புலிகளுக்கு அமெரிக்கா அழுத்தம்: இலங்கை கோரிக்கை
பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்றுக் கூறியுள்ள நிலையில், பொதுமக்களை விடுவிக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இலங்கை அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“பயங்கரவாதிகளாக விடுதலைப் புலிகள் பாதுகாப்புத் தேடி வெளியேறும் மக்களை ஆபத்துக்குள் தள்ளுகின்றனர். தமது கட்டுப்பாட்டிலிருக்கும் பொதுமக்களை விடுவிக்குமாறும், பாதுகாப்பான பகுதிகளுக்கு வர அவர்களை அனுமதிக்குமாறும் புலிகளின் தலைமைப் பீடத்துக்கு சர்வதேசமும், அமெரிக்காவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
வன்னியிலிருந்து வெளியேறிய மக்களை மனிதநேயத்துடனையே நடத்துவதுடன், சர்வதேசத்தின் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதாகக் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் கஷ்டப்படுவதை வெளிக்காட்ட விரும்பவில்லையென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கொழும்பில் கூறியிருந்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment