மக்களின் சொத்து சொந்த நலனுக்காக அபேஸ்!! மெல்பேர்ண் வாழ் தமிழர்களுக்கு உங்களின் வீடு விற்பனைக்கு!! தீபாவளி விலைக்கழிவு ஏமாறாமல் முந்துங்கள்!!
அவுஸ்ரேலிய தமிழர்களே!! தமிழரின் சொத்துக்கள்,உங்களின் உழைப்பில் கொடுத்த பணத்தை தமது பொறுப்பற்றதனத்தால் வங்கியில் உறைய வைத்த மெல்பேர்ண் இரட்டையர்கள் யாதவன்(உதவாதவன்),ஆரூரான்(யார் இந்த ஊரான்?) மீண்டும் உங்கள் பணத்தில் வாங்கப்பட்ட வீட்டை அபகரித்து விற்பனைக்கு விட்டுள்ளனர். இது உங்களின் பணம் என்பது தெரியாதா?
அனைத்துலக பொறுப்பாளர் திரு. மணிவண்ணனின் ஒளி நாடாவில் குறித்த பேடிகளின் செயற்பாட்டில் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியது அறிந்திருக்கவில்லையா? (தேவைப்பட்டால் குறித்த ஒளி நாடா உங்கள் வீடு தேடி வரும்)
தவித்த முயலடித்த இந்த கூட்டம் வன்னியில் தலைமைகள் அழிக்கப்பட்டதை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு செந்தூரன் மாமாவின் பெயரில் இருந்த மக்களின் சொத்தை யாதவன் மருமகனுக்கும் அவரது ஆரூரான் அல்லக்கைக்கும் வழக்காட பணம் தேவையாம்? மக்களின் சொத்தை விற்க யார் இவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது? தற்போது செயற்படும் செயற்குழுவின் அங்கீகாரம் பெறப்படாமலே தன்னிச்சையாக விற்கும் முடிவை யார் இவர்களுக்கு கொடுத்தது? சிந்திக்க தெரிந்த மக்களே கேளுங்கள்!!
மே18 வரை வன்னியில் இருந்தவர்களை விமர்சித்து திரைமறைவில் அமைப்பின் செயற்பாட்டின் மூலம் தொடர்பானவர்களிடம் தமது வழக்குக்கு பணம் சேகரித்தது இயக்கத்தின் வரைமுறையை மீறிய செயல் என்பதும் அதற்காக இந்த பேடிகள் கண்டிக்கப்பட்டவர்கள் என்பதை மக்களே தெரிந்துகொள்ளுங்கள். இப்போது மீண்டும் தமது முந்தய பந்தா விலாசங்களை காட்ட முற்படத்தொடங்கியுள்ளனர். மீண்டும் விஜபி(VIP) களாக தங்களை இனங்காட்டி மூக்கு நுழைக்கத்தொடங்கியுள்ளனர். 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாம்'
கடந்த 4மாதமாக ஈழமுரசின் வருமானம் யாருக்கும் தெரியாது? ஏற்கனவே தமிழின் பெயரால் சித்தசுவாதீனமற்றுப்போயுள்ள மருத்துவரிடம் கட்டிடம் கட்டும் வியாபாரத்துக்கு அமைப்பின் இலாபத்துக்கு என வாங்கிய கடன் 170ஆயிரம் டொலர்கள் மீளக்கொடுக்காமல் நட்டமடைந்த போது நட்டக்கணக்கு காட்டிய உதவாதவன் லாபம் வியாபாரத்தில் வந்தபோது இது அமைப்பின் வியாபாரமல்ல தமது சொந்த வியாபாரமென மே 18க்கு முதலே வன்னி தலைமை இருக்கும் போதே மகா மோசடி செய்தவர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இப்போது இந்த வீட்டை விற்க முற்படும் போது இதை போய் கேள்வி கேட்டால் இதுவும் தங்களின் சொந்த வீடு என சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை அவுஸ்ரேலிய கணக்காளர்களே!
புறொரெக்ட் தமிழ்ஸ்(PROTECT TAMILS) என்ற பெயரில் புறப்பட்டோம் புறோராம்(PROTAM ) என்ற பெயரில் இன்னொரு மோசடிக்கு....இது தமிழரை காப்பற்றவில்லை. தமது குடும்பத்தை காபாற்ற நல்ல நகைச்சுவையாளனையும் மோசடிகும்பல் பயன்படுத்திக்கொண்டது. லாவ்ப் இன் லாவ்ப்(LAUGH IN LAUGH)...... மக்களே கவனம்... எச்சரிக்கை தேவை.... சிரிக்க வைத்தே உங்களை கவிழ்க்கப்போகிறார்கள்.
போராட்டத்தின் தூண்களாக இரத்தம் சிந்தி விழுப்புண்ணடைந்து எதிரியின் சிறைக்கூடங்களில் எதிர்காலம் அறியாமல் பல்லாயிரம் போராளிகள் ஒரு புறம். போராளிக்கணவனை இழந்த, போராளி மனைவியை இழந்த, தங்கள் பிள்ளைகளையும் இழந்த போராளிகள், தன் போராளி பெற்றோரை இழந்து அநாதைகளாக குழந்தைகள் முகாம்களிலும், இறந்து போன பெற்றோரின் உறவினர் தயவிலும் ஒர் அநாதைக்குழந்தைகளின் கூட்டம் எதிர்காலம் ஏதுமறியாமல் இருக்க, மறுபுறம் எமது இனிய மக்கள் எல்லா வாழ்வாதாரங்களையும் தொலைத்துவிட்டு நிர்க்கதியாக முகாம்களில் இருக்க, இந்த புலம்பெயர் தேசத்தில் தமது குறுகிய கால சிறைவாசத்தை அனுபவிக்க வக்கில்லை; போராட்டத்தின் பெயரால் சுரண்டிய கட்டிட வியாபாரத்தை தமது சொந்த வியாபாரமாக்கி தமது சொந்த குடும்ப நலனில் உல்லாசம் போய்க்கொண்டு ஊரான் சொத்தை கொள்ளையடிக்க அவுஸ்ரேலிய வாழ் அறிவுக்கொழுந்துகளே, இந்தப் பகல் கொள்ளையை அனுமதிக்கப்போகிறீர்களா? முடிந்தால் இதனை ஒரு பொது சொத்தாக்கி மேலே சொன்ன அந்த பாவப்பட்ட போராளிகளுக்கும் மக்களுக்கும் இந்தப்பணம் போய்ச்சேர வழி செய்யுங்கள்.
இந்த வீடு 2000ம் ஆண்டில் வாங்கும் போது 255ஆயிரம் டொலர்களாகும். இப்போது இதன் பெறுமதி 600ஆயிரம் டொலர்களுக்கும் அதிகமாகும். அகதிகள், வன்னி முகாம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் மேல் உங்களுக்கு யாருக்காவது உண்மையில் அக்கறையிருந்தால், குவிந்துள்ள மக்கள் சொத்தை பொதுச் சொத்தாக மாற்றும் படி கோருங்கள்.இது தானே நியாயம். இதுதானே உண்மை. இதுதானே மக்கள் நலன். இதுதானே உண்மையான அரசியல். பொதுநிதியத்தை இங்கு எந்த வேலைக்கும் பயன்படுத்த முடியாத வண்ணம், மண்ணில் வாழும் மக்களுக்கான ஒரு பொதுநிதியமாக மாற்றக் கோருவது தான், உண்மையான மக்கள் நலனாகும். அப்படி மாற்றக் கோருங்கள். அப்போது தெரியும் உங்கள் இந்த பினாமிகளின் நேர்மையும், தமிழ்மக்கள் பற்றிய அவர்களின் உண்மையான அக்கறையும்.
புலத்து மக்களின் சொத்தை, ஈழத்து தமிழ் மக்களுக்கான பொது நிதியமாக்கு!
அந்த பொது நிதியத்தை இங்குள்ளவர்கள் பயன்படுத்த முடியாததாக்கு!
பொது நிதியத்தை சட்டபூர்வமான சர்வதேச நிதியமாக்கி, புலத்து தமிழ்மக்களின் பொதுக் கண்காணிப்பில் வை! இன்று இதை செய்ய மறுப்பது, தமிழ் மக்களுக்கு எதிரானது. பொதுச் சொத்தை சிலர் திருடுகின்ற, திருட்டுத்தனமாகும். இதை பொதுவில் கோராமல் இருத்தல், இந்த திருட்டுக்கு உடந்தையாகும். இந்த திருட்டுக்கு அரசியல் சாயம் பூசி உதவுவது, கிரிமினல் தனமாகும்.
பின்குறிப்பு:
இந்த வீட்டில் இருக்கும் மாவீரர்களின் புகைப்படங்கள் இலவசம்
பழைய எரிமலை, ஈழமுரசு பத்திரிகைகள் எடுக்கவிரும்புபவர்கள் எடுக்கலாம் இலவசம்
பழைய ஒளிவீச்சுக்கள், போராட்டகால சீடிக்கள், ஒளி ஒலி நடாக்கள் இலவசம் எடுத்துச்செல்லவும்
வீடு விற்பனைக்கு முன்னர் தேவையானவர்கள் மேல் உள்ளவற்றை யாரும் எடுத்துச்செல்லலாம்.
(இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)
தொடர்புகளுக்கு... 0061-402213800
'யாரேனும் தவறு செய்தால் தண்டிக்க வசதியிருப்பின் தண்டித்துவிடு ;தண்டிக்க வசதியின்றேல் பார்வையாலும் மௌனத்தாலும் அதிருப்தியைத் தெரிவித்துவிடு'
Thenee






0 விமர்சனங்கள்:
Post a Comment