பிரான்ஸில் நடைபெற்ற இந்திய தூதரகத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது தமிழர் சிலர் கைது.
இன்று (பெப். 17) பிரான்ஸில் இந்திய தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் சிலர் பிரான்ஸ் காவற்துறையால் கைது செய்யப்பட்டதாக
தெரிய வருகிறது. இந்திய தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இந்திய தூதரகத்தின் இரண்டு மோட்டார் வண்டிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட புலி ஆதரவு முகவர் அமைப்பைச் சேர்ந்த பதினைந்துக்கு மேற்பட்டவர்கள் இதுவரை பிணை மறுக்கப்பட்டு தொடர்ந்து தடுப்புக்காவல் சிறையில் வைக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment