இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label KP. Show all posts
Showing posts with label KP. Show all posts

Tuesday, February 23, 2010

கேபியுடன் தொடர்பு என பரப்பப்படும் வதந்தி உள்நோக்கம் கொண்டது: ருத்ரகுமாரன்

திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சிஇ நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.'


இவ்வாறு இணையத்தளம் ஒன்றுக்கு (நநடயஅநநெறள.உழஅ) அளித்த செவ்வியொன்றில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கேள்வியொன்றிற்கு ருத்ரகுமாரன் அளித்துள்ள பதில் விபரம் பின்வருமாறு:

திரு செ. பத்மநாதன் தலைவர் அவர்களால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக உறவுகள் செயலகத்தின் தலைமைப் பொறுப்பாளராக 01.01.2009 அன்று முதல் நியமிக்கப்பட்டவர்.

இவர் 05.08.2009 அன்று மலேசியாவில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டதான நம்பகமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிகளுக்கு முரணான அக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கையொன்றினை விடுத்திருந்தோம்.

இவரது கைது தொடர்பாக பின்னர் வந்த செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் எனக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சிறிலங்கா ஊடகங்களில் அவரைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் அவர் தற்போது சிறிலங்காவின் ஓர்அரசியல் கைதி. சிறிலங்கா அரசுஇ தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று.

எனவே அவர் மட்டுமல்லஇ தமிழீழ விடுதலைப் புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக் கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் இருந்து விமர்சிப்பது சுலபம்.

திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப பொறுத்த வரையில்இ நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப் பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம்.

இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 16.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து விடுத்த முன்மொழிவில்இ இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம்.

இவை மட்டுமன்றிஇ நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயக வழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை (வசயnளியசயnஉநல ) முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப் போகிறவர்கள் திரு கேபியோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல.

இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்டஇ சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத்தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.

இவ்வாறு திரு ருத்ரகுமாரன் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Sunday, December 13, 2009

கேபியும் கேஆரும்

"வி.புலிகளின் பணத்தில் ஜனாதிபதி தேர்தல் செலவுகள்" புதிய திட்டம் அம்பலமாம்


கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யுடன் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 11ம் திகதி மாலை பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றனவாம்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு ஆதரவளிக்குமாறு கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கே.பி.யிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறதாம்.


ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கான பிரசாரப் பணிகளுக்கு விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான நிதியைப் பயன்படுத்தினால் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமென கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கே.பி.யிடம் கூறியுள்ளாராம்.


சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் கே.பி. பின்னர் எவ்விதத்திலும் விடுபட முடியாது எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது கூறியதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றதாம்.

Read more...

Wednesday, December 9, 2009

புலிகளின் மூன்று கப்பல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன

கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் கே.பியிற்கு சொந்தமான கப்பல்களில் 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஊடக மத்திய நிலையம் கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்தது. கே.பியின் கட்டுப்பாட்டில் சுமார் 14 கப்பல்கள் இருப்பதாகவும் அவற்றில் 5 கப்பல்கள் அவருடையது என உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அதில் 3 கப்பல்களை இலங்கை கடற்படையினர் கொழும்பு கொண்டு வந்துள்ளதாக `தி ஐலண்ட்` செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக வெளிநாட்டுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக மூன்று கப்பல்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.


சர்வதேச நாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி இலங்கைக்கு கொண்டு வருவதுடன், மறைந்திருக்கும் புலி உறுப்பினர்களை விரைவில் கைது இலங்கைக்கு கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பாதுகாப்புத்துறை வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

Read more...

Friday, November 13, 2009

கே .பி .கைது வீடியோ

Part 1



Part 2

Read more...

Saturday, October 3, 2009

பிரபல கேடி கே.பி.க்கு சுமார் 600 வங்கி கணக்குகள் இருக்கின்றன

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திய நிலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற கே.பி.
என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு 600 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சரும் தேசிய பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெவித்தார்.


தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெவித்தார்.


கைதுசெய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கே.பி.யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.


இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.பி.யிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு சுமார் 600 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணைகள் யாவும் நிறைவடைந்ததன் பின்னர் ஏனைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Read more...

Monday, September 14, 2009

தலிபான்களை கே.பி சந்தித்துள்ளார்

‘KP met Taliban for arms running’



COLOMBO: Sri Lankan experts on the LTTE have said that the outfit had a front company in Karachi to smuggle arms, and a safe house in Peshawar to liaise with the Taliban.


According to Shanaka Jayasekara, a terrorism researcher based in Macquarie University, Australia, the LTTE’s arms procurer, Selvarasa Pathmanathan alias KP, had traveled from Bangkok to Kabul through Karachi, on May 19, 2001. He had meetings with Taliban officials on matters relating to the notorious “Sharjah Network”. The “Sharjah network” is an arms supply line run by the infamous Russian arms dealer, Victor Bout, who had operated three to four flights daily to Kabul to transport arms.

Lakbimanews quotes Jayasekara as saying that the LTTE operated a cargo company Otharad Cargo in Dubai, 17 km from the offices of the Sharjah Network.

Otharad Cargo is believed to have acquired several consignments of military hardware as part of consolidated purchase arrangements with the Taliban’s “Sharjah network”.

Jayasekara claims that information recovered from a laptop computer of an LTTE procurement agent, now in the custody of a Western country, has provided detailed information on LTTE’s activities in Pakistan.

According to Rohan Gunaratna, a Sri Lankan expert on terrorism with the International Centre for Political Violence and Terrorism, in Malaysia, the LTTE had links with Jehadis in the Pakistani frontier and it had a safe house in Peshawar.

Pakistani Prime Minister, Yusuf Raza Gilani, had said that the Sri Lankan President, Mahinda Rajapaksa, had told him in Libya recently, that elements in Sri Lanka were linked with terrorist events in Pakistan, including the gun attack on the Sri Lankan cricket team .
Express News Service

Read more...

Saturday, September 12, 2009

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தில் விடுதலைப் புலிகளும் பங்குதாரர்கள்


விடுதலைப்புலிகள் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக கே.பி என்ற குமரன் பத்மநாதன் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் பல அரச நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்ய விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிடம் இருந்து ஸ்ரீலங்கா ரெலிகொம் பங்குகளை மலேசியத் தமிழரான ஆனந்த கிருஷ்ணனின் மெக்சீஸ் நிறுவனம் அதிக விலையில் கொள்வனவு செய்திருந்தது. இந்த கொள்வனவு தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக ஜே.வி.பி. மாத்திரமல்லாது தொழிற்சங்கங்களும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தன.


ஆனந்த கிருஷ்ணனின் மெக்சீஸ் நிறுவனம், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் 49 வீத பங்குகளை கொள்வனவு செய்துள்ளது. மெக்சீஸ் நிறுவனத்தை ரெலிகொம் பங்குகளை பெறும் கொடுக்கல் வாங்கல்களுக்காக இலங்கைக்கு அழைத்து சென்றவர்கள், ஜனாதிபதிக்கு நெருக்கமான ரொஷான் காரியபெரும மற்றும் பிரியந்த காரியபெரும ஆகிய இருவரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறிது காலத்தில் மெக்சீஸ் நிறுவனம் இவர்கள் இருவரையும் நீக்கி விட்டு, அதன் இலங்கை பிரதிநிதியாக திவயின பத்திரிகையின் அரசியல் செய்தியாளர் மனோஜ் அபேவீரவை நியமித்தது. தற்போது மனோஜ் அபேவீரவே மெக்சீஸ் நிறுவனத்திற்கான இலங்கையின் அனைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். மெக்சீஸ் தொலைபேசி நிறுவனம் உள்ளிட்ட மலேசியாவில் உள்ள பல நிறுவனங்களுக்கு சொந்தக்காராக இருக்கும் யாழ்ப்பாணத்தை பூர்கமாக கொண்ட ஆனந்த கிருஷ்ணன், மலேசியாவின் செல்வந்தர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Friday, September 4, 2009

மலேசிய விசேடப் பிரிவே, கே.பி.யை கைதுசெய்து இலங்கையிடம் ஒப்படைத்தது - புதிய தகவல்கள்

விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தன்னிச்சையாக சரணடைந்தார் என இதற்கு முன்னர் சில புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், தற்போது மலேசிய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத்துறையின் ஒருங்கிணைந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலொன்றில் ஓகஸ்ட் 06ம் திகதி கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் பொய்யானது என தேசிய புலனாய்வுத்துறையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் Lanka News Web இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் தகவல் தருகையில், "மலேசியா விசேடக் குழு" (Malaysian Special Bureau - MSB) அதிகாரிகளே கே.பி.யைக் கைதுசெய்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் கூறினார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கே.பி. தற்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹேன்தா விதாரணவின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மலேசிய விசேடக் குழுவினால் (MSB) கைதுசெய்யும் பாரிய திட்டத்திற்கு மலேசியாவின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா பெரும் பங்கெடுப்பை மேற்கொண்டுள்ளார்.

மலேசியாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து, அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினரை அறிவுறுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் மலேசியாவில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரலாயத்திற்கு அனுப்பப்பட்ட மேஜர் ஜெனரல் உதய பெரேரா, தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளார்.

உதய பெரேரா மலேசியாவில் பணியமர்த்தப்பட்ட நாள் முதல், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கண்காணித்து அதுகுறித்து மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுப் பிரவினர் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கே.பி. போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் மலேசியாவில் வாழ்வது, அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என உதய பெரேரா தொடர்ந்தும் மலேசிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையிலேயே கே.பி. குறித்து அதிகூடிய கவனம் செலுத்த மலேசிய விசேடக் குழு ஆரம்பித்துள்ளது.

அதன்பின்னர், கே.பியை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரச தலைவர் மட்டத்தில் மலேசிய தலைவர்களிடம் வேண்டுகோளொன்றை விடுக்குமாறு MSB அதிகாரிகள் பிரதி உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், ஜூலை மாத இறுதியில், சிங்கப்பூரில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் விசேட கூட்டத்தின் போது, கே.பி.யை கைதுசெய்து இலங்கையிடம் கையளிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மலேசிய வெளிவிவகார அமைச்சரிடம் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இராஜதந்திர ரீதியாக இரு நாடுகளுக்குமிடையே இவ்வாறான இணக்கப்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கே.பி. மலேசியா சென்றிருந்ததை இலங்கையின் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் கே.பி. தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதன் மூலமே கே.பி மலேசியா சென்றமையை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட விடயம் வெளியிடப்படாததன் காரணமாக கே.பி.யும் இதுகுறித்து அறியாதிருந்துள்ளார். இதன் காரணமாகவே, கே.பி. இவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கே.பி.யின் செய்மதி தொலைபேசி இலக்கத்தைத் பெற்றுக்கொண்ட பாதுகாப்புத் தரப்பினர், இதுகுறித்து ஆராயுமாறு அமெரிக்க மற்றும் மலேசிய தொலைத்தொடர்பு நிபுணர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, கே.பி. செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி, மலேசியாவிலிருந்தே வழங்கப்பட்டதை MSB அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இந்தத் தகவல்களுக்கமைய கே.பி. தங்கியிருந்த, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள "ரியூன்" விடுதியை முற்றுகையிட்ட MSB அதிகாரிகள், கே.பி.யின் சாரதி "அப்பு" வை கைதுசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கே.பி. வேறிருவருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதற்கிடையே, MSB அதிகாரிகள் "அவசரமாக ஒருமுறை வெளியே வாருங்கள்" என "அப்பு"வைப் பயன்படுத்தி கே.பி.யின் தொலைபேசிக்கு தகவலொன்றை வழங்கிப்பட்டதை அடுத்து விடுதியைவிட்டு வெளியே சென்ற கே.பி. கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த முற்றுகையின் போது எந்தவொரு இலங்கை பாதுகாப்பு அதிகாரியும் பங்கேற்கவில்லை. கே.பி. கைதுசெய்யப்பட்டதை அடுத்து MSB அதிகாரிகள் இதுகுறித்து பிரதி உயர்ஸ்தானிகருக்கு தகவலளித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விரிவாக கலந்துரையாடியதன் பின்னர், தாய்லாந்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கே.பி.யை ஒப்படைப்பதென இணக்கம் காணப்பட்டது.

இதுதொடர்பாக தாய்லாந்து அரசாங்கத்திற்கு தகவலளித்துள்ள மலேசிய பாதுகாப்புத் தரப்பினர், இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் சந்தேக நபரொருவரை பாங்கொக் விமான நிலையத்தில் ஒப்படைப்பதாகக் கூறியுள்ளனர். குறித்த சந்தேக நபர் கே.பி. என தாய்லாந்து அரசாங்கத்திடம் இனங்காட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் இணக்கம் கண்டுள்ளனர்.

இதனடிப்படையில், ஓகஸ்ட் 6ம் திகதி, இலங்கை விமானப்படையினரால் பயன்படுத்தப்படும் விமானமொன்றின் மூலம் பாங்கொக் விமான நிலையத்திற்குச் சென்ற இலங்கையின் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சிலர் எவ்விதத் தடங்கல்களும் இன்றி கே.பி.யை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கே.பி.யிடம் தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊடகங்களினால் சித்தரிக்கப்பட்டதைப்போன்று கே.பி. ஒரு பெரிய தலைவர் அல்லவெனவும், அவர் அறிந்திருக்கும் தகவல்கள் வரையறையானவை எனவும் எமது இணையத்தளத்திற்கு தகவலளித்த அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Lanka Web News

Read more...

Tuesday, September 1, 2009

இலங்கை அரசிடம் ரகசியங்களை உடைக்கிறார் செல்வராசா பத்மநாதன்

விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடுகளில் ஆயுதம் மற்றும் பணம் திரட்டி கொடுக்கும் மிக முக்கிய பணியை செல்வராசா பத்மநாதன் செய்து வந்தார். கே.பி. என்றழைக்கப்பட்ட அவர் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த 2-வது இடத்தில் இருந்தார்.

கடந்த ஆகஸ்டு மாதம் கோலாலம்பூரில் இலங்கை போலீசார் கைது செய்தனர்.

கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். வெளி நாடுகளில் விடுதலைப்புலிகள் பெயரில் உள்ள சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது என்று அவரிடம் சிங்கள ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பத்மநாதன் மூலம் விடுதலைப்புலிகள் தொடர்பாக கணிசமான தகவல்களை சிங்கள அரசு திரட்டி விட்டதாக கருதப்படுகிறது. அடுத்தக் கட்டமாக ராஜீவ் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த இந்திய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை அரசுடன் செல்வராசா பத்மநாதன் சமரசம் ஆகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பெரிய தண்டனையில் இருந்து தப்பிக்கும் எண்ணத்துடன் அவர்தன் நிலையை மாற்றிக்கொண்டதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக இலங்கை அரசு அதிகாரப் பூர்வமாக இதுவரை எதையும் சொல்லவில்லை.


நக்கீரன்

Read more...

Is LTTE chief in talks with govt?

Colombo, Aug. 31: Selva-rasa Pathmanathan, the new LTTE leader currently under the Sri Lankan government custody, is intent on talking his way out of punishment by revealing details about the outfit’s funding network, according to a report. The report in international defence website Strategy Page said Pathamanathan has revealed some information about the outfit to authorities.

"The government is negotiating with Pathmanathan to find out where the remaining funds are, and what shape the offshore LTTE organisation is in," the article also posted on the government’s official website said.

"While many Sri Lankans want Selva-rasa Pathma-nathan executed, or jailed for life, Pathma-nathan is a skilled negotiator who is intent on talking his way out of a death sentence," it said.

Pathmanthan, who controlled a global network that supplied weapons to the LTTE, was arrested from a South Asian nation on August 5.

Better known as KP, Selvarasa Pathma-nathan, a close confidant of slain LTTE supremo Velupillai Prabhakaran, is wanted by Interpol in connection with several cases, including the assassination of former Indian Prime Minister Rajiv Gandhi. —PTI

Read more...

Monday, August 31, 2009

மூன்று பில்லியன் டொலர் நிதி சுவிஸ் வங்கியில் வைப்பு;விசாரணையில் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமார் மூன்று பில்லியன் பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ், சுவீடன், பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் திரட்டப்பட்ட பணமே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளது என கே.பி. கூறியுள்ளதாகவும், சுவிஸ்சர்லாந்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகளவு நிதி உதவி கிடைக்கப் பெற்றதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாகவும் அப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Read more...

இந்திய முன்னாள் பிரதமர் திரு ராஜிவ் காந்தி அவர்களின் கொலையில் பணம் கொடுத்தது யார்? பிடிபட்ட ‘கேபி’யை விசாரித்து அறிய முடிவு

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதனிடம், முன்னாள் இந்தியப் பிரதமர் திரு ராஜிவ் காந்தி அவர்களின் கொலை தொடர்பாக நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி., என்ற செல்வராசா பத்மநாதன், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இலங்கை பாதுகாப்புப் படையினர், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பத்மநாதனின் பெயரும் உள்ளது. எனவே, ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக அவரிடம் இந்தியா சார்பில் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் தனு, ஒற்றைக்கண் சிவராசன், பொட்டு அம்மான், பிரபாகரன் ஆகியோர் இன்று இல்லை.ஆனால், புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள் பெறுவதுடன், சர்வதேச அளவில் மூளையாக இருந்து செயல்பட்ட, கே.பி., என்ற பத்மநாதன் பிடிபட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.ராஜிவ் கொலைச் சதியில் பல்வேறு தகவல்கள், பணப்பரிமாற்றம், அது எப்படி நிறைவேற்றப்பட்டது போன்ற தகவல்கள் வெளிவரும் என்பதால், இவ்வழக்கு புத்துயிர் பெற்றுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:ராஜிவ் கொலை வழக்கில் பத்மநாதனுக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் இன்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக பத்மநாதன் அறிவிக்கப்பட்டார்.கடந்த 2002ம் ஆண்டு பத்மநாதனை பிடிப்பதற்காக சி.பி.ஐ., அதிகாரிகள், நியூசிலாந்து சென்றனர். இது தொடர்பாக அங்குள்ள மூன்று தமிழர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருந்தாலும், பத்மநாதனை பிடிக்க முடியவில்லை.ராஜிவ் கொலை வழக்கின் சதி குறித்து விசாரிப்பதற்காக, பல்வேறு உளவு அமைப்புகளின் நிபுணர்களை உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்பு ஏஜன்சி (எம்.டி.எம்.ஏ.,) அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, ராஜிவ் கொலைக்கான சதித் திட்டம் குறித்து விரிவாக விசாரணை நடத்தியது.இதற்கிடையே, இந்த அமைப்பின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்தது. தற்போது இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, அதன் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பத்மநாதன் இலங்கை பாதுகாப்புப் படையினர் வசம் சிக்கியுள்ளதால், அவரிடம் ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.அவரிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்த பட்டியலை சி.பி.ஐ., தயாரிக்கிறது.

புலிகள் அமைப்புக்காக பல்வேறு நாடுகளில் நிதி திரட்டும் பணியையும், ஆயுதங்கள் கடத்தி வரும் பணியிலும் பத்மநாதன் ஈடுபட்டு வந்ததால், அது தொடர்பான கேள்விகளும் விசாரணையில் இடம் பெறும் என தெரிகிறது.பத்மநாதன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய இந்தியர்கள் சிலர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை விசாரிக்கவும் இந்த அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. பத்மநாதனுக்கு ஜெர்மனியில் வங்கிக் கணக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து, ஜெர்மனி அதிகாரிகளின் உதவியுடன் அதை அறிவதற்கும் ஏஜன்சி அதிகாரிகள் ஆர்வமுடன் உள்ளனர்.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதை அடுத்து, ராஜிவ் கொலை வழக்கு விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
Mahaveli

Read more...

Sunday, August 30, 2009

MDMA to seek replies from ‘KP’ in Rajiv Gandhi case

Aug 30 (PTI) The MDMA, which is investigating the conspiracy angle in the assassination of former Prime Minister Rajiv Gandhi, is preparing a questionnaire for LTTE financier Selvarasa Pathmanathan. MDMA, which comprises experts from CBI and other agencies and has been granted another extension by the government despite noting for closure of this unit, has begun the work of preparing questions on the basis of its decade-old findings. more..

Read more...

Saturday, August 29, 2009

India to seek LTTE leader's extradition

India has decided to place an extradition request for LTTE leader Kumaran Padmanadan, alias KP, nabbed by Sri Lanka earlier this month.

A CBI team will leave for Colombo in September to grill KP on the " larger conspiracy" behind the 1991 Rajiv Gandhi assassination.

Sources in the ministry of home affairs ( MHA) said the multi- disciplinary monitoring agency ( MDMA) under the CBI has been given a one- year extension with directions to focus on KP's interrogation and ensure his extradition to India.

The request for MDMA's extension was pending with the MHA after its term ended on May 31.

" MDMA has been given an extension last week after Sri Lanka announced KP's arrest on August 7," a top MHA official said.

Read more...

Wednesday, August 26, 2009

Prabhakaran killed, KP arrested and who is next?

Aug 26 : When LTTE was conclusively defeated from Sri Lankan soil and Prabhakaran was killed and no signs of the survival of second in command Pottu Amman, the Tamil Diaspora still wanted to continue their struggle for Eelam and supported the Interpol fugitive self proclaimed leader Kumaran Pathmanathan who has many aliases. Unexpectedly for the Tamil Diaspora, Kumaran Pathmanathan a.k.a. K.P has been arrested and is being interrogated by the Sri Lankan intelligence. more..

Read more...

ருத்ரகுமார் உள்ளிட்ட முக்கியர்களை நாடுகடத்த முனைப்புக்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவு தகவல்

விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகரும், நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினருமான சட்டத்தரணி ருத்ரகுமார் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் ஞானகோன் சகோரர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான இலங்கைப் புலனாய்வுத் துறையினர் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதனடிப்படையில், ருத்ரகுமார் வசிப்பதாக சந்தேகிக்கப்படும் நாடுகளிடம் அவரைக் கைதுசெய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரிவருவதாக புலனாய்வுத் துறையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ருத்ரகுமாரை எவ்வாறு கைதுசெய்வது என்பதே குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தற்போதைய கேள்வியாக உள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கே.பி.யிடம் பெற்றுக்கொண்ட தகவல்களுக்கமைய ருத்ரகுமார் உள்ளிட்டோரை கைதுசெய்ய திட்டமிட்டு வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன. எனினும், இந்த விடயம் இலகுவானதல்லவென புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


Read more...

கே.பி கைதானதை அடுத்து சர்வதேசம் அமைதி காத்து வருகின்றது

(லங்கா ஈ நியூஸ் 26.08.2009 -மு.ப.9.40) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரும் அவ்வியக்கத்துக்கான சர்வதேச ஆயுத வர்த்தகருமான கே.பி என்று அழைக்கப்படும் செல்வராஜா குமரன் பத்மநாதன் கடந்த 05ஆம் திகதி இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரது கைதினை அடுத்து விடுதலைப் புலிகள் சார்பான தமிழ் டயஸ்போரா மற்றும் அந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட சமூகம் அமைதியில் மூழ்கியுள்ளது என்று எமது சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.பி கைது செய்யப்பட்டதை அடுத்து விடுதலைப் பலிகள் இயக்கத்தின் மற்றுமொரு உறுப்பினராகத் தெரிவிக்கப்படும் சட்டத்தரணியான உருத்திரகுமரன், அவ்வியக்கத்தின் இலட்சினை பொறிக்கப்பட்ட கடதாசியில் எழுதப்பட்ட கடிதமொன்றினை வெளியிட்டார். அந்த கடிதத்தில் கே.பி கைது செய்யப்படவில்லை என்றும் அவர் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்றும் சர்வதேசத்திடம் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை அடுத்து அவரால் எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. கடந்த காலங்களில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் ஈடுபட்ட போதிலும் கைதாகியுள்ள கே.பி.யை விடுதலை செய்யுமாறு கோரி எவரேனும் வேண்டுகோள் விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஊர்வலங்கள் நடத்தப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிகள் 50 பவுண்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் இன்று தலைமறைவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயில் தங்கியிருந்தவாறு புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்த சதீஸன் குமாரன் போன்ற புலிகளின் முக்கியஸ்தர்களும், பிரான்ஸ், ஜேர்மன், கெனடா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தங்கியுள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களும் தற்போது எங்கே சென்றுள்ளார்கள் என்பது குறித்து தெரியாதுள்ளதாக அந்நாடுகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.பி.க்கே இந்த நிலைமை என்றால் தமக்கு என்ன ஆகும் என்பது குறித்து எண்ணியே அவர்கள் அனைவரும் தலைமறைவாகி இருக்க முயற்சித்து இருக்கலாம் என்றும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் வெளிப்படையான தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளர்கள், அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடக நிறுவனங்கள் போன்றனவும் கே.பி. கைது செய்யப்பட்டதை அடுத்து குறித்தவொரு அமைதியான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது. ( பக்கச் சார்பற்ற பிரதான ஊடகவியலாளர் ஒருவர் கடந்த 7ஆம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு செய்தியினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

இதைத் தவிர கே.பி.யுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றோரும் குறிப்பிட்டவொரு அமைதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கே.பி. இவர்கள் தொடர்பில் எவ்வாறான தகவல்களை வெளியிடப் போகிறார் என்ற பயத்தில் உள்ள மேற்படி முக்கியஸ்தர்கள் அவ்வாறு கே.பி.யிடமிருந்து தகவல்கள் வெளியானால் சர்வதேச பயங்கரவாதத்துக்கு துணை நின்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுவோமோ என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்வாறானதொரு அமைதி நிலையைப் பேணி வருகின்றார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவை எவ்வாறெனினும் சர்வதேச ஆயுத வியாபாரம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற செயற்பாடுகள் சட்டவிரோத நடவடிக்கைகளாகக் கருதப்படும் அதேவேளை, அந்த நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குவோர் சர்வதேச சட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை வழங்கக் கூடியவர்களாகக் கருதப்படுவர். இது கட்டாயப்படுத்தப்பட்டும் உள்ளது.

இதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் புலிகளுடனான மோதல்களின் போது கொல்லப்பட்டதிலும் பார்க்க அவ்வியக்கத்தின் சர்வதேச ஆயுத வியாபாரியான கே.பி உயிருடன் கைது செய்யப்பட்டமையானது விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படுவதற்கு உதவியாக அமைந்துள்ளது என்று இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Read more...

Prabhakaran killed, KP arrested and who is next?

Aug 26 (AT) When LTTE was conclusively defeated from Sri Lankan soil and Prabhakaran was killed and no signs of the survival of second in command Pottu Amman, the Tamil Diaspora still wanted to continue their struggle for Eelam and supported the Interpol fugitive self proclaimed leader Kumaran Pathmanathan who has many aliases. Unexpectedly for the Tamil Diaspora, Kumaran Pathmanathan a.k.a. K.P has been arrested and is being interrogated by the Sri Lankan intelligence. more..

Read more...

Tuesday, August 25, 2009

கே.பி கடத்தப்படவில்லை! கைது செய்யப்பட்டார்.

கே.பி என்றழைக்கப்படும் பிரபல கேடி குமரன் பத்மநாதன் மலேசியாவில்
வைத்துக் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார்..

கே.பி கைது செய்யப்பட்டமை இலங்கைப் புலனாய்வுத்துறைக்குக் கிடைத்
த மாபெரும் வெற்றி. ஆனால் புலிகளின் ஊடகங்கள் கே.பி
மலேசியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். கே.பி
ஒரு அப்பாவி. அவரை இலங்கை அரசு கடத்திவிட்டது என்று பலிகளின்
ஊடகங்கள் சித்தரிக்க முயலுகின்றன. கே.பி கைது ஒரு அரச பயங்
கரவாதம் என்று புலிகளின் இணையத்தளமான தமிழ்நெற் கூறுகிறது.
அவரை கடத்திச் சென்றது சர்வதேச விதிகளை மீறிய செயலாம். கசாப்புக்
கடைக்காரன் காருண்யம் பேசுவதும் தமிழ் நெற் சர்வதேச விதிகளைப்
பற்றிக் கூறுவதும் ஒன்று. விஜிதரன் முதற்கொண்டு இன்றுவரை புலிகளால்
கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள் எத்தனை பேர். சமீபத்தில்
கடத்தப்பட்ட புளொட் உறுப்பினர் பாரூக், ஈ.என்.டி.எல.;.எவ் உறுப்பினர்
மனோமாஸ்ரர் எங்கே? கொழும்பில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட தமிழ்
ப் பொலிஸ் அதிகாரி எங்கே? புலிகளால் கடத்திச் செல்லப்பட்வர்கள் பற்றி
பட்டியல் போட பக்கங்கள் போதாது. இப்படி இருக்கையில் புலிகளின்
ஊடகங்கள் மனித உரிமை மீறல்கள் பற்றியும், சர்வதேச விதிகள் பற்றியும்
கூறுவது வேடிக்கையானது.



கே.பி வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டாரா?



மலேசியா இறைமையுள்ள ஒரு பெரிய நாடு? கடுமையான சட்டதிட்டங்கள்
அமுல் படுத்தப்படும் கட்டுக்கோப்பான நாடு. போதைவஸ்து வைத்திருந்
தால் மரணதண்டனை வழங்கப்படுகின்ற நாடு. அழகான நாடும் கூட!

அப்படிப்பட்ட ஒரு நாட்டில் சர்வதேசப் பொலிஸாரால் தேடப்படும் ஒரு பயங்
கரவாதியை அந்த நாட்டின் புலனாய்வுத் துறையின் உதவியுடன் கைது
செய்து இலங்கைப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்ததை கடத்தல்
என்று கூறிவிட முடியுமா? கே.பி எப்படிக் கைது செய்யப்பட்டார் என்கின்ற
ஆராய்ச்சி அவசியமற்றது.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதாலோ, பிரபாகரன் கொல்லப்பட்டதாலே
கலக்கமடையாத புலிப் பினாமிகள் கே.பி யின் கைதினால் கலக்கமடைந்
துள்ளனர். பல மர்மங்கள் வெளிவரப்போகின்றது.

இலங்கையில் மட்டுமல்ல கடல் கடந்த நாட்டிலும் மனித சதைத் துண்டங்
கள் சிதறக் காரணமானவர் கே.பி எப்போதோ கைது செய்யப்பட்டிருந்தால்
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்
கமுடியும்;. இலங்கையில் சமாதானச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்
டிருந்த வேளையில் கே.பி கப்பல் கப்பலாக ஆயுதங்களை அனுப்பிக்
கொண்டிருந்தார். தாய்லாந்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்
கொண்டிருந்த வேளையில் பிரபாகரன் தனக்குத் தேவையான ஆயுதங்களின்
பட்டியலை கருணா மூலமாக் கே.பி யிடம் அனுப்பியிருந்தார். மக்களை
மிரட்டிப் பெற்ற கப்பம், வரி மற்றும் போதை வஸ்து கடத்தலிலும் கிடைத்
த பணத்தில் கே.பி வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்
தார். வன்னியில் பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் உல்லாச வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருந்தார்.

மக்கள் உறவுகளை இழந்தும், சொத்துக்
களை இழந்தும் வேதனைகளுடன் அவல
வாழ்க்கை வாழந்து கொண்டிருந்தபோது
பிரபாகரனால் எதுவித கவலையுமின்றி
தனது மகனுடன் நீச்சல் தடாகத்தில்
வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட காற்றடித்
த மிதவையுடன் உல்லாசக் குளியல்
குளிக்க முடிந்தது. மக்கள் மிக அவலங்
களுடன் வாழ்கிறார்கள், புலிகளின்
காவலரண்களில் சிறுவர்கள்
பிரபாகரனைக் காப்பதற்கு பட்டிணியாய்
காவல் கிடக்கிறார்கள். சமாதான காலத்
தில் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்
படுத்தி மக்களுக்கு அமைதியான வாழ்க்
கையை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு
பிரபாகரனால் உல்லாசக் குளியல் குளிக்
க முடியவில்லை. பிரபாகரனுக்கு கிடைத்
த ஆடம்பரப் பொருட்கள்
வெளிநாடுகளிலிருந்தே
பெற்றுக்கொள்ளப்பட்டன.


கே.பி கைது செய்யப்பட்டபோது கே.பி யைச் சந்திப்பதற்காக நடேசனின்,
மகனும் சகோதரரும் இங்கிலாந்திலிருந்து சென்று ஆடம்பர ஹொட்டல்
ஒன்றில் கே.பியிற்கு மரக்கறி உணவும், சந்திக்கச் சென்றவர்களுக்கு நண்
டு, பெரிய இறால், மற்றும் கடலுணவு வகைகளுடன் உணவருந்தியிருக்கிறார்
கள்.. இதேவேளையில் வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில்
தமிழ் மக்கள் இராணுவம் கொடுக்கும் கவளம் சோற்றை உண்கிறார்கள்.
நடேசன் தனது புத்திரனை வெளிநாட்டிற்கு அனுப்பி சிறந்த சிறந்த எதிர்
காலத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு;த்தான் தனது உயிரையும் காப்பாற்
ற இராணுவத்திடம் சரணடைய முற்பட்டிருக்கிறார். இத்தருணத்தில் வன்
னியில் பலாத்காரமாகக் கட்த்தப்பட்டு இராணுவப் பயிற்சியழிக்கப்பட்டு
கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரை நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது. ஏற்
கனவே தனது பிள்ளைகளையும் மதிவதனியை வெளிநாட்டில் வசிக்க விட்
டிருந்த பிரபாகரன் இம்முறை அவர் எதிர்பார்தபடி மகிந்த ராஜபக்ஷவை
எமாற்ற முடியவில்லை. அதனால் முள்ளிவாய்க்காலில் சேற்றுக்குள் சங்கமிக்
கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. கே.பியின் வங்கிக் கணக்குகளில் இருக்
கின்ற கோடிக்கணக்கான பணமும் பேரழிவுகளுக்காகச் செலவிடப்பட்ட
கோடிக்கணக்கான பணமும் சமாதான ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி குறைந்
த பட்சத் தீர்வைப் பெற்றுக் கொண்டு தமிழர்களுடைய பிரதேசங்களில் நல்
ல அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு
பேரவலம் ஏற்பட்டிருக்காது. ஆனால் மாறாக தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்
காக மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்து மக்களின் பேரழிவில் தங்கள் ஆடம்
பர வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். புலிகளின் தலைமைகளுக்கு
சமாதானம் விருப்பமில்லை என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறலாம்.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பா சென்றபோது பேச்சுவார்த்தை வெற்
றியழிக்குமா? என்று பாலசிங்கத்திடம் கேட்டபோது நீ இப்படிக் கேட்கிறாய்
பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கச் சொல்லி தலைவர் சொல்லியிருக்கிறார்
என்று பாலசிங்கம் தன்னிடம் சொன்னதாகவும், தனக்கு அதிர்ச்சியாக இருந்
ததாகவும் கருணா பத்திரிகையாளர்களுக்கு கூறியிருந்தார். சமாதான ஒப்பந்
தம் வெறும் நாடகம்தான். இதை வைத்துக் கொண்டு இலங்கை அரசின்
மேல் நாங்கள் சவாரி செய்கிறோம், இதைத்தான் இந்தியா மீதும் நாங்கள்
செய்தோம் என்று பொட்டு அம்மான் தங்களிடம் கூறியதாக கொழும்பில்
கைது செய்யப்பட்ட கரும்புலிகள் தங்கள் வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறார்
கள். சமாதான காலத்தில் தென்னிலங்கையில் தங்கள் நடவடிக்கைகளை
எப்படிப் பலப்படுத்திக் கொண்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த
விடயம். தொடர்ந்தும் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தால்தான் தாங்கள்
பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கமுடியம் என்பது புலித்
தலைமைகளின் திட்டம் என்பது ஏனைய தளபதிகளுக்கும் உறுப்பினர்
களுக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. பிரபாகரனின் அழிவிற்குப்
பிறகு பேராசை கொண்ட கே.பி தன்னுடைய கையைப் பலப்படுத்த நினைத்
தார். தவளையும் தன் வாயால் கெடும் என்பது போல தொலைபேசியூடாக
ஊடகங்களுக்குப் பேட்டிகள் கொடுத்த கே.பி அண்மையில் சனல் 4
தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி இவர் விரைவில் கைது செய்யப்
படுவார் என்பதற்கு முன்னறிவிப்பாக இருந்தது. சனல் 4 தொலைக்காட்சிக்
கும் புலிப் பினாமிகளுக்கும் உள்ள தொடர்பையும் அது உறுதிப்படுத்
தியது. சனல் 4 தொலைக்காட்சி புலிப்பினாமிகளிடம் பணம் பெற்றுக்கொண்
டு வவுனியாவிலிருந்து ஒரு பொய்யான விவரணச் செய்தியை வெளியிட்டு
அது சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டது ஏற்கனவே
தெரிந்த விடயம். கே.பி யின் கைது அரசாங்கத்தைவிட தமிழ் மக்களுக்கு
பாரிய நன்மையை ஏற்படுத்தும் என்பதே உண்மையாகும்.

- ஊர்க்குருவி

மின் அஞ்சலில் கிடைக்கப்பெற்றது

Read more...

புலிகளுக்கு அமெரிக்காவிலிருந்து ஆயுதம்: விசாரணையில் பத்மநாதன் திடுக்கிடும் தகவல்

விடுதலைப் புலிகளுக்காக, அமெரிக்காவிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை வாங்கியதாக புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவரான செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் ரகசிய இடத்தில், விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர் பல்வேறு புதிய தகவல்களை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து, பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள தகவல்களின்படி புலிகள் அமைப்புக்கு அணு ஆயுங்களை வாங்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புலிகள் அணு ஆயுதங்களை வாங்கியிருந்தால், அது மற்ற பயங்கரவாத அமைப்புகளின் கைகளுக்கும் போய் சேர்ந்திருக்கும்.அமெரிக்காவில் உள்ள ஒரு ஆயுத விற்பனையாளரிடம் இருந்து, புலிகள் அமைப்புக்காக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கப்பட்டு, அவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இவ்வாறு, அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top