பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டுள்ளனர்
ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சிலர் குடும்பத்துடன் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த பிரபாகரன், நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களின் குடும்பங்களுடன் பொல்லுகளினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கடந்த காலங்களில் கதையொன்று பரவியிருந்தது. பொன்சேக்காவின் இந்தக் கருத்தின்மூலம் அதில் உண்மை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனின் மகள், மனைவி, நடேசனின், மனைவி மற்றும் மகன் ஆகியோர் இவ்வாறு கொலைப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கைக்கு உதவிகளை வழங்கிவரும் உலக செல்வந்த நாடுகள் இலங்கையில் இவ்வாறான குற்றச் செயல் இடம்பெற்றிருக்குமானால், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றன.
இலங்கையின் வரலாற்றில் மகிந்த, கோதாபய போன்றவர்கள் யுத்தத்தின் வீரர்களாக தம்மை இனங்காட்டிக் கொண்டதுடன், சிலர் தம்மை துட்டகைமுனுவாக காட்டிக்கொள்ள முயற்சித்தனர். வரலாற்றில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இரு தரப்பிலும் மக்கள் கொல்லப்படுவதால் தனித் தனியாக மோதலில் ஈடுபடுவோம் என எல்லாளன், துட்டகைமுனுவிற்கு யோசனை தெரிவித்ததாகவும் அப்போது எல்லாளன் 70 வயதுடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இடம்பெற்ற யுத்தத்தில் எல்லாளன் கொல்லப்பட்டதும் துட்டகைமுனு எல்லாளனுக்கு அவமரியாதை செய்யவில்லை. எல்லாளனை தனது தந்தைப் போல் தூக்கிச் சென்று அடக்கம் செய்ததுடன் அவரது கல்லறைக்கு மரியாதை செலுத்துமாறும் மக்களுக்கு கற்பித்ததாக கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த, கோதாபய போன்றவர்கள் சிங்களவர்களுக்குரிய இவ்வாறான புகழ்பெற்ற வரலாற்றிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட கொலை காரர்கள் எனவும் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment