இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Friday, February 6, 2009

இலங்கை தமிழருக்காக திமுக செய்த தியாக பட்டியல்

இலங்கை தமிழர் பிரச்சனையில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக சாடி வரும் நிலையில், இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. செய்த தியாகங்களையும், போராட்டங்களையும் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி:- தி.மு.க. அரசு பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றதும் ஆத்திரப்பட்டு உங்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார்களே, தி.மு.க. இலங்கை தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லையா?

கலைஞர்:- இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. எந்தெந்த வகையில் போராடியிருக்கிறது, என்னென்ன தியாகங்களை செய்திருக்கிறது என்பதையும் ஆட்சியையே இழந்ததையும் இலங்கை தமிழர்களும், உலக தமிழர்களும், ஏன் இந்திய தமிழர்களும் நன்கறிவார்கள். ஆனால் தமிழர்களுக்காக தாங்கள்தான் போராட புறப்பட்டிருக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். அவர்களும் தெரிந்து கொள்வதற்காக இதோ ஒரு பட்டியல்!

1956-ம்ஆண்டு அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிதம்பரம் கழக பொதுக்குழுவில் இலங்கை தமிழர்களுக்காக நான் முன்மொழிந்த தீர்மானம்,

1958-ம் ஆண்டு இலங்கையில் உரிமைகள் பறிக்கப்படுகின்ற தமிழின மக்களுக்காக பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஒரு மாபெரும் பேரணியை தி.மு.க. நடத்தியதை தொடர்ந்து இந்த பட்டியல் இங்கே இடம் பெறுகிறது.

*24.8.1977 அன்று சென்னையிலே 5 லட்சம் பேர் கலந்துகொண்ட பேரணி. கோரிக்கை வைக்காமலே அனைத்து கடைகளும் அன்று சென்னையில் மூடப்பட்டன.

*13-8-1981 அன்று பிரதமருக்கு இலங்கையிலே நடைபெறும் கொடுமை குறித்து தந்தி அனுப்பினேன்.

18.8.1981 அன்று பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் தந்தி கொடுத்தேன்.

*21.8.1981 அன்று சட்டசபையில் அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினேன்.

*29.8.1981 அன்று தி.மு.க. கண்டன பேரணி-அரசு தடை தடையை மீறி ஊர்வலம்-250 பேர் கைது.

*2.9.1981 அன்று சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்.

*3.9.1981 முதல் சென்னையில் அன்றாடம் தடை மீறி ஊர்வலம்-இலங்கை தூதுவரது அலுவலகம் முன்பு மறியல்.

*15.9.1981 அன்று தடையை மீறி ஊர்வலம் புறப்பட்ட நான் கைது.

*27.7.1983 சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரணி

*28.7.1983 தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரணி.

*2.8.1983 அனைத்துக்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு.

*4.8.1983 மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் கறுப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம். தமிழர் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழிலகங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக்கொடி.

*5.8.1983 அன்று தமிழகம் முழுவதும் ரெயில் நிறுத்த அறப்போராட்டம்.

*11, 12, 13, 14.8.1983 தமிழகம் முழுவதும் கண்டன கூட்டங்கள்.

*10.8.1983 நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.

*1983 ஆகஸ்டு முதல்-இரண்டு கோடி கையெழுத்துக்கள் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

*8.8.1983 டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாநோன்பு.

*85-ம் ஆண்டு மார்ச் 29 முதல் ஒருமாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் சென்று இலங்கை தமிழர் இன்னல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஒருமாத காலத்திற்கு விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.


*ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.கழக பொதுக்குழு முடிவின்படி 29.4.1985 அன்று சென்னையில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30-ம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3-ம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6-ம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7-ம் தேதி தஞ்சையில் 6000 பேரும், 8-ம் தேதி வட ஆற்காட்டில் 2500 பேரும், 13-ம் தேதி தென் ஆற்காட்டில் 3000 பேரும், 15-ம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16-ம் தேதி செங்கை அண்ணா மாவட்டத்தில் 3000 பேரும், 17-ம் தேதி கோவை நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும், 18-ம் தேதி ராமனாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20-ம் தேதி மதுரை மாவட்டத்தில் 5000 பேரும், 22-ம் தேதி நெல்லை, குமரி, புதுவையில் 5500 பேரும் ஈடுபட்டு கைதாகினர்.

*16.5.1985 அன்று காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.

*23.8.1985 அன்று சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் "டெசோ''அமைப்பின் சார்பில் பேரணி. பேரணி முடிவில் நாடு கடத்தும் காரியம் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு உடனடியாக திரும்ப பெறப்பட்டது.

*30.8.1985 அன்று தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டம். ஆயிரக்கணக்கானவர்கள் கைது.

*டெசோ அமைப்பின் சார்பில் அக்டோபர் 3-ம் தேதி கோவையிலும், 4-ம் தேதி திண்டுக்கல்லிலும், ம் தேதி தூத்துக்குடியிலும், 6-ம் தேதி திருச்சியிலும், 7-ம் தேதி சேலத்திலும், 13-ம்தேதி வேலூரிலும் மிகப்பிரமாண்டமா பேரணிகளும், கூட்டங்களும் நடை பெற்றன.

*4.5.1986 அன்று மதுரையில் "டெசோ'' அமைப்பின் சார்பில் அகில இந்திய தலைவர்களையெல்லாம் அழைத்து மாநாடு. பொதுக்கூட்டம்.


*31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு கறுப்புச்சின்னம் அணிந்து கண்டன ஊர்வலங்கள்-பொதுக்கூட்டங்கள்.

*3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, போராளி இயக்கங்களுக்காக உண்டியல் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்த நிகழ்ச்சி.

*1987-ம் ஆண்டு அக்டோபரில் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் கொடுக்கப்பட்டன.

*1987-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தி.மு.க. நடத்திய பேரணி

*16.10.1987 அன்று தளபதி கிட்டுவை காணச்சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக்கை.

*இலங்கை தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல்-அமைச்சர்களுக்கும் இந்தியாவிலுள்ள எதிர்க் கட்சி தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன்.

*17.10.1987 அன்று கிட்டுவை சந்திக்கச்சென்ற ஆற்காடு வீராசாமி, என்.வி.என்.சோமு கைது.

*22.10.1987 அன்று சென்னையில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம்.

*24.10.1987 அன்று ரெயில் நிறுத்தப்போராட்டம். தொடர்ந்து மறியல் போராட்டம்-பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது.

*6.11.1987 அன்று சென்னையில் ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப்புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச்சங்கிலி.

*11.11.1987 தமிழகம் முழுவதும் மனித சங்கிலி.

*15.3.1989 டெல்லியில் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களை இரண்டு முறை சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தேன்.

*2.5.1989 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி முரசொலி மாறனுக்கு இலங்கை பிரச்சினை குறித்து நீண்ட கடிதம். 15.5.1989 அன்று முரசொலிமாறன் பிரதமர் ராஜீவ் அவர்களுக்கு பதில் கடிதம்.

*15.6.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் இலங்கை பிரச்சினை குறித்து பேசினேன்.

*15, 16.12.1989 ஆகிய நாட்களில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளான பாலசிங்கம், யோகி ஆகியோருடன் சந்திப்பு.

*20.12.1989 அன்று பிரதமருடன் சந்திப்பு.

*4.1.1990 பல்வேறு போராளி குழுவினருடன் பிரதமர் கூறியதின் பேரில் சந்திப்பு.

*1991-ம் ஆண்டு இலங்கை தமிழர் பிரச்சினைக்காக கழக ஆட்சி கலைக்கப்பட்டது.

*17.7.1995 அன்று ஒவ்வொரு நகரத்திலும் கழகத்தினர் கறுப்புச் சின்னம் அணிந்து உண்ணா நோன்பு.

*2.11.1995 அன்று சென்னையில் கறுப்புக் கொடி ஏந்திய பேரணி

*3.11.1995 அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்புக்கொடி பேரணி

*தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 25 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க நிதி.

*30.11.1995 முழு அடைப்பு.

இவ்வாறு இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால், இதனையெல்லாம் தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இலங்கை தமிழர் பிரச்னையில் நம்மீது களங்கம் கற்பிக்க நினைத்தால், அது நிச்சயமாக நிறைவேறாது என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top