இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Sunday, February 21, 2010

திகிலிவட்டையில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்-ரிப்போட்

திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாட சாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் அனுஷா (வயது 09) என்ற மாணவியும் இன்னொரு மாணவியும் 12.02.2010 அன்று மாலை நேர வகுப்பு முடிவுற்றதும் திகிலிவட்டையிலுள்ள தமது வீடுகளுக்கு சென்று கொண்டு இருக்கும் வழியில் 03 இரானுவ வீரர்கள் நிர்வாணமாக குளித்துக்கொண்டு இருந்த வேளையில் அந்த இரானுவ வீரர்கள் இச் சிறுமி இருவரையும் துரத்திய போது அதில் ஒரு (9 வயது) சிறுமி இராணுவ வீரர்களிடம் சிக்கியுள்ளார். மற்றவர் ஓடி தப்பிவிட்டார்.

பின்னர் அந்த மாணவிக்கு ஒரு இனிப்பு கொடுக்கப்பட்டதாகவும் பின்னர் அந்த மாணவி மயக்கமான நிலையில் நடக்க டியாமல் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு சென்றதõகவும் அந்தரங்க உறுப்புக்களில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பிள்ளை ஒரு விரக்தியான நிலையிலும் பிரம்மை பிடித்த நிலையிலும் காணப்பட்டதாகவும் உணர்வு குறைந்த நிலையில் அப்பிள்ளை இருந்ததாக வும் கூறப்பட்டுள்ளது.

12022010 அன்று மாலை 5 மணியளவில் பிள்ளையை மாவடிவேம்பு வைத்தியசா லை யில் பிள்ளையின் தாய் மற்றும் சிறிய தாயும் சேர்த்துள்ளனர். 12022010 மாலை 6 மணி க்கு பின்னர் இருகுற்றப்புலனாய்வுப் பிவினர் வீட்டிற்கு சென்று பிள்ளையின் உள்ளாடை களை பசோதனைக்காக எடுத்து செல்வதாக கூறி எடுத்து சென்றுள்ளனர். 13.02.2010 சனிக் கிழமை சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பின்னர் ஞாயிறு தொடக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை வரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவரை வைத்திருந்தனர்.

இதையடுத்து, கிராமத்தில் பதற்றநிலை காணப்பட்டது மோட்டார்பைசிக்கிள் குழுவினர் (அப்பாஜ் குழுவினர்) போவோர் வரு வோரை விசாத்தார்கள்.

இது சம்பந்தமாக அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளால் அரச அதிபருக்கும் பொலிஸ் அத்தியட்சருக்கும் றைப்பாடு செய்யப்பட் டது. பொலிஸ் அத்தியட்சர் இது தொடர்பாக கூறுகையில் நான்கு இராணுவத்தினரை கைது செய்தாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக வும் தெவித்தார்.

அப்பிள்ளையை பல இராணுவத்தினர் மற் றும் அயல் கிராம பொலிஸ் அத்தியட்சகர்கள் பய றுத்தியதாகவும் பிள்ளை பயந்த நிலை யில் உள்ளதாகவும் இராணுவ சீருடையை கண்டால் பயப்படுவதாகவும் தாயாரால் கூறப்படுகிறது.இச்சம்பவத்தை அறிந்த இராணுவத்தின் கட்டளை அதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி போன்றோர் சிறுமியை தனித்தனியாக விசாரித்ததில் சிறுமி பயத்துடன் காணப்படுவதுடன் சிறுமியின் தாய் தந்தையர் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.

15.02.2010 அன்று மாலை திகிலிவட்டையில் இருந்த அனைத்து இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதுடன் மற்றும் அவர்களால் ஏற்கனவே இயங்கி வந்த கடையும் அகற்றப்பட்டது.

இருந்த போதிலும் மீண்டும் கிராமத்து மக்களிடம் வந்த இராணுவம் முகாம் இங்கே இருக்க வேண்டும் என்ற கருத்தை மக்களிடம் எதிர்பார்ப்பதாக கூறி அச்சுறுத்தியதன் மூலம் 17/02/2010 அன்று காலையில் கிடைத்த தகவல் படி மீண்டும் இரானுவ வீரர்கள் குவிக்கப் பட்டனர் 18/02/2010 அன்று DCPU அமைப்புடன் தொடர்பு கொண்ட போது, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை 17/02/2010 மாலை கிடைத்ததாகவும் பிள்ளையை தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் வைத்திய அறிக்கையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

பிள்ளையின் பெற்றோர்களும் கிராமத்தவர்களும் அச்சுறுத்தப்பட்ட நிலையில் சந்திரசேகரம் சுகபாலன் கடந்த 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டு பொலிஸானால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். இவன் மனைவியின் தகப்பனார் சம்பவத்தினால் ஆத்திரற்று இரா ணுவத்தினரையும்குற்றப்புலனாய்வு பிவினர் திட்டித் தீர்த்ததாக தகவல்கள் தெவிக்கின்றன.இச்சம்பவம் சிறுமியின் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தகவல்கள் கசின்றன.

0 விமர்சனங்கள்:

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top