இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Saturday, August 8, 2009

ராஜீவ் படுகொலைசெய்யப்படவிருந்தமை பத்மநாதனுக்கு முன்கூட்டியே தெரியும்?

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படவிருந்தமை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தலைவர் செல்வராஜா பத்மநாதனுக்கு முன்கூட்டியே தெரியும் எனவும் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் ஏற்படுத்திய புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இந்திய தலைமைத்துவத்தை விரைவில் இலக்கு வைப்பார்கள் என 1990 நவம்பரில் செல்வராஜா பத்மநாதன் அல்லது கே.பி. தமிழ் நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர் ஒருவருக்குத் தெரிவித்ததாகவும் ராஜீவ்காந்தியின் பெயரை அவர் குறிப்பிட்டிருக்கவில்லை எனவும் "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.

1991 மே 21 இல் சென்னைக்கருகே தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரியால் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருந்தார். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பேயே வெளிநாட்டிலிருந்து தொலைபேசியூடாக இந்தத் தகவலை கே.பி. தெரிவித்திருந்ததாக எம்.ஆர்.நாராயண் சுவாமி "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கே.பி. மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன், அந்தக் கொலையில் அவர் நேரடியாக தொடர்புபட்டிருக்கவில்லை. காந்தி படுகொலை தொடர்பான பாரிய சதியை தற்போதும் விசாரணை செய்து கொண்டு வரும் பல் ஒழுங்கமைப்பு கண்காணிப்பு அதிகார சபையின் கண்களுக்கு இவர் ஒரு சந்தேக நபராக மட்டுமேயுள்ளார்.

படுகொலை தொடர்பாக முன்கூட்டியே கே.பி. அறிந்திருந்தமை குறித்து இந்திய பாதுகாப்பு முகவரமைப்புகள் கவனம் செலுத்தியிருந்தன. காந்தியின் படுகொலை தொடர்பாக ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு கே.பி.க்குத் தெரியவந்தது என்பது பற்றிய கேள்விகள் எழுந்திருந்தன.

விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவின் முக்கியஸ்தராக கே.பி.யிருந்ததால் அவரில் புலிகள் முழுமையாக தங்கியிருக்க வேண்டியதாக இருந்தது என்று ஒரு தர்க்க ரீதியான விளக்கம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த மேயில் மரணமடைந்ததையடுத்து புலிகளின் தலைவராக பத்மநாதன் அறிவிக்கப்பட்டிருந்தார். ராஜீவ்காந்தியின் கொலையால் சர்வதேச ரீதயிலான ஆயுதக் கொள்வனவு மற்றும் சர்வதேச வலைப்பின்னல் அமைப்பிற்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதி முன்கூட்டியே கே.பி. அந்த விடயம் குறித்து அறிந்திருக்கக் கூடிய தேவையிருப்பதாக புலிகள் கருதியிருக்கக் கூடும்.

ராஜீவ்காந்தியின் படுகொலை தொடர்பாக முன் கூட்டியே அறிந்திருந்த புலிகளின் மற்றொரு சிரேஷ்ட உறுப்பினர் திருச்சி சாந்தனாகும். அவர் 1990 1991 காலப்பகுதியில் தமிழ் நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள், சிங்கப்பூர் கிரனேற் என்பவை தொடர்பாக கே.பி.யை விசாரணை செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அதிகளவு பயனுள்ள தகவல்கள் கிடைக்கக் கூடும். எவ்வாறாயினும் கே.பி.யை விசாரணை செய்வது தொடர்பாக தனது பாதுகாப்பு முகவர் அமைப்புகளிடம் கேட்பதற்கு இந்தியா முடிவு செய்யுமானால் அந்த இலக்கிற்குத் தேர்ந்தெடுப்பவர்கள் விடுதலைப் புலிகளின் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் தாழ்ந்த மட்டத்திலான அதிகாரிகள் குழுவொன்று உள்ளது. அக்குழு சேவையாற்றிக் கொண்டும் இருக்கிறது. ஓய்வு பெற்றும் உள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகள் தொடர்பாக பல தசாப்த காலம் தொடர்பாக பல விடயங்களை அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், கடந்த காலத்தில் தகுதிவாய்ந்த பலர் அடிக்கடி ஓரங்கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. 1983 இலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டியெழுப்புவதற்கு கே.பி. ஆற்றிய பங்களிப்பின் சிறிய பகுதியாகவே காந்தி கொலை தொடர்பாக அவரின் தொடர்பு காணப்படுகின்றது.

பிரபாகரன் இல்லாமல் விடுதலைப் புலிகள் இல்லை. கே.பி. ஒருபோதும் இராணுவ பயிற்சி பெற்றவர் அல்ல. அவர் இந்தியாவிலிருந்த போது 1984 இல் புலிகள் மட்டத்தில் யுத்த உபகரணங்களை உலகளாவிய ரீதியில் பெற்று அவற்றைக் கொண்டு செல்வதற்கு இரகசியக் குழுவொன்றை உருவாக்க பிரபாகரன் தீர்மானித்திருந்தார். அந்த வேலைக்கு கே.பி. தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அந்தத் தருணத்தில் கே.பி. வளர்ச்சியடைந்தார். மோசடி மற்றும் மறைவாகச் செயற்படுதல் என்பனவற்றில் இயல்பாகவே ஆற்றலுள்ளவராக இருந்த இந்த மனிதர் விரைவில் பல்தரப்பு அடையாளத்துவங்கள் கொண்டவராக தன்னை ஏற்படுத்திக் கொண்டார். கடவுச் சீட்டுகளையும் (இந்தியா உட்பட) பெற்றுக் கொண்டிருந்தார். பின்னர் படிப்படியாக புலிகளின் ஆயுதக் கொள்வனவு பிரிவைக் கட்டியெழுப்பினார். பல கம்பனிகளை உருவாக்கினார். (எஜமானன் அவரே) பல நாடுகளில் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

தங்கம், போதைவஸ்து, கடத்தல் நடவடிக்கைகளுக்காக இந்தக் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன. அந்தப் பணத்தைக் கொண்டு யுத்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அவர் பயன்படுத்தினார். 1980 களில் இந்தியாவில் தமிழ் நாட்டில் பாற்பண்ணை ஒன்றை இரகசியமான முறையில் நடத்தி வந்தார். அத்துடன், விடுதலைப் புலிகளுக்காக இரகசிய கப்பல் போக்குவரத்துக் கட்டமைப்பையும் அவர் உருவாக்கியிருந்தார்.

அதன் மூலம் ஆயுதம் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. முற்றிலும் இரகசியமான முறையில் அவர் இயங்கி வந்தார். பிரபாகரனுக்கு மட்டுமே விடயங்களைத் தெரிவித்து வந்தார். கே.பி.யின் மூலம் விடுதலைப் புலிகள் ஆயிரணக்கணக்கான தொன்கள் ஆயுதங்களைப் பெற்றது, நவீன பாதுகாப்பு நிலைமைகள், தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், சினைப்பர் துப்பாக்கிகள், மோட்டார்கள், ஆர்.பி.ஜி.க்கள், இரவில் பார்ப்பதற்கான உபகரணங்கள், கண்டு பிடிப்புக் கருவிகள், கண்ணாடி விலைப் படகுகள், நவீன வானொலி, கம்பியில்லா தொலைத் தொடர்புகள் போன்ற பல முன்னேற்றகரமான பாதுகாப்பு முறைமைகளும் இவற்றில் உள்ளடங்கும்.

கடந்த சில வருடங்களாக மலேசியாவிலே இவர் அறியப்பட்டவராக இருந்தார். 19801990 களில் இவர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். பல்வேறு அடையாளங்களுடன் இவர் லெபனான், தாய்லாந்து கம்போடியா கம்போடியா எல்லை, பிரான்ஸ், பிரிட்டன், சுவீடன், கிறீஸ், சைப்பிரஸ், கொங்கொங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மியன்மார், மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

2006 இல் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பிரிட்டனில் மரணமடைந்த போது, கே.பி. அங்கிருந்தார். விடுதலைப்புலிகள் தமது முதலாவது சிறிய ரக விமானத்தைப் பெற்றுக் கொண்டமை கே.பி.யின் மூலமேயாகும். எவ்வாறாயினும் கே.பி.யின் படிப்படியான வளர்ச்சி புலிகளுக்குள் பொறாமையை ஏற்படுத்தியது.

2003 தொடக்கம் பிரபாகரன் அவரை ஓரங்கட்டியிருந்தார். அவரின் இடத்திற்கு தனது மற்றொரு விசுவாசியான காஸ்ட்ரோவை கொண்டு வந்தார். ஆனால், கே.பி.க்குள்ள இயற்கையான ஆற்றல்களுக்கு அவர் பொருத்தமற்றவராக இருக்கவில்லை. ஆயினும் புலிகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்ததையடுத்து பிரபாகரன் நிலைமையை உணர்ந்து கே.பி.யை மீள பணிகளில் ஈடுபடுத்தினார். காலம் மிகவும் கடந்து விட்டதாக அமைந்தது.

கே.பி.யின் சிறகுகள் 6 வருடங்களுக்கு முன்னர் வெட்டப்படாதிருந்திருக்குமானால் பிரபாகரன் இப்போதும் இருந்திருக்கக் கூடும் என்று புலிகளின் அவதானிகள் பலர் நம்புகின்றனர்.

- நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்'




0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top