இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Monday, December 14, 2009

சரணடைந்த புலிகளும்.. காட்டிக் கொடுத்த சிங்களமும்..!!

37வருடங்களாக 32.000மேற்பட்ட போராளிகள் தங்களின் இன்னுயிர்களை ஈர்த்து மாபெரும் தியாகம் செய்து கட்டிக்காத்த தமிழீழ விடுதலை போராட்டத்தை கடைசிகட்டத்தில் காட்டிக்கொடுத்துவிட்டு, தன்னையும் தனது குடும்பத்தையும் (மகன், மகள், மனைவி) காப்பாற்றுவதற்காக எப்படி பிரபாகரன் சரணடைந்தான் என்பது பற்றிய விபரங்களும் படையினர் எப்படியெல்லாம் அவரை படுகொலை செய்தார்கள் என்பது பற்றி விபரங்களும் வெகுவிரைவில் சரத்பொன்சேகாவின் வாயால் ஐனவரி 27ம்திகதிக்கு முன்பாக நாம் அறியக் கூடியதாக இருக்கும். சுரத பொன்சேகாவுக்கும், கோத்தபாய ராஐபக்சவுக்கும் இடையிலான குடும்பி சண்டையில் பல காட்டிக்கொடுப்புகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. ஐனாதிபதி தேர்தல் நெருங்க நெருங்க நிறைய இராணுவ ரகசியங்கள் அம்பலத்துக்கு வரவிருக்கின்றன. ஆயுதக் கொள்வனவு ஊழல்கள், போர் குற்றங்கள், மனிதாபிமான மீறல்கள் போன்ற சமாச்சாரங்களை இருவரும் பகிரங்கப்படுத்தவுள்ளார்கள். (இராணுவ உடையை கழற்றிய பின்பு சரத் பொன்சேகா கோலத்தை பார்த்தால் சில விசர் படங்களில் வரும் கமலஹாசன் போல் தான் தெரிகிறது. ஆளுக்கு சாடையான விசர் மாதிரிதான் தெரிகிறது, இந்த மாதிரியான இராணுவ இரகசியங்களை வெளியிடும் மனிதர்களை நம்பி நாட்டைக் கொடுத்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான் இருக்கும்)

சரத் பொன்சேகா கடைசியாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்.. (காட்டிக் கொடுத்திருக்கிறார்) வன்னி மக்கள் விரும்பிதான் புலிகளுடன் இருக்கிறார்கள் என்று பச்சைபொய் சொன்ன பா.நடேசனும், சமாதான காலத்தில சரத் பொன்சேகாவுடன் ஒட்டி திரிந்த சமாதான செயலக பிரதானி புலிதேவன், இராணுவ தளபதி ரமேஸ் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் 17ம்திகதி படையினரிடம் சரணடையப் போவதாக வெள்ளை சட்டையணிந்து கொண்டு தாங்கள் வருகிறோம் என்று அறிவித்து விட்டு சரணடைய போனவர்களாம். அப்படி போன இடத்தில் அவர்களை இராணுவம் சுட்டுக்கொண்டு போட்டார்களாம் என்றும், அப்படி வருபவர்களை சுடச்சொல்லி கோத்தாபாய தான் சொன்னதாகவும் சரத்பொன்சேகா காட்டிக் கொடுத்திருக்கிறார்.
இப்படிபட்ட இராணுவ இரகசியங்களை சொல்லுவதென்பது ஒரு சட்டவிரோத கடுமையான குற்றமாகும். சிலநேரம் சரத்பொன்சேகா விரைவில் கைதாக நேரிடலாம் என நாம் எதிர்பாhக்;கின்றோம். 2009ஆண்டு முடிய முதல் இன்னும் பல சம்பவங்கள் நடக்கப் போகின்றன. றயவை யனெ ளநந.

கடைசிகட்டபோரில் புலித்தலைவர்கள் சரணடைந்த சம்பவங்களை சரத்பொன்சேகா சொல்ல முன்பே யார் யார் எப்படியெல்லாம் சரணடைந்தார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது போன்ற விபரங்கள் http://live.athirady.org/archives/52829 அதிரடி இணையதளம் முதல், பல்வேறு இணைய தளங்களில் விலாவாரியாக வந்த செய்திகள் தான், அப்பொழுதெல்லாம் ஒன்றுமே தெரியாத மாதிரியிருந்த புலி இணையதளங்கள் (வீரகேசரி, லங்காசிறி, தமிழ்வின்..) இப்பதான் இந்தசெய்தி உலகத்துக்கே தெரிந்தது மாதிரி பிரசுரிக்கிறார்கள்.

ஏன் தெரியுமோ? புலியூடகங்கள் இந்த செய்தியை இப்பொழுது முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்? இந்த செய்தியை இப்பொழுது தான் ஒரு ஆங்கில ஊடகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. (பிரசுரித்திருக்குங்கோ) அதனால்தான் அடிச்சு விழுந்து பிரசுரிச்சிருக்கிறார்கள். ஒரு வெளிநாட்டுக்காரனோ அல்லது ஒரு ஆங்கில ஊடகமோ (சண்டே லீடர், ரைம்ஸ் பத்திரிகை) நமது நாட்டு செய்தியை போட்டால் அதுதான் பெரிய செய்தி அதுதான் உண்மை என்ற மாதிரி தூக்கி பிடிப்பார்கள். நீங்கள் ஒரு விடயத்தை உற்றுப் பாருங்கள் புலம்பெயர் தேசத்தில் புலிகள் 10ஆயிரம் பேரை கூட்டி ஒரு கூட்டம் போட்டாலும் அந்த கூட்டத்தில் இரண்டு வெள்ளை காரர்கள் கலந்து கொண்டால் அவர்களின் படத்தை தான் போட்டுக் காட்டுவார்கள்.

வெள்ளைகாரன் எப்பவுமே வெள்ளைகாரனாக தான் இருக்கிறான் இந்த நோர்வே வெள்ளைக்காரனான எரிக்சொல்கெய்மை நம்பிதான் புலித்தலைவர்கள் படையினரிடம் சரணடைந்தவர்கள், நோர்வேகாரன் தான் புலிகள் இயக்கத்தை முழுக்க முழுக்க சர்வதேசத்தினருக்கு அறிமுகப்படுத்தியதும், காட்டிக் கொடுத்ததும், இணைத்தலமை நாடுகளின் பொறியில் சிக்க வைத்ததும் ஆனால் அவனுக்கு எதிராக துரோகி என்று சொல்லி கொண்டு புலம்பெயர் புலிப்பினாமிகள் நோர்வேயில் நின்று கொடிபிடிக்க மாட்டார்கள். நல்ல கதை அப்படி நோர்வேகாரனுக்கு எதராக கொடி பிடிப்பார்கள் என்றால் இவர்களுக்கு நோர்வேயில் பிழைப்பு போய்விடும். அமெரிக்கர்களோ, ஐரோப்பியர்களோ புலிகளுக்கு எதிராக என்ன செய்தாலும் அவர்களை புலியாதரவாளர்கள் எதிர்க்க மாட்டார்கள் அவர்கள் புலிகளை பொறுத்தவரை துரோகிகள் அல்ல. பிறகு அவர்களை எதிர்த்தால் அவர்கள் வீட்டு மலசல கூடத்தில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், கனடியர்களும் ஏன்தெரியுமோ புலிகளை தடை பண்ணியுள்ளார்கள்? அது சிறிலங்கா அரசு சொல்லி தானாம் புலிகளை அவங்கள் தடை பண்ணினவங்கள். ஏன்என்றால் அவங்களுக்கு உலக அறிவே கிடையாது.

வெள்ளைக்கொடியுடன் ஓடிவந்து சரணடைந்த புலித்லைவர்களை தாங்கள் சுட்டுக்கொன்றதாக ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட சரத் பொன்சேகா இந்த கதையை சொன்னவர் தான், அப்பொழுது யார் யார் என்றுபெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை ஆனால் இப்பொழுது தாங்கள் சுட்டுக்கொன்ற மூன்றுபேரின் பெயரை மட்டும் குறிபிட்டு சொல்லியுள்ளார். அப்பொழுது அசட்டையீனமாக இருந்த மகிந்தவும், கோத்தபாயவும் இப்பதான் விழித்துக் கொண்டுள்ளார்கள். அம்பலாங்கொடையில் வைத்து சரத்பொன்சோகாவின் இந்த வாக்குமூல பேச்சை (இலங்கையில் அமெரிக்க புலனாய்வுத் துறையினரால் பதிவு செய்யபட்டது) வைத்து கொண்டு தான் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான போர்குற்ற அறிக்கையை தயாரித்தது. இதன் மூலம் இலங்கையரசையும், பாதுகாப்புத்துறைத் தலைவர்களையும் அரச படையினரையும் போர்க் குற்றச்சாட்டுகளின் கீழ் சர்வதேசக் குற்றவாளிகளாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை நம்பிதான் கொஞ்ச நாளாக புலம்பெயர் புலியாதரவுக் கூட்டங்களும், புலியாதரவு ஊடகங்களும் ஏதோ அமெரிக்கா இலங்கையரச தரப்பினரை (மகிந்தவையும், கோத்தாபாயவையும், சரத் பொன்சேகாவையும்) போர் குற்றத்தில மாட்டி சிறை பிடித்துக் கொண்டு போய் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வைத்து விசாரித்து தண்டணை கொடுக்கப் போறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை தவிடுபொடியாகி போய்விட்டது. (வழமையாக புலிகளுக்கு சார்பாக ஒன்றும் நடக்காது தானே) இலங்கையரசை போர்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனை நிறுத்துவோம், ஐp.எஸ்.பி வரிச்சலுகையை நிறுத்துவொம் என வரிந்து கட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா அதையெல்லாம் இப்பொழுது கைவிட்டு விட்டது.

இப்பபொழுது அமெரிக்கா இலங்கைக்கு சார்பாக புது அறிக்கையொன்று தயாரித்து வெளியிட்டுள்ளார்கள். அதாவது நாங்கள் இலங்கையுடன் முரண்பாட்டு அணுகுமுறையைத் தவிர்த்துக் கொள்ள போறம் என்று அறிக்கை விட்டுள்ளார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் இலங்கையில் நடந்த மனிதபேரவலங்களை பற்றியோ அல்லது கடைசிகட்ட போரில் என்ன நடந்தது என்பது பற்றியோ எமக்கு எந்தவித அக்கறையுமில்லை நாம் அதைபற்றி விசாரிக்க போவதுமில்லை என்பதுதான் இதன் சாரம்சம்.

இதில் மிகமுக்கியமான விடயத்தை நாம் நோக்குவோமானால், இந்த போர்குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கையரசுக்கு எதிராக யார் அறிக்கை தயாரித்துக் கொடுத்தார்கள் என்று பார்தோமானால் இவற்றுக்கெல்லாம் (மனிதபேரவலம், மனிதவுரிமை மீறல்கள்) முழுமுதல் காரணகர்தாக்களாக இருந்த புலிகளமைப்பு ஆதரவாளர்களான புலிகள் இயக்க அமெரிக்கச் சட்ட ஆலோசகரும் ஆதரவாளருமான விஸ்வநாதன் ருத்திரகுமாரன் மற்றும் புலிகள் இயக்கப் பிரபல அமெரிக்க ஆதரவாளர்களாகிய எலின், ஜெயராஜா மற்றும் அமெரிக்க அரசசார்பற்ற அமைப்பின் தலைவர் ரஜிதன் போhன்றோர் தான் இந்த போர்குற்ற பத்திரிகையை றொபேட் பிளேக் ஏற்பாட்டில் சமர்ப்பித்தார்கள்.

குற்றம் செய்தவர்களே குற்றபத்திரிகையை தாக்கல் செய்தால் எப்படி நீதி கிடைக்கும்? வன்னியில் நடந்த பேரழிவுகளுக்கும், உயிரழிவுகளுக்கும் காரமானவர்கள் ராஐபக்சவும், சரத் பொன்சேகாவும் தான் காரணமாம். இந்த இருவரும் தானாம் இனப்படுகொலை செய்த கொலைகாரர்கள் என்று சிவாஐpலிங்கம் போன்றவர்களும் புலம்பெயர் புலியாதரவுக் கூட்டங்களும் சொல்லுகிறார்கள். அப்படியானால் பிரபாகரன் என்றவர் வன்னிக்குள்ளிருந்து என்ன செய்து கொண்டிருந்தவர்? கடைசிக்கட்ட போரில் முள்ளிவாய்கால் பிரதேசத்தில் 25,000பேர் இறந்ததாக ஒரு புலியாதரவாளன் சொல்லுகிறான், கNஐந்திரன் என்ற குதிரை 60,000பேர் இறந்ததாக கனைக்கிறது இப்படி ஆளாளுக்கு ஒருதொகை சொல்லுகிறார்கள். சரி என்று வைத்துக் கொள்வோம், இவர்கள் எப்படி யார் மூலம் இந்த இறந்தவர்களின் தொகையை கணக்கெடுத்தார்கள்?

உண்மையோ பொய்யோ யாரும் அறியார். சரி அதையும் விடுவோம். இலங்கையரசு கடைசிக்கட்ட போரில் நாளாந்தம் சரிமாரியான செல்லடித்தது, பொஸ்பரஸ் இரசாயன குண்டுகளை வீசியது, கொத்தனி குண்டு வீசியது ஏவுகனை ஏவியது என்று சொல்லி மற்றவர்களின் உடலை புலிஇணைய தளங்களில் காட்டினார்கள். ஆனால் பாருங்கோ பிரபாகரனும், அவரது மனைவி பிள்ளைகள், தாய், தகப்பன் போன்றோருக்கு மேலே எந்த செல்லோ, கொத்தணி குண்டோ, பொஸ்பரஸ் குண்டோ வீழ்ந்து அவர்கள் சாகவில்லையே ஏன்? அவர்கள் எப்படி கடைசிக்கட்ட போர் முடியும்வரை பாதுகாப்பாக இருந்தாhர்கள்? மற்றவர்கள் எல்லாம் மரணத்தில் மூழ்கிய போது அவர்கள் எப்படி தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக படையினரிடம் சரணடைந்தார்கள்? அது எப்படி நடந்தது?

கடைசிகட்ட சண்டை நடக்கும்போது பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்த புலியூடகங்கள் நாளாந்தம் பலநூறு பேர்கள் இராணுவத்தினரால் கொல்லபடுவதாக படம் காட்டினார்களே அவர்கள் எல்லாம் இறந்த பொழுது கடைசியாக சரணடைந்த பிரபாகரனும், பிரபாகரனின் கூட்டாளிகளும், பிரபாகரன் குடும்பமும், எங்கேயிருந்தார்கள்?; 2006ஆண்டு சண்டை தொடங்கியதிலிருந்து எத்தனை ஆயிரம் இளம் பிஞ்சுகளை பிரபாகரன பலிகொடுத்தான். இத்தனை ஆயிரம்பேர்களை தன்னுடைய உயிரை காப்பாற்றுவதற்காக பலிகொடுத்த இந்தக் கேடுகெட்ட கிரிமினல் பிரபாகரன் முதலிலேயே இவனது குடும்பத்துடன் போய் சரணடைந்திருக்கலாமே? இவன் முதலிலேயே சரணடைந்திருந்தால் எத்தனையோ ஆயிரம் தமிழர்கள் உயிர்கள் தப்பியிருப்பார்களே. பிரபாகரன் தமிழனை அழிக்கப் பிறந்தவன். ‘பிரபாகரனின் பிறந்த நாளை ஈழத்தமிழர்கள் ‘கரிநாளாக” கொண்டாடிட வேண்டும். இறந்த மே 17ஐ ஈழத்தமிழர்களின் தீபாவளி நாளாக கொண்டாடிட வேண்டும்.

எதிரியிடம் சரணாகதியடைந்த இந்த கேடுகெட்ட கிரிமினல்கள் வெள்ளைசேட்டுடன் போய் சரணடையவில்லை. இவங்கள் சரணடைய முதல் படையினர் 300மீற்றருக்கு அங்கால நின்று லவுஸ்பீக்கரில் அறிவித்தவங்களாம் இவங்கள் போட்டிருந்த உடுப்புகள் யாவற்றையும் கழட்டிவிட்டு தான் வர சொன்னவங்களாம். கடைசியாக சரணடைந்தவர்கள் யாபேரும் கட்டியிருந்த கோவணத்துடன் தான் போய் சரணடைந்தவர்களாம். தலைவர் எதுசெய்தாலும் தந்திரோபாயம் தானே.. அவர் முல்லைதீவு பகுதிகளில் முக்கி.. இருந்தாலும் இஞ்ச வெளிநாட்டில இருக்கிற புலிக்காரர்களுக்கு மாபெரும் சாதனை தான்.
சொந்த தாய்,தகப்பனையும், தனது சொந்த மனைவியையுமே காப்பாற்ற முடியாதவன் தமிழர்களை காப்பாற்றுவாராம் என்று அவருடைய மதிவதனி கொக்கா ஒருமுறை சொன்னவா அதைவிட புலிப்பினாமிகளும் சொன்னவர்கள் புலிகளால் தானாம் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களாம்.

கடைசியாக சரணடைந்த பிரபாகரனை கண்ணாடி கூட்டுக்குள் கொண்டு போய் வைத்திருந்தவங்களாம். அங்கு அவரை வெறும் மேலுடனும் யட்டியுடன் தான் வைத்திருந்தவங்களாம். பல ஆயிரம் ஆமிக்காரர்கள் போய் பார்த்தவங்களாம். கிளிநொச்சியில் நோர்வே காரர்களுடன் கலந்துரையாடல் நடக்கும் போது சும்மாயிருந்து சிரித்துக் கொண்டிருந்தது மாதிரி தன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்ற நினைப்பில் தன்ரபாட்டில் சிரித்துக்கொண்டிருந்தவராம். ஆனால் கண்ணாடிக் கூட்டுக்கு வெளியில நின்று பலபேர் இவரை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றது உள்ளுக்குள் இருந்த பிரபாகரனுக்கு தெரியாதாம். தின்ட சோற்றுக்குள் நஞ்சு வைத்து கொண்டவனுக்கு தண்டனை எப்படி கிடைத்திருக்கு தெரியுமா? உடனுக்கு உடன் கிடைத்திருக்கு. இதில் மோட்டு சிங்களவன் ஒரு பிழை விட்டுவிட்டான் தறுதலைவரை கொண்டுபோய் துரையப்பா விளையாட்டரங்கில் கொண்டு போய்விட்டு அங்குள்ள யாழ்பாண குடாநாட்டு சனத்தை கூப்பிட்டு நீங்கள் என்னமாதிரியான தண்டணை என்றாலும் கொடுங்கோ என்று சொல்லி விட்டிருக்க வேண்டும் கட்டாயமாக பிரபாகரனின் தலைமேல சனம் நெருப்புதான் கொண்டு வந்து கொட்டியிருக்கும். இந்தவிடயத்தில் சிங்களவனை புலிகள் பாராட்ட வேண்டும்.

பிரபாகரன் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்ததை நிறைய அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் போய் பார்த்திருக்கிறார்கள். வெளிநாட்டிலிருக்கு புலி மந்தைக் கூட்டங்கள் நினைக்கிறார்கள் பிரபாகரன் என்ற தேசத்துரோகி 37வருட தமிழின விடுதலை போராட்டத்தையே காட்டிக் கொடுத்து விட்டு போய் சரணடைந்தது யாருக்கும் தெரியாதென்று எல்லாருக்கும் எல்லாம் தெரியும். மூன்று இலச்சம் தமிழர்களை தனது பிடிக்குள் வைத்திருந்த நச்சுபாம்பை கடைசியில் வெள்ளைப்பால் கொடுத்து தான் பிடிக்க முடிந்ததாம்..!! நன்றி.

-கபிலன்

அடிரடி இணையம்

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top