WOW.... இப்படியும் ஒரு அமைப்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை கவனிப்பதற்காக புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. புலிகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கபட்டடவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இணைந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகின்றன. அதேவேளை, பல நாடுகள் ஏற்கனவே புலிகளின் புனர்வாழ்வுக்கழகம் போன்ற அமைப்புக்களின் சொத்துக்களை முடிக்கி வைத்தி;ருக்கின்றன. இந்தச் சொத்துக்களிலிருந்து புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டைப் பொற்றுக்கொடுப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக அதன் அமைப்பாளர்களில் ஒருவர் தெரிவித்திருக்கிறார். ltteaffected@hotmail.com என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தமது விபரங்களைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment