தீவிரவாதிகளை இல்லாதொழித்து அவர்களின் ஆயுதங்களைக் கண்காட்சிப்படுத்தும் ஒரே இராணுவம் இலங்கை இராணுவமென ஜனாதிபதி தெரிவிப்பு-
தீவிரவாதிகளை இல்லாதொழித்து அவர்களின் ஆயுதங்களைக் கண்காட்சிப்படுத்தும் ஒரே இராணுவம் இலங்கை இராணுவமாகும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராணுவத்தின் 60வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏனைய நாட்டு இராணுவத்தினர் தமது ஆயுதங்களைக் கண்காட்சிப்படுத்துவதற்காகவே கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதாகவும், தமது இராணுவத்தினர் தீவிரவாதிகளின் ஆயுதங்களைக் கண்காட்சிப் படுத்தவதற்காகவே இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய நாடுகள் தமது நாட்டு இராணுவத்தினரைப் பின்பற்றுகின்றன என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment