முல்லைத்தீவு தெற்குச்சாலையில் இருதரப்பு உக்கிர மோதல்: புலிகளின் 33 சடலங்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சாலை தெற்குப் பிரதேசத்தில் இன்று (05) மாலை இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலின் போது புலிகளுக்கு அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பின்னர் இங்கு நடத்தப்பட்ட தேடுதலின் போது விடுதலைப் புலிகளின் 33 சடலங்களைப் படையினர் கைப்பற்றினர்.
அத்துடன் ரி-56 ரைபிள்கள்-33, எல்எம்ஜி துப்பாக்கிகள்-03, 60 மில்லிமீட்டர் மோட்டர்-01, டிஸ்பொசல் ஆர்பிஜி-01, ஜிரிஎஸ்-01, கொம்பாஸ்-05, கைக்குண்டுகள்-13, பெக்ஸ்-13, 1கொம்ஸ் வானொலி கருவி-05 ஆகியனவும் கைப்பற்றப்பட்டன.
0 விமர்சனங்கள்:
Post a Comment