இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Wednesday, November 25, 2009

சுவிஸ் புலிகளின் அம்பலத்திற்கு வரும் அந்தரங்கங்கள்..

புலிகளின் சுவிஸ் கிளையின் புதிய தலைவராக ரகு (பாண்டியன்) நியமிக்கப்பட்டுள்ளார்..!! (சுவிஸ் புலிகளின் அம்பலத்திற்கு வரும் அந்தரங்கங்கள்..)


சுவிஸ் கிளையின் புதிய தலைவராக லவுசானில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தவரின் தம்பி ரகு (பாண்டியன்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு போராளியாக புலத்திலிருந்தே இணைத்துக் கொண்டவர். விடுதலைப் போராட்டத்தையும், வெளிநாட்டுக் கிளைகளையும் வெளிநாடுகளில் நாசமாக்கியவர் என பேசப்படும்; கஸ்ரோவின் நம்பிக்கைக்குரியவர். ஆரம்பத்தில் இவர் ரிரிஎன் தொலைக்காட்சிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு சில நாட்களிலேயே ரிரிஎன் தொலைக்காட்சியை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. இவருடைய கடும்போக்கும், அடாவடித்தனமுமே இந்நிலையை தோற்றுவித்தது. தேசியத்தலைவரின் மரணத்திற்குப் பின்னர் வெளிநாட்டுக் கிளைகள் அனைத்தும் கஸ்ரோவின் நம்மிக்கைக்குரியவர்களின் ஆதிக்கத்தில் செயற்படத் தொடங்கியுள்ளன. சுவிஸ்-ரகு, Nஐர்மன் -வாகீசன், கொலன்ட் -ரங்கன், நோர்வே –முகிலன், டென்மார்க் -பிரியன், அனைத்துலகத் தொடர்பு -குட்டி (மயுரன்) இவர்களை வழிநடத்துவது நெடியவன் என கஸ்ரோவின் வழி வந்தவர்கள். இப்போது அறிவு என்னும் பெயரில் ஒருவரும் இடையில் நிற்கிறார். இவரும் நாளை தனக்கென்ற பொறுப்புடன் வந்திறங்குவார். சமாதான காலத்தின் போது பல தடவைகள் வேவு பாhப்பதற்கு புலத்திற்கு வந்து போனவர். ஏற்கனவே ஒரு போராளியை திருமணம் செய்து இரு குழந்தைகளிற்கு தந்தையானவர் இப்போது இன்னொரு பெண்ணை மறுமணமும் செய்துள்ளார். இவர்களின் நோக்கம் முட்கம்பிவேளிகளில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதோ அல்லது தமிழ்மக்களிற்கு நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுப்பதோ அல்ல. இயக்கம் என்னும் பெயரை பயன்படுத்தி தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதும் அதன் ஊடாக தங்களை, தங்கள் குடும்பத்தினரை வாழவைப்பதற்கான வழிகளையும் தேடுவதே…

மே மாதத்திற்குப்பின்னர் பல போராளிகள் சரணடைந்துள்ளார்கள். பலர் வீரச்சாவடைந்துள்ளார்கள். ஒரு சிலர் தங்களிற்கிருந்த வெளிநாட்டுத் தொடர்புகளைப் பயன்படுத்தி மலேசியா, ஐரோப்பிய நாடுகளிற்கு வந்துள்ளார்கள். சாதாரணமாக ஒருவர் வெளிநாடு வருவதற்கு எத்தனை இலட்சம் ரூபாக்கள் செலவிட வேண்டியுள்ளது அவ்வாறாயின் இறுதிவரை போராட்டத்தில் இருந்த இவர்களிடத்தில் எப்படி இவ்வளவு நிதி கிடைத்தது. அல்லது இவர்களிற்கு இந்த நிதியினை வழங்கியது யார். உண்மையில் இவர்கள் போராளிகளாக இருந்தார்களா?. வெளிநாட்டிலிருந்து நிதி கிடைத்திருந்தால் ஏன் அந்த நிதி கஸ்ரோவின் போராளிகளிற்கு மட்டும் கிடைத்தது??

இவ்வாறு தப்பி வந்தவர்களே இன்று ஒவ்வொருவரும் தங்களை தாங்களாகவே பொறுப்பாளர்களாக நியமித்து செயற்படத் தொடங்கியுள்ளார்கள.; உண்மையில் இவர்களால் புலம்பெயர் தமிழர்கள் போராட்டத்திற்காக வழங்கிய கடன் சுமைகளை ஓரளவேனும் சுமக்க முடியுமா? அல்லது முட்கம்பிகளில் அடைபட்டிருக்கும் மக்களிற்கு ஒரு நேர உணவைத் தன்னும் வழங்க முடியுமா?..

சுவிசில் ரகுபதியை பொறுப்பாளர் ஆக்குவதற்கு எடுத்த முயற்சி நிதிப்பொறுப்பாளர் அப்துல்லாவினாலும், கஸ்ரோவின் வெளிநாட்டுப் புலிகளான நெடியவன், குட்டீ(மயூரன்), வாகீசன், ரெஐp போன்றவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுவிஸ் நிதிப்பொறுப்பாளர் அப்துல்லா மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியினை தனது தனிப்பட்ட தேவைகளிற்கும், தனது குடும்ப உறவுகளிற்கும் பயன்படுத்தியதை கண்டிக்க முயன்ற போதே அப்துல்லா கஸ்ரோ மூலமாம தனது செல்வாக்கை பயன்படுத்தி குலத்தை வெளியேற்றியது.

அப்துல்லா தேசியபோராட்டத்திற்காக மக்களிடம் சேகரித்த நிதிக்கு சுவிஸ்கிளையின் கிளைப் பொறுப்பாளருக்குக் கூட கணக்கறிக்கை காட்டாததற்கான காரணம் என்ன?

சுவிஸ் நிதிப் பொறுப்பாளர் அப்துல்லா நிதிமோசடிகளில் ஈடுபட்டிருப்பது நிருபிக்கப்பட்டும் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனைவரும் தவறி விட்டார்கள். தன்னுடன் முரண்படாத தனது விருப்பத்திற்குட்பட்டவர்களின் கடன்களை கட்டுவதற்கு வழிசெய்த அப்துல்லா தன்னுடன் முரண்பட்ட எவருடைய கடன்களையும் கட்டுவதற்கு எந்த வழிகளையும் ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக சூரிச் மாநில நீண்ட நாள் உறுப்பினர் ஒருவர் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டது.

கனடாவில் இருக்கும் அப்துல்லாவின் 3 மாடி வீடுகள் , சுவிஸ் பங்குச்சந்தையில் உள்ள 30 லட்சம் முதலீடுகள்;, பிரித்தானியாவில் இருக்கும் முதலீடுகள், உண்டியல் கருணாவின் பங்குச் சந்தைகள், வீடுகட்டகுமாரிற்கு வழங்கிய முதலீடுகள் எல்லாம் புரியாத புதிர்கள். எவரும் இதனை கேட்கமுடியாது. கேட்டால் அவர்களிற்கு துரோகிப்பட்டம்.

சுவிசில் கணக்குக் கேட்ட குலம், ஜெயம், அல்பேட், குட்டி, ஆகியோரை புலிகள் இடைநிறுத்தியுள்ளார்கள்;. தங்களை இயக்கம் என மக்கள் முன்நிறுத்தி இவர்கள் எடுத்த சம்பளங்களிளும், இவர்களால் சேகரிக்கப்பட்டக் கூடிய சொத்துக்களிளும் கவனம் செலுத்தினார்களே தவிர என்ன நோக்கத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டார்களோ அந்த நோக்கத்தினை நிறைவேற்ற தவறி விட்டார்கள்.

சுவிஸ்கிளையின் உபஅமைப்பான கல்விச்சேவை தலைவர் மகேந்திரன் 6500 சுவிஸ்பிராங் மாத ஊதியத்துடன் விலையுயர்ந்த பென்ஸ்கார் ஓடுகிறார். 2000ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு இன்றுவரை 6500 சுவிஸ்பிராங்கினை ஊதியமாக பெற்றுக்கொள்ளும் இவர் ஈவாவிற்கு(ஐஏ) போவதற்காக அதிகதொகை பதிந்ததாக குறிப்பிடுகிறார்.

சுவிசின் துணைநிதிப்பொறுப்பாளர் லோகேஸ் களத்திலிருந்த ஒரு பெண்ணை இங்கிருந்தை தொலைபேசிமூலமாக காதலித்து கஸ்ரோவின் உதவியாட்கள் ஊடாக 20 இலட்சம் செலவழித்து இந்தியா அழைத்து அங்கு சென்று திருமணம் செய்துவிட்டு வந்துள்ளார். ஏற்கனவே சுவிஸ்பெண் ஒருவரை இயக்க காசில் 45000 சுவிஸ்பிராங் வழங்கி „பி“ காட்டிக்காக திருமணம் செய்தவர் 5 வருடமாக சுவிஸ்பெண்ணின் முழுமையான செலவுகளையும் இயக்க காசில் வழங்கி வந்தவர். விவாகரத்து பெற்றுக் கொள்ளாமலே இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி இந்தியாவில் இருப்பதற்கு சென்னையில் 80 இலட்சம் பெறுமதியான வீடு ஒன்றினை சொந்தமாகவும் வாங்கியுள்ளார். இவர்களிற்கெல்லாம் இவ்வளவு நிதி எப்படி வந்தது. சுவிசின் முன்னைய பொறுப்பாளரையும் (குலத்தை) தூசனத்தால் பேசியதும் அப்துல்லாவிற்கு உதவியாக இருந்தவரும் இவரே.

தேசியத் தலைவர் பிரபாகரனால் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் கட்டமைக்கபட்டு வளர்த்தெடுக்கபட்ட புலிகள் இயக்கம் இன்று நகைப்புக்கிடமாகி வருவது தமிழ் மக்களை வருத்தமடையச் செய்திருக்கிறது.

அண்மையில் சுவிஸ் அலுவலகத்தில் கைகலப்பு ஒன்றும் இடம்பெற்றது. முன்னைய பொறுப்பாளர் குலம், சூரிச் மாநிலப்பொறுப்பாளர் nஐயத்திற்கும் அலுவலகத்தில் இருந்த அப்துல்லா குழுவினருக்கும் வாய்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி சேட்டுக்கிழிபட்ட நிகழ்வுகளும் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் திரு nஐயம் நீக்கப்பட்டும் உள்ளார். ஆயிரக்கணக்கான மாவீரர்களினதும், சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களினதும் புதைகுழிகளின் மீது யாரேனும் மாளிகை கட்ட நினைத்தால் அது அப்பட்டமான துரோகம். அவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும் ஈனச்செயல். தமிழ் மக்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

தேசியத் தலைமையையும், விடுதலைப்போரை விலை பேசுவோரை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. ழூன்று தசாப்த காலமாக போராட்டத்தை வழிநடத்திய தேசியத்தலைமையை விலைபேசும் அளவுக்குச் சிலர் துணிந்து விட்டதே.. தமிழ் மக்களிடத்தில் இருந்து புலிகள் இயக்கம் அந்நியப்பட்டு வருவதற்குப் பிரதான காரணம். தேசியத்தலைமையின் நிலைபற்றித் தெளிவுபடுத்துவதற்கும், அவருக்கு மரியாதை செலுத்துவதற்கும் தடையாக இருப்பவர்களால் நிச்சயமாகப் போராட்டத்தை முன்னகர்த்த முடியாது .தெளிவற்ற நிலையில் இருக்கும் தமிழ்மக்களும் கூட நவம்பர் 27ஆம் நாளுடன் ஒரு இறுதியான முடிவுக்கு வந்து விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்போது இருக்கும் நிலைகளைப் பயன்படுத்தி வெளிநாட்டில் இருக்கும் நெடியவன், றெஜி, மதியரசன், அப்துல்லா, குட்டி, வாகீசன், அறிவு ஒவ்வொருவரும் இயக்கத்தின் பெயரால் தங்களிடம் இருக்கும் நிதியினையும், சொத்துக்களையும் தங்கள் உடைமைகள் ஆக்குவதற்காக இறுதிவரை போராடிய போராளிகளிற்கு துரோகிப் பட்டங்களை வழங்குவதும் அவை தொடர்பான அறிக்கைகளை தமது சார்பு ஊடகங்கள் மூலமாகவும் வெளியிடுகிறார்கள். இவ்வாறான நயவஞ்சகமான துரோகிகளினால் தான் விடுதலைப் போராட்டம் இந்த நிலையை அடைந்திருக்கிறது.

விடுதலைப் போராட்டத்திற்கு புலம்பெயர் மக்களாகிய நீங்கள் வழங்கிய உதவியை எவரும் மறந்துவிட முடியாது. தேசியத்தலைவர் மீதும், மாவீரர்கள் மீதும் அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள நீங்கள் விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய உண்மைத் தன்மையை உணர்ந்து செயற்படுங்கள். தேசியதலைவர் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இவ் அடாவடித்தனங்களிற்கு ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். இச்செய்தியினை உண்மைப் பெயருடன் வெளிக்கொண்டுவர முடியாமைக்கு பல காரணங்கள் உள்ளன. எவர் இதனை எழுதினார்கள் என்ற ஆய்வினை விடுத்து தேசியத் தலைமையையும், விடுதலைப்போரை விலை பேசுவோரையும் இனங்கண்டு செயற்படுங்கள். தேசியதலைவரினது பிறந்ததினத்திற்கும், தேசியமாவீரர் நாளிற்கும் தேசியதலைவரிற்கும் அகவணக்கம் செலுத்துங்கள். நன்றி

-நிலவன்

(இவ்வறிக்கை தம்மை அறிமுகப்படுத்தாத ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்ற போதிலும் இதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் உண்மையென்பதை சுவிஸ் நாட்டில் பலரிடம் விசாரித்து அறிந்து கொண்டதாலேயே இதனை நாம் பிரசுரித்துள்ளோம்.)

அதிரடி இணையம்

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top