Tuesday, January 19, 2010
Thursday, January 14, 2010
Monday, January 4, 2010
ஜெயா தொலைக்காட்சியில், நடிகர், இயக்குனர், விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்தமிழ்ப்பெண்
Saturday, January 2, 2010
Saturday, December 26, 2009
நத்தார் ஆராதனையில் போப்பாண்டவரை வீழ்த்திய பெண்
நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்காக போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் வந்தார். அவர் தங்க, வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார். 82 வயதான அவரை பலத்த பாதுகாப்புடன் சர்ச்பாது காவலர்கள் அழைத்து வந்தனர்.
புனித பீட்டர் தேவாலயத்துக்குள் அவர் வந்த போது இரு பக்கமும் திரண்டிருந்த கிறிஸ்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப் ஆண்டவர் மீதி மோதினார்.
அப்போது போப் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார்.
இதில் போப் ஆண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார். போப் ஆண்டவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மதகுருக்களும் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனிதபீட்டர் ஆலயத்துக்குள் பரபரப்பு எற்பட்டது.
பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை பிடித்துச் சென்றனர். கீழே விழுந்து கிடந்த போப் ஆண்டவரை தூக்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் போப் ஆண்டவரைபின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த 87 வயதான பிரான்சு நாட்டு கத்தோலிக்க மதக்குரு ரோஜர் கிட்கரே கீழே விழுந்து காயம் அடைந்தார். அவர் காலில் முறிவு ஏற்பட்டது. அவர் ஏற்கனவே உடல் நலக் குறைவுடன் இருந்தார். அவரை சக்கர நாற்காலியில் அமரச் செய்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் பரபரப்பு ஓய்ந்து சகஜ நிலை திரும்பியது. பதட்டம் இல்லாமல் காணப்பட்ட போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் பிறகு சுமார் 2 மணி நேரம் சிறப்பு பிரார்த்தளை நடத்தினார்.
ஆண்டவரை மோதிதள்ளி விட்டதால் மதக்குருமார்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர். ஆனால் போப் ஆண்டவர் பெனடிக்ட் எந்தவித பரபரப்பும் இல்லாமல் பிரார்த்தனையை வழக்கம் போல் நடத்தினார்.
போப் ஆண்டவர் மீது மோதிய பெண் சிவப்பு நிற மேலாடை அணிந்திருந்தார். அவரிடம் வத்திக்கான் சிட்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் யார் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.
வத்திக்கான் புனித பீட்டர் ஆலய செய்தித் தொடர்பாளர் பெட்ரிகோ லம்பார்டி கூறிகையில், கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்றும் இதே பெண் தடுப்பை தாண்டி போப் அருகில் வரமுயற்சி செய்தார். பாதுகாவலர்கள் அப்போது தடுத்து விட்டனர். இந்த ஆண்டு அந்த பெண் மீண்டும் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.
Saturday, December 19, 2009
Wednesday, December 2, 2009
ஷு வீசியவருக்கே ஷு வீச்சு
நேற்று செவ்வாய்க்கிழமை பாரீஸ் வந்த முன்டாசர் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் மீதே ஷூ வீசப்பட்டது. ஈராக்கைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரே ஜெய்தி மீது ஷூ வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தன்னை நோக்கி வந்த ஷூ தன் மீது படாமல் குனிந்து தப்பினார் ஜெய்தி. அவருடன் வந்திருந்த ஜெய்தியின் சகோதரர், வேகமாக எழுந்து தனது ஷூவைக் கழற்றி, ஜெய்தி மீது ஷூ வீசியவரை விரட்டினார்.
பின்னர் தனது ஷூவால், அந்த நபரை சரமாரியாக தாக்கினார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தால் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்ட முன்டாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்துதான் நான் புஷ் மீது ஷூ வீசினேன். ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டவே இவ்வாறு செய்தேன். எனது சக நாட்டவர் மீது நான் ஷூ வீசவில்லை.
இந்த ஆக்கிரமிப்பை என்னால் தடுக்க முடியாது என எனக்கு தெரியும். அந்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்னை வறுத்தெடுத்து வருகின்றனர். இப்போது எனது டெக்னிக்கையும் அவர்கள் களவாடியுள்ளனர் என்றார் சிரித்தபடி. ஜெய்தி மீது ஷூ வீசிய ஈராக்கிய பத்திரிக்கையாளரின் பெயர் ஷெய்ப் அல் கயத் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், தனது சொந்த புராணத்தைப் பாடிக் கொண்டிருந்ததால் ஜெய்தி மீது எனக்குக் கோபம் வந்தது. இதனால்தான் எனது ஷூவைக் கழற்றி வீசினேன் என்றார்.
Saturday, October 10, 2009
விரலால் தேங்காய் உரிப்பு!
மலேசியாவின் கோலாலம்பூரைச் சேர்ந்த குங்பூ மாஸ்டர் ஹே இங் ஹீய் (55) இவர் சீன தற்காப்பு கலை நுட்பத்தை பயன்படுத்தி தன் கை விரல்களுக்கு வலு சேர்த்துள்ளார். இதன் மூலம் சாதனை படைக்க அவர் திட்டமிட்டார். இதன்படி நூற்றுக்கணக்கான மக்கள், சுற்றுலாப் பயணிகள் முன்னிலையில் அவர் தன் சாதனையை செய்து காட்டினார். 4 தேங்காய்களை வெறும் 30.81 விநாடிகளில் முழுமையாக உரித்துக் காட்டினார்.
சராசரியாக ஒரு தேங்காய்க்கு 7 விநாடிகள் உரிக்க அவர் எடுத்துக் கொண்டார். ஹோ இங் ஹீயின் சாதனை, மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ‘சாதனை செய்ய வேண்டும் என்பதற்காகவே, என் கைவிரல்களுக்கு கடும் பயிற்சி அளித்து வந்தேன்’ என்றார் ஹீய்!
Friday, October 9, 2009
Friday, September 25, 2009
Sunday, September 20, 2009
மீண்டும் ஒரு செப்டம்பர் - 11 தாக்குதலா?
Visit msnbc.com for Breaking News, World News, and News about the Economy
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ. ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவருக்கு அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்ப தாகவும், அவர்கள் மீண்டும் ஒரு செப்டம்பர் 11 போன்ற தாக்குலுக்கு தயாராகி வருவதாகவும் அமெரிக்கா சந்தேகமடைந்துள்ளது.
அந்த இளைஞரின் பெயர் நபிபுல்லா ஜசி, கடந்த 1999ம் ஆண்டு நியூயோர்க் வந்த அவர் டென்வர் விமான நிலையத்தில் வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
அவர் இதுவரை பாகிஸ்தானுக்கு நான்கு முறை போயுள்ளார் என்பதும், அவரது மனைவி தற்போது பாகிஸ்தானில் இருக் கிறார் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த எப்.பி.ஐ. அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொள்வது இது இரண்டாவது முறை யாகும்.
மேலும், அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தாக்குதல் நினைவு நாளுக்கு முன்னதாக நியூயோர்க்கில் இருந்து கொலரடோ மாநிலத்தின் அரோரா நகருக்கு சென்றுள்ள சில சந்தேகத்துக்கிடமான நபர்களை சந்தித்து ள்ளார். இது தொடர்பாகவும் எப். பி. ஐ. அவரிடம் துருவி துருவி விசாரித்து வருகிறது-
எப்.பி.ஐ.க்கு சமீபத்தில் நியூயோர்க் நகரில் அல்-கொய்தாவுடன் நெருங்கிய நபர் ஒருவர் தங்கியிருப்பதாகவும், அவரும் அவரது கூட்டாளிகளும் செப்டம்பர் 11 போன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்தலாம் என்றும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொலிஸார் நியூயோர்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வீடு வீடாக அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தான் அவர்கள் நபிபுல்லாவை பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் சட்ட அமுலாக்க பிரிவினர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபிபுல்லாவிடம் சதி திட்டம் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
இது குறித்த எப். பி. ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில் :-
நபிபுல்லாவுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம் என நம்புகிறோம். அவர்கள் கடந்த 2005ல் லண்டனில் 56 பேரை பலிவாங்கிய ஹைட்ரஜன் பெராக்ஸைட் வகை குண்டுகளை தயாரித்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கருதுகிறோம்.
இதையடுத்து அதிக அளவு ரசாயனங்களை வாங்குபவர்களை கண்காணிக்க உத்தரவிட்டு ள்ளோம்.
சமீபத்தில் அதிக அளவில் வாங்கியவர்களின் பட்டியலும் பெறப்பட்டுள்ளது.
பொலிசார் கொலரடோவில் இருக்கும் அவரது வீட்டிலும் அவரது மாமாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கணனி, மொபைல் ஆகியவற்றை கைப்பற்றினர். அவற்றை ஆராய்ந்து வருகின்ற னர் என்றார்.
இந்நிலையில் நபிபுல்லா தான் குற்ற மற்றவன் என்று தெரிவித்துள்ளார். அவரது சட்டத்தரணி கூறுகையில் :-
அவர் அடுத்த மாதம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறார். அவர் அல்-கொய்தாவுக்கு நெருக்கமானவர்களை இதுவரை சந்தித்ததே கிடையாது.
அவர் கொலரடோவில் ஒரு கடையை வாங்கவிருக்கிறார். அதற்காக தான் அங்கு சென்றார். இதை அவரிடம் அந்த கடையை விற்பனை செய்ய இருப்பவரும் உறுதி செய்து ள்ளார் என்றார்.





