இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label வணங்காமண். Show all posts
Showing posts with label வணங்காமண். Show all posts

Tuesday, October 20, 2009

முடிவுக்கு வந்தது 'வணங்காமண்' விவகாரம்

இலங்கை தமிழர்களுக்காக, "வணங்காமண்' கப்பலில் அனுப்பப் பட்ட நிவாரணப் பொருட்கள், ஐந்து மாத அலைக்கழிப்புக்கு பின், நாளை (21ம் தேதி) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அடுத்த இரு நாட்களுக்குள், முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக, ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் புலிகள் சார்பு தமிழர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, "கருணைத் தூதுவன்' என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பில், திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிய, "கேப்டன் அலி' என்ற கப்பல் மே 7ம் தேதி இலங்கைக்கு புறப்பட்டது. "வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் என இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டது. சர்வதேச விதி மீறப்பட்டுள்ளதாக கூறி, நிவாரணப் பொருள் அடங்கிய கப்பலை ஏற்க, இலங்கை மறுத்தது. மூன்று நாட்கள் நடுக்கடலில் "வணங்காமண்' கப்பல் தத்தளித்தது. இதன் பின், சென்னையைச் சேர்ந்த "மனிதம்' என்ற அமைப்பு, நிவாரணப் பொருட்களை சென் னை துறைமுகத்தில் இறக்க அனுமதி கோரியது; அதுவும் மறுக்கப் பட்டது.

இந்தியா வந்த இலங்கை உயர்மட்டக் குழுவினர், நிவாரணப் பொருட்களை ஏற்பதாக, உறுதியளித்ததன் அடிப்படையில், "வணங்காமண்' கப்பல் சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில், 27 கன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்டு, "கேப் கலோராடா' என்ற கப்பலில் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இந்த பொருட்கள் இறக்கி வைக்கப் பட்டன. நிவாரணப் பொருள்களுக்கு வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, இவற்றை வினியோகிப்பதற்கு இலங்கை அரசு தாமதம் செய்தது. நிவாரணப் பொருட்களை எடுக்க, செஞ்சிலுவைச் சங்கம் எடுத்த பல்வேறு முயற்சிகளுக் கும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், இலங்கைத் தமிழர்களுக்காக வழங்கிய மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 884 டன் நிவாரணப் பொருள்கள், எடுப்பதற்கு ஆள் இல்லாமல் கொழும்பு துறைமுகத்தில் அனாதையாக கிடந்து வந்தது.

இந்நிலையில், இலங்கை சென்ற தமிழக எம்.பி.,க்கள் குழு, "வணங்காமண்' குறித்து எவ்வித வேண்டுகோளையும் விடுக்கவில்லை. எம்.பி.,க்கள் குழு தமிழகம் திரும்பியபின், நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், "வணங்காமண் கப்பலில் வந்த நிவாரணப் பொருட்கள்' குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, "அந்தப் பொருட்கள் போய் சேர்ந்து விட்டதாக' தெரிவித்தார். ஆனால், வணங்காமண் கப்பலில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று வரை கொழும்பு துறைமுகத்திலேயே உள்ளன. செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர் முயற்சி காரணமாக, இந்த நிவாரணப் பொருட்களை எடுத் துக் கொள்ள, இலங்கை அரசு மனமிரங்கி ஒப்புக் கொண் டுள்ளது. இதன்படி, நிவாரணப் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய வாட் வரி, கட்டுமான வரி என மொத்தம் கட்ட வேண் டிய 20 லட்சம் ரூபாயை இலங்கை அரசே செலுத்துவதாக அறிவித் துள்ளது. துறைமுகத்தில் இவ்வளவு நாட்கள் இருந்ததற்கான வாடகையையும், இலங்கை அரசு தள்ளுபடி செய்துள்ளது. இது தவிர, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் செலுத்தப்படவுள்ளது. இப்பணிகள் முடிந்துள்ள நிலையில், நாளை நிவாரணப் பொருட்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவ, மே 7ம் தேதி புறப்பட்ட, "வணங்காமண்' நிவாரணப் பொருட்கள், ஐந்து மாத அலைகழிப்புக்குப் பின் ஒரு வழியாக தற்போது தமிழர்களை சென்றடையவுள்ளது.

இது குறித்து "மனிதம்' அமைப்பின் நிர்வாகி அக்னி சுப்பிரமணி கூறியதாவது: நிவாரணப் பொருட்களுக்கு எந்த நாடும் வரி விதித்ததில்லை. இலங்கை அரசு மட்டும் வரி விதித்ததோடு, பல்வேறு காரணங்களைக் காட்டி ஐந்து மாதம் காலம் கடத்தியுள்ளது. இப்போது கூட வரியை தள்ளுபடி செய்யாமல், தான் செலுத்துவதாக கூறி கணக்கு காட்டியுள்ளது. நிவாரணப் பொருட்களுக்கு இலங்கை அரசு பணம் கட்டி எடுத்தது என்ற பேரைப் பெறுவதற்காக, இலங்கை அரசு நாடகம் நடத்தியுள்ளது. ஐந்து மாதங்கள் அலைகழிக்கப்பட்ட நிலையில், அந்த நிவாரணப் பொருட்கள் எந்த நிலையில் இருக்கும் என்று தெரியவில்லை. அவை பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பதை சோதனை செய்த பின், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வினியோகிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதன் மூலமாக கூடுதல் நோய்களுக்கு முகாம்களில் வாடும் தமிழர்கள் ஆளாக நேரிடும். இவ்வாறு அக்னி சுப்பிரமணி தெரிவித்தார்.

தினமலர்

Read more...

Sunday, August 30, 2009

கொழும்பு துறைமுகத்தை விட்டு வணங்காமண் நிவாரணப் பொருட்கள் வெளியே வந்தது

வணங்கா மண் பொருட்கள் அனைத்தும் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தந்த தகவலின் அடிப்படையில் அவை அடுத்தகிழமை வன்னி மக்களுக்கு வினியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இலங்கை அரசின் வரி மற்றும் கட்டணங்கள் என பெருந்தொகையான பணம் செலுத்தப்பட்ட பின்னரே அவை விடுவிக்கப்பட்டதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். எப்படியாயினும் இப்பொருட்கள் மிகவிரைவில் வன்னி சென்றுசேரும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Read more...

Wednesday, July 29, 2009

வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் இன்னும் சில தினங்களில் மக்களைச் சென்றடையும்?

புலம்பெயர் மக்களினால் ஈழத்து மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் நீண்ட நாள் இழுபறிக்குப் பின்னர், இன்னும் சில தினங்களில் வவுனியா முகாமிலுள்ள மக்களைச் சென்றடையுமென நம்பிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.
வணங்கா மண் பொருட்களை இலங்கை அரசாங்கம் ஏலத்தில் விடப்போவதாக தென் இலங்கை செய்திகள் தெரிவித்திருந்தன.

20 நாட்களுக்கு மேலாக துறைமுகத்தில் தரித்து நிற்கும் பொருட்களை ஏலம்விட சட்டப்படி இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதெனவும் அந்தச் செய்திகள் தெரிவித்திருந்தன. குறித்த கெடு நாளையுடன்

முடிவடைவதால் அவை ஏலத்தில் விடப்படலாம் என சந்தேகம் வெளியாகியிருந்தது.
எனினும், இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பொருட்களை அனுப்பியதிலிருந்த ஆவண மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பன கைச்சாத்திடாத நிலையில் வணங்கா மண் நிவாரணப் பொருட்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியெடுப்பதில் சிக்கல் காணப்பட்டது.

எனினும், இந்தியாவிலுள்ள செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுடன் வணங்கா மண் செயற்பாட்டுக் குழுவினர் தொடர்புகொண்டு இந்தச் சிக்கலை முடிவிற்கு கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நாளை அல்லது மறுதினம் பொருட்களை விடுவிக்க முடியுமெனவும் இன்னும் சில தினங்களில் இந்தப் பொருட்கள் முகாமிலுள்ள மக்களுக்கு விநியோகிக்க முடியுமெனவும் செயற்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


Read more...

கேட்பாரற்ற நிலையில் கொழும்புத் துறைமுகத்தில் `வணங்கா மண்` நிவாரணப் பொருட்கள்

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவென ஐரோப்பிய வாழ் தமிழர்களால் அனுப்பப்பட்ட பொருட்களை, பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தையடுத்து இந்தியாவின் கொலராடோ கப்பல் சுமந்து வந்தது.

தற்போது அப்பொருட்களை மீட்டு உரிய மக்களைச் சென்றடையச் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தையடுத்து அவை கொழும்பு துறைமுக விதிமுறைகளின்படி ஏலத்தில் விடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய தமிழர்கள் இலங்கை மக்களுக்காக உணவு, உடை, மருந்து என 884 தொன் நிவாரணப் பொருட்களை `வணங்காமண்` கப்பலில் அனுப்பி வைத்தனர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் `வணங்கா மண்` கப்பல் தத்தளித்தது.

முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, அக்கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் 27 கொள்கலன்களுக்கு மாற்றப்பட்டு, சென்னை துறைமுகத்தில் உள்ள சி.சி.டி.எல். நிறுவனத்தின் மூலம் `கொலராடோ` என்ற சரக்கு கப்பலுக்கு மாற்றப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தக் கப்பல் கடந்த 9ஆம் திகதி கொழும்பு துறைமுகம் வந்தடைந்த பின்னரும், நிவாரணப் பொருட்களை இதுவரை செஞ்சிலுவை சங்கத்தினர் பொறுப்பேற்கவில்லை. இதனால் இந்நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கடந்த 19 நாட்களாகக் கேட்பாரற்று கிடக்கின்றன.

இது குறித்து தமிழகத்தில் உள்ள மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் மற்றும் லண்டன் `மெர்ஸி மிஷனி`ன் இந்திய தொடர்பு அலுவலர் அக்னி சுப்பிரமணியன் கூறுகையில்,

"நிவாரணப் பொருட்களை எடுத்து விநியோகிக்க இலங்கைப் பணத்தில் ரூ.76 லட்சம் செலவாகும் என்று தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து லண்டனில் உள்ள `மெர்ஸி மிஷன்` (கருணை தூதுவன்) அமைப்பிடம் கூறினோம்.

எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிவாரணப் பொருட்கள் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு 70 நாட்களுக்கு மேல் ஆகின்றன. நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Read more...

Sunday, July 5, 2009

முடிவுக்கு வந்து விட்ட "வணங்கா மண்' பிரச்சினை

தமிழக காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தியின் அனுசரணையை நினைத்துக்கொண்டு போடும் எல்லா கணக்குகளுமே டில்லி தலைமைப் பீடத்தின் தலையீட்டில் தவிடுபொடியாகிவரும் சூழலில், நாட்களையும் நேரத்தையும் சரியாக எண்ணிப்பார்த்து சுமுகமாக கா நகர்த்துகின்றார் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி! தி.மு.க.வுடனான உறவில் உடும்புப்பிடியில் இருக்கும் டில்லியின் போக்கில் இனிமேல் எந்த மாறுதலும் ஏற்பட சந்தர்ப்பங்களே கிடையாது என்ற முடிவில், அமைச்சர்கள் பதவிக் கனவுகள் எல்லாமே கலைந்துவிட்ட நிலையில், ஒட்டி உறவாடி பணிந்து வேண்டுவது என்ற மந்திரத்தை இப்பொழுது உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றனர் தமிழக காங்கிரஸார்.

பதினைந்தாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்துமுடிந்து, ஆட்சிக் கட்டிலில் யார் தயவும் தேவைப்படாமல், ஓடிவந்த உறவுகளை வாரி அணைத்து உற்சாகமிகுதியில் காங்கிரஸ் அமர்ந்தபோது; எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா உட்பட இடதுசாரி கட்சிகள் புருவம் உயர்த்திக்கொண்டன. அதேநேரம் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.கழகம் அங்கம் வகித்தாலும் ஆட்சி அமைப்பில் தாங்கள் எதிர்பார்த்தபடி அமைச்சரவைப் பங்களிப்பு கிடைக்குமா என்பது கடைசிவரை நம்பிக்கை குறைவாகவே நீடித்து பெருமூச்சுவிட்டது. தி.மு.க. ஒரு மனக் கணக்குப் போடும் தமிழ்நாடு காங்கிரஸும் டில்லி தலைமைப்பீடமும் தனித்தனியாக கோடுகள் போட்டனர். கடைசியில் டில்லியே கீழே இறங்கி அமைச்சுத் துறையில் சில மாற்றங்களுடன் தி.மு.க.வின் தாகத்தைத் தீர்த்து வைத்தது. இதற்கு மேல் போனால் ஏற்படும் மனஸ்தாபம் இழுபறிகள் ஆட்சிக் கலைப்புக்கே வழிவகுத்துவிடும் என்ற சஞ்சலத்தில், கிடைத்தது லாபம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தி.மு.க. திருப்திப்பட்டுக் கொண்டது. இதில் முழுக்க முழுக்க ஏமாந்தது தமிழக காங்கிரஸ் தலைவர்கள்தான். ஆனாலும் இவர்கள் சளைக்கவில்லை. டில்லியில் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்றால், தமிழ்நாட்டில் அதே அளவு பங்கு எங்களுக்கும் வேண்டும் என்று கொடி ஏந்தத் தொடங்கிய காங்கிரஸார் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த எண்ணிய ராகுல் காந்தியின் தயவில் தமிழக அமைச்சரவைக்குள் நுழையத் திட்டமிட்டனர்.

தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுவடையச் செய வேண்டும் என்பது ராகுல் காந்தியின் இன்றைய கனவு. இதன் முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியினரை ஊக்கப்படுத்த தமிழக அமைச்சரவையில் குறைந்தது ஏழு பதவிகளையாவது காங்கிரஸாருக்குப் பெற்றுக்கொடுப்பது ராகுல் காந்தியின் தீர்க்கமான யோசனை. இத்தகவல் சென்னையில் கசியத் தொடங்கியதும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு உற்சாக மிகுதியில் சில படிகள் உயரச் சென்று ""2011இல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி தான். ராகுல் காந்தி கனவு நனவாகும்' என்று குரல் கொடுத்தமை அவர் சார்பானவர்களைக் குளிரச்செதாலும் டில்லி, தலைமைப்பீடத்தை கொதிப்படைய வைத்தது! காங்கிரஸ்தி.மு.க. குறிப்பாக, கலைஞர் மனம் நோகடித்து விரிசல் வருவதை எக்கட்டத்திலும் விரும்பாத சோனியா காந்தி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். பாராளுமன்றத் தேர்தல் காலத்திலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் காங்கிரஸ் எதிர்ப்பு சுலோகங்கள் தொடர்பாக புகார்கள் டில்லி நோக்கிப் பறந்தபோது சோனியா காந்தி வெறுப்படைந்து அன்று உத்தரவிட்ட "அடக்கி வாசி' எச்சரிக்கை இன்று தாங்களாகவே அடங்கிப் போகும் நிலைக்கு கடுமையாக்கப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலி; அதட்டுவதைக் கைவிட்டு ஒட்டி உறவாடி, வாவிட்டுக்கேட்பது எனும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் புரிந்துணர்வில், இரு கதவுகளையும் இப்பொழுது திறந்து வைத்திருக்கிறார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை தயக்கமோ, பயமோ இன்றி துணைமுதல்வரிடம் நேரில் சென்று தெரிவித்து பயன்பெறலாம் என்ற புதுக் கணக்கின் மூலம் ஆட்சியில் பங்கு அமைச்சர்கள் பதவி என்ற அத்தியாயத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

காங்கிரஸ்தி.மு.க. உறவில், டில்லியிலும் தமிழ் நாட்டிலும் இன்று சுமுகமான நிலை நீடிக்கும் அதே நேரம், சந்தர்ப்பத்தை சரியாகக் கையாண்டு அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காகளை சாதுரியமாக நகர்த்தி வருகிறார் முதல்வர் கலைஞர். அவரை உற்சாகப்படுத்துவது, துணைமுதல்வரின் விரைவான நடவடிக்கைகளும் சட்டமன்றத்தில் ஸ்டாலின் விவாதிப்பதும் பதிலளிப்பதும் அவர் கையாளும் முறைகள், மக்கள் எதிர்பார்ப்புகளை ஸ்டாலின் பரபரப்பின்றி நிறைவேற்றும் சாதுரியம், நிறைவேற்றவேண்டிய அரசு திட்டங்களை துரிதப்படுத்துவதில் அவர் மேற்கொள்ளும் சிறப்புகள் எல்லாமே திருப்தியளித்துள்ளன. வாக்காளர்களுக்கு தி.மு.க.சொன்னதைச் செய்வதில் முந்திக்கொள்ளும் அதேநேரம், மக்களை கவர்ந்திழுக்க துணைமுதல்வர் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதும் பல தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதும் அ.தி.மு.க. மற்றும் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு திடீர் அதிர்ச்சியைக் கொடுத்து அவசர செயல்பாடுகளுக்கு முடுக்கிவிட்டிருக்கிறது.

கொட நாட்டில் ஓவெடுக்கும் ஜெயலலிதா முதலில் அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் மத்தியில் களையெடுப்பை நடத்த முடிவெடுத்திருக்கும் செய்தியைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் வரிந்து கட்டிக்கொண்டு மாவட்டங்கள் தோறும் மக்களை நேரில் சென்று சந்தித்து கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். நடிகர் விஜயகாந்தும் மக்களை இழுப்பதில் புதுப்புது வடிவங்களில் நேரடியாகவே இறங்கியிருக்கிறார். தே.மு.தி.க. வட்டாரங்களில் இப்பொழுது அதிகமாக ஒலிக்கும் ""தனித்து வேண்டாம். கூட்டணிச் சிறப்பு' எனும் குரல் விஜயகாந்தை அதிகம் சோதிக்கவைத்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியோ, உள்ளே குமுறிக்கொண்டிருக்கும் சில முக்கியஸ்தர்களின் குறைகளைக் கூட கண்டுகொள்ளாமல் தினம் தினம் அறிக்கைகளை தலைவர் அள்ளிவீசுவது சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமன்றி தொண்டர்களின் மனதையும் புண்படுத்தி வருவதாக வெளிப்படையாகப் பேசுகின்றார்கள். பாட்டாளி மக்கள் கட்சியினரின் குறிப்பாக சில சட்டமன்ற அங்கத்தினர்களின் வயிற்றெரிச்சலை சரியாகப் புரிந்துகொண்ட தமிழக முதல்வர் கலைஞர் காதுகளுக்கு சில முக்கிய வரவுகள் காத்திருப்பதாகவும் தகவல் எட்டியிருக்கிறது. சில நாட்களை நகரவிட்டு, காலம் கனியட்டும் என்று பொறுமை காக்கின்றார் கலைஞர் என்று அறிவாலய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. கலைஞரின் காதுகளுக்கு "போனஸாக' நுழைந்திருக்கும் மற்றுமொரு புதுச்செதி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பச்சைக்கொடி தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அணியில் இணைந்துவிடுவதென்ற உச்சக் கட்டமுடிவுக்கே மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்துவிட்டதாக புதுச்செய்தி ஊர்ஜிதப்படுத்துகிறது.

அரசியலில் எத்தனை குத்துக்கரணங்கள் நிகழ்ந்தாலும் தமிழக சட்டமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி 2011இல்தான் நடக்கும் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்தாலும் இரண்டாயிரத்து ஒன்பதுக்கும் தயாராக நிற்கிறார் கலைஞர் கருணாநிதி. அதற்கான கணக்குகளையும் போட்டுமுடித்துவிட்டார். காற்றுள்ள போதே தூற்று என்பார்கள். தமிழ் நாட்டின் முக்கிய திசைகளில் மட்டுமன்றி காற்று டில்லியிலிருந்தும் சாதகமாக வீசுகிறது.தி.மு.க.வுக்கு.

மூச்சுவிட்டது "வணங்கா மண்'

அப்பாடா...! சென்னை துறைமுகத்துக்குள் அடியெடுத்துவைத்து, கடந்த வியாழக்கிழமை இரவு நிறுத்திவைக்கப்பட்ட "வணங்கா மண்'கப்பல் என்ன பாவம் செய்ததோ; உயிர் துடிக்கும் வன்னி மக்களுக்கு ஐரோப்பிய மக்களின் இதயத் துடிப்பாக உணவுப் பொருட்கள், மருந்துவகைகள், துணிகள் என்று வெறும் 884 தொன் எடைகொண்ட நிவாரணப் பொருட்களை சுமந்து கொண்டு இரண்டு மாதங்களாக கடலில் தத்தளித்த கொடுமை கணக்கிடமுடியாது! "கப்டன் அலி' என்ற "வணங்கா மண்' கப்பலின் கப்டன் முஸ்தபா முகமதுவை செய்தியாளர்கள் சந்தித்தபோது அவர் கூறியதாவது; ""கப்பலில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெ, மருந்துப் பொருட்கள், உடுபுடவைகள் உட்பட பல நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இலங்கை சென்றோம். இலங்கை துறைமுகத்தின் வெளியே நான்கு நாட்கள் அவர்களது அனுமதிக்காக காத்திருந்தோம். கப்பலை சோதனை செய்த கடற்படையினர், சட்டவிரோதமாக எதுவுமே கண்டுபிடிக்காத நிலையிலும் இலங்கையிலிருந்து எழுபது கடல் மைல் தூரத்துக்கு கப்பலை எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டனர். இக்கப்பலில் உணவுப் பொருட்கள் உட்பட வெறும் நிவாரணப் பொருட்களே இருந்த நிலையில் ஏன் அதை அனுமதிக்கவில்லை என்பது புதிராகவே இருந்தது. நான் சிரிய நாட்டைச் சேர்ந்தவன். இரண்டு பேர் எகிப்தியர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டுபேர் பயணிகளாக உள்ளனர். வேறு யாரும் கப்பலில் இல்லை. நிவாரணப் பொருட்களை இலங்கைக்குக் கொண்டுசெல்லாதது பெரும் வருத்தமாக இருக்கிறது.' என்றார்.

நிவாரணப் பொருட்கள் பத்து "கண்டெனர்'களில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்றாலும் அங்கு போய்ச்சேர ஒருவார காலமெடுக்கும் என்று தெரிகிறது.

ஐம்பத்தாறு நாட்கள் கடலில் தத்தளித்த "வணங்காமண்' அந்த நாட்டினருக்கு அந்த உறவுகள் உயிர்த்த நிவாரணத்தை கடைசிவரை சுமந்து அந்தக் கரைசேர்க்க முடியாதுவிட்டாலும் அதன் பணி பூர்த்தியடைந்துவிட்டது. அந்த மண் என்ன பாவம் செய்ததோ. கரைதட்டி தலைகுனிய வணங்கா மண்ணினால் முடியவில்லை! வணங்கா முடி.

தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா


Read more...

Friday, July 3, 2009

சென்னை துறைமுகத்திற்கு வந்தது வணங்காமண் - ஒரு வாரத்தில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் செல்லும்


சென்னை: கடந்த 56 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐரோப்பிய வாழ் தமிழர்கள் வன்னித் தமிழர்களுக்காக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய வணங்காமண் நிவாரணக் கப்பல் நேற்று இரவு சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.


ஐரோப்பிய வாழ் தமிழர்கள் சேர்ந்து வன்னியில் பரிதவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக உணவு, மருந்து, உடை உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலை அமர்த்தி அதற்கு வணங்காமண் என்று பெயரிட்டு வன்னிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது. இதையடுத்து சென்னைக்கு விரைந்த இக்கப்பல் சென்னை அருகே நிறுத்தப்பட்டது.

ஆனால் சென்னைக்குள் இக்கப்பல் வர மத்திய அரசு அனுமதி தராமல் மெளனமாக இருந்தது. இதையடுத்து முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அமைச்சர் பொன்முடியையும் நேரில் அனுப்பி வைத்தார்.

இதன் விளைவாக இலங்கை அரசுடன் பேசிய இந்திய அரசு கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதை ஏற்ற இலங்கைத் தரப்பு பொருட்களை சென்னையில் தரையிறக்கி அவற்றை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தது.

இதையடுத்து நேற்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மனிதாபிமான அடிப்படையில், சென்னை துறைமுகத்திற்குள் நுழைய வணங்காமண் கப்பலுக்கு மத்திய அரசு அனுமதி தருவதாக அறிவித்தார்.

சென்னைக்குள் நுழையலாம் என்று நேற்று மாலை 4.45 மணிக்கு கப்பல் கேப்டனுக்கு தகவல் போனது.

இதையடுத்து சென்னை துறைமுகத்தைச் சேர்ந்த மாலுமி ஒருவர் வணங்காமண் கப்பலுக்குச் சென்றார். அவர் வழி காட்ட கப்பல் துறைமுகத்திற்குக் கிளம்பியது.

சரியாக இரவு 7.25 மணிக்கு கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் வந்து சேர்ந்தது.

கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்த கப்பல் ஊழியர்கள் மற்றும் கேப்டன் முகம்மது முஸ்தபா ஆகியோர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

கேப்டன் மட்டுமே கீழே இறங்க அனுமதிக்கப்பட்டது. மற்ற யாரும் இறங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கேப்டன் முகம்மது முஸ்தபா மட்டும் கீழே வந்தார். அவரிடம் குடியுரிமை அதிகாரிகள், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சரக்குகள் வைக்கப்பட்டிருந்த இரும்பு தகடுகளை அகற்றும் பணி தொடங்கியது. அதற்காக லிப்டுகள் உயர்த்தப்பட்டன. பிறகு போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கப்பலுக்குள் சென்று நிவாரண பொருட்களை சோதனையிட்டனர். மேலும், அந்த கப்பலுக்கான ஆவணங்கள் அனைத்தையும் அதிகாரிகள் சரி பார்த்தனர்.

கப்பல் வந்து சேர்ந்தது குறித்து முகம்மது முஸ்தபா கூறுகையில், கப்பலில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மருந்துகள் உட்பட பல நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டு இலங்கைக்கு கொண்டு சென்றோம்.

இலங்கை துறைமுகத்தின் வெளியே 4 நாட்கள் அவர்களின் அனுமதிக்காக காத்திருந்தோம். ஏன் அவர்கள் எங்களை இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை என்று தெரியவில்லை. சில பிரச்சினைகள் இருப்பதாக கூறப்பட்டன. ஆனால் அதற்கு நாங்கள் எப்படி சம்பந்தப்பட்டோம் என்பது தெரியவில்லை.

பின்னர் இலங்கை கடற்படையினர் வந்து கப்பலை சோதனை செய்தனர். அதன்பிறகு இலங்கையை விட்டு வெளியே போக சொன்னார்கள். இலங்கையில் இருந்து 70 கடல் மைல் தூரத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டனர். இந்த கப்பலில் உணவுப்பொருட்கள்தான் இருந்தன. ஏன் அதை அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது புதிராக இருந்தது.

நாங்கள் ஏற்கனவே 24 நாட்கள் கடலில் பயணம் செய்து வந்தோம். ஆனால் இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை என்பதால் மிகுந்த வருத்தம் அடைந்தோம்.

ஆனால் இந்திய அரசு எங்களை நல்லவிதமாக நடத்தியுள்ளது. இந்திய அதிகாரிகள் இப்போது எங்களை மென்மையாக நடத்தினர். நல்லபடியாக சோதனை நடத்துகின்றனர்.

சென்னை துறைமுகத்துக்கு வெளியே நாங்கள் நின்ற போது யாரும் எங்களை வெளியே போக சொல்லவில்லை. இன்றும், நாளையும் இங்கு தங்கி இருப்போம். நிவாரண பொருட்களை இறக்கியதும் கொல்கத்தா செல்வோம்.

நான் சிரியாவை சேர்ந்தவன். 2 பேர் மட்டும் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள். எங்களிடம் உணவு இருக்கிறது. எங்களில் சிலருக்கு தொண்டைவலி ஏற்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த 2 பேர் பயணிகளாக உள்ளனர். வேறு யாரும் கப்பலில் இல்லை. மீண்டும் இலங்கைக்கு இந்த நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்ல இயலாது என்றார்.

தற்போது கப்பலில் உள்ள பொருட்களை இறக்கி வைக்கும் பணி நடக்கிறது. அது முடிந்தவுடன் அவை இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படும். இந்தப் பணி முடிய ஒரு வாரம் ஆகும் எனத் தெரிகிறது.

நிவாரணப் பொருட்களை இந்தியக் கப்பல் மூலம், இலங்கைக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக மனிதம் என்ற மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநரான சுப்ரணியம் தெரிவித்துள்ளார்.

மெர்சி மிஷன் அமைப்பின் அர்ஜூனன் எதிவீரசிங்கம் கூறுகையில், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியுடன், இந்தியக் கப்பல் மூலம் இந்த நிவாரணப் பொருட்களை இலங்கை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.


Thatstamil

Read more...

Friday, June 26, 2009

கெப்டன் அலி இலங்கைவர அனுமதியில்லை! நிவாரண பொருட்கள் மாத்திரம் இலங்கைவரும்!

‘கெப்டன் அலி’ கப்பலை மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கும் உத்தேசம் இல்லை எனவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாகவே நிவாரணப் பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்படும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

‘கெப்டன் அலி’ கப்பலில் உள்ள நிவாரண பொருட்கள் இந்தியாவில் தரையிறக்கப்பட்டு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக மீண்டும் ‘கெப்டன் அலி’ கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்கும் திட்டமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் செயலாளர், சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய தொலைபேசி செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீளக் குடியமர்த்த இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மக்களது ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Read more...

Tuesday, June 23, 2009

வணங்காமண் கப்பலை அனுமதிப்பது என்ற கதைக்கே இடமில்லை: அரசாங்கம்

வணங்காமண் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதிப்பது என்ற கேள்விக்கே இடமில்லையெனக் கூறிய இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ் அதிகாரி ஒருவர், இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் பிரசார நோக்கம் கொண்டதெனவும் தெரிவித்தார்.


வணங்காமண் கப்பலிலிருக்கும் நிவாரணப் பொருள்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் உதவியுடன் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கிடைக்க வழிசெய்யவேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதி, கடித மூலம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவிடம் கோரியிருந்தார். இந்த நிலையில், இதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்திருந்தார்.

இதேவேளை, இந்த நிவாரணப் பொருள்கள் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் சேகரிக்கப்பட்டதென்பதுடன், பிரசார நோக்கங்களுக்காகவே இந்தப் பொருள்கள் சேகரிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் கருதுகிறது.

புலம்பெயர்வாழ் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை ஏற்றிய வணங்காமண் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளதெனக் கூறி மீண்டும் திருப்பியனுப்பப்பட்டிருந்தது.

Read more...

Saturday, June 20, 2009

வணங்காமண் கப்பலிலுள்ள பொருள்கள் மக்களைச் சென்றடையவேண்டும்: இந்தியா

“கப்டன் அலி” என அழைக்கப்படும் வணங்காமண் கப்பலிலுள்ள நிவாரணப் பொருள்கள் இலங்கையில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இலங்கைக்குள் நுழைந்த வணங்காமண் கப்பல் இலங்கை கடற்படையினரால் திருப்பியனுப்பப்பட்டது. இந்தக் கப்பலிலுள்ள பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்கவேண்டுமெனவும், அந்தக் கப்பலிலுள்ள பொருள்கள் சர்வதேச செஞ்சிலுவைக் சங்கம் போன்ற சர்வதேச அமைப்பின் முன்னிலையில் இறக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியை இந்தியா செய்யுமெனத் தான் நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேநேரம், வணங்காமண் கப்பலிலுள்ள பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதிமொழி வழங்கியுள்ளார்.


புலம்பெயர்வாழ் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கடந்த ஏப்பிரல் பிரான்சிலிருந்து புறப்பட்ட ‘கப்டன் அலி’ அல்லது வணங்காமண் கப்பல் கடந்த மே மாதம் இலங்கையை வந்தடைந்தது.


வணங்காமண் கப்பல் இலங்;கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பாணந்துறை கடற்பகுதிக்கு இழுத்துவரப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.


அக்கப்பலில் வெடிபொருள்கள் எதுவும் இல்லையென்றபோதிலும், நிவாரணப் பொருள்களை இறக்காமல் நாடு திரும்பிச் செல்லுமாறு கடற்படை அதிகாரிகள் கப்டன் அலி கப்பலுக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து கப்டன் அலி கப்பல் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்னை துறைமுகத்துக்கு வெளிப்புறமாக நங்கூரமிட்டுள்ளது.

Read more...

Tuesday, June 9, 2009

இலங்கையின் பிரபல முன்னணி வர்த்தகர் கொழும்பில் இரகசியப் பொலிஸாரால் கைது! "வணங்காமண்"கப்பலிலிருந்து பொருள்களைப் பொறுப்பேற்க இருந்தவராம்

கடற்படையின் தீவிர கண்காணிப்பில் பாணந்துறைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள "கப்டன் அலி"(வணங்கா மண்) கப்பலில் எடுத்துவரப்பட்ட பொருள்களை பெறுப் பேற்கவிருந்தவர் என்ற சந்தேகத்தில் இலங்கையின் பிரபல முன்னணி வர்த்தகர் ஒருவரை இரகசியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் வைத்து
கைது செய்யப்பட்டுள்ள பிரஸ்தாப வர்த்தகர் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் தற்சமயம் நடைபெற்றுவருகின்றன. அதனால் சம்பந்தப்பட்ட வர்த் தகர் தொடர்பான விவரங்களை வெளியிட முடியாது என்று இரகசியப் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தக் கப்பலில் ஆயுதங்கள் எடுத்து வரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்
கப்பலில் ஆயுதங்கள் எவையும் இருக்கவில்லை என்று கடற்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் டி.கே.சி.திஸ நாயக்க தெரிவித்துள்ளார். கப்பலில் உணவுப் பொருள் கள், மருந்துப் பொருள்கள், வலது குறைந்தவர்களுக்கான உதவி உபகரணங்கள் மட்டுமே கப்பலில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கப்பலில் கடற்படையினர் சோதனை நடத்தி நேற்று இத் தகவலை அறிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Read more...

Monday, June 8, 2009

பொருட்களை இறக்காமல் வணங்கா மண் (Captain Ali) கப்பலை நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவு

Sri Lanka turns back Tamil aid ship

COLOMBO (AFP) – Sri Lankan authorities Monday ordered a foreign-owned ship carrying aid for Tamil civilians to leave the island without unloading its cargo.

The Syrian-registered ship, Captain Ali, was seized last week, and the Sri Lankan defence ministry said the cargo of food and other supplies had been destined for the now defeated Tamil Tiger rebels.

"The ship had tried to enter Sri Lankan waters without following the proper procedure," an official said, but added that a search of the vessel confirmed it was not carrying any arms or ammunition.

The organisers of the mission, Mercy Mission to Wanni, said on their website that the goods were meant for Tamil civilians caught up in the decades-long conflict.

An Icelandic national, Kristjan Guomundsson, who had served as one of the monitors of a truce between Tamil Tigers and troops between February 2002 and January 2008, was also aboard the Captain Ali.

The mission's website admitted the voyage may have violated international shipping and port safety procedures.

"If this is the case and the non-Mercy Mission persons responsible for this compliance did not fulfill their responsibilities and handle these matters in the appropriate, professional manner, Mercy Mission apologizes," the website said.

The supplies, donated by Tamils living abroad, were loaded on to a ship in the British port of Ipswich in April -- just weeks before the government declared victory in the ethnic conflict.

According to the group's website, the materials were then ferried from England to the French port of Fos-sur-Mer. From there they were loaded on to the Captain Ali on May 7.

The mission was organised at a time when Tamil Tiger rebels were cornered in the island's northeast along with tens of thousands of civilians. The ship was originally due to travel to a coastline that was then under rebel control.

Government troops announced they had crushed the Tigers after killing the rebel leadership on May 18.

Nearly 300,000 Tamil civilians crossed over to government-held areas during the final stages of fighting.

Read more...

Sunday, June 7, 2009

கப்டன் அலி கப்பல் விடுவிக்கப்படும்: கோதபாய ராஜபக்ஷ

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமானப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த கப்டன் அலி கப்பலை கடற்படையினர் விடுவிக்கவிருப்பதாகப் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய கப்பலில் மனிதாபிமானப் பொருள்கள் மாத்திரமே காணப்படுகின்றன, வேறு பொருள்கள் இல்லையென விசாரணை நடத்தும் கடற்படை அதிகாரிகள் உறுதிப்படுத்தும் பட்சத்தில் அக்கப்பல் விடுவிக்கப்படும் என அவர் கூறினார்.

“அக்கப்பல் குறிப்பிட்ட சர்வதேச கடல் சட்டத்தை மீறியுள்ளபோதும் அதில் இதுவரை எந்தவிதமான ஆபத்தான பொருள்களும் மீட்கப்படவில்லை. இவற்றைக் கருத்தில்கொண்டு விரைவில் முடிவொன்று எடுப்போம்” என கோதபாய ராஜபக்ஷ கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காகப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் சேகரித்த 884 தொண் உணவு மற்றும் மருந்துப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்படன் அலி அல்லது வணங்காமண் கப்பல் கடந்த வியாழக்கிழமை இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்தபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கப்பல் பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் இழுத்துவரப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. அக்கப்பலிலிருந்த 13 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர். அக்கப்பலில் சட்டவிரோதமான பொருள்கள் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லையென கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும், மனிதாபிமானப் பொருள்களுடன் வந்திருக்கும் இக்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து அங்கு பொருள்களை இறக்குமா இல்லையா என்பது பற்றி இதுவரை தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அரசாங்கத்தின் அதிகாரிகளும் இது குறித்துத் தகவல் வெளியிட விரும்பவில்லை. இது பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹண கூறியுள்ளார்.

Read more...

Friday, June 5, 2009

‘வணங்கா மண்’ கடற்படையினரால் தடுத்து வைப்பு;அரசின் அனுமதியுடன் பொருட்களை வழங்கவுள்ளவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பலை கடற்படையினர் தடுத்து நிறுத்தியிருப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க தெரிவித்தார்.

வன்னியில் வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் போர்வையில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றி வந்த இக்கப்பலை பாணந்துறை கடற்பரப்புக்கு மேற்கே 150 கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து நேற்றுக் காலை 4 மணியளவில் கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். மேர்சி மிஷன் டூ வன்னி(வணங்கா மண்) எனும் பதாகையைத் தாங்கி சிரிய நாட்டுத் தேசியக் கொடியுடன் வந்த இக்கப்பலில் பயணம் செய்த 15 வெளிநாட்டு மாலுமிகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை கடற்பரப்புக்கு எடுத்துவரப்பட்டு சோதனையிடப்பட்டு வரும் இக்கப்பலில் 884 மெற்றிக் தொன் நிறைகொண்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் காணப்பட்டன. இக்கப்பலில் பயணித்தவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பொருட்களை இலங்கை அரசின் உரிய அனுமதி பெற்று தமிழ் மக்களிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடக மேற்கொண்டுள்ளதாக வணங்கா மண் ஏற்பாட்டு குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Thursday, June 4, 2009

இலங்கை கடற்படையிடம் தலைவணங்கியது `வணங்கா மண்`


ஏப்பிரல் 20, 2009ல் பிரித்தானியாவில் உள்ள இப்ஸ்விச் எனும் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய `வணங்கா மண்` இன்று (ஜூன். 4) காலை கொழும்பிலிருந்து 160 கடல் மைல்கள் தொலைவில் இலங்கை கடற்படையிடம் `தலைவணங்கி`யுள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழில் `வணங்கா மண்` எனவும் ஆங்கிலத்தில் `கருணைக் கடன்` என்ற `ஈரூடக` பெயருடன் சிரியாவில் பதிவு செய்யப்பட்ட `கப்டன் அலி` இன்று காலை இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதில் பயணம் செய்த 15 கப்பல் சிப்பந்திகளில் (2002-05) புலிகள்-அரசு யுத்தநிறுத்த காலத்தில் இலங்கை கண்காணிப்பு குழுவில் (SLMM) கடமையாற்றியவரும் மேற்படி`கப்டன் அலி` கப்பலின் கப்டனான ஐஸ்லாண்டைச் சேர்ந்த கிறிஸ்டியா கூமஸ்டாவும் அடங்குவர். கடற்படையால் `வணங்கா மண்` கைப்பற்றப்பட்ட போது அதில் 884 மெற்றிக் தொன் நிவாரணப்பொருட்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இக்கப்பலும் இதில் பயணம் செய்தவர்களும் எவ்வகையான சட்ட நடவடிக்கைக்கு இலங்கையில் உட்படுவார்கள் என்பது எம்மால் இதுவரை அறிய முடியவில்லை.

SLanka seizes ship with supplies for war-hit civilians

COLOMBO (AFP) – Sri Lanka's navy Thursday seized a foreign-owned ship loaded with medical, food and other supplies for war-hit civilians, saying the vessel had entered its territorial waters illegally.

The supplies, arranged by supporters of the Tamil rebel cause, were loaded onto a ship in the English port of Ipswich in April -- just weeks before the government declared victory in the ethnic conflict, a navy spokesman said.

"We have seized the vessel and we are bringing it ashore now," Captain D.K. Dassanayake said, adding the crew offered no resistance when the navy boarded the vessel 140 kilometres (87 miles) west of Sri Lanka.

The ship, the Captain Ali, was carrying hundreds of tonnes of food, medicine and other supplies for Tamil civilians caught up in the decades-long conflict, he said.

A London-based group called Mercy Mission to Wani had arranged the transport of the supplies at a time when Tamil Tiger rebels were cornered in a strip of coastline in the island's northeast and using tens of thousands of civilians as cover.

Wani had formed part of the Tigers' virtual mini-state in the island's northeast before the end of the conflict.

"We have been tracking this ship for some time and seized it today as it got closer to our shores," Dassanayake said. "We are bringing the ship to a port together with its crew."

Initially it was believed that the ship had set sail from Britain but the website of the Mercy Mission said the shipment was made using two vessels and that the Captain Ali had set sail from France.

The website said the Syrian flag-carrying vessel with a crew of 13 was carrying 884 tonnes of food, medicine and other essentials for Tamil civilians affected by the fighting.

Government troops announced they had crushed the Tigers after killing the rebel leadership on May 18.

Nearly 300,000 Tamil civilians crossed over to government-held areas during the final stages of fighting.

Mercy Mission's website said an Icelandic national who had served as one of the monitors of a truce between Tamil Tigers and security forces between February 2002 and January 2008 was also aboard the the Captain Ali.

The supplies were first ferried from England to the French port of Fos-sur-Mer, 50 kilometres (30 miles) northwest of Marseille aboard another vessel, the Sea Ruby.

The supplies were then transferred on May 7 to the Captain Ali, the group's website said.

The cargo was donated by Tamils living abroad, according to the website.

Read more...

Monday, April 13, 2009

'வணங்கா மண்' கப்பலுக்கு பிரித்தானியா அனுமதி மறுப்பு?

இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியக் கடற்கரையிலிருந்து நிவாரணக் கப்பல் புறப்படுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக இலங்கை அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.

அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தியதைத் தொடர்ந்தே, பிரித்தானிய அரசாங்கம் அனுமதி மறுத்திருப்பதாகத் தெரியவருகிறது.

‘அக்ட் நௌவ்’ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் வடபகுதியில் பாதித்திருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கென 2000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருள்களுடன் 'வணங்கா மண்' நிவாரணக் கப்பல் பிரித்தானியாவிலிருந்து இலங்;கையை நோக்கிப் புறப்படவிருந்தது.

எனினும், பிரித்தானிய கடற்பரப்பிலிருந்து குறிப்பிட்ட கப்பல் இலங்கைக்குப் புறப்படுவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் வழங்கவில்லையென, இலங்கை அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த காலங்களிலும் இவ்வாறான நிவாரணக் கப்பல்களை விடுதலைப் புலிகள் தமக்குப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய இலங்கை அரசாங்கம், குறிப்பிட்ட கப்பலைத் தடுப்பதற்குத் தொடர்ச்சியாக பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது.

அதேநேரம், 'வணங்கா மண்' நிவாரணக் கப்பல் இன்னமும் பிரித்தானிய கடற்கரையிலிருந்து புறப்படவில்லையென அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் அர்ஜுன் எதிர்வீரசிங்கம் கூறியுள்ளார்.

மார்ச் 31ஆம் திகதி இந்தக் கப்பல் புறப்படவிருந்தபோதும், இலங்கை அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் இந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிவாரணக் கப்பலை முற்றாகச் சோதனையிட்டு பிரித்தானியா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில் குறிப்பிட்ட கப்பலை இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைய அனுமதிப்பதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் கூறியுள்ளார்.

எனினும், முன்னனுமதி பெறாமல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை கடற்படை எச்சரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more...

Friday, April 3, 2009

வணங்கா மண் கப்பலைத் தடுத்து நிறுத்த முயற்சி


வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியாவிலிருந்து புறப்படவிருக்கும் ‘வணங்கா மண்’ நிவாரணக் கப்பலை நாட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கத் தரப்பு ஈடுபட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
அடுத்தவாரம் பிரித்தானியாவிலிருந்து நிவாரணக் கப்பலொன்று புறப்படவுள்ளமை தொடர்பாக அங்கிருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் நிவாரணக் கப்பல்களைக் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்தியிருப்பதால், இந்தக் கப்பல் குறித்தும் தாம் கூடுதல் அக்கறை செலுத்தியிருப்பதாகவும், இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் உயர்ஸ்தானிகராலயம் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், ஊடகங்கள் வாயிலாகவே வன்னி மக்களுக்கான நிவாரணங்களை ஏற்றிக்கொண்டு நிவாரணக் கப்பலொன்று பிரித்தானியாவிலிருந்து புறப்படவுள்ளது என்ற தகவல் தமக்குத் தெரியவந்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.

எந்தவொரு கப்பலும் இலங்கையின் கடற்பிராந்தியத்துக்குள் நுழைவதாயின் சட்டரீதியான அனுமதியின் பின்னரே நுழையமுடியும் என அவர் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.

ஆனாலும், பிரித்தானியாவிலிருந்து புறப்படவிருக்கும் கப்பல் குறித்து பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்திருக்கும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர், குறித்த கப்பல் தொடர்பாக பிரித்தானியா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாயின் கப்பலை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, ‘வணங்கா மண்’ கப்பல் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிரித்தானிய அதிகாரிகளால் உத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பதாக நிவாரணக் கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ‘அக்ட் நௌவ்’ அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரான க்ரஹாம் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இதுஇவ்விதமிருக்க, இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் சட்டவிரோத கப்பல்களைத் தடுப்பதற்கு இலங்கைக் கடற்படை முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கடற்படைத் தரப்பில் கூறப்படுகிறது.

Read more...

Thursday, April 2, 2009

நிவாரணம் என்ற போர்வையில் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழையும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படும்: கடற்படை

உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் எந்தக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிவழங்கும் நோக்கில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று விரைவில் இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவிலுள்ள பல்வேறு நலன்புரி அமைப்புக்கள் இணைந்து வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காக பிரித்தானியாவில் நிவாரணப் பொருள்களைச் சேகரித்து இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் ‘அக்ட் நௌவ்’ அமைப்பின் உதவியுடன் கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

இந்தக் கப்பல் இம்மாதம் இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பொதுமக்களுக்கான நிவாரணம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதற்காக 2000 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாகவும், இந்தக் கப்பல் குறித்து அவதானத்துடன் இருப்பதாகவும் இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடல்எல்லைக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழையும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத கடற்படைப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிச்செல்லும் எந்தவொரு கப்பலையும் தடுத்து நிறுத்தும் நோக்கில் கடற்படையினர் தமது பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Read more...

தேசத்தின் வலிகளை புரிந்து புறப்படுங்கள்

தமிழர் தேசத்தின் விடிவுக்கான போராட்டம் களத்தில் உச்சம் பெற்றிருக்கும் இன்றைய நிலையில் அதன் வீச்சு பாரெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழன் ஒவ்வொருவன் மனதிலும் பெரும் வேட்கையை உண்டு பண்ணியிருக்கிறது.

அவ்வாறு ஒவ்வொரு தமிழனிடமும் ஏற்பட்டிருக்கும் வீச்சு 7 கோடி தமிழ் மக்களின் குரலாக நீதிச்சங்கின் காதுகளில் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அதுவே, அங்கு இரத்த வெறியாடும் சிங்கள ஆட்சியாளர்களின் பிடரிகளை பிடித்தாட்டும் பெரும் சக்தியாக மாறியிருக்கிறது.

களத்தில் நடப்பது என்ன?

நிலங்களை விழுங்கிக்கொள்வதால் மட்டும் ஒரு இனத்தின் இரண்டு தசாப்தகால விடுதலைப்போரை ஒடுக்கிவிடலாம். அவர்களின் உரிமைகளை நசுக்கி விடலாம் என்ற நப்பாசையில் சிங்கள தேசம் தமிழர் பிணங்களில் இன்று நித்தமும் ஊழிக்கூத்தாடி வருகிறது.

ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழன் ஒவ்வாருவன் மனதிலும் கனன்று கொண்டிருக்கும் விடுதலை தீயை ஏதோ இரண்டு வருடங்களுக்கு மூச்சுப்பிடித்துக்கொண்டு போரிட்டு விட்டால் அணைத்து விடலாம் என்று சிங்கள தேசம் சிக்கன சிந்தனைக்குள் சிரித்து விளையாடுகிறது.

விடுதலைப் போராட்டத்தின் அரசியல் இலக்கு என்பது சமரில் தீர்மானிக்கப்படுவது அல்ல. அது அந்த மக்களின் எண்ணங்களில் ஏலவே தீர்மானிக்கப்பட்டது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் இலக்கு பாரெங்கும் வாழும் 7 கோடி தமிழ் மக்களின் உள்ளத்தில் உருவான கோரிக்கை. பருவ காலத்துக்கு ஏற்ப பதவியேறும் சிங்கள ஆட்சியாளர்கள் ஆளாளுக்கு ஆட்லறி கூவி செல்வதால் தமிழனின் ஆன்மாவில் கலந்துவிட்ட விடுதலை மூச்சினை அணைத்துவிட முடியாது.

தமிழர் சேனை எப்போதும் ஆயுதம் தரித்திருப்பது அதன் பலத்தை நிரூபித்து உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கே தவிர அது வன்முறையே வழி என்று தவம் கிடக்கவில்லை.

இன்று ஈழ விடுதலைப் போராட்டம் அடைந்திருக்கும் பரிமாணம் புதியது. அது பார்ப்பவர்களுக்கு புதியது. ஆனால், புலிகளுக்கு பழையது. சிங்கள தேசத்துக்கும் அதன் கூட்டணிகளுக்கும் சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்ததை விட பெரிய மகிழ்ச்சியை அது ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், உண்மையில் நடந்திருப்பது என்ன?

- நிலங்களை நாம் இழந்திருக்கிறோம். உண்மை. ஆனால் போராட்டதின் இலக்கை தொலைத்து விட்டோமா? இல்லை.

- தேசத்துக்காக சத்திய வேள்வி நடத்தும் மாவீரர்களை இழந்திருக்கிறோம் உண்மை. தமிழர் சேனையை இழந்து விட்டோமா? இல்லை.

- பெறுமதியான உயிர்களை இழந்ததால் வாட்டமடைந்துள்ளோம். உண்மை. ஆனால், அதற்காக எமது விடுதலை தாகத்தை இழந்துவிட்டோமா? இல்லை.

தமிழர் போராட்டத்தின் வடிவம் மாறியிருக்கிறது ஆனால் அதன் இலக்கு மாறவில்லை. முன்பிலும் பார்க்க பெருவீச்சடைந்து பாரெங்கும் பரந்திருக்கிறது. போராட்டம் உலகமயமாகியிருக்கிறது. இதுதான் உண்மை.

அது சர்வதேச நாடுகள் ஒவ்வொன்றையும் எமது பிரச்சினைக்குள் இழுத்து விழுத்தியிருக்கிறது. எமது கேள்விகளுக்கு அவை கட்டாயம் பதில் கூறியே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறது.

தாயகத்தில் நடைபெறும் போரினை சர்வதேச அளவிலான போராட்டமாக மாற்றுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வாரு தமிழனும் தற்போது சரியாக பயன்படுத்துவதின் விளைவுதான் இந்த பன்னாட்டு சமூகத்தின் பார்வை இடப்பெயர்ச்சி.

இன்று -

- ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.

- சிறிலங்கா நிலைவரம் குறித்து அமெரிக்காவின் ஆளும் கட்சி பிரதிநிதி ஹிலறி கிளிண்டன் சிறிலங்கா அரச தலைவருக்கு தொலைபேசி எடுத்து பேசுகிறார்.

- சிறிலங்கா நிலவரத்தை உன்னிப்பாக கவனிப்பதற்கு பிரித்தானிய அரசு கொழும்புக்கு தனது சிறப்பு தூதுவரை நியமிக்க முனைகிறது.

- மனித உரிமைகளை பாதுகாப்பு விடயத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் தமது வர்த்தக வரிச்சலுகையை நிறுத்தி விடப்போவதாக சிறிலங்கா ஐரோப்பிய ஒன்றியம் மிரட்டுகிறது.

- தம்மிடம் கடனெடுத்து போர் நடத்துவதற்கெல்லாம் காசு தர முடியாது என்று சிறிலங்கா அரசை சர்வதேச நாணய நிதியம் காட்டமாக கூறி தனது கொழும்பு அலுவலகத்தையே மூடி சென்றிருக்கிறது.

- சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பகம் முதல் சர்வதேச மன்னிப்புச்சபை வரை எத்தனையோ சர்வதேச அமைப்புக்கள் சிறிலங்கா அரசை வன்மையாக கண்டிக்க ஆரம்பித்து விட்டன.

இவை எல்லாம் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மேற்கொண்டு வருகின்ற தொடர்ச்சியான அறவழிப் போராட்டங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை தொடர்ச்சியாக தொட்டுப்பேச மேற்கொண்ட முயற்சிகளின் பெறுபேறு.

இந்த விளைவுகள் இன்று சிறிலங்கா அரசை உள்ளுர உலுப்பியிருக்கின்றன. இந்தியாவை கக்கத்தில் வைத்துக்கொண்டு தம்பாட்டுக்கு நினைத்தபடி கரணம் அடிக்கலாம் என்று சிங்கள தேசம் என்னதான் நினைப்பினும் மேற்குலகின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் சம்பாதித்துக்கொண்டு ஒரு கட்டத்துக்கு அப்பால் செயற்படமுடியாது என்பது மகிந்த அரசுக்கு நன்றாகவே தெரியும்.

இதனால், இன்று சிங்கள தேசத்தக்கு கிலேசம் ஏற்பட ஆரம்பித்து விட்டது.

பெருவெற்றிகளை ஈட்டுவதாக கூறிக்கொண்டு தாம் நடத்தும் போர் பற்றி பேசுவதைவிட சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கும் தமிழர் எழுச்சியை எவ்வாறு அடக்கலாம் என்பது பற்றியே சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று தினமும் வாதம் நடைபெறுகிறது.

அமைதிப் பேச்சுக்கு வந்துவிட்டு இன்று யுத்தம் பற்றி மட்டும் பேசும் ஜீ.எல்.பீரிஸ் முதல் இனவாத முதலைகள் ஜே.வி.பி.யினர் வரை எவருமெ இதற்கு விதி விலக்கல்லர்.

'வணங்கா மண்" அனுப்பும் வணங்கா தலைகளை எப்படி எல்லாம் ஒடுக்குவது என்பது குறித்து சகல நாடுகளிலும் உள்ள சிறிலங்கா தூதரகங்களுடன் நேரடி பேச்சுக்களில் இறங்கியுள்ள அரச தலைவர் மகிந்த, களத்துக்கு வெளியே தமிழின எதிர் போரை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது குறித்து வியூகங்களை வகுத்துவருகிறார்.

இந்தநிலையில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்டப்போராட்டம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.

இன்றையா நிலையில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் 75 வீதமான பகுதி புலம்பெயர்ந்து வாழும் தமிழ ;மக்களின் கைகளிலேயே உள்ளது. அந்த உண்மையை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து கொள்வது மிக மிக அவசியம்.

எங்கள் தலைவிதியை தீர்மானிப்பதற்கு இனியும் காத்திருப்பதற்கு எம்முன் காலம் பெரியளவில் இல்லை. எமக்கும் விடுதலைக்கும் இடையிலான தூரத்தை குறைப்பது என்பது ஒன்றும் மயாஜாலம் இல்லை. அது எமது கைகளில்தான் உள்ளது.

எமக்கான நீதி கேட்டு சர்வதேச நாடாளுமன்றங்களினதும் வாயில ;வரை சென்றுவிட்டோம். இந்தப்போராட்டம் தொடரும்போது அவர்கள் எங்களை உள்ளே அழைத்து பேசுவதற்கு அதிக நாட்கள் எடுக்காது. ஜனநாயக வழியிலான எமது போராட்டங்களை அவர்கள் எவ்வளவு தூரம் மதிக்கிறார்கள் என்பதை நாம் வாரா வாராம் ஒவ்வொரு நாட்டிலும் தெளிவாக காண்கிறோம்.

ஆகவே எமது எண்ணிக்கைகள் அதிகரிக்கும் போதுதான் அவர்களது கரிசனையும் அதிகரிக்கும். எமது கோரிக்கை ஒன்றதான். அது யாருக்கும் பாதகம் இல்லாத கோரிக்கை. பாதிப்பில்லாத கோரிக்கை.

எமது இந்த கோரிக்கைகளை உரக்கக்கூறும் போராட்டங்களில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்று தம்மை தாமே இன்னமும் கேள்வி கேட்டுக்கொள்பவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் கூறமுடியும்.

தாயகத்தில் ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக - தனது மக்களை பாதுகாக்க - ஆயுதம் தாங்கி செல்லும் அந்தப் போராளியை பாருங்கள். தனக்கு இன்றோ அல்லது நாளையோ மரணம் நிச்சயம் என்ற சவாலுடன் அவன் அங்கு களமாடிக்கொண்டிருக்கிறான்.

அவன் யாருடைய விடுதலைக்காக போராடுகிறான். நிச்சயமாக அவனுக்குரிய விடுதலைக்காக அல்ல. இன்றைக்கோ நாளைக்கோ மரணத்தை தழுவப்போகிறேன் என்ற சவாலுடன் போராடுகிறவனுக்கு ஏன் விடுதலை?

அப்படியானால், அவன் யாருடைய விடுதலைக்காக போராடுகிறான்?

உரிமைக்குரல் கொடுப்பதற்கு வீதியில் இறங்குவதற்கே இத்தனை கேள்விகள் உங்கள் மனங்களில் இருந்தால் உரிமைக்காக உயிரை கொடுக்கப்போகும் அந்த வீரனின் மனதில் எத்தனை கேள்விகள் இருக்கும்?

அவன் அத்தனையையும் தாண்டிய போராளியாகவே அங்கு களமாடிக்கொண்டிருக்கிறான்.

இதனை மனதில் நிறுத்தி புலம்பெயர்ந்து வாழும் அனைத்து மக்களும் நெஞ்சுரத்துடன் இந்த செயலூக்கம் பெறவேண்டும்.

களத்தின் வலிகளை உணர்ந்து புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் உணர்வுபூர்வமான போராட்டங்களே இலக்கினை இலகுவாக்கும்.

- ப.தெய்வீகன் -

Tamilnaatham

Read more...

வணங்காமண் கப்பல் மூலம் புலிகளுக்கு ஆயுதங்களும் கொண்டு வரப்படலாம்

Sri Lanka says British aid destined for Tamil civilians could be cover for weaponsCelebrities and politicians gather in London to publicise humanitarian voyage

Sam Jones guardian.co.uk, Wednesday 1 April 2009

Article history


Campaigners who have collected 400 tonnes of food and medical aid for the 150,000 Tamil civilians trapped by the fighting between the Sri Lankan army and the Tamil Tigers have reacted angrily to claims from Colombo that the aid mission could be a cover for supplying weapons to the rebels.

A coalition of charities, celebrities and politicians gathered in central London yesterday to publicise the voyage of the Vananga Man, the ship that will set out with the humanitarian supplies early next week.

Among them were the models Jasmine Guinness and Jade Parfitt, and John Horam, MP for Orpington and a member of the all-party parliamentary group for Tamils.

Act Now, the campaign group co-ordinating the mission, says the Vananga Man will transport only medicine, baby milk, rice and chapati flour to Tamils caught in the "no fire zone" declared by the Sri Lankan government, as the army tries to wipe out the Tamil Tigers once and for all.

The government, however, says it has "serious concerns" about the ship's cargo, claiming that the Tigers have used previous aid shipments to smuggle in arms.

"We are aware of the ship and we have taken this up with the UK authorities," a spokesman for the Sri Lanka High Commission told the Guardian. "We are concerned and we have serious questions about the ship. We know what has happened in the past."

The spokesman denied reports in the Tamil media that the Sri Lankan navy would open fire on the Vananga Man as soon as the ship entered its territorial waters. He added that the government might "consider the case" of whether to allow the aid in if it received an assurance from the UK government that the ship had been checked and found to contain humanitarian supplies.

Graham Williamson, one of the directors of Act Now, rejected the accusations.

He said all the containers on the Vananga Man were being x-rayed by British authorities so its cargo could be verified. "If that third party check isn't good enough for them, what is?" he said. "I think the government is being facetious and deliberately provocative and is trying to find an excuse for not allowing the aid to land."

A spokeswoman for the foreign office said it was aware of the ship and had been contacted about it by the Sri Lankan government.

"We have passed the information that we have to the relevant UK authorities," she said.

The doctor in charge of the makeshift hospitals in the no fire zone told the Guardian last week that civilians were being "repeatedly shelled for no reason" and that his staff had only 10% of the supplies they needed.

Colombo has so far rejected calls for a ceasefire, saying the Tigers are intent on creating a civilian bloodbath to increase international pressure for a truce.

UN figures show there are more than 60 deaths a day due to army bombardment. More than 3,000 people have been killed and 7,000 more injured since the end of January.

Among the high-profile campaigners calling for action are the Tamil singer MIA and the writer Arundhati Roy.

"The [Vananga Man] will carry dry food and medicines for Tamil civilians in Vanni within the Sri Lankan government's 'safe zone'," said MIA. "Many have already perished from starvation and preventable disease. We cannot ignore these genocidal conditions, and if the aim of the Sri Lankan government is to protect the lives of civilians, then this ship will reach its destination and lives will be saved."

Roy, writing for CommentisFree, warns of a genocide and criticises the international community for standing by and doing nothing.

"It's a colossal humanitarian tragedy," she writes. "The world must step in. Now. Before it's too late."

Read more...

வணங்கா மண்ணைத் தடுக்க தயார் நிலையில் சிறிலங்கா கடற்படை

வன்னியில் தொடரும் போராலும் பொருளாதாரத் தடைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய நாடுகளில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வணங்கா மண் என்ற கப்பல் வன்னி நோக்கிப் புறப்படத் தயாராகியுள்ள அதேவேளையில், இந்தக் கப்பலைத் தடுத்து நிறுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தனது கடற்படையை விழிப்பு நிலையில் வைத்துள்ளது.
வன்னியில் போரின் கொடுமையாலும் பட்டிணியாலும் வாடிக்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு உதவவேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்தே உணவு மற்றும் அத்தியவாசிய மருந்துப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகளில் சேகரிக்கப்பட்டன.

ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களும், பொது அமைப்புக்களும் பெருமளவு நிவாரணப் பொருட்களை வன்னியில் உள்ள தமிழர்களுக்காகக் கொடுத்து உதவியுள்ளன.

நிவாரணப் பொருட்களைத் தாங்கிய இந்தக் கப்பலை வன்னிக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அரசிடமிருந்து ஏற்பாட்டாளர்கள் இதுவரையில் பெற்றுக்கொள்ளாத போதிலும் கூட, இந்தப் பொருட்களை வன்னியில் உள்ள மக்களுக்கு அனுப்பிவைப்பதற்கான உடன்படிக்கை ஒன்று ஏற்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டிருக்கின்றார் இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அர்ஜூனா எதிர்வீரசிங்கம்.

இந்தக் கப்பல் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்குள் வன்னியை நோக்கிய தமது பயணத்தை தொடங்கும் எனவும் தெரிவித்த அர்ஜூனா எதிர்வீரசிங்கம், கப்பல் எப்போது புறப்படும் என்ற நாளினை திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை.

இதேவேளையில் மக்களுக்கான நிவாரண உதவி என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்காக 2,000 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களை ஏற்றிய கப்பல் ஒன்று வன்னியை நோக்கிப் புறப்படவிருக்கின்றது என கடற்படைக்குத் தகவல் தெரிவித்துள்ள சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் அதனைத் தடுத்து நிறுத்துவதற்குத் தயாராகுமாறு கடற்படையினரை விழிப்பு நிலைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் கொழும்பில் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் சிறிலங்கா கடற்பகுதிக்குள் இந்தக் கப்பல் பிரவேசித்தால் அதன் மீது தாக்குதலை நடத்துமாறு கடற்படைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்துவரும் நாட்களில் சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படை அதிகபட்ச தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

Puthinam

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top