புதிய மகிந்த அரசில் பொருளாதார ஆலோசகராக ஜோய் மகேஸ்வரன், எதிர்கால பிரதமர் எஸ்.பி.திசநாயக்காவுடன் இரகசிய சந்திப்பு
விடுதலைப்புலிகளின் பொருளாதார ஆலோசகரென தன்னை சொல்லிக்கொண்டு சமாதானகாலத்தில் படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு அவுஸ்ரேலியாவில் வந்து ஒதுங்கிக்கொண்ட கல்லா நிதி ஜோய் மகேஸ்வரன் வன்னியில் போர் மிகவும் கொடூரமாக நடந்தவேளையில் முகத்தைக்காட்டாமல் பதுங்கிக்கொண்டார்.
மே மாதம் 18ம் திகதிக்கு பின்னர் மீண்டும் முகம் காட்டத்தொடங்கியுள்ள இந்த மகேஸ்வரன் தனக்கென ஒரு அணியை சேர்த்துக்கொண்டார். அந்த அணியில் மனோ நவரட்ணம்( மனோ அக்கா) , சண்குமார் (இவர் தான் வன்னியில் நீச்சல் தடாகம் கட்டியவர்) இன்னும் சிலரையும் சேர்த்துக்கொண்டார்.
இங்கு மனோ நவரட்ணம் பற்றி சொல்லியே தீர வேண்டியுள்ளது. இவரது நெருங்கிய உறவினர்கள் பலர் சிங்கள இனத்தில் உள்ளனர். அதில் அவுஸ்ரேலியாவில் தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராக செயற்படும் SPUR அமைப்பின் முக்கிய அங்கத்தவர்கள் பலர் இவரின் உறவினர்கள். குறிப்பிட்ட இந்த சிங்கள இனவாதிகளின் இரகசிய தொடர்பு ஊடாக அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு மகிந்த ராஜபக்ச எஸ்.பி. திசநாயக்காவை அனுப்பிவைத்தார்.
அவுஸ்ரேலியாவுக்கு வந்த திசாநாயக்கா மனோ நவரட்ணம் வீட்டில் விருந்தில் கலந்துகொண்டார். இந்த விருந்தில் தங்களை புலிகளின் பிரதி நிதிகளாக தாங்களே தன்னிச்சையாக அறிமுகப்படுத்திக்கொண்ட இந்த மூவரும் மகிந்தவின் இரகசிய தூதுவருடன் இரகசிய பேரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செய்தியை காவிக்கொண்டு அலரி மாளிகை நோக்கிப்பறந்தார் எஸ்பி.
இதேவேளை இன்னொரு இரகசிய சந்திப்பும் இன்னொரு தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறியப்படுகிறது. அது தொடர்பான உறுதிப்படுத்திய செய்திகள் பின்னர் அம்பலத்துக்கு கொண்டுவருவோம்.
மறுஆய்வின் இந்த செய்தி வரும் நாட்களில் கொழும்பு தேர்தல் களத்தில் பெரும் சூடு கிளப்பப்போவது மட்டும் உறுதி. புலிகளின் பொருளாதார ஆலோசகர் வரும் வருடத்தில் மகிந்தவின் பொருளாதார ஆலோசகராக மாறினாலும் வியப்பேதுமில்லை. இந்த ஆலோசகரின் தனியான இன்னொரு பக்கத்துடன் மீண்டும் வருவோம்.
நன்றி - மறுஆய்வு
0 விமர்சனங்கள்:
Post a Comment