இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Friday, July 31, 2009

கே.பி. வருவதை எதிர்க்கும் புலிகளின் சதிக் கூட்டம்

"தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று அறியப்பட்டு வந்த அரசியல் இராணுவக் கட்டமைப்பின் இயக்கம் இலங்கையின் எல்லைக்குள் பெரும்பாலும் செ யலிழந்துவிட்டது.
புலிகளின் உயர் தலைவர் பிரபாகரனும் சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட அவர்களின் இராணுவத் துருப்பினரும் இப்போது உயிர் வாழ்வோர் மத்தியில் இல்லை. அந்த அமைப்பின் அரசியல் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஏனைய உறுப்பினர்கள் இலங்கை அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காடுகளில் சிறு குழுக்களாகச் சிக்குண்டுள்ள புலிகள் மட்டும் வாய்ப்பும், இடமும் கிடைக்கையில் சிறிய அளவிலான கெரில்லா யுத்தத் தாக்குதல்களை நடத்த முயன்று வருகின்றனர். அவர்களின் தாக்கம் புறக்கணிக்கத்தக்கது.
இதேசமயம், மறைந்திருந்து செ யல் நடவடிக்கைகளில் ஈடுபடும் புலிகளின் செ யற்பாட்டாளர்களை நாட்டின் பல பகுதிகளிலும் திட்டமிட்ட வகையில் தேடி வேட்டையாடும் விவகாரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒழுங்காக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்கள் இந்த விவகாரங்கள் ஊடகங்களுக்கு எட்டாமல் பார்த்துக்கொள்வதிலும் சிரத்தையாக உள்ளனர். இதேபோன்று, இடம்பெயர்ந்த அகதிகளுக்கு மத்தியில் அவர்களின் முகாம்களில் ஒளிந்திருக்கும் புலிகளைக் களைந்தெடுக்கும் நடவடிக்கையும் ஒழுங்காக முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் நடைமுறையில் அழித்தொழிக்கப்பட்டாலும் அதன் வெளிநாட்டுக் கட்டமைப்பு தொடர்ந்தும் ஆபத்தானதாகவே விளங்குகின்றது.
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் மூலங்களை புலிகளின் "எச்சங்கள்" அல்லது "மிச்சங்கள்" என்று வர்ணிக்கும் போக்கு ஊடகங்களின் ஒரு பகுதியிடையே காணப்படுகின்றது. இந்த விவரிப்பு சரியானதல்ல. புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புகள் உறுதியானவையாகவும் எப்போதும் போல திடமானவையாகவுமே உள்ளன. புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் கணிசமான பகுதியினர் மத்தியில் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் ஆதரவையும் செ ல்வாக்கையும் பெற்று அனுபவித்து வருகின்றது.
இத்தகைய பருத்த மூலாதாரம் தம் வசம் இருந்தும் கூட, அத்தகைய வளத்தை யதார்த்த பூர்வமான வகையில் பயன் தரக்கூடிய முறையில் பிரயோகிக்கவோ, களத்துக்குக் கொண்டுவரவோ புலிகள் அல்லது புலிகள் ஆதரவு மூலங்களால் முடியவில்லை. அதற்குப் பிரதான காரணம், பிரபாகரனின் மறைவை அடுத்து வெளிநாட்டில் உள்ள புலிகளின் தரப்பில் ஏற்பட்ட ஐக்கியமின்மையே. சு ருக்கமாகக் கூறுவதானால் பிரபாகரனின் பின்னராக விரியும் களத்தில் தலைமை பற்றிய இழுபறியே பிரச்சினையாகும்.
இராணுவப் பின்னடைவுகளின் பின்னர் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகளே தப்பிப் பிழைத்து எஞ்சியவை என்ற காரணத்தினால், இலட்சியத்தை நோக்கி முன்நகர்வதில் இந்தப் பிரிவுகளின் பொறுப்பு கடப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.
பிரிவுகள் பிளவுகள்
அந்தப் பொறுப்பை நிறைவு செ ய்வதற்கு
முதலாவதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்போதைய சரியான இக்கட்டான நிலைமை குறித்து நனவு பூர்வமான திறனாய்வும், விழிப்புணர்வும் அவசியம்.
இரண்டாவதாக யதார்த்தபூர்வமான, சா த்தியப்பாடான அணுகுமுறை தெரிவுசெ ய்யப்பட்டு பின்பற்றப்படவேண்டும்.
மூன்றாவதாக ஏற்றுக்கொள்ளத்தக்க, திறமைமிக்க ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும்.
இந்த விடயங்களில், இதுவரை எந்த இணக்கமுமே ஏற்படவில்லை.
ஆனால் முரண்பாடுகள்தாம் அநாகரிகமான முறையில், தனிப்பட்ட மட்டத்தில் மோசமாக வெடித்துள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு யார் தலைமை வகிக்கின்றார்கள் என்பதே இப்போது அடிப்படைப் பிரச்சினையாகும். குழுப் பிளவுகள் மூர்க்கமடைந்திருக்கின்றன.
வெளிநாட்டில் பெருமளவில் ஈட்டப்படும் வருமான விவகாரமே நெருக்கடியை மேலும் தீவிரமாக்கியிருக்கின்றது. இப்போது அவற்றைக் கட்டுப்படுத்திக் கண்காணிப்பது யார்? அத்தகைய கட்டுப்பாடுகளைப் பயன்தரும் முறையில் தொடர்ந்து பேணமுடியுமா? வழமைபோல நிதி சே கரிப்பைத் தொடர இயலுமா? அல்லது அது வறண்டு போய்விடுமா? எப்படி நிதி சே கரிப்பு விடயத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்?
விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்குள் இன்று வாழும் சு தந்திரமாக உள்ள ஒருவர் என அறியப்படுபவர் "கே.பி." என்று அழைக்கப்படும் செ ல்வராசா பத்மநாதன். இவரே எஞ்சியுள்ள புலிகளின் தலைவர்களுள் மிக சிரேஷ்ட தரத்தில் உள்ளவர்.
கே.பியே ஒரு காலத்தில் புலிகளின் பிரதான ஆயுத சு வீகரிப்பாளராக விளங்கியவர். புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகளையும் நிதி சே கரிப்பு பரப்புரையையும் கண்காணித்து வழிநடத்தியவர்.
கே.பியின் பங்கு
2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் கே.பியின் பங்களிப்பு புலிகள் இயக்கத்தில் குறைத்து மதிப்பிடப்பட்டது. அவர் தரம் தாழ்த்தப்பட்டு, பின்தள்ளப்பட, அவருக்குப் பதிலாக புதியவர்கள் வளர்த்தெடுக்கப்பட்டனர். கே.பிக்கு எதிரான விஷமப் பிரசா ரத்தை புலிகளின் முன்னைய அரசியல் பொறுப்பாளர் சு ப்பையா பரமு தமிழ்ச் செ ல்வனும், முன்னாள் வெளிநாட்டு நிர்வாகப் பொறுப்பாளரான காஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் வீரகுட்டி மணிவண்ணனும் தலைமை தாங்கி முன்னெடுத்தனர்.
கே.பிக்கு எதிராக ஊழல், திறமையின்மை, பாலியல் முறைகேடு போன்ற பல்வேறு குற்றச்சா ட்டுகள் கொண்டுவரப்பட்டன. ஆயினும், பிரபாகரனினால் "கழுதை" என அன்புடன் விளிக்கப்பட்ட இந்த மூத்த புலி உறுப்பினர், தாம் நிரபராதி என்பதை நீண்ட இழுபறி விசா ரணைகளின் மூலம் நிரூபித்தார்.
தமது பெயரைக் காப்பாற்றிக்கொண்ட கே.பி., மனம் நொந்த நிலையில், 2003 இல் வெளிநாட்டில் சு யமாகவே பணியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டார். எனினும் பிரபாகரனுடன் தொடர்புகளைப் பேணி வந்தார். தாய்லாந்து வாசி ஒருவரை மணந்துகொண்ட கே.பி. குடும்பகாரனானார்.
2006 இல் இருந்து புலிகள் இராணுவப் பின்னடைவுகளைச் சந்திக்கத் தொடங்கினர்.
ஆயுதங்களை சு வீகரித்து, பாதுகாப்பாக வட பெரு நிலப்பரப்பான வன்னிக்குத் திறமையாகக் கடத்தும் விடயத்தில் கே.பிக்கு நிகரான மாற்று ஆளைப் புலிகள் பெறமுடியாமல் போனமையே இதற்குப் பிரதான காரணமாகும்.
நட்பு நாடுகள் தந்துதவிய தகவல்கள் மூலம் புலிகளின் எட்டு அல்லது ஒன்பது கப்பல்களை இலங்கைக் கடற்படை தாக்கி அழித்தது.
விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்ட பிரபாகரன் 2008 இல் கே.பி. பக்கம் திரும்பி ஏதாவது செ ய்யுமாறு கோரினார். இளைப்பாறல் நிலையில் இருந்து மீண்ட கே.பியினால் கடுமையான முயற்சியின் மூலம் மூன்று ஆயுதக் கப்பல்களை அனுப்பி வைக்க முடிந்தது. அவற்றில் ஒன்று இலங்கைக் கடற்படையால் வழிமறிக்கப்பட்டபோதும் மற்றைய இரண்டும் புலிகளை எட்டியதன் மூலம் புலிகளுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட உயிர்வாயுவை அந்த அமைப்புக்கு வழங்கின.
இதனால் நன்றி உணர்வுடன் கே.பியை மீண்டும் புலிகள் இயக்கத்தில் சே ருமாறு கோரினார் பிரபாகரன். தன்னை வெளிநாட்டு புலிகள் அமைப்புக்குப் பொறுப்பானவராகப் புலிகளின் தலைமை நியமிக்குமானால் புலிகள் இயக்கத்தில் மீண்டும் சே ரத் தாம் தயார் என்று பத்மநாதன் கூறினார். அதன் பிரகாரம் 2009 ஜனவரியில் "சர்வதேச உறவுத் துறை" என்ற தனிப்பிரிவு புலிகள் அமைப்பில் உருவாக்கப்பட்டு செ ல்வராசா பத்மநாதன் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பனிப்போர்
புதிய சர்வதேச உறவுப் பிரிவின் தலைவர் பொறுப்பு என்பது நடைமுறையில் பார்த்தால் புலிகளின் பூகோளத் தலைவர் பதவிக்கு நாசூக்காக ஒப்பானதாகும். குறைந்தபட்சம் அப்படித்தான் அதனை கே.பி. வரைவிலக்கணப்படுத்திக்கொண்டார். ஆனால், புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாகவிருந்த காஸ்ட்ரோவோ தமது கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க இணங்கவில்லை. கே.பிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என வெளிநாட்டுக் கிளைகளை அவர் பணித்தார்.
இது, புலம்பெயர்ந்தோர் மத்தியில் கே.பி. மற்றும் காஸ்ட்ரோ விசு வாசிகளிடையே "பனிப்போர்" உருவாக வழி செ ய்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று உதவி அரச அதிபர் பிரிவுக்குள் கடைசிக் கட்டமாகப் புலிகள் முற்றுகைக்குள் சிக்குண்டிருந்தமையால் இந்தப் பனிப்போர் விவகாரம் பிரபாகரனின் போதிய கவனத்தை எட்டவில்லை. இதனால், காஸ்ட்ரோவினால் தாம் விசனத்துக்கு உட்படுத்தப்படுகின்றார் எனக் கே.பி. கருதினார்.
கொழும்பு மீது சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மோதல் நிறுத்தம் ஒன்றை எட்டச் செ ய்யும் நகர்வுகளில் கே.பி. தாமே தீவிரமாக ஈடுபட்டார். சர்வதேச தரப்புகளின் ஆதரவுடன் பிரபாகரனும் புலிகளின் ஏனைய பல தலைவர்களும் தங்களின் குடும்பத்தவர்களுடன் சே ர்ந்து நாட்டை விட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடும் ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்தவும் அவர் முயன்றார். ஆனால் கடைசி நேரம் வரை அதற்கு இணங்க பிரபாகரன் மறுத்தார். ஆனால் புலிகளின் தலைவர் இவ்விடயத்தில் தமது மனதை மாற்றிக்கொண்ட போது, அதற்கான காலம் கடந்துவிட்டிருந்ததுது.
இதேசமயம், தற்காலிக ஓய்வு ஒன்றுக்கு இலங்கையைத் தள்ள வைக்கும் வகையில் சர்வதேச ஆதரவைத் திரட்டும் நோக்கத்துடன் கே.பி. கையாண்ட இராஜதந்திர நகர்வுகள் காஸ்ட்ரோவினாலும் அவரது நீசர்களாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.
இலங்கையில் மனிதாபிமானத் தலையீடுகளை உடன் முன்னெடுக்கும்படி மேற்குலகைக் கோரும் வகையில் மேற்கு நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு வெளிநாட்டில் உள்ள புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் கே.பி. கோரினார். அப்பாவி மக்களின் மனிதப் பேரவல நிலைமையை முன்னிலைப்படுத்துமாறு அவர் வேண்டினார். மேற்கு நாடுகளின் கவனத்தைத் திருப்பும் வகையில் தாம் எடுக்கும் முயற்சிக்கு வலுவூட்டவே இதனை மேற்கொள்ள அவர் வேண்டினார்.
ஆனால், கே.பியின் எத்தனங்களை முறியடிக்கத் தீர்மானித்த அவரது வைரியான காஸ்ட்ரோவோ, விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு புலம் பெயர்ந்த தமிழர்களைப் பணித்தார். புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளையும் பிரபாகரனின் படங்களையும் தாங்கி வெளிப்படத் தொடங்கினர். இதைப் பார்த்து மேற்கு நாடுகளின் அரசு களும் ஊடகங்களும் அதிர்ச்சியில் உறைந்தன. இதன் மூலம் புலம்பெயர் புலிகள் தங்களைத் தாங்களே சு ட்டுக் கொண்டனர் கால்களில் அல்ல, தங்கள் தலைகளிலேயே.
யுத்தம் தீவிரமடைந்ததால் வன்னிக்கும் வெளிநாட்டில் இருக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் நெருக்கடிக்குள்ளாகின. எனவே, காஸ்ட்ரோ தம் சா ர்பில் சர்வதேசப் பிரதிநிதி ஒருவரை நியமித்தார். இந்த நபர், புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகளைக் கவனிக்கவேண்டியவராக இருந்தார்.
நெடியவன்
காஸ்ட்ரோவின் பிரதிநிதியாக வந்தவர் 33 வயதுடைய பேரின்பநாயகம் சிவபரன். "நெடியவன்" (உயரமானவன்) என்ற புனை பெயர் இவருடையது. நெடியவன் தமது 18 ஆவது வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். மேற்படிப்புக்காக புலிகள் இவரை ரஷ்யாவுக்கு அனுப்பினர். எனினும் சந்தர்ப்பவசமாக சிவபரன் தமது பட்டப்படிப்பை அங்கு பூர்த்தி செ ய்யவில்லை.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் செ யற்பட்ட நெடியவன், தாய்லாந்தில் இடம்பெற்ற நான்காவது சு ற்று அமைதிப் பேச்சின்போது தமிழ்ச்செ ல்வனுடன் உடன் செ ன்றார். அதன் பின்னர் அவர் ஐரோப்பாவில் காலூன்றினார்.
2002 முதல் 2005 வரையான அமைதிப் பேச்சு க் காலத்தில் புலிகள் அமைப்பு தனது செ யற்பாட்டாளர்கள் பலரை மேல்நாட்டுக்கு அனுப்பியது. இவர்களில் பெரும்பான்மையானோர் புலிகளின் அரசியல்பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சே ர்ந்தவர்களாவர். நெடியவன் நோர்வேயை வாசமாகக் கொண்டார்.
நெடியவன் என்று அழைக்கப்படும் சிவபரன், சிவகௌரி சா ந்தமோகனைத் திருமணம் செ ய்தார். அவரின் (சிவகௌரியின்) தந்தையின் சகோதரர்தான் ரஞ்சன் லாலா என்று அழைக்கப்படும் ஞானேந்திரமோகன் ஆவார். ஞானேந்திரமோகன் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் மட்டுமன்றி பிரபாகரனின் பெரும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கியவரும் கூட. யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் செ ன்றுகொண்டிருந்த சமயம் ரஞ்சன் லாலா இராணுவத்தினரால் சு டப்பட்டார்.
இந்தத் திருமண சம்பந்தம் புலிகள் அமைப்புக்குள் நெடியவனின் நிலையை ஸ்திரமாக்கியது. காஸ்ட்ரோ வழங்கிய அதிகாரத்தையும் சே ர்த்துக்கொண்ட அவர் அதை வைத்துக் கொண்டு, புலிகளின் உலகளாவிய தலைவராக வரும் கே.பியின் முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தத் தொடங்கினார்.
புலிகளின் இராணுவத் தோல்விக்குப் பின்னர் வெளிநாட்டில் இந்தப் பனிப்போர் பகிரங்கமாக வெளிப்படத் தொடங்கியது. அதேசமயம், காஸ்ட்ரோ முள்ளிவாய்க்காலில் தற்கொலை செ ய்துகொண்டார்.
தலைமைத்துவம்
யதார்த்தத்தில் நடந்தேறியவை அனைத்தும், புலிகளின் கட்டமைப்பில் அதன் வெளிநாட்டுப் பிரிவு மட்டுமே செ யல்திறனுடையதாக எஞ்சு ம் நிலையை உருவாக்கின. எனவே, இந்த வெளிநாட்டுப் பிரிவுகளின் தலைவரே "புலிகளின் பிரபாகரன்" என்ற தலைமைக்கு யதார்த்தத்தில் ஒப்பானவர் என்றாகும் சூழல் ஏற்பட்டது.
புலிகளின் தலைமை மாடத்தை அலங்கரிக்க கே.பி. முயன்றபோது நெடியவன் அதனை எதிர்த் தார். கே.பிக்கு எதிரான வெளிநாட்டில் வதியும் உதிரிகளான சில புலிகளின் ஆதரவு இவ்விடயத்தில் நெடியவனுக்குக் கிட்டியது.
கே.பி. எதிர்ப்பு அணி, அவருக்கு எதிராக விஷமத்தனமான துவேஷமிக்க வசைபாடும் பிரசா ரத்தை ஆரம்பித்தது.
ஒருபுறம் பிரபாகரனை ஆயுதப் படைகளிடம் காட்டிக் கொடுத்தவர் என்றும், மறுபுறம் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற உண்மையை மறைக்கின்றார் என்றும் கே.பி. மீது குற்றம் சு மத்தப்பட்டது. பல்வேறு சர்வதேச உளவுப் பிரிவுகளிடம் வேதனம் பெறுபவராகவும் அவர் மீது குற்றம் சு மத்தப்பட்டது.
புலிகளின் கப்பல்கள் பற்றிய உளவுத் தகவல்களை இலங்கைக் கடற்படைக்கு வழங்கியவரே கே.பிதான் என்றும் கூட கதைகள் பரவவிடப்பட்டன.
கே.பி. மற்றும் அவரது நன்னடத்தை பற்றிய விடயங்கள் வயதான தலைமுறையின் விடயமறிந்த பிரிவினருக்கு நன்கு தெரியும் என்றாலும், வெளிநாட்டில் உள்ள புலிகளின் இளம் தலைமுறையும், புலம்பெயர் ஆதரவாளர்களும் அவர்பற்றி அறிந்தவை சொ ற்பமே. எனவே, இது, அவருக்கு எதிரானவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பானதாக அமைந்தது.
புலிகளின் வெளிநாட்டு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் நெடியவனின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் கே.பிக்குத் தனது கருத்துகளை சரிவரப் பரப்புரை செ ய்வது சா த்தியமற்றதாக அமைந்தது. பெரும்பாலும் புலிகளின் ஊடக நிறுவனங்கள் கே.பியை இருட்டடிப்பு செ ய்த அதேசமயம், வேறு பல ஊடகங்கள் கே.பி. மீது வசைமாரி பொழிந்து தள்ளின. தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகத் தனது சொ ந்த இணையத் தளத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டத்துக்கு கே.பி. தள்ளப்பட்டார்.
பின்னடைவு
புலிகளின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களான நெடுமாறன், வைகோ போன்றோரின் போக்கு, கே.பிக்குப் பெரும் பின்னடைவைத் தந்தது. கே.பி. தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காகத் தொலைபேசியில் நீண்டநேரம் செ லவிட வேண்டி நேர்ந்தது என்றும் கூறப்படுகின்றது. இணங்குபவர்கள் போல அவர்கள் காணப்பட்டாலும், அவர்கள் கே.பியைப் பகிரங்கமாக விமர்சிப்பதிலும் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற நிலைப்பாட்டைப் பின்பற்றுவதிலும் மாறாதவர்களாக இருந்தார்கள்.
பிரபாகரன் பாதுகாப்பான இடத்தில் உயிருடன் உள்ளார் என்று மே 18 ஆம் திகதி, ஆழச் சிந்திக்காமல் அவசரமாக கே.பி. விடுத்த அறிவிப்புத்தான் அவருக்குப் பலவீனத்தை ஏற்படுத்தியது.
பின்னர், தமது நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டார். எனினும், அவர் முதலில் ஏன் அப்படி அறிவித்தார், பின்னர் ஏன் அதை மாற்றிக்கொண்டார் என அவர் மீது குறைகாண்போர் கேள்வி எழுப்புகின்றனர்.
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற விவகாரத்தில் கே.பியின் எதிர்ப்பாளர்கள் ஆரம்பத்தில் முன்னிலை பெற்றனர். பெரும்பான்மையான ஆதரவாளர்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளாமையாலும் அல்லது பிரபாகரன் மரணமடைந்து விட்டார் என்பதற்கு இணங்க முடியாமையாலும், இவ்விடயத்தில் பரந்தளவிலான மறுப்புகள் வெளியாகின.
இந்தக் கருத்து நிலைப்பாட்டுக்கு மத்தியில், பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்றும், அதற்காக ஒருவார காலம் துக்கம் அனுஷ்டிக்கும்படியும் கே.பி. விடுத்த பிரகடனம் எதிர்ப்புப் பிரதிபலிப்புகளை உருவாக்கியது. கே.பி. எதிர்ப்பு மூலங்கள், பத்மநாதனின் அந்த அறிவிப்புடன் இணங்கிப்போக மறுத்தன.
அதன் விளைவாகவே, இற்றைவரை பிரபாகரனுக்கோ, புலிகளின் ஏனைய சிரேஷ்ட தலைவர்களுக்கோ வணக்க மரியாதை செ ய்யும் பகிரங்க நிகழ்வுகள் ஏதும் இடம்பெறவில்லை. மரணித்த மாவீரர்களைப் பூஜித்து, அதி உச்ச கௌவரம் அளிக்கும் விதத்தில் "மாவீரர் தினத்தை" அனுஷ்டிக்கும் ஓர் இயக்கத்தில்தான் இப்படி நடந்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் உட்குழு மோதல்கள், வித்தியாசமான கருத்து நிலைப்பாட்டைப் பகிரங்கமாகவே பிரதிபலித்து வெளிப்படுத்தி நிற்கின்றன.
பிரபாகரனும் ஏனைய சிரேஷ்ட தலைவர்களும் இனி இல்லை என்ற உண்மையை ஏற்று, அவர்களைப் போற்றி, முன்னோக்கி நகர்வோம் என்று கே.பியும் அவரதுஆதரவாளர்களும் கூறுகின்றனர். ஆனால் கே.பியை எதிர்ப்பவர்களோ தமது தலைவர் இல்லை என்பதை ஏற்க மறுக்கின்றனர்.
கே.பியும் அவரது குழுவினரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டமைப்பு மாற்றத்துக்கு உட்படுத்த விரும்புகின்றனர். (தேவையின்) அவசியத்தை நேர்மையுடன் புரிந்துகொண்டு, இனிமேல் ஆயுதப் போராட்டம் தொடர முடியாது என்கின்றனர். இந்தப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் மூலம் வன்முறையற்ற ஜனநாயக வழி மூலம் முன்னெடுக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், பெரும்பாலான கே.பி. எதிர்ப்பு மூலங்களோ யதார்த்தத்தை ஏற்க மறுத்து, ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது குறித்து வாய்ச்சவடாலில் ஈடுபட்டுள்ளன.
பிளவுபட்டது
இப்படி புலம்பெயர் சமூகம் பிளவுபட்ட பின்புலத்திலேயே, வெளிநாட்டில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் பரந்தளவிலான தொடர் கலந்தாலோசனைகளை முன்னெடுக்கத் தொடங்கினார் கே.பி.
அவர் தமது கருத்து நிலையைத் தெளிவுபடுத்தி, விளங்கவைத்தமை மாத்திரமன்றி, புலிகளின் தலைமைத்துவத்துடன் தாம் மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றங்களின் பிரதிகளைக்கூட வழங்கினார். உரையாடல்களின் பதிவு அடங்கிய ஒலி நாடாக்கள் கூட விநியோகிக்கப்பட்டன. அதன் மூலம் தமது கருத்து நிலைக்குப் பலரை கே.பியினால் திருப்ப முடிந்தது.
விசு வாசம் மிக்க பல பழைய கைகள் கே.பியைச் சு ற்றி இணைந்த அதேசமயம், அந்த மூத்த புலி உறுப்பினருக்கு ஏனையோரிடம் இருந்தும் ஆதரவு கிட்டத் தொடங்கியது.
பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்ற விடயத்தில் கே.பிக்கு மாறாக முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தது புலிகளின் வெளிநாட்டு உளவுப் பிரிவு. அது, அப்போது கே.பியின் விரோதிகளைப் பலப்படுத்தியது.
ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றமாக, அந்த உளவுப்பிரிவு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரபாகரன் இனிமேல் இல்லை என்பதை ஒப்புக்கொண்டது. கதிர்காமத்தம்பி அறிவழகன் என்ற பெயரில் உளவுப் பிரிவின் சிரேஷ்ட அலுவலர் ஒருவர் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மறைமுகமாக கே.பியின் கருத்தை உறுதிப்படுத்தினார்.
அறிவழகன் முன்னர் புலிகளின் இராணுவ உளவுப் பரிவின் தலைவர் லெப்டினன்ட் கேணல் சா ள்ஸ் அன்ரனியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியவர். அவர் இலங்கைக்கு வெளியே ஓரிடத்தில் உள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அத்தோடு மேலும், வெளிநாட்டில் உள்ள புலி ஆதரவாளர்களிடையே இந்த உளவுப் பிரிவினர் கருத்துக் கணிப்புத் திரட்டல் ஒன்றையும் மேற்கொண்டனர். பெரும்பாலான இந்த நேர்காணல்கள், புலிகளின் ஆரம்ப வருடங்களில் அவர்களுடன் நின்ற பழைய விசு வாசிகளுடனானவையாக அமைந்தன; பின்னைய வருடங்களில் புலிகளின் பதாகைக்குக்கீழ் திரண்டவர்களுடன் அல்ல.
அப்படி நேர்காணல் காணப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்களின் கருத்து, இந்தக் கட்டத்தில் இடைக்காலத் தலைவராகக் கே.பியே இருக்கவேண்டும் என்பதாகவே அமைந்தது.
வெளிநாட்டில் செ யற்படும் புலிகளின் இன்னொரு பிரிவு "கடற்புலிகள்" ஆகும். கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கடற்புலிகளின் பிரதிநிதிகள் பல்வேறு நாடுகளிலும் சிதறுண்டுள்ளனர். இந்த உறுப்பினர்களும் தமது ஆதரவை கே.பிக்குக் காட்டியுள்ளனர்.
எனவே உளவுப் பிரிவும், கடற்புலிகளும் கே.பியை முழுப் பலமாக ஆதரித்தனர். இதைத் தொடர்ந்து அரசியல் பிரிவின் பல செ யற்பாட்டாளர்களும் நிதானமாக நெடியவனை அலட்சியப்படுத்திக்கொண்டு கே.பியை நோக்கி நகரத் தொடங்கினர்.
கலந்துரையாடல்
கே.பிக்கும் நெடியவனுக்கும் இடையில் நேரடி கலந்துரையாடலை மேம்படுத்தியதன் மூலம் புலனாய்வுப் பிரிவு தன்னுடைய பங்களிப்பை உயர்திக்கொண்டது. அது, கே.பிக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் நெடியவனுக்கும் அவரது அணியினருக்கும் இடையில் தொலைபேசி மூலம் பல சு ற்று கலந்தாலோசனைக்கும் வழி செ ய்தது. பூகோளத்தின் பல்வேறு நேர மையங்களில் வதியும் விரக்தியுற்ற நிலையில் இருக்கும் புலிகளின் பல செ யற்பாட்டாளர்கள் தங்களுக்கிடையில் தொலைபேசி மற்றும் "ஸ்கைப்" ஊடாக நடத்திய தொடர் பேச்சு கள், கலந்துரையாடல்கள் காரணமாக பல நாடுகளில் இரவுநேர எரிபொருள் நீண்டநேரத்துக்கு எரிந்தது.
தங்கள் தலைவர் பிரபாகரனும் அவரின் ஏனைய சிரேஷ்ட உதவியாளர்களும் உயிருடன் இல்லை என்பதை நெடியவனும் அவரது குழுவினரும் முற்றாகத் தெரிந்துகொண்டதே இந்தக் கலந்துரையாடல்களின்போது முக்கியமாக வெளிப்பட்ட அம்சமாகும்.
இது, பெரும்பாலான ஆதரவாளர்கள் பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனத் தவறுதலாகவும் அதே நேரம் நேர்மையான கருத்துடனும் நம்பிக்கொண்டிருப்பதற்கு முற்றிலும் முரண்பாடான நிலையாகும்.
கே.பி. எதிர்ப்பு அணியினர் தனிப்பட்ட முறையில் உண்மையை ஒப்புக் கொண்டாலும் அம்பலத்தில் வேறுவிதமாக நடிக்கின்றனர். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவது புலிகளின் பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை ஒரே சூரியன் பிரபாகரன் என்பதால் அவரது மறைவை ஒப்புக்கொள்வது ஆதரவாளர்களின் மனோ வலிமையை முற்றாக சிதைவுறச் செ ய்யும். போராட்டத்தைத் தொடர்வதற்கு பிரபாகரனின் சிரஞ்சீவித் தன்மை (பிரபாகரனுக்கு மரணம் இல்லை) என்ற நம்பிக்கையைப் பேண வேண்டும்.
அதைவிட யதார்த்தபூர்வமாகப் பார்த்தால், புலம்பெயர்ந்தோரிடமிருந்து நிதியைப் பெற்று வழமைபோல அலுவல்களைத் தொடர்வதற்கு பிரபாகரன் பற்றிய நம்பிக்கையைப் பேண வேண்டியது முக்கியமானது. இதற்கு ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது போல காட்டுவதும் அவசி

யமானது.
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்றும், ஆயுதப் போராட்டம் தொடர்கிறது என்றும் ஒரு மாயையைக் காட்டுவதன் மூலம் மட்டுமே புலம்பெயர்ந்தோர் என்ற நிதிப் பசு விடமிருந்து தாரளமாகக் கறக்க முடியும் என நெடியவனும் அவரது சதிக்கூட்டத்தினரும் நம்பினர்.
பொறுப்புகள்
கே.பிக்கு நெருக்கமான வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, பிரபாகரன் கடைசிக் காலகட்டத்தில் தமது சர்வதேச உறவுகளுக்குப் பொறுப்பான தலைவரிடம் இரண்டு பொறுப்புகளை ஒப்படைத்திருக்கின்றார் எனத் தெரிகின்றது.
ஒன்று வன்னியில் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்தி மேற்கொள்ளுதல்.
அடுத்தது பிடிபட்ட அல்லது சரணடைந்த உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களை விரைந்து விடுவிக்க ஆவன செ ய்வது.
இந்த விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்காகத் தாம் பிரபாகரனுடன் மேற்கொண்ட இறுதி உரையாடல்களின் ஒலிப்பதிவுகளையும் கே.பி. போட்டுக் காட்டினார்.
விடயமறிந்த வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, தலைவரின் இந்த விருப்பை நிறைவு செ ய்வதற்கு சிறந்த வழி ஆயுதப் போராட்டத்துக்கு முற்றாக விடை கொடுப்பதுதான் எனப் பத்மநாதன் கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு வன்முறைகளைக் கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்புவதன் மூலம் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்தலையும், காவலில் உள்ள உறுப்பினர்களை விடுவிப்பதையும் விரைந்து மேற்கொள்வதற்கான வலிமையான நிலைமை ஒன்றை ஏற்படுத்த முடியும். அத்தோடு வன்முறையற்ற விடுதலைப் புலிகள் இயக்கம், தன்னுடைய "பயங்கரவாதிகள்" என்ற நாமத்தைத் துடைத்தழித்து, மேற்குலகில் தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையையும் நீக்கச் செ ய்யலாம்.
பிரபாகரனும் அவரது சிரேஷ்ட தலைவர்களும் உயிரிழந்தமை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்டு உரிய அஞ்சலிகள் அவர்களுக்குச் செ ய்யப்பட வேண்டும் என்றும் கே.பி. வலிமையாக வாதிட்டார்.
போராட்டத்துக்காகவும், இலட்சியத்துக்காகவும் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த தங்களின் ஒப்புயர்வற்ற தலைவரினதும், ஏனைய தளபதிகளினதும் நினைவை கௌரவப்படுத்தித் தாங்கள் செ ய்யக்கூடிய குறைந்தபட்ச நடவடிக்கை இதுதான் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
"நாங்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கின்றோம். இது எங்களின் புனிதமன கடமை." இப்படி கே.பி. வலியுறுத்தினார் எனக் கூறப்படுகின்றது.
ஆயுதங்களை வாங்குவதற்கு மட்டுமே பெரும் தொகையான பணம் தேவைப்படும் என்றும் அவர் சு ட்டிக்காட்டினார் எனக் கூறப்படுகின்றது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வருவதால் பெருமளவில் நிதி திரட்டல் அவசியமற்றதாகின்றது. விடுதலைப் புலிகளினால் வெளிநாட்டில் சட்டபூர்வமாக மேற்கொள்ளப்படும் வர்த்தகங்கள் மூலம் கிட்டும் நிதியும், புலிகளின் தீவிர பற்றாளர்கள் தாமாக விரும்பி வழங்கும் நிதி உதவியும் மட்டுமே புலிகளின் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப் போதுமானவை என்பதையும் கே.பி. தெளிவுபடுத்தினார்.
"போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் இலட்சியம் மாறாது" என்று 1987 ஓகஸ்ட் 5 ஆம் திகதி சு துமலைக் கூட்டத்தின் உரையில் பிரபாகரன் சு ட்டிக்காட்டியதைக் குறிப்பிட்ட கே.பி., இயக்கத்தின் கொள்கைப் போக்கிலும் அணுகுமுறையிலும் ஒரு மாற்றத்தை வேண்டி நின்றார்.




உள்ளடக்கத்திலும், கட்டமைப்பிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மாற்றி அமைக்கும் திட்டத்தை கே.பி. பிரசா ரப்படுத்தி, முன்னிலைப்படுத்தி வருகின்றார் என அவருக்கு நம்பிக்கையானவர்கள் கூறுகின்றனர். இலங்கையில் மாற்றமடைந்திருக்கும் அரசியல் இராணுவக் களநிலைவரங்களுக்கு அமைய விடுதலைப் புலிகளும் மாற்றமடைவது தவிர்க்க முடியாதது என்பதை கே.பி. வற்புறுத்துகின்றார்.
புலிகளின் "கேணல்" தரத்தைச் சே ர்ந்த இருவரால் கே.பியின் கைகள் இப்போது மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒருவர் சு ரேஷ் அல்லது அமுதன், மற்றவர் ராம்.
சு ரேஷ் மன்னாரைச் சே ர்ந்தவர். மன்னாரின் இராணுவத் தளபதியாக பானு இருந்த சமயம் மன்னார் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்தவர் இவர். தமிழ்ச்செ ல்வனுடன் பின்னர் பிசகுப்பட்டதால் சில வருடங்களாக ஒதுக்கப்பட்டார்.
எனினும், பின்னர் கிட்டு பீரங்கிப் படைப்பிரிவின் பொறுப்பாளராக பானு நியமிக்கப்பட்டதும் சு ரேஷ் அவரின் பிரதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். புலி உறுப்பினர்களின் பெயர்கள் மறுசீரமைக்கப்பட்டபோது சு ரேஷ் தமது பெயரை அமுதன் எனச் சு வீகரித்துக்கொண்டார்.
யுத்தப்படையணியின் முழு அளவிலான தளபதியாக உயர்த்தப்பட்ட அவர், கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்தார்.

உயர் வைத்திய வசதிக்காகக் கடல் வழியாக வெளிநாடு ஒன்றுக்கு விரைந்து கொண்டு செ ல்லப்பட்டார் அமுதன். காயத்திலிருந்து தேறிக் கொண்ட பின்னர் இன்னொரு நாட்டில் அவர் காலூன்றினார். வெளிநாட்டில் உள்ள புலிகளின் மூலங்களுடன் தொடர்பாடல் உறவுகளை விரிவுபடுத்திய அவர், கே.பியின் தரத்தைப் பலப்படுத்துவதில் பயனுள்ள வழியில் பங்காற்றினார்.

மற்றவர் அம்பாறை, மட்டக்களப்புக்குப் பொறுப்பான புலிகளின் இராணுவத் தளபதி கேணல் ராம்தான். அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்த இவர், கருணாவின் புரட்சிக்குப் பின்னரும் பிரபாகரனின் விசு வாசியாகவே உள்ளார்.

2007 இல் பெரும் எண்ணிக்கையான புலிகளின் உறுப்பினர்கள் கிழக்கிலிருந்து வெளியேறிய பின்னரும், நூறு முதல் நூற்றியைம்பது வரையான உறுப்பினர்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டக் காடுகளில் கேணல் நகுலனின் தலைமையின்கீழ் தங்கியிருந்தனர். கடும் மோசமான வலிமையான எதிர்ப்பு நிலவும் சூழலிலும் கூட இந்த உறுப்பினர்கள் வலுக்குறைந்த கெரில்லாத் தாக்குதல்களைத் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். வன்னி இராணுவப் பின்னடைவுகளுக்குப் பின்னர் இந்தப் புலி உறுப்பினர்களின் எதிர்காலம் சந்தேகத்துக்குரியதாயிற்று.

இராணுவப் போராட்டத்தைத் தொடர்வதைப் பற்றிப் பீற்றிக்கொள்ளும் வெளிநாட்டுப் பதவி மூலங்கள், அதற்கு நல்ல ஆதாரமாக கேணல் ராமும் அவரது குழுவினரும் உள்ளனர் என்றும் சு ட்டிக்காட்ட விளைந்தனர்.

இந்த சு யநலம் மிக்க பொறுப்புணர்வற்ற வாய்ப்பேச்சு வீரர்கள், புலம்பெயர்ந்தோரின் கற்பனைக் கோமாளித்தனத்துக்காக மேற்படி பரிதாபத்துக்குரிய கிழக்கு உறுப்பினர்கள் தோல்வியடைந்த யுத்தத்தில் தொடர்ந்து மோதவேண்டும் என விரும்புகின்றனர்.
ஆனால், கே.பியோ மதிப்பாய்ந்த முறையில் விரைந்து செ யற்பட்டு, கைவிடப்பட்ட இந்த உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். கிழக்கு மாகாண உறுப்பினர்கள் கலைந்து செ ல்வதற்கு "நம்பவே முடியாத" ஒரு தரப்பு மூலம் உதவிகள் வழங்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையானோர் வீடுகளுக்கும், வேறு பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பப்பட்ட அதேசமயம், ராம் மற்றும் அரசியல் பிரிவுத் தலைவர் தயாமோகன் உட்பட கிழக்கின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கிழக்குக் கடற்கரையோரம் வழியாக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டனர். இரண்டாவது அணியும் சில நாட்கள் கழித்து வெளியேறியது.

விடுதலைப் புலிகளின் உள்ளகக் கலந்துரையாடல்களில் கே.பியை ஆதரிக்கத் தொடங்கினார் கேணல் ராம். பிரபாகரனின் மறைவை ஒப்புக்கொண்டு, கே.பியின் தலைமைத்துவத்தை ஏற்று, விடுதலைப் புலிகளின் கட்டமைப்பை மறுசீரமைத்து, அதன் செ யற்பாட்டு உத்தியை மாற்றியமைக்க வேண்டும் என அவரும் சு ரேஷûடன் சே ர்ந்து வாதிடத் தொடங்கினார்.
கே.பிக்கு ஆதரவாக தமது சொ ந்தக் கையெழுத்தில் கடிதங்களை எழுதி விநியோகிக்கத் தொடங்கிய ராம், அக்கடிதங்களில் பிரபாகரன் தமக்குப் பின்னர் தமது இடத்தை கே.பியே பொறுப்பேற்கவேண்டும் என விரும்பினார் என்பதை கடைசிக் காலகட்டங்களில் அரசியல் பொறுப்பாளர் நடேசன் தம்மிடம் (ராமிடம்) தெரிவித்தார் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டார்.
சின்ன ரஞ்சித்

நெடியவனுக்கும், கே.பிக்கும் இடையிலான உரையாடல்கள் வாரக் கணக்கில் தொடர்ந்தன. புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகரும், உத்தி வகுப்பாளருமான அன்டன் பாலசிங்கத்துக்கு உதவியாளராகவும், செ யலாளராகவும் பணிபுரிந்த "சின்ன ரஞ்சித்" என்பவரே நெடியவனின் சிரேஷ்ட பேச்சா ளராக இருந்தவர்.

புலிகளின் ஆதரவு வானொலியான சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு (ஐ.பி.ஸிக்கு) லண்டனில் தலைமை வகித்த ரஞ்சித் என்பவரில் இருந்து வேறுபடுத்துவதற்காக இவரது பெயருக்கு முன்னால் "சின்ன" என்ற அடைமொழி சே ர்த்துக்கொள்ளப்பட்டது. சின்ன ரஞ்சித்தும் முன்னர் ஐ.பி.ஸியில் பணியாற்றியிருந்தார். நெடியவனின் பேச்சா ளராக உரையாடல்களில் பங்குபற்றிய சமயம் அவர் தம்மை "மாறன்" என்று அழைத்துக்கொண்டார்.
இணக்கத்துக்கு வர இரண்டு தரப்பும் மறுத்ததால், பெரும் இழுபறி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் புலனாய்வுப் பிரிவின் ஆட்கள், நெடியவன் சின்ன ரஞ்சித் குழுவின் இறுக்கப்பிடி நிலையால் பொறுமை இழந்தது, சமரசப் பேச்சு முயற்சி முடிவுற்றது என அறிவித்தனர். கே.பிக்கு முழு ஆதரவு நல்கிய அவர்கள், நெடியவன் மற்றும் அவரது சதிக்கூட்டத்தின் பங்களிப்பின்றியே தமது செ யற்பாட்டைத் தம்பாட்டில் தொடருமாறு கே.பியைக் கோரினார். ஆனால், கே.பியோ ஐக்கியம் எட்டப்படவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.
உடன்பாடு

இறுதியாக ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. கே.பியின் தலைமைத்துவத்தை ஏற்க நெடியவன் உடன்பட்டார். புலிகளின் கட்டமைப்பை மறுசீரமைக்கவும் இணக்கம் காணப்பட்டது.
அந்த இணக்கத்தின்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு இனி பல துறைகளை அல்லது செ யலகங்களைக் கொண்ட தனி நிறுவனமாக மீள்கட்டமைப்புச் செ ய்யப்படும். கே.பி. அதன் "தலைமைச் செ யலாளர்" பதவியில் முழுப் பொறுப்பாளராக இருப்பார்.

அந்த நிறுவனத்தின்கீழ் மனித உரிமைகள், மீள் குடியமர்வு, புனர்வாழ்வு, மீள்கட்டமைப்பு, சமாதானத்தைக் கட்டி எழுப்புதல், அபிவிருத்தி, பேச்சு கள், அரசியல் நடவடிக்கைகள், கொள்கை வகுப்பு, பொதுசனத் தொடர்பாடல், ஊடகத் தொடர்பாடல், வள முகாமைத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் பணிகளை முன்னெடுப்பதற்காக தனித்தனிச் செ யலகங்கள் பிரத்தியேகச் செ யற்பாட்டு இலக்குடன் இயங்கும் என்றும் முடிவானது.

புலம்பெயர்ந்தோர் விவகாரத்துக்கான பிரிவுக்குப் பொறுப்பாக நெடியவன் என்று அழைக்கப்படும் சிவபரன் இருப்பார். அதன்படி புலம்பெயர்ந்த தமிழர்களின் பல்வேறு கிளைகள் மற்றும் நிறுவனங்களின் அன்றாட நிர்வாக விடயங்களுக்குப் பொறுப்பாக நெடியவன் இருப்பார். இது, அவருக்கு செ யலதிகாரத்தையும், தன்னாளுகை வசதியையும் அளிக்கும் அதேசமயம் அவரும், புலம்பெயர்நதோரின் கிளை அமைப்புகளும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முற்றும் முழுதான தலைவராக கே.பியை ஏற்று அங்கீகரிக்கவேண்டும்.
புலிகள் இயக்கத்தின் பல்வேறு விடயங்களையும் கவனிப்பதற்காக நிறைவேற்றுக்குழு ஒன்றும் இருக்கும். இந்த நிறைவேற்றுக் குழுவின் இணைத் தலைவர்களாக இருக்கும் கேணல் சு ரேஷûம், கேணல் ராமும் தேவைப்படும் சமயங்களில் நிறைவேற்றுக் குழுவின் கூட்டங்களைக் கூட்டுவர்.

புலிகளின் தலைவருக்கும் ஏனைய சிரேஷ்ட தளபதிகளுக்கும் அஞ்சலி செ லுத்துவது சம்பந்தப்பட்ட விடயம் நவம்பருக்குத் தள்ளிப் போடப்பட்டது. நவம்பர் 21 முதல் 27 வரையான மாவீரர் வாரம், நவம்பர் 27 ஆம் திகதிய மாவீரர் தினம், நவம்பர் 26 ஆம் திகதி வரும் பிரபாகரனின் பிறந்த தினம் ஆகியவை பெரிய ஏற்பாடுகளுடன் அனுஷ்டிக்கப்படும்.
பிரபாகரனையும், ஏனைய தலைவர்களையும் நினைவு கூர்ந்து பெரிய எழுச்சியுடன் இந்நிகழ்வுகளை புலம்பெயர்ந்தோரும் தமிழ் நாட்டில் உள்ள ஆதரவு சக்திகளும் முன்னெடுக்கவேண்டும் என கே.பி. விரும்புகின்றார்.

பிரபாகரனுக்கு மரியாதை அளிப்பதற்காக, கே.பி. தம்மை இயக்கத்தின் தலைவர் எனக் குறிப்பிடுவதற்கு மறுத்துவிட்டார். ஒரேயொரு "தலைவர்" ஆகப் பிரபாகரன் மட்டுமே இருக்க முடியும் என்பதால் தாம் "தலைமைச் செ யலாளர்" ஆக விளிக்கப்படவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

1949 இல் திராவிடக் கழகத்தில் (தி.க.) இருந்து அண்ணாத்துரை பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது இடம்பெற்றதற்கு இது ஒப்பானது.
தமது ஒரேயொரு தலைவர் திராவிடக் கழகத்தின் சிரேஷ்டரான "பெரியார்" என்று அழைக்கப்படும் ஈ.வெ.இராமசா மி நாயக்கர்தான் எனக் கூறிய அண்ணாத்துரை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பதவியை பெரியார் தாமாக முன்வந்து ஏற்றுக்கொள்ளும்வரை தி.மு.க. தலைமைப் பதவி வெற்றிடமாகவே இருக்கும் என்றும் அறிவித்தார். அண்ணாத்துரை, "அமைப்புச் செ யலாளர்" ஆகவே பணிபுரிந்தார்.
எனினும், அண்ணாத்துரைக்குப் பின்னர் அந்தப் பதவிக்கு வந்த கருணாநிதி, தி.மு.கவின் யாப்பை 1969 இல் மாற்றியமைத்து தான் அதன் தலைவரானார்.

சதிப் பிளவு

புலிகளின் உள்ளகப் பேச்சு மூலமான உடன்பாடு ஜூலை 20 இல் எட்டப்பட்டது. அதுபற்றிய அறிக்கையில் புலிகளின் நிறைவேற்றுக் குழு சா ர்பில் ராமும், சு ரேஷûம் ஒப்பமிட்டனர். அந்த அறிக்கை அதிக விவரங்களைக் கொண்டிராத போதிலும், கே.பியே புதிய தலைவர் என்பதையும் ஐக்கியம் எட்டப்பட்டது என்பதையும் அது கோடி காட்டியது.
மறுசீரமைக்கப்பட்ட புலிகள் அமைப்பு புதிய பாணியில் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் விடயங்கள் சு முகமாக நகரவில்லை. மனிதன் மட்டுமல்ல சு ண்டெலியும் கூட நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கும் விடயங்கள் குழம்பி விடுவதுண்டு.
புதிய ஏற்பாட்டுக்கு இணங்கி, கே.பியின் தலைமைத்துவத்துக்கு நெடியவன் உடன்பட்டாலும் கூட, கே.பி. எதிர்ப்பு சதிக் கூட்டம் அதற்கு மறுத்து நின்றது.

ராம் மற்றும் சு ரேஷினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளை "தமிழ்நெற்" மற்றும் "பதிவு" ஆகிய இணையத் தளங்கள் வெளியிட்ட விதமும் ஏனைய புலிகளின் ஊடகங்கள் இவ்விடயத்தில் பேணிய சந்தேகத்துக்கு இடமான மௌனமும் (இருட்டடிப்பும்) சே ர்ந்து இந்தச் சதிக்கூட்டம் உடன்பாட்டுக்கு வர மறுக்கின்றது என்ற கருத்தையே ஏற்படுத்தின.
இந்த எதிர்ப்பு அணி புலிகளின் பிரபல செ யற்பாட்டாளர்கள் பலரை உள்ளடக்கியது. அவர்களில் முக்கியமானவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான "குதிரை கஜேந்திரன்" என்று அழைக்கப்படும் செ ல்வராசா கஜேந்திரன்தான். 2004 இல் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற கஜேந்திரன் இப்போது ஒஸ்லோவில் உள்ளார். அங்கு கே.பி. எதிர்ப்புக் குழுமத்தில் அவரே முக்கிய சக்தி.

ஏனையோரில் "தமிழ்நெற்" இணையத் தளத்தின் ஆசிரியர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாக ஆசிரியர் ஸ்ரீகரன் ஆகியோரும் அடங்குவர். இவர்களுள் ஜெயச்சந்திரன் நோர்வேயில் வசிப்பவர். ஸ்ரீகரன் அமெரிக்காவைச் சே ர்ந்தவர்.
"தமிழ் நெற்"றுக்கு அப்பால், "சங்கதி", "பதிவு" ஆகிய தமிழ் இணையத்தளங்களும் கே.பியை எதிர்க்கின்றன. இவற்றில் சங்கதியை பிரான்ஸில் உள்ள ஆதித்தன் என்பவர் கட்டுப்படுத்துகின்றார். பாரிஸைத் தளமாகக் கொண்ட "ஈழமுரசு " பத்திரிகையையும் இவரே நடத்துகின்றார். "பதிவு" இணையத் தளத்தை வாகீசன் என்பவர் நடத்துகின்றார். இவரே புலிகளின் ஜேர்மன் தலைவராவார்.

தனிப்பட்ட வகையில் இயங்கும் தமிழ் ஊடகவியலாளர்களான இதயச்சந்திரன் என்று அழைக்கப்படும் நவநீதன் மற்றும் கிருஷ்ணரஜனி என அழைக்கப்படும் பரணீதரன் என்போரும் இந்தக் குழுமத்தில் உள்ளனர். இவர்கள் தமிழ் சஞ்சிகைகள் மற்றும் இணையத் தளங்களுக்கு எழுதுபவர்கள்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்று இயக்குநரான கே.பி.ரெஜியும் கூட கே.பிக்கு எதிரானவர்தான். ரெஜியுடன் இவ்விடயத்தில் இணைந்து செ யற்படுபவர் புலிகளின் பொருளாதார அபிவிருத்தி நிறுவனமாக கூஉஉஈOகீ என்ற அமைப்புக்கு முன்னர் தலைமை வகித்த "ரூட் ரவி" ஆவார். இருவரும் லண்டனில் உள்ளனர்.
சவால்கள்

லண்டனில் இயங்கும் மற்றொரு கே.பி. எதிர்ப்பாளர் பாம்பன் அஜித். இவர் முன்னர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர். 1989 இல் கிட்டு என அழைக்கப்படும் கிருஷ்ணகுமாருடன் லண்டன் வந்த இவர், புலிகளின் முக்கிய புள்ளியான சங்கர் என அழைக்கப்படும் சொ ர்ணலிங்கத்தின் மைத்துனியை மணந்தார். தமிழ்நாடு அரசியல்வாதிகளுடன் அதீத தொடர்புகளை வைத்துள்ள அஜீத்தே, அந்த வட்டாரங்களில் கே.பிக்கு எதிரான உணர்வலைகள் அதிகரிக்கப் பிரதான காரணகர்த்தாவாவார்.
இதைத்தவிர, அன்புச்செ ல்வன் என ஒருவர். தமிழ் இளைஞர் அமைப்பு என்ற உலகளாவிய கட்டமைப்புக்கு இவரே தலைவர். இந்த அமைப்பு புலம் பெயர்ந்த தமிழர்கள் உள்ள தேசங்கள் எங்கும் ஊடுருவியுள்ளது. அண்மைக் காலத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்ததில் இதற்கு கணிசமான பொறுப்புண்டு.
இதுதான் இப்போதைய நிலைமை.

கே.பியின் தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள்சீரமைக்க கே.பிக்கும் நெடியவனுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டிருந்தாலும் கூட, நெடியவனைச் சூழவுள்ள குழுமம் தொடர்ந்தும் கிளர்ச்சி செ ய்யும் முனைப்பிலேயே உள்ளது. நெடியவனின் உண்மைத் தன்மை கூட சந்தேகிக்கவே படுகின்றது.

புலிகளின் செ ல்வாக்கு மிக்க ஊடகங்கள், புலிகளின் கிளை அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் ஆகியவை தமக்கு எதிராகச் செ யற்படுகையில், புலிகளின் புதிய தலைவர் மிகச் சிரமமான இலக்கை எதிர்கொள்கின்றார். இந்தச் சவால்களை கே.பி. எப்படி எதிர்கொண்டு சமாளிக்கப் போகின்றார் என்பதை இருந்துதான் பார்க்கவேண்டும். *

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top