குமா?

புதிய பரிணாமத்துடன் பயணிக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பங்காளியாகி இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் இன்று ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய கட்டாய பாடமாகவும் தேவையாகவும் ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமான உறவு என்ற கரு வியாபித்திருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதார சக்தியாக தொடங்கி கடந்த மூன்று தசாப்தங்களில் எத்தனையோ கசப்புமிக்க பாடங்களை இரு தரப்புக்களும் சந்தித்துள்ள இன்றைய நிலையில் -


பாரத மாதாவின் அரவணைப்பில் 'ஈழம்' மலர வேண்டும் என அன்று ஊற்றெடுத்த அதே நம்பிக்கையுடனும் - எதிர்பார்ப்புடனும் - ஈழத் தமிழ் இனம் இன்றும் இந்தியாவை நோக்கி கை நீட்டி நிற்கின்றது.

இந்தியாதான் ஈழத் தமிழிருக்கு எல்லாமே என்பதில் எவருக்கும் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்க முடியாது. தமிழர்களின் போராட்டம் தொடங்கிய நாள் தொடக்கம் இன்றுவரை நடந்து முடிந்த சாதக, பாதக விவகாரங்கள் அனைத்துக்கும் இந்தியாதான் முழுமுதற் காரணியாக இருந்து வந்துள்ளது.

அடக்குமுறைக்கு எதிரான கடைசி காண்டீபமாக ஆயுதப் போராட்டத்தை தொடங்கிய தமிழீழத் தேசியத் தலைவரின் முன்னோடிகளாக இருந்தவர்களான இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுபாஸ் சந்திரபோஸ், பகத் சிங்காக இருக்கட்டும் -

ஈழத்தில் பெண்களின் விடுதலைக்காக - அவர்களின் வீரத்தை வெளிக்கொணர்வதற்காக - விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வித்திட்ட - சுபாஸ் சந்திரபோஸ் தொடக்கிய - ஜான்சி ராணி மகளிர் சுதந்திர படையணியாக இருக்கட்டும் -

ஈழத் தமிழ்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழி ரீதியில் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு உயிர்நீத்த தியாகி திலீபன், அன்னை பூபதி ஆகியோருக்கு முன்னோடியாக இருந்த இந்தியாவின் சுதந்திரத் தந்தை மகாத்மா காந்தியின் போராட்டமாக இருக்கட்டும் -

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சி என அனைத்து தேவைகளையும் வழங்கியதாக இருக்கட்டும் -

அனைத்துமே ஈழத் தமிழருக்கு இந்தியாவாகவே இருந்து வந்திருக்கின்றது.

இதேபோல பிந்திய சம்பவங்களை பார்க்கப்போனாலும் ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் ஈழத் தமிழ் இனத்துக்கு சகல வழிகளிலும் வலிகளைக்கொடுத்ததும் இந்தியாதான். இன்று ஈழத் தமிழ் இனம் இவ்வாறான ஒரு நிலைக்கு வந்திருக்கின்றது என்றால் அதற்கு காரணமும் இந்தியாதான்.

சுருக்கமாகச் சொன்னால் ஈழத் தமிழன் ஒவ்வொருவனினதும் பிறப்பிலும் இறப்பிலும் பாரதத்தின் பார்வை ஏதோ ஒருவிதத்தில் விழுந்திருக்கின்றது. அந்தப் பார்வைகள் சில தடவை தழுவல்களாக இருக்கின்றன. பல தடவை தழும்புகளாகி இருக்கின்றன.

இருப்பினும் - இவ்வளவு நடந்த பின்னரும்கூட - ஈழத் தமிழ் இனம் இந்தியாவையே தமது ஒரே நட்பு சக்தியாக - நேச சக்தியாக - ஆதார சக்தியாக - ஆதரவு தரும் சக்தியாக - கை நீட்டி நிற்கின்றது. இதுதான் காலத்தின் தேவை என்பதையும் தமிழ் இனம் உணர்ந்து நிற்கின்றது.

ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு எவ்வளவு பலம் வாய்ந்தது என்பது எழுத்தில் வடிக்க முடியாதது. "ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்திக்கொடுங்கள்" - என்று தமது அரசை கேட்டுக்கேட்டு, எந்தக் கோரிக்கைகளையும் செவிசாய்க்காத இந்தியாவின் மனசாட்சியை உலுப்புவதற்கு ஈற்றில் தமது உடலையே எரித்து உயிரை மாய்த்த தமிழகத்தின் உத்தமர்களது தியாகத்துக்கு மேலாக ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள பிணைப்பை விவரிக்க வேறு விளக்கம் தேவையில்லை.

இந்தப் பிணைப்பு - இந்த இறுக்கம் - இந்த உறவு ஆகியவற்றின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இனிமேல் எவ்வாறு அமையப் போகின்றது?

அதற்கு ஏதுவான களம் எந்த அரசியல் வியூகத்தின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும்?

ஆகியவை காலத்தின் தேவையாக கருதப்படுகின்ற கட்டாய கேள்விகள்.

காலத்தின் கட்டாய தேவைகள்

இதனை இன்றைய புவிசார் ஒழுங்கு நிலைகளின் ஊடாகவும் அதன் வழி ஒத்துப்போகும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் ஊடாகவும் விளங்கிக்கொள்ளலாம்.

தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அடியோடு அழிப்பதற்காக கங்கணம் கட்டி நின்ற காலப்பகுதியில் சிங்கள தேசம், மேற்குலகத்தை முற்று முழுதாகவே ஓரங்கட்டிவிட்டது. அந்த அடிப்படையில், மேற்குலகின் முகத்தில் ஓங்கி அறைந்தது போல பல்வேறு காரியங்களை சீனாவின் கைப்பொம்மையாக நின்று செய்து முடித்திருக்கின்றது. இன்றும் சிங்கள தேசம் அதே திமிருடனும் இறுமாப்புடனும்தான் செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தமக்கு இடையில் எவ்வளவோ முறுகல்கள் இருந்தாலும் சிங்கள தேசத்தின் சீன ஆதரவுப்போக்கை அறுத்துவிடவேண்டும் என்பதில் அக்கறை கொண்ட வல்லரசுகள் இரண்டு. அவற்றில் ஒன்று இந்தியா. மற்றையது அமெரிக்கா.

ஆகவே, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்தில் தாம் கோலோச்சுவதற்காக சிங்கள தேசத்தை சீனாவிடம் இருந்து பிரித்தெடுப்பதற்கு இந்தியாவுக்கு அமெரிக்காவும் அமெரிக்காவுக்கு இந்தியாவும் தேவைப்படுகின்றது.

இந்த இருதரப்பு தேவையை கடந்த கால அரசியல் நகர்வுகளில் நாம் தெளிவாக கண்டிருக்கின்றோம்.





2002 ஆம் ஆண்டில் சிறிலங்காவுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் விடுதலைப் புலிகள் மேற்குலகம் சார்ந்து போய்விட்டனர் என்று இடி விழுந்தாற்போல் இருந்த இந்தியா -

விடுதலைப் புலிகள் சகலதுக்கும் தம்மை நோக்கியே இருக்கவேண்டும் என்பதற்காக திடீரென எடுத்துக்கொண்ட அரசியல் நிலைப்பாடுதான் அமெரிக்க ஆதரவுப்போக்கு.

இந்தியா தனது ஏக சொத்தாக எண்ணிக்கொண்டிருந்த ஈழத் தமிழர் விவகாரத்தை மையமாக வைத்து, அமெரிக்கா தனது அக்குளுக்குள் புகுந்துவிட்டதை சற்றும் எதிர்பாராத இந்தியா, வேறு வழி இல்லாமல் மேற்கொண்ட திடீர் இராஜதந்திர நகர்வு இந்த அமெரிக்க ஆதரவு போக்கு என்று குறிப்பிடலாம்.

அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்த கைச்சாத்து உட்பட பல விடயங்களில் அமெரிக்காவுடன் நெகிழ்வுப் போக்கை காண்பித்த இந்தியா, "நாம் இருவரும் சேர்ந்து இந்து சமுத்திரத்தை ஆளலாம் வாருங்கள். ஆனால், சீனாவை இங்கு விட்டுவிடக்கூடாது" - என்ற கொள்கையை வகுத்து -

நேர இருந்த ஆபத்தை win - win சமரச கோட்பாட்டின் ஊடாக சாமர்த்தியமாக சமாளித்துக்கொண்டது.

இந்த விடயத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மிகச் சாதுரியமாக காய்களை நகர்த்தினார் என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இந்து சமுத்திர ஆளுமை கனவு, அங்கு கடல் பாதைகளுக்கான தேவை மற்றும் இந்தியா எனப்படுகின்ற பல கோடி டொலர்கள் மதிப்புள்ள இராஜ சந்தை ஆகியவற்றுக்கு கணக்கு போட்டுக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு வலிய வந்த இந்தியாவின் இந்த அரவணைப்பு சாதகமாகவே இருந்தது.

இரு வல்லரசுகளும் ஒருவித எச்சரிக்கையுடன் கூடிய தோழமை உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளன.

ஆனால், இந்தியா என்னதான் அமெரிக்காவுடன் தோளில் கை போட்டுக்கொண்டாலும் அமெரிக்காவின் பாகிஸ்தான் சார்பு நிலைப்பாடு உட்பட பல விடயங்கள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு சந்தர்ப்பவாத உறவினையே பேணிவைத்திருப்பது ஏதோ உண்மைதான்.

இந்தியா - அமெரிக்கா - ஈழத் தமிழர்

தற்போது விரிந்துள்ள இந்தக் களத்தில், இந்தியா சரி- அமெரிக்கா சரி இரண்டுமே ஈழத் தமிழர்கள் விடயத்தில் என்ன விதமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை சற்று ஆழமாக நோக்கினால் -

அதுவே ஈழத் தமிழர்களின் எதிர்கால பயணத்துக்கான தெளிவான விடுதலைப் பாதையாக அமையும். அதனை ஆராய்ந்தறிவதே எமது நோக்கமும்கூட.

இந்த இரண்டு வல்லரசுகளும் ஈழத் தமிழரின் விடிவுக்கு அனுசரணை வழங்கிய அல்லது ஆசீர்வாதமளித்த அல்லது நேரடியாக சம்மந்தப்பட்ட சம்பவங்கள் யாவை?

1987 ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாக அன்று சிறிலங்காவுடன் இந்தியா செய்துகொண்டது இந்திய - சிறிலங்கா உடன்படிக்கை.

2002 ஆம் ஆண்டில் அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் ஆசீர்வாதத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அதனைத்தொடர்ந்து இணைத்தலைமை நாடுகளிடம் முன்வைக்கப்பட்ட தீர்வு வரைவுகள்.

இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம் எனப்படுவது 13 ஆவது அரசமைப்பு சட்ட சீர்திருத்தம். அதாவது தமிழர்களின் பூர்வீக நிலமாகிய வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கான சபைகளுக்கு காணி, காவல்துறை உட்பட சகல அதிகாரங்களும் வழங்குவது.

2002 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை சட்ட ரீதியாக பார்த்தால் அது தமிழீழத்தை எழுதி அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் தமிழர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்றே குறிப்பிடலாம்.

2002 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் போராளிகள், தமிழர் தாயத்தின் எந்தப்பகுதிக்கும் சென்று - அந்த நிலங்கள் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும்கூட - அரசியல் பணிகளில் ஈடுபடலாம் என்பதில் இருந்து -

தமிழீழத்தின் நிலம் வரையறுக்கப்பட்டு அங்கு தமிழர்களின் ஆளுமை அங்கீகரிக்கப்பட்டு, அது அனைத்துலகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாயிற்று.

ஒப்பந்தத்தின் உட்பொருளை பின்னர் நடைமுறையில் தெரிந்துகொண்ட சிங்கள தேசம், அதனை நடைமுறைப்படுத்த வெருண்டுகொண்ட காரணம் இதுதான். ஆனால், இணைத்தலைமை நாடுகள் ஒப்பந்தத்தை தெளிவாக தெரிந்து - அதன் தாற்பரியத்தை விளங்கியே - அதற்கு ஆதரவு வழங்கின.

இவை முன்னர் நடந்த சம்பவங்கள்.

இன்றைய நிலையில், இந்த இரண்டு வல்லரசுகளும் தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன என்பதை நோக்கினால் -

தமது அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 ஆவது அரசமைப்பு சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று இந்தியா விடாப்பிடியாக நிற்கிறது.

தனது அனுசரணையுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் சீனச் சார்பு சிறிலங்கா அரசினால் தூக்கியெறிப்பட்டு தாமும் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மேற்குலகம் -

ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படவேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் இந்தியாவுடன் சாதுவான பேச்சுக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளது.

13 ஆவது அரசமைப்பு சட்ட தீர்திருத்தம்

இந்த 13 ஆவது அரசமைப்பு சீர்திருத்தம் அடங்கிய இந்திய - சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோதும், அதனை அன்று சிங்கள தேசம் நடைமுறைப்படுத்தவில்லை. (அந்த காலப்பகுதியில் தமிழர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்குமாறு ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் அண்ணா உண்ணாநிலை இருந்து, கடைசிவரை அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அவர் உயிர் துறந்தார்.)

மாறாக, ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்புக்கு சென்றபோது, அவருக்கு அணிவகுப்பு மரியாதை செய்த சிங்களப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கிப் பிடியால் தலையில் அடித்து, அந்த ஒப்பந்தத்தின் மீது சிங்கள தேசம் கொண்டிருந்த கடும் சீற்றத்தையும் - தமிழர்களுக்கு ஒரு சொட்டு உரிமை கூட கொடுப்பதிலும் தமக்கு உடன்பாடில்லை என்ற நிலைப்பாட்டையும் - 'அடித்து' கூறினான்.

அவ்வாறு இந்தியப் பிரதமரை அடித்த கடற்படையைச் சேர்ந்தவர் பின்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுக்கும்போது -

ராஜீவ் காந்திக்கு மரியாதை வழங்கியது போல நாளை பிரபாகரனுக்கும் நான் அணிவகுப்பு மரியாதை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய - சிறிலங்கா ஒப்பந்தம் வழிவகுத்துவிடும். அதனாலேயே அதில் கைச்சாத்திட்ட ராஜீவை அடித்தேன் என்று கூறினான்.

இதுதான் சிங்கள தேசத்தின் மனநிலை. அன்றல்ல. இன்றல்ல. என்றுமே இதுவாகத்தான் இருக்கப்போகிறது.




இந்த ஒரு நிலையில், தமிழர்களுக்கு வழங்கும்படி இந்தியா பணிக்கும் எந்த தீர்வுக்கும் சிறிலங்கா இணங்கப்போவதில்லை. 13 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம் ஊடான மகாண சபை அல்ல; மாவட்ட சபை அதிகாரம் கூட தமிழர்களுக்கு வழங்க சிறிலங்கா முன்வரப்போவதில்லை.

அது இந்தியாவுக்கும் தெரியும். சிங்கள தேசத்தின் விருப்பம் இன்மையை - தமிழர் மீதான அந்த வெறுப்பை - வெளிப்படையாக தோலுரித்துக்காட்டுவதற்கு இந்தியாவின் இந்த அழுத்தம் ஏதோ ஒரு வகையில் உதவத்தான் போகிறது.

இதன் அடிப்படையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வைத்திருக்கும் அடுத்த அடுத்த அரசியல் காண்டீபங்கள்; சிறிலங்காவை சிக்கலுக்குள் மாட்டுபவையாக இருக்கப்போகின்றன என்பது அடுத்த விடயம்.

இந்தியா - ஈழத்தமிழர் - மேற்குலகம்

ஆகவே, தற்போதைய நிலையில், இந்தியா வழிமொழிவதை அனுசரித்து அதன்மூலம் இந்தியாவை அனுசரித்து அதன் வழியாக இந்தியாவை தமிழ்மக்களின் வசப்படுத்தும் ஒரு படிமுறைக்குள் ஈழத் தமிழ் இனம் சென்று கொண்டால் மாத்திரமே எதிர்கால நடவடிக்கைகளுக்கும் -

சிங்களம் என்றைக்குமே எதிரியாக பார்க்கும் இந்தியாவை தமிழ் இனத்தின் நிரந்தர நட்பு சக்தியாக இணைத்துக்கொள்ளவும் -

பெருந்துணையாக அமையும்.

இதேவேளையில் மறுமுனையில் உள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுடன் நாம் மேற்கொள்ளவேண்டிய இராஜதந்திர நகர்வுகள் தமிழ்மக்களுக்கு முன்னுள்ள இரண்டாவது அரசியல் பணி.

இந்தியாவின் இந்த முயற்சிகளுடன் மேற்குலகம் சேர்ந்து செயற்படுவதற்கான களத்தினை தமிழ்மக்கள் - முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் - ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

சுருக்கமாக சொல்லப்போனால், மேற்குலகத்தையும் இந்தியாவையும் இணைக்கும் பாலமாக தமிழ்மக்கள் இருப்பார்களேயானால், அது தமிழீழ அங்கீகாரத்துக்கு உலகத் தமிழினம் செய்து முடித்துவிட்ட பெரும்பணியாக அமையும்.

ஆகவே, சிறிலங்காவில் இந்தியா மேற்கொள்ளும் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதையும் மேற்குலகத்தை நோக்கிய இராஜதந்திர முயற்சிகளையும் சமாந்தரமாக மேற்கொள்ளவதில் தமிழினம் காண்பிக்கப்போகும் வேகமே, தமிழ் மக்களின் விடிவுக்கான தூரத்தை நிர்ணயிக்கப்போகின்றது.

இது சவாலான பணி. பல இடர்கள் நிறைந்தது. பல அனைத்துலக சதிகள் நிறைந்தது. ஆனால், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சக்தி என்பதற்கு முன்னால் அது பெரிய விடயமே அல்ல.

இன்று புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சக்தியை தனிப்பெரும் சக்தியாக மேற்குலகம் அங்கீகரித்திருக்கின்றது. அந்த மக்கள் சக்தியை மேற்குலகம் செவிசாய்க்கின்றது. அந்த மக்கள் சக்தியை மேற்குலகம் மதிக்கின்றது.

ஆகவே, தெளிவாக வரையறுக்கப்பட்ட இராஜதந்திர வேலைத்திட்டங்கள் மூலம் இந்த இலக்கினை அடைவது என்பது தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு புலம்பெயர்ந்த மக்கள் செய்யும் மிகப்பெரும் அரசியல் பணியாக அமையும்.

அடக்கப்பட்ட இனத்தின் கோரிக்கைகளை வீரத்தின் ஊடாக எடுத்துக்கூறினாலும் கூட மனிதாபிமான ரீதியான கோரிக்கைகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான வழிமுறைகள் ஊடாக எடுத்துக்கூறினால் மாத்திரமே இன்றைய உலகம் செவிசாய்த்து செயலில் இறங்குகின்றது. அதற்கு போதிய வரலாற்று உதாரணங்கள் உள்ளன.

தமிழ் இனம் தனது தேசியத் தலைவனது தலைமையின் கீழ் தனது வீரத்தை பார் எங்கும் பறைசாற்றி விட்டது. 30 ஆயிரம் மாவீரர்களை இழந்து 30 வருடங்களுக்கு மேலாக தமிழர் சேனை மேற்கொண்ட போராட்டம் உலகுக்கே சிம்ம சொப்பனமாக அமைந்தது. பிரபாகரன் என்ற ஒரு தலைவனாலும் அந்த தலைமையின் கீழ் போராடிய மக்களாலும்தான் இன்று பார் எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிமுறை என்பது ஒவ்வொரு தமிழனதும் வீரத்தின் குறியீடு.

ஆகவே, தற்போது உலகின் அனுதாபத்தையும் இந்தியாவின் இரக்கத்தையும் ஆழத்தொட்டுச் செல்லும் வகையில் தமிழர்களின் கோரிக்கைகள் நகர்த்தப்படும்போது, அவற்றின் தாற்பரியத்தை அனைத்துலக சமூகம் நிச்சயம் பதிந்துகொள்ளும்.

அந்தப் பாதையின் ஓரத்தில் தாயக உறவுகள் இன்று கண்ணீரும் கம்பலையுமாய் நின்று கொண்டிருக்கும் இந்நிலையில், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது பணிகளை சரியான நெறிப்படுத்தலுடன் - ஒருமைப்பாட்டுடன் - தெளிவான சிந்தனையுடன் - பரந்த மனதுடன் மேற்கொள்ளவேண்டும்.

இந்த கருத்துக்களம் 'புதினம்' இணையத்தளத்துக்காக எழுதப்பட்டதாகும். உங்கள் கருத்துக்களை அனுப்ப: theiveekan2009@gmail.com

புதினம்

Read more...

யார்யாருக்கு தமீழ அரசு தேவையோ அவர்கள் எல்லோரும் ஓடி வாருங்கள்!!!!!!!!

தமிழீழ அரசு உருவாக்க எல்லோரும் வாருங்கள் – பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை அழைப்பு

புலத்தமிழர்அண்மையில் பிரான்ஸில் உருவாக்கம் பெற்றுள்ள “பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை” என்ன அமைப்பு அனைத்து தமிழீழ மக்களையும் தமிழீழ அரசு உருவாக்க வரும்படி அழைப்புவிடுத்துள்ளது. அது தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:


தமிழினத் தாகம் தணியாது

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது. மனித குலம் வெட்கித் தலைகுனியும் விதத்திலான இனப்படுகொலை 21 ம் நூற்றாண்டில் எமது மண்ணிலேயே அரங்கேறியுள்ளது. நீதிக்கான எமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஒன்றரை தசாப்தகாலமாக தமிழர் தயாகத்தில் இயங்கிவந்த தமிழீழ நடைமுறை அரசகட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டு மக்களின் வாழ்வும் வளமும் சீரழிக்கப்பட்டுள்ளது. வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அடிப்படை மனித உரிமைகள், ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டுள்ளன.

வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழந்த மக்களில் 3 லட்சம் வரையிலான மக்கள் தடுப்பு முகாமில் வெயிலுக்கு நிற்க கூட நிழலின்றி, மழைக்கு ஒதுங்க கூட இடமின்றி கம்பி வேலிகளுக்குள் மனஅழுத்தங்களுடன் சொல்ல முடியாத துன்பச்சுமையுடன் காலத்தை கழித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் உறவுகளோ தினமும் தமது உறவினைத்தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
தமது தாய் மண்ணுக்காக போராடிய போராளிகள் கைதிகளாக வதை முகாம்களில் வதைக்கப்படுகின்றார்கள்.

இந் நிலையில் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து ஒன்றிணைந்து போராட வேண்டிய பாரிய
பொறுப்பும், கடமையும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான எங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தலையாய கடமையில் நாம் உள்ளோம். இந்த வரலாற்றுக் கடமையை செய்வதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையியில்
அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் நிற்கின்றோம். எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நாம் தொடர்ந்து உறுதியுடன் இலக்கு நோக்கி பயணிப்போம்.

உலக சரித்திரத்திலேயே யூத மக்களும் எமது இனத்தினைப்போன்று அதற்கு மேலான கொடுமை நிறைந்த சூழ்நிலையிலேயே இருந்திருந்தார்கள். புலம் பெயர் நாடுகளில் அவர்களிடம் இருந்த ஒற்றுமையான மிகப்பெரிய கட்டமைப்பு இருந்திருந்ததால். அந்த கட்டமைப்புக்கும் அதன் செயற்பாட்டுக்கும் முன்னால் குற்றவாளிகளை நிறுத்தினார்கள். தாம் தமது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்டார்கள் இன்று அந்த கனவை நனவாக்கினார்கள். அதே போலவே நாமும் இந்த யூத இனத்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல எம்மாலும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.

இன்று எம்மிடம் மிக முக்கிய அவசர கடமைகள் காத்திருக்கின்றன.

எமது தேசியத்தை வலியுறுத்தவும், நியாயங்களை எடுத்துக்கூறவும், எமது போராட்டத்தின் அடுத்த வடிவமாக நாம்”பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை” என்ற அமைப்பை உருவாக்குகின்றோம்.

பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையானது

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் 1976ஆம் ஆண்டு அனைத்துத் தமிழ்க்கட்சிகளாலும் பிரகடனப்படுத்தப்பட்டு, 1977 இலங்கைத்தீவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் பெருமித்த ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத்தீர்மானத்தில் வெளிப்படுத்தப்பட்டு கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போரில் ஒப்பற்ற அர்ப்பணிப்புகளுடாக வலுப் பெற்று, சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த சித்திரை 18 ம் திகதி 2009 அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள வலியுறுத்தும் வகையில் பிரான்சில் நடை பெற்ற வாக்கெடுப்பில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்புக்களால் வாக்களிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசியமும் பாரம்பரியத் தாயகமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அத் தீவின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு உருவாக்கப்படுவதற்காக பாடுபடும்.

தாயகத்திலுள்ள தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்.
பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமது இனத்தின் தனித்துவங்களையும், இனத்துவ அடையாளங்களையும் பேணிப்பாதுகாக்கவும், பிரான்ஸ் மக்களுடன் நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பவற்றினை ஏற்படுத்தவும் பாடுபடும்.
இது தமிழ் மக்களின் அரசியல் ஒருமைப்பாட்டுச்சபையாக, எமது உரிமைகளை இந்நாட்டினருக்கும், உலகிற்கும்; எடுத்துச் செல்லும் அமைப்பாக, தமிழீழ மக்களின் அரசியல் குரலாக அமையப்போகின்றது. பிரான்சில் பரந்து வாழும் தமிழ் மக்களுடனும் அதற்காக உழைக்கும் அமைப்புகளுடனும், மனிதநேய தொண்டர் அமைப்புகளுடனும், ஸ்தாபனங்களுடன் தொடர்ந்து செயலாற்றவுள்ளோம். இந்த தமிழீழ மக்கள் பேரவையில் இங்கு வாழும் புத்திஐீவிகளும், மூத்த கல்விமான்களும், பிரெஞ்சு, தமிழ்சட்டவாளர்கள்,அரசியல்வாதிகள், தமிழனப்பற்றாளர்கள், தாயக விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் இதுவரை தொண்டாற்றி வருபவர்கள் எல்லோரினதும் ஆலோசனைகளோடு, பங்களிப்போடும் உருவாக்கம் பெறவுள்ளது. இந்த பேரவையினால் முன்னெடுக்கப்படும், செயற்பாட்டிற்கும், தமிழ் மக்கள் அனைவரையும் ஓரணியாய் தன்மான உணர்வுள்ள தமிழராய், ஒருமித்த குரலினால் ஓங்கி வளர்த்திட உங்கள் எல்லோரினதும் அன்பையும், ஆசியையும் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும், இன்னும் பிற வள உதவிகளையும் தந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

தொடர்புகளுக்கு:
பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை.
eelamakkalperavai@gmail.com

Read more...

Tigers’ Eelam: Nothing ‘Hindu’ or ‘Tamil’ about it – III

B R Haran

Sri Lanka vs. Western Nations
The Times’ report, which came after the official visit of UN Secretary General Ban Ki Moon to Sri Lanka, quoted two UN officials saying that Ban was aware of the death of 20,000 Tamil civilians. This report, along with a video clipping, raised a furore in the international arena, particularly among western nations which demanded a probe on the ‘war crimes’ of Sri Lanka.

The UN Human Rights Council (UNHRC) demand was rejected by the Sri Lankan government. When UNHRC convened a special session in Geneva, where Sri Lanka and the European nations led by Germany put out competing resolutions, the Sri Lankan resolution justifying its military action against the world’s biggest terrorist organization sailed through, defeating the European resolution for a thorough probe into the ‘war crimes’ of the Sri Lankan military. India supported Sri Lanka along with China, Russia and Pakistan.


While slowly focusing on the rehabilitation of internally displaced Tamils, the Sri Lankan government is taking necessary action to thwart any attempts by the Tigers to regroup and restart terror activities. Colombo is determined to demolish the international network of arms and drug mafia with which the LTTE is widely connected. The government is aware of shady organizations having a foothold in countries like US, UK, Canada, France, Germany and other European capitals, indulging in fund-raising to revive the LTTE. As the Sri Lankan government requested help from the US and European countries to apprehend the concerned pro-LTTE persons and organizations, an LTTE operator Karunakaran Kandasamy and three others were arrested by US authorities.


But Colombo is unhappy with the non-cooperation of Canada and European countries like UK, France, Germany and others. These countries covertly encourage the Diaspora and other LTTE front organizations to protest against the Sri Lankan government and try to implicate Sri Lanka in ‘war crimes.’ The Sri Lankan government charged that demonstrations by diaspora in European countries were funded by the LTTE and aided and abetted by the host governments. Though US helped in taking legal action against pro-LTTE elements, it also joined European nations in their ‘measures’ against the Sri Lankan government.


Even during the most recent operations, the Sri Lankan military is believed to have uncovered evidence of the connivance of NGOs and Human Rights Organisations (many owing allegiance to the UN) with Tigers in vehicle supply and material support. Very recently, the Army apprehended two UN staffers who were reported missing earlier. Reliable sources report that some Christian organizations have allegedly bribed individual military officials and managed to allow LTTE’s intelligence officers to escape from refugee camps and flee the country. In connection with this and other reports of clandestinely assisting the LTTE, seven army personnel have been detained by the Sri Lankan Military Intelligence Unit
(http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29613).


Meanwhile, Selvarasan Pathmanathan, alias KP, set up a committee comprising mostly Christians to formulate the constitution of a ‘Transnational Government of Tamil Eelam’ (TGTE), with a view to fight for the self-determination of Sri Lankan Tamils and safeguard the interests of the Sri Lankan Tamil Diaspora. As he has been a proclaimed criminal and fugitive in Sri Lanka and is also wanted by Interpol, this initiative is intended to gain some kind of credibility in the international arena and to make the million strong diaspora fall in line behind him. He has been successful in roping in experts from various fields, who have been active in US, Canada, UK, Sweden, Australia, Malaysia and Netherlands giving ‘voice’ to the LTTE, as members of the committee. Prof. Francis Boyle, who was in Chennai in association with the International Tamil Centre, is a member of this committee. The Sri Lankan government has rejected this attempt of KP, terming it a ‘hallucination.’


Considering the fact that western nations and the diaspora are trying to revive the call for separate Eelam by supporting the LTTE, despite its defeat and the elimination of Prabhakaran and the top leadership, Sri Lanka refused permission to the Tiger-sponsored relief carrying vessel MV Captain Ali after it entered Sri Lankan waters illegally. Though the ship was chartered in the name of “Mercy Mission to Vanni,” it was sponsored by an organization called “Act Now,” a pro-LTTE Christian organization. Ultimately due to the influence of the Indian government, Colombo agreed to accept the consignments through the Red Cross.


The Church and other Christian organizations allegedly utilizing the Sinhala-Tamil divide, which is their own creation, have been supporting the LTTE to bring down the majority Buddhist religion and the largest minority Hindu religion. The LTTE is believed to have a large number of Christians highly placed in the hierarchy including the deceased Prabhakaran, Anton Balasingham and others; a considerable portion of supporting Tamils and Diaspora are also Christian. It is no secret that the LTTE has been backed by the Church and is part of a neo-colonial conspiracy; mainstream international media has conveniently forgotten to present LTTE’s Christian leanings. Many members of the Christian clergy have acted as front men for LTTE and Fr. S.J. Emmanuel, former Vicar General of Jaffna, is a prime example; at present he lives in Germany helping LTTE’s Eelam cause.
(http://freetruth.50webs.org/D4g.htm)


A Sri Lankan Tamil Hindu social worker, affiliated to ‘Seva Lanka,’ a national social service institution, who is helping the poor and downtrodden in Vavuniya and Kilinochchi revealed that, “Prabhakaran enforced burials to replace cremations, enforced Dravidian weddings to replace the Hindu marriage ceremony, introduced so called Dravidian names to replace Hindu names, and recommended beef eating.” He added, “He [Prabhakaran] was perhaps never in charge, as someone else shrewder was running the show and that individual or institution disappeared and Prabhakaran alone made mistake after mistake, leading to his eventual death”.


The social worker said the Bishop of Mannar, Rayappu Joseph, the Bishop of Jaffna, Thomas Savundranayagam, and the Bishop of Batticaloa, Kingsley Swampillai, exerted disproportionate influence on the LTTE and recalled that Prabhakaran named his son ‘Charles Anthony’ after his dead comrade, and Tamilchelvam (political commissar of the LTTE - original name Dinesh) named his son ‘Oliventhan,’ meaning prince of light (Jesus?) and his daughter ‘Alai Arasi,’ queen of the waves which is the name for Britannia, all Christian names in the garb of Tamil. The social worker painfully exclaimed, “Ironically most Tamils are Hindus!”


Meanwhile, Prof. P. Pushparatnam, Head of the Department of History, University of Jaffna, has found a 19th century Tamil-Christian epitaph on the tomb of one Ales Francis Cruz, died 1827. Prof. Pushparatnam read the text as “1827 (in Tamil numerals) Thai month 27th date (in Tamil numerals and symbols for month and date) Naakapad’nam Aariyar Ales Piraagnchis Kurus.”


It was a tomb of a Christian, Ales Francis Cruz, from Naakappadinam on the Coromandal coast of Tamil Nadu, who died on the 27th date of the Tamil month Thai (Jan-Feb) of the year 1827. The Professor referred to the 19th century dictionaries for the word “Aariyar” (Arya in Sanskrit) meaning “foreigner” or “a person of a foreign faith” and said, “the epitaph comes out with the title ‘Aariyar’ for the deceased probably to indicate his Christian faith, priesthood or to indicate that he was a Christian of foreign (European) origin even though coming from Naakappaddinam”.
(http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29624)


This is clear evidence of the Church’s ‘Aryan-Dravidian’ propaganda in Tamil Nadu and also of its larger agenda and long-term plan of forming a “Tamil Christian Nation” comprising Tamil Nadu and the North-East of Sri Lanka. No wonder, this news is given importance and published in pro-LTTE website “Tamilnet”.


Conclusion


A deeper study of Sri Lankan history shows that the Sinhala-Tamil divide was created by the Portuguese after they landed on the shores of Sri Lanka. In due course of time, they captured the island nation and converted a large number of people, more Tamils than Sinhalese, as Tamils were weak and humble, without strong leadership. They demolished hundreds of Hindu Temples and Buddhist Viharas. Sri Lankan historians believe that the Island would have become completely Christian had the Portuguese continued. The Dutch and the British continued the evil legacy of the Portuguese and the same has been followed till date by the Church. The LTTE leadership, the Diaspora leadership, and the so-called ‘Tamil’ organizations are all under the control of Christian organizations backed by the Church.


Those ‘Tamil’ organizations have done nothing for the welfare of either the Sri Lankan Tamils or the Diaspora, but served only as ‘fronts’ for the LTTE, helping it in fund-raising and arms purchasing. Ironically, the majority of Sri Lankan Tamils and Sri Lankan Diaspora is “Hindu.” While Tamil Hindus in Sri Lanka have been released and relieved from the LTTE and the Church, thanks to the determined efforts of the Rajapakse government, the ‘Hindu’ section of the Diaspora is still in the clutches of the LTTE and the Church. As the Church is aware of its limitations within the island nation, it is using its might to the full to revive the LTTE and keep the Eelam cause alive by egging on the Diaspora with the support of governments in various western countries.


Make no mistake; LTTE and Eelam are purely ‘Christian;’ nothing ‘Hindu’ or ‘Tamil’ about them.

(Concluded)

The author is a senior journalist; he lives in Chennai


Read more...

Tigers’ Eelam: Nothing ‘Hindu’ or ‘Tamil’ about it – II

B R Haran

Dubious Tamil organisations
The LTTE has many organizations in the name of Tamil, which act as fronts, indulging clandestinely in fund-raising and arms purchasing. When the FBI arrested some pro-LTTE activists in New York and New Jersey areas two years ago, the US authorities identified and cited the various proxy organizations of the LTTE in their criminal complaint in the district court in Brooklyn.

Ilankai Thamil Sangam, New Jersey; World Tamil Coordinating Committee (WTCC), New York; Tamil Rehabilitation Organisation (TRO), and Tamil Welfare and Human Rights Committee (TWHRC), Maryland were some of the organizations which helped the LTTE in fund-raising and arms purchasing activities. All these organizations have been cited in various chargesheets filed by US authorities in courts of law. These organizations are also part of “The Federation of Tamil Sangams,” founded in 1986, and comprising more than 30 Sangams (Associations) in the United States.


As “serving” the cause of “human rights” has always been a modus operandi of Christian missionaries, such human rights organizations based in the US have taken up the cause of the above-said Pro-LTTE Tamil organizations. The American Civil Liberties Union (ACLU) is believed to have fought against the American Judiciary and US Congress in support of these Tamil organizations which help LTTE achieve the hidden agenda. Similarly the California based Humanitarian Law Project and the Centre for Constitutional Rights (CCR) also supported these Tamil organizations. Nancy Chang, Senior Attorney at CCR, is an open LTTE supporter. Likewise, Professor David Cole of the George Town University Law School has been a spokesman for LTTE on American soil.
(http://www.asiantribune.com/index.php?q=node/1733).


The above said ‘Tamil’ organizations have also been active in countries such as UK, Canada, France, Italy, Denmark and Australia, etc. The FBI has also accused the Sri Lankan Tamil diaspora in Australia of helping the LTTE.
(http://www.dnaindia.com/world/report_fbi-accuses-tamils-in-australia-of-helping-ltte_1050734 and http://www.priu.gov.lk/ltte_report/chapter7.html).
The Norway branch of the Tamil Coordinating Committee (TCC) admitted at a press conference on 13 June 2009 that it had been raising funds for LTTE to purchase arms and weapons (http://www.nowpublic.com/world/money-tiger-terror-came-norway-tcc).


The International Tamil Centre, another front organization of the LTTE, was started by one Dr. Winston Panchacharam of New York; it celebrated its third anniversary in Chennai on 8 June 2009. Dr. Winston Panchacharam brought two Americans with him, Bruce Fein, US lawyer and specialist in international law, counsel for Tamils against genocide; and Francis Boyle, American expert on international law, to ‘lecture’ on the occasion.


Sudha Ragunathan, a leading Carnatic singer and ‘local head’ of the ITC, organized the event along with her colleague and local secretary Manimekalai Kannan. The main speakers at the inaugural function were known ‘Dravidian’ ideologues Dr. Ramachandran, Vice Chancellor of Madras University and R.M. Veerappan, former minister and President of MGR Kazhagam. Though both speakers spoke about the glory and antiquity of Tamil language and Tamil culture, they refrained from talking about the Sri Lankan Tamil issue. As the theme of the conference was “Rehabilitation of Sri Lankan Tamils,” a seminar on the subject was held wherein Prof. V. Suryanarayan, South Asia and Southeast Asia specialist, and Bhagwan Singh, Consulting Editor, Deccan Chronicle, participated apart from the two Americans, Francis Boyle and Bruce Fein.


At the inauguration, both Dr. Ramachandran and R.M. Veerappan refrained from using the ‘H’ word (Hindu) despite waxing eloquent on the glory of Tamil language and culture. Similarly, in the seminar, none of the speakers mentioned the ‘Hinduness’ of Sri Lankan Tamils. They openly voiced concern for the cause of the LTTE, that is, a separate “Tamil Eelam.” They termed the Sri Lankan military operation against the LTTE as “genocide,” but preferred to remain silent on LTTE’s atrocities, particularly its use of innocent civilians as a ‘shield’ and forced recruitment of children as frontline soldiers and suicide bombers.


Both American speakers expressed ‘concern’ about the post-war scenario and power struggle and called for ‘unity’ among Tamils (read LTTE and Diaspora). They asked India to support the cause of separate Tamil Eelam. The ‘Liberation Song for Tamil Eelam’ was also sung by the organizers.
(http://www.ustream.tv/recorded/1624605, http://www.ustream.tv/recorded/1624968,
http://www.ustream.tv/recorded/1624952, http://www.ustream.tv/recorded/1624911,
http://www.ustream.tv/recorded/1624753).


The International Tamil Centre has been classified as a charitable organisation (cultural and ethnic awareness) and has enjoyed tax exemption as of May 2002.
(http://www.taxexemptworld.com/organizations/nanuet-ny-new-york.asp). It is a wonder then that it celebrated its ‘third anniversary’ this year! The organisation’s website could not be accessed, as its security certificate is either invalid or expired. So it is not clear when this organization came into being and interestingly ‘Tamil Maiyyam’ was started in July 2002. The non-participation of ‘Tamil Maiyyam’ and the absence of Father Jagath Gaspar Raj were noticeable in the Chennai event marking the third anniversary of ITC.


Dubious organizations like International Tamil Centre and Tamil Maiyyam use a devious strategy of roping in famous personalities from the field of fine arts to participate in their events by pressurizing them using their political power, so that their events get some sort of genuineness and credibility. And if those personalities happen to be ‘faithful Hindus,’ it adds more value to the events. Such personalities become party to these events without knowing the hidden motives behind them.


Also, if such events are organized with the full support of the government of the day, these personalities participate out of fear as well! Tamil Maiyam has been organizing such events on a regular scale with the advent of the DMK government. It may be recalled that Tamil Maiyam’s Jagath Gaspar Raj was alleged to be an associate of Nachimuthu Socrates, who was arrested by FBI on charges of fund-raising for LTTE and bribing a US State Official to remove LTTE from the list of blacklisted organisations way back in 2006. The website http://socratesdefensefund.org/ is still alive to raise funds for his legal defense.


Towards the end of May 2009, The Times, London, reported that 20,000 civilians were killed during the final offensive by the Sri Lankan Army against the Tamil Tigers. This report came as a blessing in disguise for the ‘Tamil’ organizations which were sulking after the defeat of the LTTE, rejuvenating their blood and making them to conduct protest demonstrations in the respective host countries, demanding a thorough probe and necessary action against Sri Lanka for its ‘war crimes.’ In countries like UK and Canada, many parliamentarians came out in support of the demonstrators, who were obviously pro-LTTE.


(To be continued…)

The author is a senior journalist; he lives in Chennai

Read more...

Tigers’ Eelam: Nothing ‘Hindu’ or ‘Tamil’ about it – (Part I)

By B R Haran

(July 02, Chennai) “LTTE Chief Prabhakaran was inspired by Bhagwat Gita; he was greatly enamoured of the principles enunciated in the Gita; his motto was ‘do your duty but do not expect any benefit from it.’ He found his ideology from the song depicting the discourse between Arjuna and Krishna in the Tamil film ‘Karna.’ The Itihasa-Mahabharata enthralled him. The characters he identified with were Bhima and Karna. He believed that in order to fight evil and establish dharma, it is essential to eliminate one’s enemies.” http://www.expressbuzz.com/edition/story.aspx?title=Prabhakaran%20was%20inspired%20by%20Gita&artid=ItENrbNWK4I=&type

“The Indian freedom struggle fascinated him. He read the Tamil version of Mahatma Gandhi’s autobiography “Satya Sodhanai” (Experiment with Truth) in his early teens but was not enamoured by it greatly.”


“His ideal and idol was Netaji or Subhash Chandra Bose. Netaji had ideological differences with the Mahatma about the mode of struggle for independence. At one stage he disapproved of Gandhi’s “non-violence” and went on to form the Indian National Army (INA) to launch an armed struggle against the British.”

“Apart from Netaji, Prabhakaran was also impressed by the Sikh freedom fighter Bhagat Singh and two other freedom fighters from Tamil Nadu namely Vaanchinathan and Thiruppur Kumaran” (External Link).

“Prabhakaran also read the Tamil translations of Swami Vivekananda’s writings and speeches avidly. Another spiritual person he looked up to was Thirumuga Kirupananda Vaariyaar popularly called ‘Vaariyaar.’”

All these informations, which were not in the public domain for the last three decades, have suddenly emanated from nowhere after his death.

The latest canard is that the LTTE represented the “Hindu” Tamils of Sri Lanka.
(External Link).

A serious analysis on Prabhakaran’s activities would clearly reveal that neither he nor his actions were anywhere near the impressive list given above! Then why are such canards being spread?

It seems that the western Christian nations and their paid agents in India, Sri Lanka and elsewhere are bent upon giving a “Hindu” colour to the LTTE with the purpose of branding it as a “Hindu Terrorist” outfit, especially at a time when the Christian hand behind the Tamil Eelam and its full fledged support to LTTE has been categorically established in the geo-political arena.

Damaging Diaspora

An extremely devious game is being played by Christian hands which rally behind the Sri Lankan Diaspora while simultaneously aiding so-called Tamil organizations. Even after the defeat of LTTE and the liquidation of its top leadership, the Sri Lankan Diaspora, prodded by the western powers, has been harping on the demand for separate Tamil Eelam. The diaspora has gone to the extent of calling itself future “Tamil Tigers” and saying it would achieve the objective of “Tamil Eelam” at any cost.

Wikipedia says, “The Sri Lankan Tamil diaspora is difficult to explain in one example. It was neither a continuous process nor a sudden one. It cannot be attributed to a single circumstance or incident. In fact, even the history of migration of Sri Lankan Tamils in each country is different and has to be read and understood separately.”

However, to simplify, it divides the Sri Lankan Diaspora into three distinctive periods as British Colonial Period, Pre-1983, and Post-1983. The most important observation by Wikipedia is that, ‘the Sri Lankan Tamils tended to differentiate themselves from emigrant Indian Tamils in the host countries by their caste, socio-economic status, unique Sri Lankan Tamil dialects, religious practices and food and cultural habits.’(External Link).

This tendency to differentiate themselves from the Indian Tamil Diaspora, which integrated well with ‘Hindu’ communities from other parts of India, could have helped Christian establishments to influence them, as evidenced by the ‘Christian’ leadership of the Sri Lankan Tamil Diaspora in almost all countries, particularly in Canada, France, Germany, UK and the US.

The Sri Lankan Tamil Diaspora’s strength is considerable in Canada (400,000), UK (300,000), France (100,000) Germany (60,000), Australia (53,000), US (35,000) and Italy (24,000). It is rather painful to note that the Diaspora is in no mood of reconciliation, exhibiting its lack of concern for the millions of civilian Tamils suffering in Sri Lanka. The Sri Lankan Tamil Diaspora seems more bothered about continuing the terror legacy of LTTE and enjoying refugee status in the host countries, thereby allowing the present LTTE leadership to enjoy the wealth amassed over the years, than finding a peaceful settlement for the tormented Tamil community in the northern / eastern part of Sri Lanka.

The Sri Lankan Tamil Diaspora comprises Hindus and considerable numbers of Catholics and Protestants. Christian organizations which support the LTTE covertly, take care to keep the Diaspora under its control through the LTTE. Analyzing the widespread support enjoyed by the LTTE in the Diaspora, journalist Nirmala Rajasingham noted, “The LTTE in the course of its military and political campaign decimated all other political opinion within the Tamil polity in Sri Lanka, in order to establish itself as the "sole representative" of the Tamil people. At the same time, it began to flex its muscles within the Tamil community in the west. In time its stranglehold over the diaspora communities - including through methods of intimidation, assault, and threats to families in Sri Lanka - became an accomplished fact. Paris and Toronto were prime examples of the phenomenon, where unquestioning compliance was demanded and wrought.”

Regarding the fund-raising opportunities ‘created’ by LTTE, she said, “The Tiger lobbyists, fundraisers and propagandists in the diaspora are relentless in attempting to enforce submission to its command performances. Even for events such as ‘martyrs’ day’ celebrations or the funeral of the LTTE ideologist Anton Balasingam, thousands are mobilised and bussed in. Every tragic event is turned into a fundraising opportunity.” (External Link)

Meanwhile the death of Prabhakaran has caused divisions within the LTTE, one in support of K. Pathmanathan (KP), leader of LTTE’s international affairs including fund raising and arms purchasing, and the other against him. It is believed that KP has complete control of LTTE’s huge funds and assets like cargo ships, etc. The Sri Lankan government has sought international help to capture him. The LTTE’s intelligence wing led by Pottu Amman (it is not clear if he is dead or alive) is believed to be against Pathmanathan; the Sri Lankan Diaspora is also divided between these two, and this fight for power and leadership, and division in diaspora, have become a cause for concern for the Church, which has been the main force behind the LTTE.

In this connection, on 28 May 2009, Fr. Jegath Gasper Raj, a controversial Christian clergy and co-founder of the Chennai-based “Tamil Maiyyam,” sent an appeal through www.tamilcanadian.com to the Diaspora to unite so that a broader Tamil renaissance could be ‘ignited’. He said, “In the immediate next phase the Government of Sri Lanka will unleash a hidden war, more treacherous than the one it let loose in Mullaitivu, to break the unity and political consolidation of the Diaspora. I am sure the Diaspora has the moral capacities to withstand a dirty political war by the Sri Lankan Government. But what can shatter the hopes of a dignified political solution will be the unravelling of LTTE. Let’s concede that the massive military debacle would certainly have created serious gaps in LTTE’s command structure. I get a disturbing feeling that there is already an unseen power struggle among certain sections of the LTTE for the control of the organization and its vast resources. We can expect that intelligence agencies of various countries will welcome this development and do everything to hasten these divisions”.

This letter clearly shows the Christian mind, which wants to keep the Diaspora under its control, worries about the power struggle in the LTTE, and doesn’t want the LTTE to unravel. Gaspar Raj is well connected with the ‘Dravidian’ politicians of Tamil Nadu, which goes to prove that the “Dravidian-Christian” nexus is the brain behind the call for separate “Tamil Eelam.” While the Christian leadership successfully alienates the Sri Lankan Tamil Diaspora from the Indian Tamil-Hindu Diaspora, the Dravidian leadership, which travels abroad to the west quite often, always makes it a point to visit only the Sri Lankan Tamils and not the Indian Tamils, who are normally seen with other “Hindu” communities of India.

(To be continued…)

The author is a senior journalist; he lives in Chennai.

Read more...

Wednesday, July 1, 2009

தனி ஈழம் சாத்தியமல்ல, சுயாட்சியே சாத்தியம்-கருணாநிதி

சென்னை: ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? அல்லது தமிழர்களை காப்பாற்றி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பது முக்கியமா? என்பதை யோசி்த்து தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களை நீக்குபோக்குவுடன் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.


மேலும் எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்தும் விவாதிக்க சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்மீது, அதிமுக சார்பில் பன்னீர் செல்வம், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், பாமக சார்பில் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமசாமி ஆகியோர் பேசினர்.

இலங்கையில் தமிழர்களின் நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், திறந்தவெளியில் ஆடு, மாடுகளை போல் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்கள் அந்த மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரினர்.

மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றும் முயற்சிகளை தடுத்து வடக்கு, கிழக்கு பகுதிகளை மீட்டு தமிழர்கள் முழு உரிமையுடன் சிங்களர்களுக்கு இணையான சமவாழ்வு வாழ்வதற்கு மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கூறுகையில்,

இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனையை அரசியல் ஆக்காமல் அனைத்து கட்சியினரும் ஒரே விதமான கருத்தை தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் நடைபெறும் பிரச்சனை என்பது சிங்களர்களுக்கும், தமிழ் இனத்திற்குமான போராட்டமாகும். 50 ஆண்டு காலமாக இலங்கை தமிழர் தலைவர் செல்வா, அமிர்தலிங்கம், குட்டிமணி, ஜெகன் காலம் முதல் போராட்டம் நடைபெறுகிறது.

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தமிழ் மொழி சீரழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராட்டம் நடைபெற்றது. இதற்காக தமிழீழம் அமைய வேண்டும் என்ற குரலும் எதிரொலித்தது.

இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இதில் பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழீழம் என்கிற பிரிவினைக்கு ஆதரவு இல்லை. மாநில சுயாட்சி என்றஅளவில்தான் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தமிழீழம்தான் தீர்வு என்று தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.

பாமக கூட தமிழீழம்தான் தீர்வு என்று பேசி வந்தது. ஆனால் இன்று மாநில சுயாட்சி போதும் என்ற அளவிற்கு பேசி இருக்கிறார்கள். அதுதான் இப்போது முடியும். தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ்மொழிக்கு சம தகுதி, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு இதற்காக நாம் போராடும் நிலைதான் தற்போது உள்ளது.

பேரறிஞர் அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முதலில் எழுப்பி பின்னர் அதை கைவிட்டு விட்டார். அதற்காக இந்த சபையிலேயே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் பாராட்டி பேசியுள்ளார். மக்கள் தலைவர்களாகிய நாம் மக்களை பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சனை உருவானால் அதற்கு மாற்று என சிந்தித்து எந்த வழியில் சென்றால் அது சரியாக இருக்கும் என தீர்மானித்து செயல்பட வேண்டும்.

அப்படித்தான் திராவிட நாடு கொள்கையை கைவிட்ட போதும் அதற்குரிய காரணம் அப்படியே இருக்கிறது என்று மத்திய அரசிடம் நாம் வலியுறுத்தியதன் விளைவாக இன்று மாநில அரசுகளை மதிக்கும் போக்கு மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதே போல இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஒரு அரசு அமைய வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அதிபராகலாம் என்று அமெரிக்காவில் இருந்த நிலை மாறி இப்போது கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அதிபராகி இருக்கிறார். இதே போல இலங்கையிலும் தமிழர்களின் அரசு அமைவதற்கு வெகு தூரம் இல்லை என்கிற நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதனால் என்னைப் போல இந்த உலகில் யாரும் மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது.

ராஜபக்சேவை கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும் என்று இங்கு பேசப்பட்ட கருத்தை கருணாநிதி கேட்கவில்லை. இன்னும் அவர் ராஜபக்சேவுக்கு மரியாதை தருவதை பார்த்தீர்களா என்று பேசக்கூடும். அப்படி பேசுபவர்கள் அவர்களுடைய மனசாட்சியை எடுத்து வெளியில் வைத்து விட்டுத்தான் சொல்ல வேண்டும்.

தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்த செய்ய வேண்டும்.

நம்முடைய குரல் உயர்ந்த அளவிற்கு மத்திய அரசின் குரல் உயர்த்தப்படவில்லை என்ற கருத்தை இங்கு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் பேசியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. எனவே சிங்களர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது. சிங்கள பௌத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

எனவேதான் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குவுடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக தெரிந்தவன் நான். இதை 'பண்டாரக வன்னியன்' என்ற நாவல் மூலம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவர்களை சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செஞ்சிலுவை சங்கம் மூலம் தமிழக அரசோ, மத்திய அரசோ நிவாரண உதவிகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. தற்போது வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் தமிழர்களிடம் அந்த பொருட்களை கொண்டு சேர்க்கும்.

இலங்கை தமிழர்களுக்கு தற்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொண்டைமான் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள். ஒரு குழு வந்து இலங்கையில் பார்வையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசின் அனுமதி பெற்று உரிய அதிகார அழைப்பின் பேரில்தான் அங்கு செல்ல முடியும் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.

தற்போது இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகைகளை சிங்கள அரசு மூலம் நீங்கள் செய்யுங்கள். நாங்கள் துணை நிற்கிறோம். நிச்சயம் உரிய நல்ல பலன் கிடைக்கும் என்று அவர்களிடம் நானே பேசியிருக்கிறேன். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்றார் கருணாநிதி.

இதையடுத்து பேசிய ஜி.கே.மணி இலங்கை விஷயத்தின் தனது கட்சியின் நிலையை விளக்கினார். அவர் கூறுகையில் பாமகவைப் பொறுத்தவரை தமிழீழம்தான் இறுதி தீர்வு என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடைக்காலத் தீர்வாக தமிழர்களுக்கு மாநில சுயாட்சி கிடைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம் என்றார்.



Thatstamil

Read more...

Thursday, June 25, 2009

ஈழம் அவசியம்... அவசரம்

கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.

'30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்' என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு.

'சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். 'ஐந்தாம் யுத்தம்' கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள்.

இன்று 'தமிழீழத்தில்' தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை.

அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்....

1. 'கூடாரங்களைப் பிரியுங்கள்!'

ஈழத் தமிழரின் இன்றைய பெயர், 'கூடார மக்கள்'. ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண் டோவின் கணக்கின்படி, 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சும்மா ரோட்டில் கிடத்தாமல் கூடாரங்களில் இருக்கிறார்கள்; அவ்வளவுதான்! வாஷிங்டன் மனித உரிமைக் காப்பகம், 'இவை தற்காலிகக் குடியிருப்புகள் அல்ல; சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்' என்கிறது. தினமும் இங்கு மக்கள் செத்து விழுகிறார்கள். கழிவறை வசதியைக்கூடச் செய்து தர மறுத்துவிட்டது சிங்கள அரசு. 'கக்கூஸ்கள் அமைக்கப்படாததை மக்கள் ஐ.நா. சபையிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொல்லிவிட்டார், மீள் குடியேற்றத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன். 'பசியில் இறந்தாலும் ஐ.நா-வே பொறுப்பு' என்று சொல்லிவிட்டார்கள். 'இந்த இடத்தில் இருந்து எங்களை விட்டால் போதும். எங்களது வீடுகளுக்குப் போக அனுமதித்தால் போதும்' என்று கெஞ்சுகிறார்கள் மக்கள்!


2. காணவில்லை... காணவில்லை!

ஒரு குழந்தை காணாமல் போனால் இங்கு விளம்பரங்கள், போலீஸ் விசாரிப்புகள், தனிப் படைகள் என எத்தனையோ முஸ்தீபுகள். ஆனால், அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன கடத்தல்கள். குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதால்தான் கடத்தல்கள் எளிதாக நடக்கின்றன. இதில் பெண்களும் சிறுவர் களும்தான் அதிகம் காணாமல் போகிறார்கள். ஒரு முகாமில் 870 சிறுவர்கள் அநாதைகளாக இருக்கிறார் கள். அவர்களுக்கென யாருமே இல்லை. மருத்துவமனைக்கோ, பக்கத்து முகாமுக்கோ சம்பந்தப்பட்டவர்களை அனுப்பிப் பார்க்க அனுமதித்தால், உறவினர் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவாவது முடியும். அதற்கும் அனுமதி இல்லை. இப்படிக் காணாமல் போன சுமார் 20 ஆயிரம் மக்களின் கதி என்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்!

3. வெள்ளை அறிக்கை

நீண்ட கால மரணங்களும் இழப்புகளும் கொண்டது ஈழத்துப் போராட்டம். 1983 முதல் 2001 வரை இறந்த வர்கள் ஒரு லட்சம் பேர். யாழ்ப்பாணம் தொடங்கி முல்லைத் தீவு வரை மொத்தமாக நாசமாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துச் சொல்லியிருக்கிறது. வட கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 34 ஆயிரம் வீடுகள் சேத மானதாகவும் சொல்கிறது அடுத்த புள்ளிவிவரம். இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அழிவுகள்தான் உச்சபட்சம். தமிழர் வாழும் கிராமங்கள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்ட நிலை. இப்படி தமிழர் பகுதிகள் அத்தனையும் கணக்கிட்டால் பாழடைந்த வீடுகள் எத்தனையோ?

முதல்கட்டமாக... பாதிக்கப்பட்ட வீடுகள், தொழில்கள், நிலங்கள் குறித்த தகவல்களுடன் இறந்தவர், இருப்பவர், இதில் உடல் ஊனமானவர் விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளிவந்தாக வேண்டும்!

4. பொதுமன்னிப்பு

"படுகொலைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, மற்ற போராளிகளையும் அவர்களது குடும்பத் தினரையும் மன்னிக்க வேண்டும்!" - இப்படிச் சொல்லி இருப்பவர் புலிகளின் பரம்பரை எதிரியான டக்ளஸ் தேவானந்தா. இன்று அமைச்சராக இருப்பவர். இப்படி சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. "வவுனியா, முல்லைத் தீவுப் பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் புலிகள் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். அவர்களை விசாரணை செய்வோம்" என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்தார். இதன்படி 3,000 பெண்கள் உட்படப் பலரிடமும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை வேறு வேலைகள் பக்கமாகத் திருப்பிவிட வேண்டும்; சித்ரவதைகள் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்கின்றன மனித உரிமை அமைப்புகள்!

5. ஏதாவது ஒரு நிவாரணம்

போர், மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல; அவர்களது அன்றாட வாழ்க்கை, இதுவரை சேர்த்துவைத்த சொத்துகள், பணம் அத்தனையையும் கொள்ளைகொண்டுவிட்டது. விவசாயம் பார்த்தவர்களுக்கு நிலம் இல்லை. மீன்பிடித் தொழில் செய்து பிழைத்தவருக்குப் படகும் வலையும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் 560 மீன்பிடிக் கிராமங்கள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரத்தின்படி, 2.70 லட்சம் மீனவர்கள் இருந்தார்கள். ஆனால், அது படிப்படியாகக் குறைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் ஆனார்கள். இதற்கு முக்கியமான காரணம், அவர்களது மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிக் கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய். மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், இம்மக்கள் வறுமைக்கோட்டுக்குத் கீழே தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன தென்னை, பனை மரங்கள் மொத்தமாகக் கொளுத்தப்பட்டன. தாங்கள் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடாகவோ, அல்லது தங்கள் குடும்பத்தில் இழந்த உறவுகளுக்கான கருணைத் தொகையாகவோஅந்தப் பணம் அமைய வேண்டும்!

6. பயமற்ற சூழ்நிலை

'இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை', 'பயங்கரவாதிகள் வேறு பல இடங்களில் பதுங்கி இருக்கிறார்கள்' என்று சொல்லி மக்கள் வாழ்ந்த இடங்களில் ராணு வத்தின் முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அதி உயர் பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பள்ளிக்கூடங்கள், கோயில்கள், முக்கியத் தெருக்களில் ராணுவத்தினர் தங்கியுள்ளனர். முன்பு மக்கள் இருந்த பெரிய வீடுகளில் இன்று ராணுவத்தினர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளில் ராணு வத்தினர் தங்கியுள்ளனர். வட கிழக்கில் 156 பள்ளிக்கூடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். முக்கிய மான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆள் நடமாட் டம் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. செக் போஸ்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, மக்க ளுக்குப் பயமற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு முன் வர வேண்டும்!

7. யாழ்ப்பாணம்

ராணுவத்திடம் சுமார் 15 ஆண்டு களாக இருக்கும் யாழ்ப்பாணம், 'எமர்ஜென்ஸி' பகுதியாகவே இன்னமும் உள்ளது. மாலை 6 முதல் காலை 6 வரை யாரும் ரோட்டில் நடமாட முடியாது. எங்காவது வேலைக்குப் போகும் ஆட்களும் 6 மணிக்குள்ளாக வீட் டுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இத்தனை ஆண்டு அடக்குமுறை உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. மேலும், அங்கு பொருளாதாரத் தடைகளும் விலக்கப்படவில்லை. பொருட்களின் விலை பல மடங்கு அதிகம். அனைத்து வகையான நெருக்கடிகளில் இருந்தும் யாழ்ப் பாணத்தை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும்!

8. கொழும்பு

எப்போதும் கொந்தளிப்பில் இருப்பவர்கள் கொழும்புத் தமிழர்கள். இங்கு தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் இல்லை. பதிலாக, சிங்களத் தீவிரவாத அமைப்புகளான ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உறுமய, ஜாதிகல உறுமய போன்ற குழுக்கள் எதையாவது சொல்லி தமிழர் கடைகள், வீடுகள், தொழிற்சாலைகளை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் பதுங்கிக்கொள்கிறார்கள். பூட்டி இருக்கும் வீடுகள் அடித்துத் திறக்கப்பட்டு நொறுக்கப்படுகின்றன. உயிருக்கும் உடைமைக் கும் கொழும்பில் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியமானது!

9. அச்சுறுத்தும் ஆயுதங்கள்

புலிகள் அமைப்பு முழுமையாக அடக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆயுதம் தாங்கிய பல குழுவினர் இலங்கை முழுவதும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள். ஈ.என்.டி.எல்.எஃப்., டக்ளஸின் ஈ.பி.டி.பி., சித்தார்த்தன் தலைமையிலான பிளாட், கருணா குரூப் எனப் பலரும் ஆயுதம் தாங்கி அலைகி றார்கள். மர்மமான முறையில் துப்பாக்கிச் சூடுகள் நடப்பதும், திடீர்க் கொலைகள் நடப்பதற்கும் பின்னணியாக இவர்கள் இருப்பதாகவும் ஆட்கடத்தல், கொள்ளை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!

10.உண்மையை உணர்ந்த மனிதர்கள்

இரும்புக் கோட்டையாக மாறிவிட்டது இலங்கை. என்ன நடந்தது, எத்தனை பேர் செத்தார்கள், இருப் பவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன தேவை என எதையும் நேர டியாகப் பார்க்க யாரையும் அனும திக்காத நிலையைத் தளர்த்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், பெண்கள் அமைப்புகள் என அங்கீகரிக் கப்பட்ட ஆர்வலர்களை உள்ளே அனுப்பி, மக்களைச் சந்திக்கவைத் தால் மட்டுமே அங்கு உள்ளவர் களுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறக்கும்.

"20 நாடுகளின் உதவியுடன் இந்த வெற்றியை நாங்கள் பெற்றோம்" என்று வெளி விவகாரத் துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சொல்லி இருக்கிறார். அப்படியானால், போருக்குப் பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் இந்த 20 நாடுகளுக்கும் உண்டுதானே! அதில் இந்தியாவும் ஒன்று!


-ஆனந்த விகடன்

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top