புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதால்தான் பேரழிவு ஏற்பட்டது - ஐநா அதிகாரி ஜோன் ஹோம்ஸ்
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நேற்றையதினம் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தின்போது புலிகள் 350000 மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தமையால்தான் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
புலிகள் தலைவர்கள் சிலர் தாம் சரணடைவது குறித்து ஐக்கிய நாடுகளின் பொருத்தமான அதிகாரிகளிடம் அவர்கள் தொடர்புகொண்டு அறிவித்திருந்ததை ஹோல்ம்ஸ் உறுதிசெய்துள்ளார். ஆனால் இறுதி நேர யுத்தம் மிக வேகமாக நடந்துமுடிந்ததால் ஐ.நா இதில் தலையிடுவதற்கான போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment