விடுதலைப்புலிகள் 12 பேர் இராணுவத்தினரிடம் சரண்:விசாரணைக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்
விடுதலைப்புலிகளின் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களோடு சேர்ந்து வந்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகத் தெரிவிக்கப்படும் விடுதலைப்புலிகள் 12 பேர் வவுனியா பொலிஸாரிடம் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் இரண்டு யுவதிகள் உட்பட 10 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், புதன்கிழமை விசுவமடு பகுதியில் மேலும் இரண்டு விடுதலைப்புலி உறுப்பினர்களாகிய யுவதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இவர்கள் வவுனியா பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் கூறியுள்ளது.வவனியா பொலிஸார் இவர்களை விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment