ஜேர்மன் பிரஜையின் வீட்டில் மூன்று புலிகள் கைது.
அதுருகிரிய, கொடகம பிரதேசத்தில் வசித்துவரும் ஜெர்மன் நாட்டுப் பிரஜையொருவரின் வீட்டில் தங்கியிருந்த மூவரை பொலிசார் நேற்று முன்தினம் (மார். 03) கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் ஓர் ஆணும் இரு பெண்களும் அடங்குவர்.
வீட்டின் உரிமையாளரான ஜெர்மன் பிரஜை எனவும் அவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவரைத் திருமணம் செய்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் குறித்த வெளிநாட்டு பிரஜையின் வீட்டில் இருந்து கைசெய்யப்பட்ட மூவரும் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment