தமிழர் புணர்வாழ்வுக் கழக ஊழியர் யாழில் கைது
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதிப்பிரிவின் தலைவரை இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். உண்மையில் தமிழர் புனர்வாழ்வு கழகம் ஒரு தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பெருமளவு நிதியை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கி வந்தனர். அதன் நிமித்தம் அந்த கழகத்தை இலங்கை அரசு தடை செய்திருந்தது. இப்போது கைது செய்யப்பட்டவர் பிரபாகரன், தமிழ்ச்செல்வன், கவசவாகன அணித்தலைவர் பானு மற்றும் பிற முக்கிய புலிகள் தலைவர்களுக்கும் நிதி வழங்கியதாகத் தாம் கண்டுபிடித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது.
மேற்படி நபர் சுன்னாகத்தில் தமது மனைவியுடன் வசித்து வந்தபோது கைதுசெய்யப்பட்டதாகக் கூறியுள்ள புலனாய்வு பிரிவினர், இதற்கு முன்னர் அவர் வவுனியா தடுப்பு முகாமில் சில மாதங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளனர். சில வாரங்களின் முன்னரே அவர் சுன்னாகம் சென்றுள்ளாராம். மேலும் இவரது மனைவி சமுர்த்தி செயற்பாட்டாளராக கிளிநொச்சியில் பணிபுரிந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment