இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Monday, November 23, 2009

சர்வதேச வலைக்குள் சிக்கியிருந்த பிரபாகரன்


ராஜீவ் காந்தியை கொலைசெய்ய முன்னரே இந்திய எதிரணியின் வலையில் புலிகள் சிக்கிக்கொண்டார்கள்.

அசாம் ஆயுதாரிகளுக்கு புலிகள் 1990 ஆம் ஆண்டிலேயே ஆயுதமும் பயிற்சியும் வழங்கியுள்ளனர்.

அசாம் ஆயுதாரிகளுக்கு புலிகள் பயிற்சி வழங்கியதாக அந்த அமைப்பின் முன்னாள் பேச்சாளரும் தற்போதைய உடகவியாளருமான சுனில் நாத் தெரிவிப்பு.

புலிகளின் தலமை பணத்திற்காகவும் ஆயுதங்களுக்காகவும் எந்த சக்தியின் வலையிலும் விழுவதற்கு தயாராக இருந்தார்கள். தென்கிழக்காசியாவில் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சக்திகள் இவர்களை பாவித்துக் கொண்டார்கள்.

பாலசிங்கம் இறந்ததின் பிற்பாடு நோர்வே நாடு உட்பட பல தரப்புக்களுடனான உறவுகளை புலிகளினால் தொடர்ந்து பேண முடியாது போனது. இலங்கைக்கு வெளியே முதலில் புலிகளின் தலைவரை பாவித்தவர் ஒரு நடிகர் ஆவார். தமிழகத்தில் புரட்சி திலகமென அழைக்கப்பட்டு பின்னர் முதல்வரானான எம்.ஜி. ஆர் அவர்கள் சாதூர்யமாக புலிகளை பாவித்து இருந்தார்.


1983 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக் கலவரத்தினை அடுத்து ஆயிரக்கணக்காண தமிழ் இளைஞர்கள் ஆயுத அமைப்புக்களில் தம்மை இணைத்துக் கொள்வதற்காக தமிழகத்திற்கு சென்று இருந்தார்கள்.அவ்வாறு சென்ற இளைஞர்கள் தம்மை பல இயக்கங்களில் இணைந்து கொண்ட போதும், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE),தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழ் ஈழ விடுதலை புலிகள்(LTTE) ஆகிய மூன்று அமைப்புகளிலேயே அதிக இளைஞர்கள் இணைந்திருந்தார்கள். எம்.ஜி. ஆர் அவர்கள் முதல்வராக இருந்தவேளை எதிர்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி அவர்கள் ரெலோ இயக்கத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததோடு இலங்கை தமிழர்களின் நலன்களில் தமிழகத்தில் தனது கட்சியே அதிக அக்கறை உடைய கட்சி என்பதாக காண்பித்து வந்தார்.


அண்மையில் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், விடுதலை படைமுகத்தில் நின்ற ஒரு சில தலைவர்களுக்கு தானே வலுவில் சென்று ஆதரவு வழங்கி வந்தாக தெரிவித்து இருந்தமை குறிப்பிடதக்கது. மேலும் கருணாநிதியின் ஆதரவுடன் ரெலோ இயக்கம் தமிழகத்தினை சேர்ந்த ஒரு கட்சி போலவே நடந்து கொண்டது. இவ் வகையாக ரெலோ இயக்கம் நடந்து கொண்டதினை அப்பொழுது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.


1980 ஆம் ஆண்டளவில் புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிளவினை அடுத்து தமிழகத்திற்கு சென்று இருந்த பிரபாகரன் மற்றும் உமா மகேஸ்வரன் ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக 1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இரவு 9 மணி 45 நிமிடம் அளவில் மாம்பளம் என்னும் இடத்தில் உள்ள பாண்டி பஜாரில் நேர் எதிரே சந்திக்கொண்டார்கள். ராகவன் என்பவருடன் வந்த பிரபாகரன் உமா மகேஸ்வரனை நோக்கி கைத் துப்பாக்கியினால் சுட்டு விட்டு ஓட ஆரம்பித்து இருந்தார்.


உமாமகேஸ்வரன் புளொட் இயக்கத்தின் இராணுவ பொறுப்பாளர் ஜோதீஸ்வரன் உடன் சென்ற வேளையிலேயே பிரபாகரன் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு இருந்தார். பின்னர் கும்மிடிபூண்டி ரெயில் நிலையத்தில் வைத்து உமா மகேஸ்வரனை பொலிசார் கைது செய்ய முற்படுகையில் அவர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவாறு தப்பிக்க முயன்று இருந்தார். பிரபா மற்றும் உமா இருவரும் தமிழக பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டு இருந்தார்கள். இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக இருந்தார்கள்.


கருணாநிதியின் ஆதரவில் தமிழகத்தில் இயங்கி வந்த ரெலோ இயக்கத்தின் தலைவரை இல்லாது செய்வதற்கு எம்.ஜி. ஆர் முயற்சி செய்து வந்தார். முதலில் இவர் உமா மகேஸ்வரனை அழைத்து “உனக்கு பிரபாகரன் ஒரு பிரட்சனை இல்லை, நான் அவருடன் பேசுகின்றேன். இவன் சிறி சபாரட்ணம்தான் உனக்கு பிரட்சனையாக இருப்பான், அவனை நீ கவனித்துக் கொள்” என்று கூறியிருந்தார். இதனை கேட்டு வந்த உமா மகேஸ்வரன், இவர்கள் தங்களுடைய பிரட்சனைக்கு எங்களை மோத வைக்க பார்க்கின்றார்கள் என்று தனது மூத்த உறுப்பினர்களுக்கு கூறியிருந்தார்.


உமா மகேஸ்வரன் தனது வலைக்குள் விழ மாட்டார் என்பதினை எம்.ஜி.ஆர் அறிந்தது கொண்டதும், பின்னர் பிரபாரகரனை அழைத்து உமா உனக்கு ஒன்றும் பிரட்சனையாக இருக்கமாட்டான், ஆனால் சிறி சபாரட்னத்தினால் உனக்கு ஆபத்து வரும் கவனித்துகொள் என கூறியிருந்தார். ஏம்.ஜீ.ஆர் கொடுக்க இருந்த பணத்திற்காக பிரபாகரன் சகோதர இயக்கத்தின் தலைவனையும் அந்த இயக்கத்தின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களையும் கொலை செய்து இருந்தார். பணத்திற்காக எவரையும் பிரபாகரன் கொலை செய்வார் என்பதினை இந்த நிகழ்வு முதலில் நீரூபித்து இருந்தது.


1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம், வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பிரதேசங்கள் என எழுத்து ரீதியாக முதலில் வடிவமைக்கப்பட்டு அது சட்ட திருந்தமாக்கப்பட்டது. ராஜீவ் காந்தியின் வற்புறுத்தலினால் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அரசு இதனை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஜே. ஆரிற்கு பின்னர் பதவியேற்ற பிரேமதாசா புலிகளுக்கு பண ஆசையையும், ஆயுத ஆசையும் காட்டி இந்திய படையினருடான மோதலை ஊக்கு வித்து தாயக கோட்பாட்டினையே இல்லாதாக்கினார்.


புலிகள் மட்டும் 13 ஆவது சட்ட திருத்தத்தினை எதிர்க்காது, இந்திய படையினருடன் மோதாது இருந்திருந்தால்!


வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரே ஆட்சிக்குள் ஆளப்பட்டு இருப்பதோடு, வட கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பிரதேசம் என்று இந்தியா வகுத்து கொடுத்த சட்ட திருத்தம் இன்றும் நிலைத்திருக்கும். பிரபாகரனும் உயிருடன் இருந்திருக்க முடியும். இலங்கை தமிழர் பிரட்சனைக்காகவா ராஜீவ் காந்தியை புலிகள் கொன்றார்கள்? சுவீடன் நாட்டை சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனமான போபர்ஸ் (Bofors) நிறுவனத்திடம் இருந்து இந்தியா பீரங்கி கொள்வனவு செய்ததில் ஊழல் நிகழ்த்தப்பட்டதாக ராஜீவ் காந்தி மீது எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி இருந்ததுடன் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படு இருந்தது.


பின்னர் ராஜீவ் காந்தியின் பெயர் இந்த ஊழல் குற்றசாட்டில் இருந்து நீங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த போபர்ஸ் பீரங்கி கொள்வனவில் தரகராக ஈடுப்பட்டு இருந்த இத்தாலிய நாட்டவரான Otaavio Quattrocchi மீது இந்திய மத்திய புலனாய்வு சபையான சீ.பி.ஐ (Central Intelligent Bureau,CBI) வழக்கு தாக்கல் செய்ததோடு விசாரனைக்காக அவரை இந்தியாவிடம் கையளிக்க வேண்டுமென கோரியும் இருந்தது. (இந்த இத்தாலியர் ராஜீவ் காந்தியின் குடும்ப நண்பர் என கூறப்படுகின்றது.) மேலும் இவரை கைது செய்யுமாறு சர்வதேச பொலிசாரிடமும் சி.பி.ஐ கேட்டு இருந்தது. இதில் இருந்துதான் புலிகள் ராஜீவ் காந்தி மீதான தற்கொலை தாக்குதலை மேற்கொவதற்கான உந்துதல்கள் ஆரம்பிக்கப்பட்டன.


1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய படையினர் அனுப்பப்பட்டு, பின்னர் 1989 ஆம் ஆண்டு இறுதியில் முற்றாக திருப்பி அழைக்கப்பட்டு இருந்தனர். இவ்வேளை ஆட்சியினை இழந்திருந்த ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு நடைபெற இருந்த தேர்தலில் அமோக ஆதரவுடன் வெல்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ராஜீவ் மீண்டும் ஆட்சிக்கு வருவாரானால் எதிர் கட்சிகள் மீண்டும் போபர்ஸ் ஊழல் விவகாரத்தினை ராஜீவ் காந்தி எதிராக பாவிக்க முனைவார்கள். அப்பொழுது ராஜீவ் காந்தி தன்னை நீரூபிப்பதற்கு முயலும் பொழுது தனது பெயர் மீண்டும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நினைவு படுத்தப்படும், இதனால் தனக்கு மேலும் சங்கடங்கள் ஏற்படும் என்பதினை இத்தாலிய ஆயுத தரகர் புரிந்து கொண்டார். அத்துடன் சி.பி.ஐ மற்றும் இன்ரபோல் ஆகியன மீண்டும் தன்னை துரத்த ஆரம்பிக்கும் என்பதினையும் புரிந்து கொண்டார்.

இந்த தொந்தரவில் இருந்து தான் விடுபட வேண்டுமானால், ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வருவதினை தடுக்க வேண்டும், ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வருவதினை தடுக்க வேண்டுமானால், அவரை இல்லாது ஒழிக்கவேண்டும் .இதனையே இத்தாலிக்காரர் ஆன ஆயுத தரகர் Otaavio Quattrocchi செய்வதற்கு முயன்று இருந்தார்.


ராஜீவ் காந்தியினை இல்லாது செய்வதற்கு யாரை பாவிக்கலாம் என்று அவர் இந்தியாவில் இருக்கும் ஆயுத அமைப்புக்கள் குறித்து ஆராய்ந்த போது, இந்திய படையினரால் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தமது போராளிகளை இழந்த புலிகள் ராஜீவ் காந்தி மீது கடும் கோபம் கொண்டிருந்த விடயம் இவரின் கவனத்திற்கு சிலரால் கொண்டுவரப்பட்டது.


பணத்திற்காகவும், ஆயுதத்திற்காகவும் அலைந்து திரிந்த புலிகள் இவரின் வலைக்குள் அகப்பட்டு கொண்டார்கள். ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்பாக புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தினை இந்தாலிய ஆயுத தரகர் Otaavio Quattrocchi அவர்கள் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் (France,Paris) நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து மற்றும் ஒரு ஆயுத தரகருடன் சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டதாக ஜேன் என்கின்ற சர்வதேச புலனான்ய்வு சஞ்சிகை தெரிவித்து இருந்தது. இவர்களின் இந்த சந்திப்பினை பிரான்ஸ் நாட்டு புலனாய்வு துறையான Direction de la Surveillance du Territoire, DST, (France’s Domestic Intelligence Agency.) நிறுவனம் அறிந்து கொண்டதுடன் இதனை இந்திய புலனாய்வு துறையினருக்கு அறியப்படுத்திய தாகவும் அந்த சஞ்சிகையில் கூறப்பட்டு இருந்தது.


பெருமளவு நிதியும், ஆயுதங்களும் பெற்றுக்கொள்வதற்காக புலிகள் இத்தாலி நாட்டு தரகரின் சூழ்சிக்குள் வீழ்ந்து போனார்கள். ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக உலகில் இருந்த ஒரே நாட்டின் ஆதரவினை அகற்றுவதற்கான அடிக்கல்லை அன்றே புலிகள் நாட்டியிருந்தார்கள். ஆயிரக்கணக்கான தமது போராளிகள் இந்திய படையினரால் கொல்லப்பட்டத்திற்காகவும், தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டத்திற்காகவும் ராஜீவ் காந்தி மீதான தற்கொலை குண்டு தாக்குதலை நிகழ்தியதாக தமது ஆதரவாளர்கள் மத்தியில் புலிகளினால் பரப்புரைகள் செய்யப்பட்ட போதிலும், பணத்திற்காகவும் ஆயுதங்களுக்காவும் புலிகள் அன்னிய சக்திகளின் வலைக்குள் அகப்பட்டு கொண்டார்கள் என்பதே உண்மையாகும்.

இந்தியா ஒருமைப்பாட்டிற்கு எதிரான செயற்பாடுகளை 1990 ஆம் ஆண்டிலேயே புலிகள் ஆரம்பித்து இருந்தார்கள்!


இந்தியாவின் ஒருமை பாட்டினை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ராஜீவ் காந்தியினை கொலை செய்வதற்கு முன்பாகவே புலிகள் ஆரம்பித்து இருந்தனர். ராஜீவ் காந்தி 1991 ஆம் மே மாதம் புலிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டு இருந்தார். 1990 ஆம் ஆண்டு ஆரம்ப பகுதியில் புலிகளிடம் பயிற்சி பெறுவதற்காக தமது அமைப்பினை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் யாழ்பாணம் சென்று இருந்தாக அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் தற்பொழுது தெரிவித்துள்ளார். அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் (United Liberation Front of Assam, ULFA) முன்னாள் பேச்சாளரும் தற்போதைய ஊடகவியலாளருமான சுனில் நாத் இது தொடர்பாக இந்திய ஊடக நிறுவனமான IANS இற்கு கடந்த 14 ஆம் திகதி (2009-11-14) தெரிவிக்கையில் “ புலிகள் இயக்கத்திடம் நாங்கள் 1990 ஆம் ஆண்டில் பயிற்ச்சி பெற்றதோடு அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பெற்றுக் கொண்டோம்.

யாழ்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வேளை அவர்களிடம் பயிற்சிக்காக சென்றிருந்த எமது உறுப்பினர்கள் இரண்டாம் கட்ட தலைவரான மாத்தையா சந்தித்து இருந்தார்கள்”.

இந்திய செய்தி ஸ்தாபனம் ஆன IANS தொலைபேசி ஊடாக அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் பேச்சாளரை செவ்வி கண்ட போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் “தமிழகத்தினை சேர்ந்த ஒரு அரசியல் வாதியூடாகவே புலிகளுடன் தாம் தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும், அந்த அரசியல் வாதியே தம்மை புலிகளிடம் அறிமுகப் படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“புலிகளின் பயிற்சிகள் கடுமையாக இருந்தமையினால் பயிற்ச்சிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்னராக ஒரு கிழமையில் எமது உறுப்பினர்கள் இந்தியா திரும்பியிருந்தனர். எமது உறுப்பினர்கள் இந்தியா திரும்பும் வேளையில், 20 வயது மதிக்க தக்க புலி உறுப்பினர் ஒருவர் எம்முடன் எமது முகாமிற்கு வந்திருந்தார்” மேற்கண்டவாறு புலிகளிடம் பயிற்சி பெற்றுவிட்டு தற்போது வியாபாரத்தினை மேற்கொண்டுவரும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் ஆயுததாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.


அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியிடம் இருந்து அண்மையில் இந்திய படையினரால் கைப்பற்றப்பட்ட சில ஆதாரங்களில் மூலம் அவர்கள் புலிகளிடம் இருந்து இந்திய தொகை2.3 மில்லியன் ரூபாவிற்கு ஆயுத கொள்வனவு செய்தமை தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பின் முன்னாள் பேச்சாள் சுனில் நாத் தெரிவித்து உள்ளார். இதேவேளை புலிகள் அசாம் ஆயுதாரிகளுக்கு மட்டும் அல்ல தமிழகத்தினை சேர்ந்து இளைஞர்களுக்கும் பயிற்சிகளை வழங்கியிருந்தார்கள், ராஜீவ் காந்தி மீதான தற்கொலை தாக்குதலுக்கு பின்னர் நாம் அவர்களை அனைவரையும் இனம் கண்டு கைது செய்து செய்திருந்தோம் என இந்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.


இலங்கை தமிழர்களின் விடுதலைக்காக போராடுவதற்கு ஆரம்பித்த புலிகளின் தலைமையை பணத்தை காட்டியும், ஆயுதங்களை காட்டியும் பல சக்திகள் பாவித்து கொண்டன. மறுபுறத்தே இந்திய படையினருடன் மோதியதின் விளைவாக ஏற்பட்ட பகமைக்கு பழி தீர்ப்பதற்காக புலிகள் இந்தியாவிற்கு எதிரான அணியில் தம்மை இணைத்து கொண்டார்கள். நோர்வேயின் மத்தியஸ்துவத்தில் புலிகள் இலங்கை அரசுடன் பேச்சுக்களை நடத்தி வந்தபோது, இந்தியாவும் இந்த பேச்சுக்களில் இணைத்து கொள்ளப்பட வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டது. பிரட்சனைக்கான இரு தரப்பும் நோர்வேயின் மத்தியஸ்துவத்தில் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றபோது நான்காம் தரப்பு ஒன்று இதற்குள் தேவையில்லையென புலிகளின் ஆலோசகராக அப்போது இருந்த காலசென்ற அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்து இருந்தார்.


இந்தியாவிற்கு எதிரான சக்திகளை மகிழ்விப்பதற்காகவே இந்த அறிக்கையினை அவர் விடுத்து இருந்தார். தென்கிழக்காசியாவில் இந்தியா பலமாக இருப்பதையும், சர்வதேச அளவில் வல்லரசாக இருப்பதினனயும் விரும்பாத சக்திகளின் வலையில் புலிகள் சிக்கிக் கொண்டு இருந்தமையினால், அவர்களினால் இந்திய உறவினை வளர்த்துக் கொள்ள முடியாது போனது. இந்திய படையினருடன் மோதியிருந்த புலிகள் அத்துடன் நிறுத்தி கொள்ளாது, இந்திய எதிரணியில் தம்மை இணைந்த்து கொண்டு, இந்தியாவை தம்மால் கூறு போடலாம் என்று எண்ணினார்கள். அந்த நாட்டின் பிரதான தேசிய கட்சியின் தலைவரை திட்டமிட்டு கொன்றார்கள். இவர்களின் இந்தகைய நடவடிக்கைகள் விடுதலை போராட்ட அமைப்பு என்ற நிலையில் இருந்து விலக்கி, தீவிரவாத பட்டியலுக்குள் சிக்கி கொள்ள வேட்டியதாயிற்று.

1983 ஆம் ஆண்டில் இருந்து 1987 ஆம் ஆண்டு வரையில் தனது தென்மானிலத்தில் புலிகளுக்கு பயிற்சி கொடுத்து, பணம் கொடுத்து ஆயுதங்களை வழங்கி ஆதரித்து வந்த அயல் நாடு, பின்னர் ஏன் இவர்கள் குறித்து கண்டு கொள்ளாது போனது.வடமராட்சியை மீற்பதற்காக படையினர் தாக்குதலை மேற்கொண்ட போது இரண்டு இராட்சத யுத்த வீமானங்களின் துனையுடன் உணவு போதிகளை வீசி இலங்கையை மிரட்டிய இந்தியா ஏன் புதுமத்தாளனுக்குள் மக்கள் சிக்கிக் கொண்ட போது மெளனியாக இருந்தது. அன்று பிரபாகரனுக்கு தஞ்சம் கொடுத்த இந்தியா ஏன் பின்னர் தனது கரையோர பிரதேசங்களின் பாதுகாப்பை பலப்படுத்தி இந்தியாவிற்கு எவரும் புகுந்து கொள்ளாத வரையில் பார்த்துக் கொண்டது. இவைகள் எல்லாம் புலிகளின் தீவிர விசுவாசிகளுக்கு புரிந்து கொண்டாலும், தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் அவர்களுக்கு இன்னமும் வரவில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வீதி மறிப்பு போராட்டங்களையும், உண்ணாவிரத போராட்டங்களையும் புலிகளின் ஆதரவாளர்கள் நிகழ்த்தியும் அருகில் இருந்த இந்தியா நினைத்ததே நடந்தேறியது.


மே மாதம் 18 ஆம் திகதி பிரபாகரனும் மேலும் புலிகளின் பிராதான தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டதின் பின்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் “ புலிகள் செய்த தவறுகளில் மாபெரும் தவறு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியினை கொலை செய்ததே ஆகும் “என்று கூறியிருந்தார். இந்த செய்த்¢யானது ஜனாதிபதினால் புலிகளுக்கு சொல்லப்பட்டது என்றே பலரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் ஜனாதியினால் இந்தியாவிற்கு மறைமுகமாக கூறப்பட்ட செய்தியாகவே இது இருந்தது. அது என்னவெனில் இலங்கையில் பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்காக மட்டும் நீங்கள் எங்களுக்கு உதவவில்லை, இலங்கை ஒரு அயல் நாடு என்பதற்காக நீங்கள் எங்களுக்கு உதவவில்லை, உங்கள் நாட்டு தலைவரை கொன்றவருக்கு தண்டணை வழங்குவதற்காகவே நீங்கள் எங்களுக்கு உதவியிருந்தீர்கள்இ புலிகள் மட்டும் ராஜீவ் காந்தியினை கொலை செய்யாது இருந்தால், நீங்கள் எப்படியும் இந்த யுத்தத்தினை நிறுத்தி பிரபாகரனை காப்பாற்றி இருப்பீர்கள். ஜனாதிபதி கூறிய செய்தி இவ்வாறான உள் அர்த்தத்தினை உள்டக்கியதாகவே இருந்தது.

புலிகளின் தலைவர் இந்திய எதிர்ப்பு சக்திகளின் தரப்பில் தன்னை இணைந்து கொண்டிருந்தமையினால், யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்தி இறுதி நேரத்தில் அவரை பிழைக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தென் கிழக்காவியாவிற்குள் குறிப்பாக இலங்கைக்குள் இந்தியாவிற்கு எதிராக குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதில் இருந்து தப்பிக்க முடியாது என்பதினை இந்தியா காண்பித்து விட்டது. பிரபாகரன் உயிருடன் கைது செய்யப்பட்டு அவரை இலங்கை தம்மிடம் ஒப்படைத்தால்! தமிழகத்தில் பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்ப்படும், ஆகையினால் அவரு உயிருடன் பிடிபடக் கூடாது என்ற எண்ணங்கள் டெல்லி தரப்பில் இருந்தாக பேசப்பட்டது.


18 வருடங்கள் காத்திருந்து தமது ஒருமைப்பாட்டிற்கு இடைஞ்சல் ஏற்படுத்தியவரும், தமிழகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டவரும், தமது முன்னாள் பிரதமரை திட்டமிட்டு கொன்றவருமான புலிகளின் தலைவருக்கு தன் கை படாது இந்தியா சாதூர்யமாக தண்டணை வழங்கியது. இந்திய எதிர்தரப்பில் பிரபா தன்னை இணைந்துக் கொண்டமையினால், அவரின் எதிர்காலம் இறுதிக் காலமாகி போனது.

அர்ச்சுனன்!


நெருப்பு

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top