புலித் தலைவர்களின் நகைச்சுவைகள்…
போராட்டம் தொடங்குமுன் பிரபாகரனுக்கு ஒரு இந்தியப் பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தால்…
ஏங்க எங்கே போறீங்க?
யார்கூட போறீங்க?
ஏன் போறீங்க?
எப்படி போறீங்க?
என்ன செய்ய போறீங்க?
ஏன் நீங்க மட்டும் போறீங்க?
நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?
நானும் உங்ககூட வரட்டுமா?
எப்ப திரும்ப வருவீங்க?
எங்கே சாப்பிடுவீங்க?
எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?
பதில் சொல்லுங்க ஏன்?
நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?
நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.
ஏன் பேசமா இருக்கீங்க?
என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?
இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?
இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???
இதுக்கு அப்புறமும் அவரு போராட கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க??
எமன் : நான் உன் உயிரை எடுக்கப் போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
பிரபாகரன்: நான் பதுக்கி வைத்திருக்கிற ஆயுதங்களை ஒரு முறை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல வந்தா, நீ என்ன கொல்லப் பாக்குறியே….
அரபு தொலைக்காட்சி ஒன்றில் ஒசாமா பின் லேடன் நேற்று அனுப்பிய காசட் ஒன்று ஒளிபரப்பானது. அதில், பின் லேடன் கூறியிருப்பது: நாங்கள் தீவிரவாதிகள்தான், ஆனால் எங்கள் தீவிரவாதத்திற்கு ஓர் எல்லை உண்டு. நிச்சயமாக புலிக்கும்பல் சாவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எமன்: No charge...
பிரபாகரன்: ஏன்..?
எமன்: நரகம் to நரகம் local தான் அது free...!!
தமிழ்செல்வன் போராளிகள் மத்தியில்.....
தமிழ்செல்வன் : பள்ளிக்கூடத்துக்கே போகாத ஆட்கள் எல்லாம் ஒருக்கா எழும்பி நில்லுங்க.
(ஒருவன் மட்டும் எழுந்து நிற்கிறான்)
தமிழ்செல்வன் : என்ன நீ மட்டும் நிற்கிறாய்?
போராளி : உங்களுக்குத் துணையாகத்தான், அண்ணை
ஊர்க்குருவி
0 விமர்சனங்கள்:
Post a Comment