படை வெற்றிக்கு பின்னரான தீர்வை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
ஸ்ரீலங்கா படையின ரின் வெற்றிக்குப் பின்ன ரான அரசியல் தீர்வை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் கள் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணே சனன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணமும் அதன் அடிப்படையில் எழுந்த
ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வரும்போது நாங்கள் கூடத்தான் வெடி கொளுத்தி கொண்டாடுவோம். இப்போதைய தேவையே கௌரவமான அமைதித்தீர்வுதான். ஆனால் அதனின்று நாம் வெகுதொலைவில் உள்ளோம்.
21 ஆண்டுகளாகியும் 13ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நடைமுறைக்கு வரவில்லை என்பது வரலாறு
இராணுவ வெற்றிக்குப் பிந்திய அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களாலும் அனைத்துலக சமூகத்தாலும் ஏற்கப்படக்கூடியது அல்ல.
வடபகுதி இன்று போர்க்களமாகி உள்ளதால் கிழக்குப் பகுதி அரசியல் போர்க்களமாகியிருக்கிறது.
நீங்கள் உங்கள் சொந்த மாகாண சபையை வைத்திருக்கின்றீர்கள். இது அரசியல் தீர்வு அல்ல, இது அரசியல் யாப்பின் ஒரு பகுதியாகும். அரசியல் யாப்புத் திருத்தம் 13ஆவது பிரிவைக் கூட நடைமுறைப்படுத்தவில்லை.
பேராசிரியர் திச விதாரணவின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் கடையை நீங்கள் மூடிவிட்டீர்கள்.
ஒட்டுமொத்த இராணுவ வெற்றிக்குப் பின்னைய அரசியல் தீர்வை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்க முடியாது. அனைத்துலக சமூகத்தைக் கூட இது திருப்திப்படுத்தாது. இதுவே கடினமான உண்மையும் ஆகும் என்று அவர்தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Uthayan






0 விமர்சனங்கள்:
Post a Comment