கிளிநொச்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் கைப்பற்றுவர்
தமிழகம் திருச்சிராப்பள்ளி கொட்டாப்பட்டு அகதிமுகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள், கிளிநொச்சி நகரம் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளமை தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். எனினும் அந்தப் பிரதேசத்தை மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் கைப்பற்றுவார்கள் என அவர்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் இடம்பெற்று வரும் யுத்தம் பொதுமக்களின் உயிர்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த தமிழ் அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment