தங்களது "தலைவர்களை" தமிழ்நாட்டில் தேட ஆரம்பித்திருக்கும் "ஈழத் தமிழர்கள்"
"இலங்கைக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்கு பாராட்டு”
தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் இலங்கைக்கு சென்று வந்த பின் சென்னையில் மேற்கண்ட வாசகங்களுடன் சில போஸ்டர்கள் முளைத்தன.
இதை கண்டித்து, இணையத்தளங்களில் சிலர், முக்கியமாக இலங்கைத் தமிழர்கள் கலைஞரை மிகவும் ஆத்திரத்துடனும் வெறுப்புடனும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்லது. அவர்களுடைய கோபம் நியாயமானதே. ஆனால் கோபப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?
வயிற்று வலி எனக்கு என்றால், நான்தானே மருந்து சாப்பிட வேண்டும். கசப்பு என்பதால் எனக்காக இன்னொருவர் மருந்து சாப்பிட முடியுமா?
பிரபாகரனின் முடிவுக்குப் பின்னால், ஈழத் தமிழர்களின் ஒருங்கிணைந்த தலைவர் யார்?
யாராக இருந்தாலும் அவர் ஈழத்தில்தானே இருக்க வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் தி.க தலைவர்கள் அந்தந்த கட்சிக்குதான் தலைவர்களே தவிர, ஈழத் தமிழர்களின் தலைவர்கள் அல்ல. அப்படி இருக்கவும் முடியாது.
ஆனால் அதை மறந்துவிட்டு, சில ஈழத் தமிழர்கள் தங்களது தலைவர்களை தமிழ்நாட்டில் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்களுக்கு ”நான்கே நாட்களில் இலங்கை பிரச்சனையைத் தீர்த்த கலைஞர்” போஸ்டர்கள் கண்களில் படுகின்றன. அவர் கலைஞர் அல்ல, கொலைஞர் என்று அனல் கக்குகிறார்கள். மீண்டும் சொல்கிறேன். உங்கள் கோபம் நியாயமானதே. ஆனால் கலைஞர் அல்லது கொலைஞரின் மேல் கோப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?
உங்கள் விடுதலைக்கு உங்கள் பங்கு என்ன?
இலங்கையில் உள்ள தமிழ்கட்சிகள் ஏன் தனித் தனி கட்சிகளாக இயங்குகின்றன?
ஏன் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை?
ஏன் அவர்களுக்குள் பொதுத் தலைமை இல்லை?
அவர்களில் எந்தக் கட்சியை அல்லது அமைப்பை இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்?
ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு இவர்களுக்கு பங்கே இல்லையா?
புலம்பெயர்ந்த தேசங்களில் புலிகள் ஒற்றுமையாகவா இருக்கின்றார்கள்?
களத்திலும் புலத்திலும் பிரபாகரன் கட்டிக்காத்த இலட்சியத்தை புலி உறுப்பினர்கள் கட்டிக்காக்கின்றார்களா?
ஈழத்தின் மனச்சாட்சியான இணையங்களை வாரி வசைபாடிய சார்புநிலை தமிழ் ஆங்கில ஊடகங்கள் தாங்கள் தமது மக்களுக்கோ உலகத்துக்கோ உண்மையை சொல்ல்கின்றனவா?
தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கருணாநிதியை அல்லது பிரபாகரனை திட்டித் தீர்த்துவிட்டு பொழுதை போக்குவதும், பிறகு ”மானாட மயிலாட” பார்ப்பதும் வாடிக்கை தான்.
தற்போது இலங்கைத் தமிழர்களும் பிரபாகரனை அல்லது கருணாநிதியைத் திட்டிவிட்டால் தங்கள் கடமை முடிந்தது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நினைப்பு மாறி, இது தங்கள் பிரச்சனை என்று நினைத்து ஒற்றுமையுடன் போராடும் வரை, தனி ஈழம் என்பது கனவாகவே நீடிக்கக் கூடிய அபாயம் உண்டு.
ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தமிழ்நாட்டு போஸ்டர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களை குறி வைத்து ஒட்டப்படுகின்றன. அதைப் படித்து நேரத்தை வீணடிக்காதீர்கள். ”மானாட மயிலாட” நிகழ்ச்சிகள் எங்கள் (தமிழ் நாட்டு தமிழர்களின்) நேரத்தை வீணடிக்கப் பிறந்த நிகழ்ச்சிகள். அதைப் பார்த்துவிட்டு கோபப்படாதீரகள். கலைஞர் மீதும், நமீதாக்கள் மீதும் கோபப்படுவதுதான் ஈழப்போராட்டம், தனி ஈழ உணர்வு என்று (கொச்சையாக) வரைமுறைப் படுத்தாதீர்கள்.
உங்கள் தலைவர் யார்? அவரை கண்டுபிடியுங்கள். அவரைக் கண்டுபிடிக்க உங்கள் கோபம் உதவட்டும். தனி ஈழம் பிறக்கட்டும்.
பொங்கும் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் ஆறரைக்கோடி உறவுகளும் வெற்றறிக்கை விட்டு விட்டு புலம்பெயர்ந்த தமிழரைபும் அவர்தம் இணையத்தளங்களையும் ஏமாற்றி விடுவார்கள் என்று சங்கே முழங்கு...
தமிமிழகத்திலிருந்து ஜேர்ணல்
0 விமர்சனங்கள்:
Post a Comment