மலேசியாவில் கடத்தப்பட்டு கொழும்பிற்கு கொண்டுவரப்பட்ட பின்னரே, கே.பி. செய்தியை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது!
மலேசியாவில் வைத்து கடத்தப்பட்ட கே.பி. கொழும்பிற்கு கொண்டுசென்ற பின்னரே சர்வதேச காவல்துறையினால் கே.பி. கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. வியாழன் நள்ளிரவு கொழும்பு, கட்டுநாயக்க விமானத்திலிருந்து உலங்குவானூர்த்தி மூலம், ஒருவர் மிகவும் இரகசியமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டுசெல்லப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசர அவசரமாக தரையிறங்கி, பின்னர் அதேவேகத்தில் அகன்றுசென்ற உலங்குவானூர்த்தியில், கே.பிதான் அழைத்துச் செல்லப்பட்டாரா என்பது குறித்து உறுதிசெய்ய
முடியாதுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
எனினும், சர்வதேச காவல்துறை (இனடர்போல்) ஒருவரை கைது செய்தால் எந்த நாட்டில் குறித்த நபர் கைது செய்யப்படுகிறாரோ, அந்த நாட்டில் வைத்தே விசாரணை செய்யப்படுவார் அல்லது வழக்கின் முக்கியத்துவம் கருதி, இண்டர்போல் தலைமையகம் இருக்கும் பிரான்ஸ் நாட்டிற்குக் கொண்டுசெல்லப்படுவார்.
கைது செய்யப்படும் நபர் எந்த நாட்டு அரசால் தேடப்படுகிறாரோ அந்த அரசு உத்தியோகப+ர்வமாக தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரினால், சர்வதேச விதிகளுக்கமைய இண்டர்போல் அவரை ஒப்படைக்கலாம், அல்லது ஒப்படைக்காமலும் போகலாம் தொடர்ந்தும் வைத்திருக்கலாம்.
இந்த நிலையில், கே.பி. சர்வதேச காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டாரா அல்லது மலேசியாவில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டுள்ளாரா என்பது குறித்து இதுவரை உறுதிசெய்ய முடியாமலுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்தியா, மலேசியா, இலங்கை புலனாய்வு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை துரிதமாக முடுக்கிவிடப்பட்டது. கே,பி எனப்படும் செல்வராஜா பத்மநாதனை நோக்கி, தாய்லாந்து, மலேசியா, இந்தியாவில் துரிதமாக செயல்பட்ட இந்தக் குழுவினர் கே.பி க்கு எதிரானவர்களையும் இக்கடத்தலுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன.
Lanka News Web
0 விமர்சனங்கள்:
Post a Comment