இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Wednesday, September 2, 2009

மக்கள் மனதில் இராணியாக வீற்றிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்


வாழ்ந்த காலத்தில் தினம் தினம் இறந்து, இறந்த பிறகு நிரந்தரமாக வாழ்பவர் என்றால் அவர் காலஞ் சென்ற இங்கிலாந்தின் இளவரசி டயானாவாகத்தான் இருக்க வேண்டும்.

டயானாவின் கணவர் சார்ள்சின் 47ஆவது பிறந்த நாளின் போது பீ.பீ.சி. தொலைக்காட்சியில் நவம்பர் 14ம் திகதி

விளம்பரம் ஒன்று ஒளிபரப்பானது. இதன் ஊடாக நவம்பர் மாதம் 20 ஆம் திகதி டயானாவின் பேட்டி ஒளிபரப்பாகும் என்று முன்கூட்டியே உலகம் முழுவதும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


உலகம் முழுவதும் எதிர்பார்த்த அந்தச் சர்ச்சைக்குரிய பேட்டி 1994ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி பீ.பீ.சியில் ஒளிபரப்பானது. கறுப்பு உடையில் காட்சியளித்த டயானா அவர் வாழ்க்கையின் பல புதிர்களுக்குத் தயக்கமல்லாமல் பதில் சொன்னார். பீ.பீ.சியின் மார்ட்டின் பiர் டயானாவை பேட்டி கண்டார்.


பீ.பீ.சி : சார்ள்சைத் திருமணம் செய்துகொண்ட பிறகு ஏற்பட்ட கடுமையான நெருக்கடிகளை எப்படிச் சமாளித்தீர்கள்? உங்கள் மனதில் அப்போது எப்படியான உணர்வுகள் ஓடிக் கொண்டிருந்தன?

டயானா : 19 வயதில் நீங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிaர்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறியும் ஆற்றல் கொண்டவராக உங்களை நினைத்துக் கொள்கிaர்கள். உண்மையில் நான் மிகவும் பயந்தேன். ஆனால் என் கணவர் எல்லாவற்றுக்கும் ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுப்பார் என்றெண்ணி என்னைத் தைரியப்படுத்திக் கொண்டேன்.


பீ.பீ.சி : திருமணம் குறித்து உங்களது எதிர்பார்ப்பு என்னென்ன?

டயானா : என் பெற்றோர் விவாகரத்து ஆனவர்கள். எனவே என் திருமனமும் எக்காரணம் கொண்டு முறிந்துவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தேன். என் கணவரை நான் மிகவும் விரும்பினேன். அவருடன் என் உணர்வுகள், அனுபவங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொண்டேன்.


பீ.பீ.சி : இளவரசி ஆன பின்பு அடுத்த ராணி நீங்கள்தான் என்பதை உணர்ந்து கொண்டீர்களா?

டயானா : நான் அச்சம் கொள்ளவில்லை. என் பதவிக்கான பொறுப்புகளை எண்ணி ஒரு போதும் பின்வாங்க நினைத்ததில்லை. அனைத்தையும் ஒரு சவாலாகத்தான் நினைத்தேன்.

என் கணவரின் கரம் பிடித்த போது அடுத்த ராணி நான்தான் என்கின்ற எண்ணம் ஒரு போதும் என் மனதில் உதித்ததில்லை. ஆனால் மீடியா என்னை மிகவும் கலவரப்படுத்தியது. எனக்கும் என் கணவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது ஊடகம் அதை கெளரவமாக எடுத்துச் செல்லும் என்று நினைத்தேன் ஆனால் அது நிகழவில்லை.


பீ.பீ.சி. : ஒரு சாதாரண டயானா ஸ்பென்சர் என்கிற பெண்மணியிலிருந்து வேல்சின் இளவரசியாக கமராக்களால் அதிகம் படம் பிடிக்கப்பட்ட பெண்ணாக மாறியது வரைக்கும் இந்த எதிர்பாராத மாற்றத்தை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

டயானா : எனக்கே புரியவில்லை. அப்போது எனக்கு 21 வயதிருக்கும் எனக்கே என்னைப் பிடிக்காது. சதை போட்டு நல்ல உடல்வாகோடு இல்லை. இருந்தும் மக்களுக்கு ஏன் என்னைப் பிடித்தது, என்னை நானே ஆயிரம் முறை கேட்டுக்கொண்ட கேள்வி இது. என் கணவர் என்னைத் திருமணம் செய்துகொள்ளும் முன்பு நிறைய காரியங்கள் செய்திருக்கிறார். அதனால்தான் மக்களுக்கு நாளடைவில் என் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. நான் ஒரு நல்ல விற்பனைப் பொருள் என்பதை போகப் போக உணர்ந்துகொண்டேன். என்னைப் பற்றிய செய்திகளால் ஊடகங்கள் நிறைய பணம் சம்பாதித்தது.


பீ.பீ.சி. : சார்ள்சைத் திருமணம் செய்து கொண்ட பின்னர் எல்லா அழுத்தங்களையும் நீங்களே எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று சில பத்திரிகைகள் எழுதின. இது பற்றி?

டயானா : ஆமாம். இதற்கு முன்னால் இதுபோல யாருக்கும் ஏற்பட்டது கிடையாது. எங்கு சென்றாலும் ஊடகங்கள் பின்னாலேயே வந்தன.

ஆனால் இது என்னை மிகவும் தனிமைப்படுத்தியது. இதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதில் பிரயோசனம் கிடையாது. நான் நீந்தினேன். வேறு வழியில்லாமல் நீந்தக் கற்றுக் கொண்டேன். அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் 6 வாரம் சந்தோசமாகச் சுற்றியதில் எனக்குச் சில உண்மைகள் புரிந்தன. நான் யார் எங்கு வந்திருக்கிறேன். எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் போன்ற பொறுப்புகளெல்லாம் புரிய ஆரம்பித்தன.

பீ.பீ.சி : உங்களால் சந்தோசமான இல்லற வாழ்க்கை வாழ முடிந்ததா?

டயானா : எங்கள் இருவராலும் மீடியாவைச் சமாளிக்க முடியவில்லை என்பது உண்மை. இதனாலேயே எங்களைத் தவறாக புரிந்துகொண்டவர்கள் அதிகம். அவுஸ்திரேலியாவில் ஊடகங்களின் பார்வை, பேச்சு எல்லாமே என் மீதுதான் இருந்தது.

எந்த ஒரு ஆணாக இருந்தாலும் தன் மனைவியை ஊர் உலகமே உற்றுநோக்குவதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?


பீ.பீ.சி : வேல்ஸ்சின் இளவரசியாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள்?

டயானா : ஆரம்பத்தில் மிகவும் குழம்பிப் போயிருந்தேன். பிறகு சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களோடு மிகவும் நேசத்துடன் பழகினேன். குடிப் பழக்கத்தால் எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களோடு எனது நேரங்களைச் செலவிட்டேன்.

அந்த மனிதர்களிடம் தென்பட்ட உண்மை எனக்குப் பிடித்திருந்தது. அவர்களிடத்தில் கள்ளம் கபடம் எதுவும் இல்லை. இறப்பை எதிர்நோக்கும் மனிதர்கள் உண்மையாக வெளிப்படையாக நடந்துகொள்கிறார்கள். இந்தச் சுபாவம் என்னை மிகவும் கவர்ந்தது.

பீ.பீ.சி: எப்படிப்பட்ட குடும்பம் அமைய வேண்டும் என்று நினை த்தீர்கள்?

டயானா: வீடு முழு க்க நிறையப் பேர் இருக்க வேண்டும், என்று விரும்பினேன். எங்கள் வீட்டில் நாங்கள் 4 பேரும் வீட்டை அமளி துமளி செய்வோம். இந்த அனு பவத்தை, மகிழ்ச்சியை எனது குழந்தைகளும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒருவேளை எனக்கு பெண் குழந்தைகள் பிற ந்திருந்தா¡ல் அவர்க ளைச் சமாளிக்கச் சிர மப்பட்டிருப்பேன்.

பீ.பீ.சி: நீங்கள் தற் கொலைக்குக் கூட முயன்aர் களே?

டயானா: ஆமாம். என் பேச்சை யாரும் கேட்காதபோது மதி க்காத போது வேறு என்ன செய்ய முடியும்!

என் மனக் காயங் களை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அத னால் வெளிக்காயங்கள் மூலம் என் நிலையை அடுத்தவர்களுக்குத் தெரியப் படுத்தினேன். என்னால் மன அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள முடி யவில்லை. எனக்கு இது மிகவும் அவமானமாக இருந்தது.

என் கைகளையும், கால்களையும் நானே காயப்படுத்திக் கொண் டேன். கான் என் கணவர் முன்னால் இதையெல்லாம் செய்ய வில்லை. ஆனால் மனைவி மீது உண்மையான அன்பு வைத்திருப்ப வரால் இதை நிச்சயம் அறிந்திருக்க முடியும்.

பீ.பீ.சி: புலிமியா நோயி னால் நீங்கள் பட்ட அவஸ்தைகள் என்னெ ன்ன?

டயானா: என்னைப் படாதபாடு படுத்திய நோய் அது. அது ஒரு ரகசிய மான நோய்.

வாழ்க்கையில் எது வுமே நான் நினைத் தபடி நடக்காத போது அந்தக் கோபத்தை உணவின் மீது காண் பித்தேன். ஒரு நாளை க்கு 5 முறை சாப் பிட்டேன். மனம் நிரம் பாத போது வயிறாவது நிரம்புகிறதே என்கின்ற நப்பாச¨யும் அந்தப் பழக்கத்துக்கு ஒரு கார ணம். முடியாத சமய ங்களில் வாந்தி எடுத்து மேலும் என் உடல் நிலையை நானே பாழ் படுத்திக் கொண்டேன். விவரம் தெரிந்த பிறகு சுற்றியிருந்தவர்கள் என் குறையை வைத்து என்னை மட்டம் தட்ட ஆரம்பித்தார்கள். சார் ள்ஸ் உட்பட. இது என் மன அழுத்தத்தை மேலும் அதிகமாக்கியது.

பீ.பீ.சி: உங்களுடைய வளர்ச்சியில் அவர் எவ் வாறு அக்கறை காட்டி னார்?

டயானா: என் ஆர்வ த்தை திறமையை வளர் த்துக்கொள்ள யாரும் எனக்கு அனுமதி கொடு க்கவில்லை. அவரைத் திருமணம் செய்த போது என் வயது 18. அதன் பின்பும் நான் அதே வயதுக்குரிய மனமுதிர்ச் சியோடு இருந்தேன். என் வளர்ச்சியில் யாரும் அக்கறை காட்ட வில்லை. நான் ஏது¡வது ஒரு புதிய விஷயத் தைச் செய்தால் கூட நன்றாக இருக்கிறது என்று சொல்ல அரண் மனையில் யாரும் இருக்கவில்லை.

பீ.பீ.சி: கமீலாவுடன் சார்ள்ஸ் தன் உறவைப் புதுப்பித்துக் கொண்டார் என்று டிம்பிளி எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டு ள்ளதே?

டயானா: ஆமாம். அதை என்னால் தடுக்க முடிய வில்லை. என் கணவர் என்னெவெல் லாம் செய்கிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். பெண்களுக்கு ஒரு விஷயத்தை கிரகி த்துக் கொள்ளும் சக்தி அதிகம். பொதுவாக எல் லாத் திரு மணங்களி லும் இரண்டு பேர் சம்ப ந்தப்பட்டிருப்பார்கள். ஆனால் எங்கள் மண வாழ்க்கையில் மூன்று பேர் இருந்தார்கள்.

பீ.பீ.சி: நீங்கள் விவா கரத்துக்குச் சம்மதிக்கவி ல்லையா?

டயானா: எப்படி முடி யும்? விவாகரத்தான பெற் றோரின் பின்னணி யிலிருந்து வந்தவள் நான். அதன் உணர்வு கள் பாதி ப்புகள் எல் லாம் அறிந்தவள். நான் எப்படி அத ற்கான ஏற்பாடுகளைச் செய் வேன்?

பீ.பீ.சி: கில்பியுடனான தொலைபேசி உரையா டல் குறித்து என்ன சொல்கிaர்கள்?

டயானா: அந்த தொலை பேசி உரையாடல் உண்மை. அவர் என் மீது எப்போதும் பாசத் தைப் பொழிந்து கொண்டி ருப்பார். கில்பி என்னு டைய சிறந்த நண்பர். என்னால் அவருக்கு ஒரு பிரச்சினை என்ற போது, என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் நண்பர்கள் எப்பே ¡தும் பாதுகாப்பாக இரு க்க வேண்டும் என்று தான் நான் விரும்பு வேன். எங்களுக்குள் ஒரு போதும் பாலியல் உறவு இருந்தது கிடை யாது. என் மீது மக்க ளுக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்ற நோக் கில் அந்த உரையாடல் ஊடகத்தில் பரப்பப்பட் டது.

பீ.பீ.சி: உங்கள் எதிரி யாக நீங்கள் யாரை நினைக் கிaர்கள்?

டயானா: என் கணவ ரிடம் வேலை பார்ப்பவ ர்கள், எனக்குக் கிடை க்கும் புகழைத் தடுத்து நிறுத்த அவர்கள் தான் சதிவேலைகளைச் செய் தார்கள்.

பீ.பீ.சி: உங்கள் மகன் கள் என்ன நினைக்கின் றார்கள்?

டயானா: உங்கள் இரு வருக்குமிடையே என்ன பிரச்சினை என்று ஒரு நாள் வில்லியம் என் னைக் கேட்டான். (இது டயானாவின் மூத்த மகன்) எங்கள் திரும ணத்தில் இன்னொரு பெண் நுழைந்ததுதான் காரணம். மேலும் அடிக்கடி மீடியா கொடுக்கும் தொல்லை வேறு. ஆகவேதான் பிரிய நேர்ந்தது என்று அவனி டம் விளக்கினேன். ஹெவிட் புத்தகம் வெளிவந்த சம யம் வில்லியம்தான் என் னைத் தேற்றினான். ஒரு பெட்டி நிறைய சொக்க லேட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து அம்மா நீங்கள் காயப்பட்டுள்Z ர்கள் என்று தெரிவும். சொக்கலேட் சாப்பிட்டு விட்டு சந்தோசமாக இருங்கள் என்றான்.

பீ.பீ.சி: ஜேம்ஸ் ஹெவிட் தனது புத்தகத்தில் உங்க ளுடனான உறவைப் பற்றி அப்பட்டமாக எழு தியிருக்கிறாரே?

டயானா: நான் மிக வும் நம்பிய ஒருவர் என் னைப் பகடைக் காயாக பயன்படுத்தி காசு அள்ள நினைத்ததுதான் வேதனை. புத்தகம் வெளிவருவத ற்கு பத்து நாட்கள் முன்பு அவர் (ஜேம்ஸ் ஹெவிட்) எனக்கு போன் செய்து கவலைப்படாதே நிச்சயம் உனக்கு ஒரு ஆபத்தும் வராது என் றார். என்னை அவர் ஏமாற்றிவிட்டார்.

பீ.பீசி: ஹெவிட்டுட னான உறவில் நீங்கள் உங்கள் கணவருக்குத் துரோகம் செய்தீர்களா?

டயானா: ஆமாம். நான் அவரைக் காதலித்தேன் முழுவதுமாக ஹெவி ட்டை நம்பினேன்.

பீ.பீ.சி: எதிர்காலம் பற்றி என்ன நினைக் கின்aர்கள்?

டயானா: இங்கிலாந்து நாட்டின் தூதுவராக பணியாற்ற ஆசைப்படு கிறேன். நான் வெளி நாடு சென்றால் என் பின்னால் அறுபது, எழு பது புகைப்படக்காரர்கள் வருகிறார்கள். இதை நல் லவிதமாகப் பயன்படு த்திக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

பீ.பீ.சி: அரச குடும் பத்தில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிaர்கள்?

டயானா: என் மகன் கள் இருவரும் கஷ்ட ப்படுகிற மக்களுக்காகத் தொண்டு செய்ய வேண் டும் என்கிற எண்ண த்தை ஏற்படுத்தி இருக் கிறேன். மக்களின் பிரச் சினைகளை மேல் மட் டத்தில் இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண் டும் என்று ஆசைப்படு கிறேன்.

பீ.பீ.சி: எதிர்காலத்தில் நீங்கள் ராணியாக முடி சூட முடியும் என்று கரு துகிaர்களா?

டயானா: நிச்சயம் இல்லை. நான் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு ராணியாக வீற்றிருக்க மட்டுமே ஆசைப்படு பிறேன். வீதிகளில் நட ந்துசெல்லும் சாதாரண மனிதனே எனக்கு முக் கியம். அரச குடும்பத் தில் ராணியாக நான் உயர்வுபெற வேண்டும் என்று மக்கள் கூட ஆசைப்படவில்லை.

பீ.பீ.சி: இந்தப் பேட் டியை உங்கள் கணவ ருக்கு எதிரானதாக எண் ணிக் கொள்ளலாமா?

டயானா: நான் ஏதோ ஒரு கோபத்தில் இப்ப டிப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். என் திருமணம் தோல்வி அடைந்து விட்டது. என் இதயம் பிளவுபட்டிருக் கிறது. அந்தச் சோகத் தில்தான் அத்தனை விஷ யங்களையும் பேசுகிறேன்.

இந்தப் பேட்டி இங்கி லாந்து மட்டுமல்ல உல கம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. ஆனால் இந்தப் பேட்டி மூலம் இங்கிலா ந்து மக்களிடம் ராணி யாக உயர்ந்துவிட்டார். ஆனால் இந்தப் பேட்டி டயானாவை விவாகரத் துக்கு இழுத்துவிட்டது.

ராணியின் உத்தரவு க்கு அமைவாக டயா னாவும், சார்ள்சும் பலத்த விவாதத்திற்குப் பின்பு 15.07.1995ம் திகதி உத்தி யோகபூர்வமாக விவா கரத்துப் பெற்று பிரிந்து செல்கின்றார்கள். அதன் பின்பு சுதந்திரப் பறவை யான டயானா 31.08.1997 ஆம் திகதி பாரிஸ் டெல் அல்மா சுரங்கப் பாதையில் நடைபெற்ற விபத்தில் கொல்லப்பட் டார். தான் கார் விபத் தொன்றின் மூலமாக கொல்லப்படுவேன் என்று டயானா ஏற்கனவே அறி ந்து வைத்திருந்தார் என் பதற்கு டயானா தன் கைப்பட எழுதிய கடி தம் இன்னும் ஆதாரமா கவே உள்ளது.

வீட்டுக்குள் ஒரு தோழனாக டயானாவின் வார்த்தைகளுக்கு குற்றச்சாட் டுகளுக்கு புலம்பல்களுக்குக் காது கொடுத்தவர் புரெல். கென்ஸ்சிங்டன் அரண்மனையின் உணவுக் கூடத்தில் தலைமை அதி காரி.

ஒரு முறை புரெல்க்கு மிகவும் மனவருத்தத்து டன் ஒரு கடிதம் எழுதி னார் டயானா. இந்தக் கடிதத்தை டயானா இறந் தபின்பு மக்கள் மத்த யில் சமர்ப்பித்தார் புரெல். அக்கடிதத்தில் தெரிவிக் கப்பட்டுள்ள தாவது.

என்னை இப்போது அரவணைத்து ஆறுதல் கூற ஒருவரும் இல்லை. என் வாழ்க்கையின் இந் தப் பகுதியை நான் மிக வும் பயங்கரமானதாக உணர்கிறேன். என் கண வர் என்னைக் கொல்வ தற்காக ஆபத்தான திட் டமொன்றைத் தீட்டியிரு ப்பதாகத் தெரிகிறது. கார் விபத்தொன்றில் என்னை கொல்லுவதே அவருடைய ஆசை. பிரேக் பிடிப டவில்லை. அல்லது தலை யில் பலத்த அடி. இதன் மூலமாக நான் கார் விப த்தில் இறக்க வேண்டும். அதனால் அவருடைய அடுத்த திருமணம் நட க்க வேண்டும் என்று விரும்புகின்றார். இவ்வாறு அந்தக் கடிதம் டயானா கைப்பட எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கடிதத்தில் டயானா எழுதியது போன்றே கார் விபத்தின் மூலமாக கொல் லப்படுகின்றார். சார்ள்ஸ் - கமீலாவை திருமணம் செய்கின்றார். ஆக இந்தத் திட்டம் டயானா வுக்கும் ஏற்கனவே நன்கு தெரிந்திருந்தது.

லண்டனில் பி.எச்.டி. முடிப்பதற்காக வருகை தந்த பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஹஸ் னத் கானுக்கும் டயானா வுக்கும் காதல் ஏற்பட் டது. அதனால்தான் டயானா இஸ்லாம் மத த்தை தழுவி டாக்டர் ஹஸ்னத் கானுடன் தென் ஆபிரிக்காவில் குடியேற விரும்பினார். ஆனால் ஹஸ்னத் கான் அப்போது படிப்பை முடிக்காமல் லண்டனை விட்டு வெளியேற முடி யாது என்று சொல்லி விட்டார். அத்துடன் ஹஸ் னத் கானின் பெற் றோரைச் சந்திப்பதற்காக கானின் லாகூர் இல்லத் திற்கு செல்லத் திட்டமி ட்டிருந்தார் டயானா.

பின்னர் டயானா லாகூர் சென்று ஹஸ்னத் கானின் பெற்றோரை சந்தித்து தனது காதல் பற்றிச் சொன் னபோது கானின் பெற் றோர் பழமைவாதிகள் என்பதால் வெள்ளைக் கார அரச பரம்பரைப் பொண்ணு வேண்டாம் என்று பிடிவாதமாக மறு துவிட்டார்கள்.

ஜோசியர்கள் டயானா வுக்கு பல ஆச்சரிய மான ஜோசியங்களை சொன்னார்கள். உங்க ளால் ஒரு போதும் இங் கிலாந்து நாட்டின் ராணி யாக முடியாது. ஏன் சார்ள்ஸ் கூட பெரிய பத வியை அடைய முடியா மல் போகும். வாழ நாள் முழுக்க அவர் இளவரசரா கவே இருப்பார். தன் மூத்த மகன் வில்லி யமை மன்னர் பதவியில் அமர்த்திவிட் டுத் திருப்தி அடைந்து விடு வார். அல்லது கார் விப த்தில் உயிர் துறப் பார். எதிர்காலத்தில் கமீலாவு டன் இத்தாலியில் குடி யேறுவார். இப்படி அந்த ஜோசியம் சொல்கிறதாம்.

நிலாம்டீன்

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top