கொழும்பு துறைமுகத்தை விட்டு வணங்காமண் நிவாரணப் பொருட்கள் வெளியே வந்தது
வணங்கா மண் பொருட்கள் அனைத்தும் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தந்த தகவலின் அடிப்படையில் அவை அடுத்தகிழமை வன்னி மக்களுக்கு வினியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இலங்கை அரசின் வரி மற்றும் கட்டணங்கள் என பெருந்தொகையான பணம் செலுத்தப்பட்ட பின்னரே அவை விடுவிக்கப்பட்டதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். எப்படியாயினும் இப்பொருட்கள் மிகவிரைவில் வன்னி சென்றுசேரும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment