சண்டே லீடர் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க சுட்டுக்கொலை
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க மீது இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காலமானார்.
அத்திடிய பேக்கரிச் சந்தியில் வைத்தே இவர் மீது இன்று (08) காலை 10.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து தனது காரியாலயத்துக்குக் காரில் சென்று கொண்டிருந்த போதே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
மோட்டர் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே இவர் மீது துப்;பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆபத்தான நிலையில் அவர் களுவோவில வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். களுபோவிலை வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க இதனை உறுதிப்படுத்தினார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டும் அவை பலனிக்காத நிலையில் மரணமானார்.
1 விமர்சனங்கள்:
துணிவுள்ள ஊடகவியலாளரை இழந்துநிற்கிறோம்.
Post a Comment