Saturday, December 26, 2009
Monday, June 22, 2009
கொடுங்கோல் அழிய கொடிபிடிப்பர் பார்
மண்டியிட்டு சரணடைந்து மாண்டுபோன புலிகள் போய்..
பிஞ்சுகளின் உறவுகளை பிணமாக்கி.. இறுதியிலே
அகதியாய் வேடமிட்டு உன் அரவணைப்பு தேடி வந்துள்ளார்
சிங்கக்கொடியை கொடு சிம்மாசனமும் கொடு.. அவர்
கையைப் பிடித்து தமிழினத்தின் கண்ணில் குத்து
உலகுக்கு பறைசாற்று.. கையேந்து
ஒட்டு மொத்த இலங்கையையும் அடகுவை
எரிமலையை மிதித்து வந்த…பிஞ்சுகள்
பாதத்து வெந்தபுண் ஆறவில்லை
வெடித்து சிதறிய குண்டுக்குள்…தாய்
இறக்கைக்குள் காத்த குஞ்சுகள்
கழுத்தளவு நீரில் காவி
கரைசேர்த்த கண்மணிகள்…கைகளிலே
சிங்கக்கொடி திணித்து
சீண்டுகிறான் ராசபக்ச…….
எம் பிஞ்சுகளிடம்
பிரித்தெடுத்த பெற்றோரைக்கொடு……..
சுற்றிப்போட்ட முள்வேலியை எடு……..
உடன் பிறந்த உறவுகளுடன் வாழவிடு……
ஒடித்திரிந்த மண்ணில் உலாவவிடு…
பிடித்த நிலத்தில் இராணுவ முகாம்களை அகற்று
குண்டழித்த பாடசாலைகளைக் கட்டி தா
குழந்தைகளைப் படிக்கவிடு சுதந்திரமாய்…….
கங்கா
காலத்தின் கட்டாயம் மக்கள் களம்திறக்கும்
களமாடி மடிந்தவர்கள்..எம் இனத்தின்
காலம் விடியுமென்ற கனவுடனே சென்றவர்கள்
தலைமையை நம்பி தம்உயிரை ஈந்த…எம்பிள்ளைகள்
உடல் தேடிப்புணர்வதற்கு போரின் தர்மம் அறியா
பாசிசவெறிநாய்கள் பகலிரவாய் அலைகிறது
புலத்து ஆய்வாளப்புலிகளோ ..தலைவர்
இறுதிக்கண நினைவுகட்கு ஆருடம் சொல்கிறது
என்ன கொடுமை
எழுதி உசுப்பேத்தி.. புலத்துமக்களை
மாயைக்குள் தள்ளி மண்ணின் அழிவுக்கு வித்திட்டோரே
தமிழ்செல்வனும் தலமையும் இருக்கட்டும்..முதலில்
நீங்கள் மக்களிடம் மன்னிப்பு கோருங்கள்
ஜநாவே மனிதஉரிமை மகான்களே
வென்றுவரவில்லையென்று எம்மக்கள் வேதனையில் அழவில்லை
பாசிசத்தின் கரங்களிலே
குதறக்குடுத்ததெண்ணி இதயம் வெடிக்கிறது
கொடுமைக்கு குரலெழுப்பா அமைப்பெதற்கு
மானுடத்தின் மீதான ஈனத்தனத்திற்கெதிராய்
துரும்பைத்தன்னும் தூக்கிப்போடமுடியா அமைப்பெதற்கு
இழுத்து முடுங்கள்…இல்லையேல்
சுயமாய் செயலாற்றும் வல்லானாய் மாறு
சமுதாயஆர்வலர்கள் ஓர்வழியில் சங்கமிக்கும் நேரமிது
இன்னமும் முட்டிமோதல் முடிவற்று
வடக்குஇகிழக்கு தமிழனாய் முஸ்லிமாய் சிங்களவனாய்
பிரித்துப்போடும் வக்கிரம் நிமிர்கிறதா
பிள்ளைகளைப் பெற்ர வயிறுகட்கு…
நாளை
உங்கள் பிள்ளைகள் கனவுவெல்லுமென்ற
நம்பிக்கையை கொடுங்கள்
போரடிக்கும் காலமல்ல
ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் நேரமிது
கங்கா
மக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்
நாடுகடந்தெனினும் காசியண்ணா கனவு மெய்ப்படப்போகிறது
மேதகு எல்வாம் முடித்து மிதவாத தலைவர்களிடம்
தமிழன் தலைவிதியை தள்ளியுள்ளார்-
மண்ணில் எந்த முற்போக்குமெழா வண்ணம்
துடைத்தழித்து துரத்தி, யதார்த்தவாதி ராஜபக்ச
காலில்விழப்பாதி மீதியெல்லாம் புலத்தில் பிரகடனம்
இனிப்பழம் பழுக்கும் வெளவால் வரும்
பதின்மூணாம் சட்டம் எழும்
மேடைபோட்டு முழக்கமிடும்…எனினும்
இரத்தத்திலகமிட எவனும் வரமாட்டான்
மண்ணில் கொட்டிய குருதிகாயவில்லை
எடுத்துப்பொட்டிடுங்கள்
விசிலடிக்க கைதட்ட தென்பில்லை
வேதனையின் வடுக்கள் ரணமாகி
அழுகின்ற ஓலத்தை கேளுங்கள்
கைதுசெய்து கொண்டுசென்ற பிள்ளைகளின்
கதையெல்லாம் மறக்கும்…முகாமிலும்
தேர்தல்வரும் ஆச்சரியமில்லை
எந்தக்கண்ணிவெடி கிடக்கிறது..யாழில்
முஸ்லிம் சோதரர்கள் வாழ்ந்த நிலத்தில்
மீளக்குடியேற்று
காட்டைவெட்டி களனியாக்கி வாழ்ந்த கரங்களிலே
வீட்டைக்கட்டிக்கொடு
மீள்கட்டுமானம் நீட்டியதுவக்குகளின் நடுவே
முகாமிற்குள் றோட்டுப்போடுவதில்லை
வாழ்ந்த நிலத்திற்கு மீளச்செல்வது
கேட்டுப்பாருங்கள் பேரினவாதப் பேயிடம்
பின்னணியில் நின்ற காந்திதேசத்திடம்
கண்மூடிக்கிடந்த கருணை வள்ளல்களிடம்
எவன் வருவான்
உழைக்கும் மக்களும் சிந்தனையும்
ஓங்கிஒலிக்காவரை எவன் தருவான்
கங்கா
இழப்பு உனக்கேது மண்ணில் மக்களிற்கே
குண்டுகட்டிவெடித்துச் சிதறி;
கொஞ்சமா இழந்தோம்
நெஞ்சத்து ஈரமற்று
இறந்த இராணுவத்தின் எண்ணிக்கை மட்டுமே கணக்குப்பார்த்தவன்
வெடித்துச்சிதறிய பிள்ளைகட்காய் இரக்கப்பட்டதாயில்லை
அடித்துப்பிடியுங்களென்று பணம்கொடுத்து
காருக்குள் புலிப்பொம்மையும்
கார்த்திகைக்கு மண்டபத்தில் மலரும்தூவியவன்
புலத்துத்தமிழன்
வருடாந்த உரைகட்;காய் வாழ்வைதொலைத்தவர்கள் எத்தனை
இன்னமுமா இறுமாப்பும் இனவெறியும்
கொல்லக்கொடுக்க பிள்ளைகளில்லை
கோரத்தின் கரங்களில் எல்லாமிழந்து
ஊனமாய் நடைப்பிணமாய்
சிறப்புமுகாமெனும் சிறைக்குள் வதைப்பட்டும்
நகர்வுகளோ மீண்டும்
நம்பிக்னைக்கான துளிர்களைகிள்ளியெறிந்து
தளிர்களை கருக்கும்
தன்னலமும் வீம்பும் வீராப்பும்
அழிவின்பின் மீண்டெழுதல்
அர்த்தமற்றுப் போதலெனின் எழாமல் இருத்தல்மேல்
கடந்த கொடியபொழுதுகளின் தவறுகளை பகிரங்கப்படுத்து
அனைத்தையும் சுயவிமர்சனம் செய்
அரசுஇயந்திரத்தையும் மக்களையும் இனம்காணு
இறுககப்பற்று எந்தஇனம் மதமென்று பார்க்காதே
நேசசக்திகளை அரவணைத்துக்குரலெழுப்பு
புலத்திலுன் புலன் புதியபாதைபற்ரி சிந்தித்தல் தகர்த்து
எழுகின்ற போலிக்குள் இழுபட்டாய்
இழப்பு உனக்கேது இனத்திற்கே
இளையதலைமுறையே
உன்பெற்றோரின் மாயையை உடைத்தெழு…..
உலகப்பரப்பே கணனிக்குள்உன்காலம் தேடுதல் செய்….
தேசப்பரப்பெங்கும் விரிகின்ற விடுதலையின் வீச்சைக்காண்பாய்…..
மக்கள்சக்தியின் மகத்துவம் உணர்வாய்…
இனிவரும் எழுச்சி இனஜக்கியத்தில்
வெல்லப்படமுடியுமென்ற இயங்கியல் புரிவாய்..
கங்கா
Sunday, June 21, 2009
நச்சுக்குண்டைப் போடவைத்த நாசக்காரி -இவள் நாடுவிட்டு நாடுவந்தமோசக்காரி
பொழுதுபோக்கு பாடல்கள்
http://www.tamilkathir.com/news/1505/58//d,view_audio.aspx
http://www.tamilkathir.com/news/1504/58//d,view_audio.aspx
http://www.tamilkathir.com/news/1503/58//d,view_audio.aspx
http://www.tamilkathir.com/news/1500/58//d,view_audio.aspx
http://www.tamilkathir.com/news/1496/58//d,view_audio.aspx




